Wednesday 25 August 2021

சிவபுண்ணியம் பெறவும், தீவினைகள் நீங்கவும் பாராயணம் செய்ய வேண்டிய பதிகம்

 🙏 திருச்சிற்றம்பலம் . 


 

🙏சிவபுண்ணியம் பெறவும், தீவினைகள் நீங்கவும் பாராயணம் செய்ய வேண்டிய பதிகம்


துஞ்சலும்  துஞ்சல் இல்லாத  போழ்தினும்

நெஞ்சகம் நைந்துநினைமின் நாள்தோறும்

வஞ்சகம் அற்று அடிவாழ்ந்த வந்த கூற்று

அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே


மந்திர நான்மறை ஆகி வானவர்

சிந்தையுள் நின்றவர் தம்மை ஆள்வன

செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு

அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே


ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்

ஞான விளக்கினை ஏற்றி நன்புலத்

தேனை வழி திறந்து ஏதுவர்க்கு இடர்

ஆனா கெடுப்பன அஞ்செழுத்துமே


நல்லவர் தீயர்  எனாது ,நச்சினர் 

செல்லல் கெடச் சிவமுத்தி  காட்டுவ

கொல்ல நமன்தமர் கொண்டு போமிடத்து

அல்லல் கெடுப்பன அஞ்செழுத்துமே


கொங்கு அலர் மன்மதன் வாளி ஐந்து அகத்து

அங்குள பூதம் அஞ்ச ஐம்பொழில்

தங்கு அரவின் படம் அஞ்சும் தம்முடை

அங்கையில் ஐவிரல் அஞ்செழுத்துமே


தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்

வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்

இம்மை வினை அடர்த்துஎய்தும் போழ்தினும்

அம்மையினும் துணை அஞ்செழுத்துமே


வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்

பீடை கெடுப்பன பின்னை நாள்தோறும்

மாடு கொடுப்பன மண்ணு மாநடம்

ஆடி உகப்பன அஞ்செழுத்துமே


வண்டு அமர் ஓதி மடந்தை பேணின

பண்டை இராவணன் பாடி உய்ந்தன

தொண்டர்கள் கொண்டு துதித்தபின் அவர்க்கு

அண்டம் அளிப்பன அஞ்செழுத்துமே


கார்வணன் நான்முகன் காணுதற்கு ஒணாச்

சீர்வணச் சேவடி செவ்வினாள் தொறும்

பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு  

ஆர்வணம் ஆவண அஞ்செழுத்துமே


புத்தர் சமண் கழுக்கையர் பொய் கொளாச்

சித்தாத் தவர்கள் தெளிந்து தேறின

வித்தக நீறு அணிவார் வினைப் பகைக்கு   

அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே


நற்றமிழ் ஞான சம்பந்தன் நான் மறை

கற்றவன் காழியர் மன்னன் உன்னிய

அற்றமில் மாலைஈரைந்தும்அஞ்செழுத்துமே 

உற்றன வல்லவர் உம்பர் ஆவரே


                                திருச்சிற்றம்பலம்


                       போற்றி  ஓம் நமசிவாய

No comments:

Post a Comment