Saturday 14 August 2021

சகலகலாவல்லி மாலை

 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


🌹சரஸ்வதியை வேண்டினால், விளையாட்டு


பன்மொழியாற்றல் கிடைக்கும்.🌹


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


🌹காசிக்கு சென்ற குமரகுருபரர் அங்கு மடம் ஒன்றை நிறுவ முயன்றார். ஆனால், அதற்கான பொருளும், இட வசதியும் அவரிடம் இல்லை. 🌹


🌹அப்போது, முகலாய மன்னரான ஷாஜஹான் டெல்லி/ஆக்ராவில் முகலாயர்களின் பாதுஷாவாக இருந்தார். ஷாஜஹானின் மூத்த மகன் தாரா ஷூக்கோஹ் காசி உட்பட்ட பிரதேசங்களில் பாதுஷாவின் ஆளுநராக இருந்தார்.🌹


அவரிடமிருந்து மடம் கட்டுவதற்கு 🌹பொருளுதவியும், இட உதவியும் பெற வேண்டியிருந்தது. ஆனால், குமரகுருபரருக்கோ ஹிந்துஸ்தானி தெரியாது. தாரா ஷூக்கோஹ்வுக்கு தமிழ் தெரியாது. இதனால், குமரகுருபரர், கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வேண்டி சகலகலாவல்லி மாலை பாடினார்.🌹


🌹இதையடுத்து, சரஸ்வதி தேவியின் அருளால், பன்மொழியாற்றல் ஏற்பட்டது. ஒரு புலியை வசப்படுத்தி அதன் மீது ஏறி தாரா ஷூக்கோஹ்வை பார்க்க சென்றார். அவருடன் சகலகலாவல்லி மாலை பாடி பெற்ற ஹிந்துஸ்தானி மொழியிலேயே பேசினார். குமரகுருபரரின் உரையாடலை கேட்டு வியந்த தாரா ஷூக்கோஹ், மடம் கட்டுவதற்கு போதுமான இடமும், பொருளுதவியும் கொடுத்து உதவினார்.🌹


🌹முகலாயர்களின் ஆட்சிக் காலத்தில் இந்துக்கள் கோயில் உள்பட மடம் போன்றவை கட்டுவதற்கு தடைகள் இருந்துள்ளன. அப்படி கட்ட வேண்டுமென்றால், அவர்களிடம் அனுமதி பெற்ற பிறகு கட்டிக் கொள்ள வேண்டும். அதனால், தான் குமரகுருபரர், தாரா ஷிக்கோஹ்விடம் அனுமதி பெற்றதோடு, அவரது உதவியால் மடமும் கட்டினார். அப்படி காசியில் கட்டப்பட்ட அந்த மடம் காசிமடம் என்று பெயர் பெற்றது.🌹


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


🌹சகலகலாவல்லி மாலை:🌹


🌹வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்

தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்

துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்

கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே!🌹


🌹நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்

பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்

கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்

காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே!🌹


🌹அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்

குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்

தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு

களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே!🌹


🌹தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்

வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்

தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று

காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே!🌹


🌹பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்

நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்

தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்

கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே!🌹


🌹பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்

எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்

விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி

கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே!🌹


🌹பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்

கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்

தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்

காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே!🌹


🌹சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல

நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்

செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்

கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே!🌹


🌹சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் றோற்றமென்ன

நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை

நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை

கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே!🌹


🌹மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்

பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்

விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்

கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே...🌹


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

No comments:

Post a Comment