Monday 10 February 2020

என்னுடைய தனிப்பட்ட ஜீவ அருள் வாக்கு - அகத்தியர் அருளியது 08.02.2020

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

என்னுடைய தனிப்பட்ட ஜீவ அருள் வாக்கு - அகத்தியர் அருளியது  08.02.2020

அகத்தியர் ஜீவ அருள் வாக்கு

உரைப்பவர்  : குருஜி இறைசித்தர்
                           Ph. 95850 18295

உரைத்த இடம்  - பொகளூர் அகத்தியர் ஜீவ நாடி பீடம்

அருள் பெறுபவர் - தி. இரா.சந்தானம் , கோவை
                                       Ph.91760 12104

தேதி - 08.02.2020

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


அகத்தியர் அருளுரை கீழ் வருமாறு



தனிப்பட்ட முறையில் கூறிய பரிகாரங்கள் பகிரப்பட்ட மாட்டாது

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அகத்தியர் ஜீவ நாடியை பற்றி உலகோர் புரிந்து கொள்ளவே இந்த பதிவு

பல அன்பர்கள் அகத்தியரின் நேரடி வார்த்தைகளை கேட்க முடியாதவர்கள் , இந்த பதிவை படித்து புத்துணர்ச்சி பெறுவர் .

ஜீவ நாடியில் அருள் பெரும் எல்லோருக்கும் அகத்தியர் எல்லாவற்றையும் உரைப்பது இல்லை - சிறந்த அருள் வாக்கினை பெற்றவர்கள் பதிவிடுவது இல்லை - பின் எவ்வாறு அகத்தியரை பற்றி புரியும் -

பலர் ஜீவ நாடி என்றால் ஏதோ பரிகாரம் கூறுவார்கள் - கேட்டு செய்ய வேண்டும் அவ்வளவு தானே என்று முக்கியத்துவம் கொடுப்பதில்லை -

ஆனால் ஆட்சியாளர்களை ஆட்சியில் அமர வைப்பதும் - இயற்கை சேதங்களை முன்கூட்டியே அறிவிப்பதும் , இயற்கை சேதங்களில் இருந்து காப்பதும் - ஊக்கம் கொடுப்பதும்  - ஒரு தாயாகவும் தகப்பனாகவும் குருவாகவும் பரம்பொருளாகவும் இருந்து வழி காட்டுவதும் அய்யன் ஒருவரே

படித்து பயன் பெறுவீர்களாக


!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


08.02.2020 6.25pm
ஸ்ரீனுவாசப்பெருமானின் திருநாமம் பெற்றவனே

உன் பணியை கண்டு யாம் மணமகிழ்ந்தோம்

குரு பூசை தண்ணிலே நீ ஆற்றிய பெரும் பணியை கண்டு யாம் மன நிறைவு அடைந்தோமே.

வேலவன் துணை நிற்க வீண் மனச்சுமை ஏன் மகனே உனக்கு

சித்தனும் தேவனும் இதில் அடங்க உனக்கு நல்லருள் புரிவானே

நாமம் அதை ஜெபியடா

நாளென்ன கோளென்ன உனை என்ன செய்யும்

மாந்த்ரீகம் தாந்த்ரீகம் எல்லாம் உன்னிடம் மண்டியிடும்

உமை யாம் ஆள்வோம் ஆட்கொள்வோம்.
மனம் தளராதே தூயவனே

கொண்டவளுடன் வீண் வாதத்தை விட்டொழி

அவள் முற்ப்பிறவியில் ஒரு நிலை சார்ந்த மகளாக வளர்ந்தாளய்யா

நாவடக்கம் கொள் மகனே

உமக்கு யாம் யோக நிலைக்கு , பின் அழைப்போம்

தென்பொதிகை மலை தனிலே நீ வந்து யாசகம் வாங்கி பூசைதனை இடு
குறிப்பு - தென்பொதிகை என்றால் பாபநாசம் மலை என்று பொருள்.

இடு மகனே, உமை யாம் காப்போம்

மழலை வாழ்வு சீர் பெரும் அப்பா

மனைதனிலே நான் முன் சொன்ன புகை தனி இடு.

கால பைரவனை ஞாயிறு என்று உரைக்கும் நன்நாளிலே ஆலயம் சென்று தொழுது வா

வேலவன் துணை நிற்க யாம் உமை காப்போம்

முற்றே.