Saturday 26 May 2018

பாட்டிமை

அமாவாசைக்கு மறுநாள் பாட்டியமை அன்று எந்த நல்ல‍ காரியங்களையும் செய்ய‍க்கூடாது ஏன்?

பாட்டியம் என்பது என்ன? பிரதமை திதியை பாட்டியம் என்று சொல்வா ர்கள். பெளர்ணமிக்குப் பிறகு சந்திரன் குன்றுதலை அவ்வாறு சொல்வார்கள். பெளர்ணமி முழுமதி நாள். மறுநாள் தேய்பிறை துவக்கம். அன்று சற்றே குன் றுதல். அதனை பாட்டியமை. அதாவது பிரதமை திதி. அமாவாசையாக இருந்தா லும், பெளர்ணமியாக இருந்தாலும் அடுத் த நாள் பிரதமை திதி. பிரதமை திதியில் எதுவும் செய்யக் கூடாது என்பார்கள். இதனை ஒவ்வொரு கிராமத்திலு ம் பாட்டிமை, பாட்டிமுகம் என்றெல்லாம் பலவாறாக அழைப்பார்கள். கதிர் வீச்சுக் குன்றுவதால் அன்று எதையும் செய்யக் கூடாது என்பார் கள். இருந்தாலும் அமாவாசைக்கு மறுநாள்தான் மிகவும் மோசமான து. அன்றைய தினம் எதையும் செய் யக் கூடாது என்பார்கள். போர் தொ டுத்தல், ஆநிரை கவர்தல் போன்ற வை செய்யலாம் என்று கூறுவார்க ள். போருக்கான துவக்கங்களை அன்று செய்யலாம். நோய் வாய்ப் பட்டிருப்பவர்கள் அமாவாசையைத் தாண்டுவார்களா என்று எதை வைத்துக்கூறுகின்றனர்? அமாவாசை யை நாம் அறிவியல் பூர்வமாகவே பார்க்கலாம். ஆத்ம காரகன் சூரியன். ஆத்மா என்பது உயிர். உடலுக்குரிய வன் சந்திரன். சூரியனும், சந்திரனு ம் இணைவது அமாவாசை அன்று. இர ண்டுமே இயல்புநிலை மாறுபட்ட வை. அவைகள் ஒன்றாக சேரும்போ து சீக்கிரமாகவே ஆவி பிரியும். அத னால்தான் அமாவாசை, அதற்கு முத ல் நாள், அமாவாசைக்கு மறுநாள் பிர தமை திதிகளில் உயிர் நீப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதற்கு காரணம், ஆத்ம காரகன் சூரியனுடன், மனோ காரகன், உடலுக் கான சந்திரன் நெருங்கும் போது உடலின் வலிமை, உணவு உட்கொள் ளும் திறன் குறையும். ஏதோ ஒரு அசெளகரியம் உண்டாகும். திடீர் மார டைப்பு எல்லாம் உண் டாகும். அதனா ல்தான் அமாவாசையை தாண் டுமா என்று சொல்கிறார்கள். சில நேரங்களி ல் அமாவாசை எல்லாம் தாண்டி கடைசி நேரத்தில் உயிரிழப்புகள் நேர்ந்துவிடும்.