Wednesday 26 February 2020

எனது பாடல் - அகத்தியருக்கு அர்ப்பணம்

அகத்தியமே சத்தியம்
அகத்தியமே நித்தியம்
அகத்தியம் என்பது உன்னுள் இருக்கும் ஓர் கவிதை
அகத்தியத்துள் எல்லாமும் அடங்கும்
அடங்கும் அதற்குள் ஏழு கடலும்
உடலும் உயிரும் அகத்தியத்தின் இயக்கத்தில்
இயக்கத்தின் மூலம் அகத்தியம்
அகத்தியமே ஆற்றலின் மூலப்பொருள்
இவ்வுண்மையை அறிந்தோர் எல்லோரும் அகத்தியர்
அகத்தியரை அறிய முயல்வோருக்கு வழிகாட்டுவார்
அஷ்ட மா சித்துக்களும் அகத்தியனை  வணங்கும்
வணங்கும் அது, அவர் கமண்டலத்தில் அடங்கும்
தேவரும் மூவரும் அகத்தியத்தை போற்றுவர்
அகத்தியமே சிவம், அகத்தியமே பிரம்மம்
அகத்தியமே சக்தி, அகத்தியமே ஆதி
அகத்தியமே சோதி, அகத்தியமே நீதி
அகத்தியமே உலகம் துவங்கிய இடம்
அகத்தியன் கால் படாத இடம் உண்டோ
காற்று புகாத இடத்திலும் அகத்தியன் புகுவான்
பக்குவமற்றதை பக்குவப்படுத்துவான்
விதியை வகுப்பான் அருளை இறைப்பான்
மதியை வெல்லுவான் இருளை  நீக்குவான்
சதியை தடுப்பான் பதியாய் இருப்பான்
கதியை கொடுப்பான் துடிப்பாய் இருப்பான்
கால் பிடிப்போருக்கு யோகம் அருளுவான்
கால் (காற்று) பிடிப்போருக்கு யோகம் அருளுவான்

இசைத்தால் ரசித்து கேட்டு மகிழ்வான
இசைந்தால் இசைவிப்பான்
காலில் விழுந்தால் காத்து நிற்பான்
காலை (காற்றை) இழுத்தால் ஆற்றல் தருவான்
இவனுடன் இருக்கும் ஒரு நொடி பொழுதில்
பல ஆயிரம் பிறவியில் செய்த கன்மங்கள் காணாது போகும்
உன்னத அடியவர்கள் தொடர்பு கூடும்
எண்ணிய எண்ணெமெல்லாம் ஈடேறும்
ஏற்றம் மிக்க வாழ்வு வரும்
புண்ணியமெல்லாம் கிட்டும்
தீவினைகள் அகலும்
பகைமை பறக்கும்
இல்லாமை இல்லை என்றாகும்
பொல்லாமை எல்லாம் பொடியாய் போகும்
கல்லாமை கரைந்து போம்
வாழ்வாங்கு வாழுவோம்
அகத்தியனை பற்றுவோம்
சத்திய வழி நடப்போம்
நித்திய வாழ்வு பெறுவோம்
அகத்தியன் நிழலில் அன்னையின் அன்பு
அகத்தியன் நிழலில் தந்தையின் தெளிவு
அகத்தியன் நிழலில் குழந்தையின் தூய்மை
அகத்தியன் நிழலில் தாய்மையின் உண்மை
அகத்தியன் நிழலில் நாம்
அகத்தியரே, உம்மை போல எம்மை செய்திடுவீர்
செகமெல்லாம் உய்வு பெறவே பரம்பொருளாய் விளங்கிடுவோமே
அகமெல்லாம் அகத்தியமே
சுகமெல்லாம் காணுமே
இதற்கு நிகரேதும் இல்லையே
*********************************
TRS