Tuesday 4 February 2020

08.02.20 பௌர்ணமி பூஜை, கோமதாவிற்கு உணவு

                     
வரும் சனிக்கிழமை 08.02.2020 தை மாதம் பௌர்ணமி சிறப்பு பூஜை, சிறப்பு யாகம், சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சிறப்பு அன்னதானம், குருவருளும் திருவருளும் சேர்ந்திட பெருவருளாய் வருவோருக்கு எல்லாம் கிட்டி ஒளி மிகுந்த வாழ்வை பெற்று உய்ய , எல்லாம் வல்ல அகத்தீசர் அருளுடன், முருகனருள் முன்நிற்கவும், ஈசன் கணேசன் கிரீசன் அருளும் சேர்ந்து, எண்ணிலா கோடி சித்தர்கள் அருட் கடாட்சத்துடன் ஆனந்தமாய் இறை சேவை செய்வோம். அப்போது பாக்கியவான்களாகிய தங்கள் வந்து இருந்து உய்வுற்று பலன் பெறுமாறு அருள் பெற உரைக்கிறோம்.

ஓம் அகத்தீசாய நம 🙏

நேரம், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.

இடம், அகத்தியர் ஜீவ அருள் நாடி சித்தர் பீடம்,   கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583

https://maps.google.com/?cid=12305587362742028797



யாசகம்



நமது பொகளூர் அகத்தியர் ஜீவ அருள் நாடி சித்தர் பீடத்தில், கோமாதா ஒன்றும் கன்று குட்டி ஒன்றும் அன்பர்கள் தானம் கொடுக்கப்பபெற்று பராமரிக்கப்பட்டு உள்ளது. அது பெரிய திமில் கொண்ட முழுவது சிகப்பு நிறம் கொண்ட ஆஜானுபாகுவான நாட்டு மாடு. அதனுடைய பால் மிகவும் சக்தி நிறைந்தது. குருஜி அவர்களின் நேரடி பராமரிப்பில் உள்ளது. கறந்த பால் சூடு குறையும் முன் அதனை தினமும் நமது அய்யன் அகத்தீசருக்கு அபிஷேகத்திற்கு எடுத்துக்கொள்ள படுகிறது. மீதம் உள்ள பால் அதனுடைய கன்று குட்டிக்கு செல்கிறது. இந்த கோமாதா நல்ல போஷாக்கான உணவு இன்மையால் பால் சுரப்பது மிகவும் குறைந்துள்ளது. பெரிய மனம் படைத்த அன்பர்கள், பொருளுதவி - அதாவது பணமாக இல்லாமல் அவர்கள் கரங்களால் மாட்டு தீவனம் வாங்கி அளித்தால், அவர்களும் அவர்கள் பரம்பரையும் அய்யன் அருளால் நீடூழி வாழும் புண்ணியம் கிடைக்கும். கீழே உள்ள கட்டுரை உங்கள் பரிசீலனைக்கு 🙏🙏
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*கோமாதாவிற்கு தரக்கூடியவை - பலன்*
🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄
*1) கொள்ளு (ஊறவைத்தது) -*
செய்யும் தொழிலில்/வேலையில் நிலையாயிருத்தல்

*2) காராமணி (ஊறவைத்தது) -*
தனம் அபிவிருத்தி

*3) கோதுமை (ஊறவைத்தது) -*
 கீர்த்தி, உறுதி

*4) கீரை, வெல்லம் -*
நிம்மதி, தரித்திரம் நீங்கும், அறிவு வளரும், கோர்ட் வழக்குகளில் வெற்றி

*5) கடலை பருப்பு (ஊறவைத்தது) -*
கோபம் குறையும்

*6) உளுந்து (ஊறவைத்தது) -*
ஆத்ம விஸ்வாஸம் பெருகும்

*7) கடலை (ஊறவைத்தது) -*
ஆத்யாத்மிக சிந்தனை பெருகும்

*8) பச்சைப்பயறு (ஊறவைத்தது) -*
வித்யை அபிவிருத்தியாகும்

9) *உருளைக்கிழங்கு*
 - நரகோஷ (சண்டை சச்சரவு) நிவாரணம்

*10) கேரட் -* வியாபாரம் அபிவிருத்தியாகும்

*11) பீட்ரூட்/பாலக் -* ஐஸ்வர்ய ப்ராப்தி

*12) தோசக்காய் -* சத்ரு நிவாரணம்

*13) தக்காளி -* விவாஹ ப்ராப்தி

*14) கத்திரிக்காய் -* சந்தான ப்ராப்தி

*15) வாழைப்பழம் -* உன்னதமான பதவி

*16) வெண்டைக்காய் -* தைரியம்

*17) கோவக்காய் -* மன அமைதி

*18) உளுத்தமாவு* வெல்லம் - அகண்ட ஐஸ்வர்ய ப்ராப்தி

*19) கோதுமை மாவு வெல்லம் -* உத்யோக ப்ராப்தி

*20) ப.பருப்பு (ஊறவைத்தது) -* இந்த்ரியங்களை அடக்கும் தன்மை

*21) து.பருப்பு (ஊறவைத்தது) -* ருண விமுக்தி (கடன் தொல்லை தீரும்)

*22) உ.பருப்பு (ஊறவைத்தது) -* ஆரோக்ய ப்ராப்தி (உடல்நலம்)

*23) க.பருப்பு (ஊறவைத்தது) -* குடும்பத்தில் குழப்பங்கள் விலகும்

*24) பாசிப்பருப்பு (ஊறவைத்தது) -* புத்தி கூர்மை, கல்வியில் மேன்மை

குரு வாழ்க, குருவே துணை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏