Tuesday 20 February 2018

பிப்ரவரி 2018 முக்கிய செவ்வாய் தினங்கள்

ஜோதிடர்களுக்கும்,ஜோதிட ஆர்வலர்களுக்கும்,ஜோதிட நம்பிக்கை உள்ளவர்களுக்கும்!

ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை செவ்வாய் விருச்சிக ராசியை அடையும்;அதில்,கேட்டை நட்சத்திரத்தை கடக்கும் நாட்களில் வரும் செவ்வாய்க்கிழமைகளில் ஜீவ சமாதிகளில் தவம் செய்யும் மகான்கள்,சித்தர்கள்,துறவிகளின் அருளாற்றல் அளவுக்கு மீறி வெளிப்படும்;

இந்த செவ்வாய்க்கிழமைகளில் வரும் குரு ஓரை அல்லது மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில் ஜீவசமாதிகளில் மாலை அணிவித்து,பத்தி பொருத்தி,சித்திரான்னங்கள் (ஐந்து வகை சாதம்) படையல் இட வேண்டும்;இட்டு,30 நிமிடம் முதல் 90 நிமிடம் வரை தியானம் செய்ய வேண்டும்;தியானத்தின் முடிவில் சித்திரான்னங்களை எடுத்து அங்கே வரும் அனைவருக்கும் பகிர்ந்து தர வேண்டும்;எந்த உயிரினம் (காகம்,புறா,நாய்,குருவி,பசு) வந்தாலும் அவைகளுக்கும் தர வேண்டும்;

இதன் மூலமாக உடனே அந்தந்த மகான்/சித்தர்/ரிஷி/துறவியின் அருள் கிட்டும்;

இந்த அருள் உங்களது பலவிதமான நெருக்கடிகளை உடனே தீர்த்துவைக்கும்;

கேட்டை நட்சத்திரத்தை செவ்வாய் கடக்கும் செவ்வாய்க்கிழமைகள்:



20.2.2018

27.2.2018

6.3.2018

எல்லா ஊர்களிலும் எதாவது ஒரு ஜீவசமாதி/சித்தர் ஐக்கியமான அதிஷ்டானம் இருக்கின்றது;இந்த வழிபாடு செய்து அனைவரும் வளமோடும்,நலமோடும்,சீரோடும்,சிறப்போடும் வாழ்க!!!

2016  இல்  இது போல மகான்களின் அருளாசியை முறைப்படி வழிபாடு செய்து பலர் வாழ்க்கை/தொழிலில் அபாரமாக முன்னேற்றம் அடைந்துள்ளார்கள்.....!!!!!

ஓம் சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராமசுவாமிகளின் திருவடிகளே சரணம்

No comments:

Post a Comment