Saturday 26 May 2018

வேலூர் மாவட்டம், ஆரணிக்கு அருகில் வாழைப்பந்தல் - ஸ்ரீவரதராஜ பெருமாள் கோ யில்.

சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி என்று போற்றப்படும் நகரம் காஞ்சிபுரம். அப்படிப்பட்ட காஞ்சியம் பதியை நினைக் கும் போதும் சொல்லும்போ தும் நமக்குள் சட்டென்று மூன்று விஷயங்கள் சடசட வென விரிந்து நிற்கும். காஞ் சி என்றதும், சிவ காஞ்சியை க் குறிப்பிடும் வகையில் ஸ்ரீ ஏகாம்பரேஸ் வரரும், சக்தியின் முக்கிய பீடமாக திகழும் ஸ்ரீகாமாட்சி அம்பாளும், விஷ்ணு காஞ்சியைப் பறைசாற்று ம் வகையிலான

ஸ்ரீவரதராஜரும் நினைவுக்கு வருவார்கள்.

அதிலும் வைஷ்ணவர்கள், ‘காஞ்சி வரதா… காஞ்சி வரதா’ என்று கண்ணீர் வடிய பக்தி செலுத்துவார்கள். காஞ்சியி ல் பிரம்மாண்ட கோயிலில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீவர தராஜரை, தன்னையும் தன் சந்ததியினரையும் வாழ வை க்கும் கண்கண்ட தெய்வமா கப்போற்றுகின்றனர் பக்தர்க ள். நம் தாயார் எப்படி நமக்குத் தேவையானதை நாம் கேட் காமலே தந்து காப்பாற்றி வருவாளோ அதேபோல, நாம் கே ட்காமலேயே நமக்குத் தேவையானதையெல் லாம் தந்து அருளும் கரு ணையுள்ளம் கொண்ட வர் ஸ்ரீவரதர் எனச் சொ ல்லிச்சிலாகிக்கின்றனர்.

அதுமட்டுமா? தங்களுக் கு ஏற்படுகிற பிரச்னைகளையும், கவலைகளையும் அவமா னங்களையும் தயக்கமோ குழப்பமோ இல்லாமல் ஸ்ரீவரதரி டம் முறையிட்டு, ‘இது உனக்கே நல்லாருக்கா? என்னைக் காப்பாத்திக்கரை சேக்க றது உன் கடமை இல்லி யா?” என்று நண்பனி டம் புலம்புவதுபோல், உரி மையுடன் கேட்பார்கள் பக்தர்கள்.

கடவுளை நண்பனாகப் பார்ப்பதற்கும் பழகுவத ற்கும் மிகப் பெரிய ஈடு பாடும் அறிவும் வேண்டும். மனம் முழுவதும் இறை பக்தியு ம், புத்தி முழுவதிலும் நம்பிக்கையும் குடிகொண்டிருக்க வே ண்டும். காஞ்சியில் அருளும் பெருமாளை, ஸ்ரீவரதராஜ ரை வரதா வரதா என்றழை த்துப் பரவசமாகிற பக்தர்கள் பலரும், அவரைத் தோழனா கப் பாவித்துதான் வணங்கிச் செல்கிறார்கள் என்பது தெரி கிறது.

அதேபோல், வைணவர்கள் மட்டுமின்றி, மக்கள் அனைவரு ம் வரதர் எப்போது திருவீதியுலா வருவார் என ஆவலாகக் காத் துக்கிடப்பார்கள். தவிர, வரதரா ஜ பெருமாளுக்கு ஒரு வருடத்தி ல் எந்த மாதத்தில், எந்த நட்சத் திர நாளில் விழா எடுப்பார்கள் என்பதையெல்லாம் அறிந்து வைத்திருப்பார்கள். அந்தந்த நா ட்களில் ஸ்ரீவரதரைத் தரிசனம் செய்து பூரித் துப் போவார்கள்.

வேலூர் மாவட்டம், ஆரணிக்கு அருகில் வாழைப்பந்தல் என் றொரு கிராமம் உள்ளது. இந்த ஊரில், மெயின் ரோட்டு க்கு அருகிலேயே அமைந்துள்ளது ஸ்ரீவரதராஜ பெருமாள் கோ யில்.

காஞ்சிவரதருக்கு எப்போதெல்லாம் சிறப்பு பூஜைகளும் வழி பாடுகளும் கோலாகலமாக நடை பெறுகிறதோ, அப்போதெ ல்லாம் இங்கே வாழைப்பந்தல் ஸ்ரீவரத ராஜருக்கும் பூஜைக ள் சிறப்புற நடைபெறும்.

ஐந்து நிலை ராஜகோபுரமும், பிர மாண்டமான நீளமான மதி லும் கொண்டு, ஒருகாலத்தில் கம்பீரத் துடன் நின்ற கோயில் தான் இது. ஆனால் இன்றைக்கு, எப்போது வேண்டுமானா லும் விழுவேன் என்பதுபோல் நிற்கிற கோபுரம் நம்மைப் பதைபதைக்கச் செய்கி றது. அழகிய கோபுரத்தின் வழியே நுழைய முடியவில்லை. சுற்றுச்சுவருக்கு நடுவே சிறியதொரு பாதையில் சென்று தா ன் ஸ்ரீவரதராஜரை தரிசி க்க வே ண்டியுள்ளது.

காஞ்சி வரதரைப் போல வே, வாழைப்பந்தல் வர தரும் விழா ன் போது ஒவ்வொரு நாளும் ஒவ் வொரு வாகனத்தில் வீதி யுலா வருவாராம். இதைப் பார்க்க ஒருங்கிணைந்த தென் னாற்காடு மற்றும் வட ஆற்காடு மாவட்டங்களில் இரு ந்து மக்கள் திரண்டு வருவார்களாம் . ஆனால், வரதரின் வாகனங்க ள் எல்லாமே இப்போது சிதைந் தும்பெயர்ந்தும், வண்ணங்க ளை இழந்து பரிதாப மாகக் காட் சி அளிக்கிறது.

கல் தீப ஸ்தம்பம், பிராகாரம், அதைச் சுற்றிலும் நந்தவனம் என அழகும் சக்தியும் நிறைந்த திருத்தலமாக இருந்திருக்கிறது இக்கோயில். காலப்போக் கில் முள்ளும் புதருமாக மாறிப் போய், சந்நிதிகள் எல்லாம் களையிழந்து விட்டது தான் கண்ணீரை வரவழைக்கிறது.

கருவறையில், மூலவரும் உத் ஸவரும் திவ்விய தரிசனம் தருகின்றனர். ஸ்ரீதேவி- ஸ்ரீபூதே வி சமேதராக அற்புதமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீவரதராஜபெருமாள். இவரை ஸ்ரீகஜேந்தி ர வரதராஜ பெருமாள் என்றும் போற்றுகின்றனர், பக்தர்கள்.

ஒருகாலத்தில், திருகூர் என்று அழைக்கப்பட்டு, பிறகு வாழைப் பந்தல் என்று இப்போது அழைக் கப்படும் தலத்தில் உள்ள ஸ்ரீவர தரின் ஆலயம், வழிபாட்டுக்கு உரிய அழகிய இட மாகத் திகழ வேண்டாமா? கஜேந்திரன் எனும் யானைக்கு மோட்சம் கிடைத்தது போல், இந்தக் கோயிலின் திருப்பணி யில் நாமும் பங்கு பெற்று, மோட்ச கதியை அடையவேண் டாமா?

ஸ்ரீபெருந்தேவித் தாயாரும் ஸ்ரீ ஆண்டாளும் ஸ்ரீஅனுமனும் அருளும் ஒப்பற்ற இந்தக் கோ யிலில் கோபுரங்கள் சீரமைக் கப்பட்டு, மடப்பள்ளி கட்டப்பட் டு, வரதருக்கு நைவேத்தியம் செய்யப் புளியோதரையும், சர்க் கரைப் பொங்கலும், தயிர் சாத மும் அங்கே மணக்க மணக்கத் தயாராவதற்கு நாமும் நம்மால் ஆன கைங்கர்யத்தைச் செய்வ துதானே நம் கட மை? வாழை ப்பந்தல் ஸ்ரீவரதராஜரின் வாகன ங்கள் சரிசெய் யப்படுவதற்கும், மண்டபங்களும் கோபுரமும் ம திலும் பழை யபடி பொலிவுறுவ தற்கும் திருப்பணியில் கலந்து கொண் டால், நம் சந்ததியும் வாழையடி வாழையாய் வாழாதா?

காஞ்சியம்பதி ஸ்ரீவரதராஜ பெரு மாள் கோயிலில், வருடம் முழுவ தும் திருவாபரணத்துக்கும், ஸ்வா மியின் திருஅலங் காரத்துக்கும் ஒரு குறைவுமில்லை. ஆனால், அதே திருநாம த்துடன் காஞ்சிக்கு அருகில் உள்ள இந்தப் புராதனத் திருக் கோயிலும் காஞ்சிக் கோயி லைப் போலவே கம்பீரம் காட்டி நிற் பதுதானே முறை!

பித்ருக்கள் சாபத்தில் இருந்து வி மோசனத்தைத் தந்து, நல்ல நிம்ம தியான வாழ்க்கையையும் அருளச் செய்பவர் ஸ்ரீகஜேந்திர வரதராஜ பெருமாள். ஆயிரம் வருடப் பழைமையான ஆலயம் என்றும், ஆதி கிரந்தத்தில் குறிப்பி டப்பட்டுள்ள கோயில் என்றும் போற்றப்படுகிற இந்தக் கோ யிலில், நாம் தருகிற சிறு திருப்பணிக் கான காரியம் நமக்கு ப் பன்மடங்காக, வீர்யம் கொண்டதாக, நிம்மதியு ம் சந்தோ ஷமும் கொண் ட வாழ்க்கையைத் தந்து, நம்மையும் நம் வம்சத்தையும் வாழசெய்யும் என்பது உறுதி!

ஸ்ரீவரதா… ஸ்ரீவரதா… உன் கோயிலில், கும்பாபிஷேகம் எனும் வைபவம் நடைபெறும் நாள் வந்துவிட்டது ஸ்ரீவரதா!

இவ்வ‍ளவு பெருமைகள் கொண்ட பெருமாளின் கோயில் எங்கே இருக் கிறது?

வேலூர் மாவட்டத்தில் உள்ளது ஆரணி. பட்டுக்குப் பெயர் பெற்ற இந்த ஊரில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ளது வாழைப்பந் தல் கிராமம். இங்கே, மெயின் ரோ ட்டுக்கு அருகிலேயே அற்புதமாக அமைந்துள்ளது ஸ்ரீகஜேந்திர வரத ராஜ பெருமாள் கோயில். ஆரணியி ல் இருந்து பஸ் வசதி குறைவுதான். ஆட்டோ வசதி உண்டு.