Wednesday 25 August 2021

சாம்பிராணி புகை

 வீட்டிலும் மற்றும் வேலை செய்யும் இடங்களிலும்  சாம்பிராணி போடுவது  ஹோமம் செய்வதற்கு சமமாகுமா? 


சாம்பிராணி புகை போடுவது என்பது வீட்டில் ஹோமம் செய்வதற்கு இணையாக கருதப்படுகிறது.


சாம்பிராணி புகை ஆனது ஹோமத்தில் இருந்து வரும் புகைக்கு இணையான பலன்களைக் கொடுக்கும்.


அதனால் தான் நம் முன்னோர்கள் தொன்றுதொட்டு வீடுகளிலும் அவர்கள் தொழில் செய்யும் இடங்களிலும் சாம்பிராணி போட்டு அந்த இடத்தையே தெய்வ கடாட்சத்துடன் வைத்திருந்தார்கள்.


சாம்பிராணி போடும் பழக்கம் இருப்பவர்கள் இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு பின்னர் போடுவது மிகவும் நல்லது. 

 

வாரத்தில் குறைந்தது இரண்டு முறையாவது சாம்பிராணி புகை வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்களில் போடுவது உங்களின் செல்வ வளத்தை அதிகரிக்க செய்யும்.


இந்த புகையை நன்கு புகைக்க விட்டு வீடு முழுவதும் மூளை முடுக்குகளிலெல்லாம் காண்பிக்க வேண்டும். இதனால் வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் ஒழியும்.


சாம்பிராணி புகையில் நீங்கள் எந்த பொருட்களையெல்லாம் போட்டால் என்ன மாதிரியான பலன்கள் எல்லாம் கிடைக்கும் தெரியுமா?


சாம்பிராணி புகையில் நீங்கள் காய்ந்த வேப்பிலைகளை போட்டு தூபம் இடும் பொழுது வீட்டில் இருக்கும் கொசு தொல்லை நீங்கும். மேலும் நோய் நொடிகளிலிருந்து நல்ல ஒரு நிவாரணமும் பெற முடியும். 


அதீத சக்திகளை கொண்டுள்ள சாம்பிராணி தூபம் அகில் போட்டு புகை மூட்டினால் அதிலிருந்து வரும் நறுமணத்தை குழந்தை பேறு இல்லாதவர்கள் சுவாசிக்கும் பொழுது அவர்களுக்கு குழந்தை பாக்கியம் விரைவில் உண்டாகும்.


சாம்பிராணி தூபம் போடும் பொழுது நீங்கள் வெண் கடுகு போட்டு வெடிக்க விட்டால் வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் நீங்கி உங்களை சூழ்ந்து இருக்கும் எதிரிகள் அனைவரின் சூழ்ச்சிகளும் முறியடிக்கப்பட்டு விடும்.


சாம்பிராணியுடன் வெட்டிவேர் அருகம்புல் ஆகியவற்றை காய வைத்து தூபம் போட்டால் தோஷங்கள் யாவும் விலகி சுபகாரியங்கள் மற்றும் காரிய சித்தி உண்டாகும் நினைத்த விஷயங்களை நினைத்த நேரத்தில் செய்து முடிக்க கூடிய அற்புத சக்திகள் உருவாகும்.


குலதெய்வ அருளும் வீட்டில் தெய்வ அருளும் பெற சாம்பிராணி தூபம் வெள்ளிக் கிழமையில் தூதுவளை போட்டு காண்பியுங்கள் எப்பேர்ப்பட்ட குலதெய்வ குற்றங்களும் நீங்கி இதன் மூலம் நீங்கள் உங்களுடைய குல தெய்வத்தை உங்கள் வீட்டிற்கு அழைத்து வர முடியும்.


சாம்பிராணி தூபத்தில் ஜவ்வாது மற்றும் சந்தனம் ஆகிய பொருட்களை போட்டு புகை மூட்டினால் நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறையும் காய்ந்த துளசி இலைகளை போடும் பொழுது தடைகள் யாவும் விலகி வெற்றி கிடைக்கும்.


சாம்பிராணியுடன் நன்னாரி வேர் மருதாணி இலை நாய்க்கடுகு கரிசலாங்கண்ணி பொடி ஆகிய பொருட்களை போடும் பொழுது உங்களுக்கு துரோகம் இழைப்பவர்கள் கூட உங்களை நெருங்க முடியாமல் தடுக்கும் சகல ஐஸ்வர்யங்களும் பெரிய மனிதர்களின் ஆசீர்வாதங்களும் மகாலட்சுமியின் அருட் பார்வையும் உங்கள் மீது பரிபூரணமாகவிழும்.


அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை சாம்பிராணி புகையை வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்களில் மட்டுமல்லாமல் பிறந்த குழந்தைக்கும் காண்பிப்பது உண்டு பிறந்த குழந்தைக்கு மிதமான புகையை தலைப் பகுதிக்கு காண்பிக்கும் பொழுது தலையில் இருக்கும் நீர் மண்டைக்குள் கோர்க்காமல், நோய் நொடிகள் அண்டாமல் பாதுகாப்பாக இருக்கும்.


எனவே சாம்பிராணி புகையை ரசாயன கலவைகள் கொண்ட நவீன வகை கம்ப்யூட்டர் சாம்பிராணி பயன்படுத்துவதை விட இயற்கையாக கிடைக்கும் இந்த சாம்பிராணி பொடியை போட்டு நன்மைகளை பெறலாம்.

No comments:

Post a Comment