Friday 26 March 2021

நண்பர்களே நமது பீடத்திலிருந்து வந்துள்ள ஒரு முக்கிய அறிவிப்பு

 ஓம் அகத்தீசாய நம

 குருவே துணை குருவே போற்றி 


நண்பர்களே நமது பீடத்திலிருந்து வந்துள்ள ஒரு முக்கிய அறிவிப்பு


 நாளை ஞாயிற்றுக்கிழமை பங்குனி மாதம் பௌர்ணமி திதி அன்று நடைபெற இருக்கும் குருபூஜை விழாவிற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் 


நாளை வழக்கம்போல சிறப்பு அபிஷேகம் சிறப்பு யாகம் சிறப்பு அலங்காரம் அன்னதானம் ஆகியவை நமது குரு பகவான் அகத்திய மாமுனிவர் மிகுந்த உரிய மரியாதைகளுடன் நிகழ்த்தப்படும் 


இதில் நாளை விழாவில் ஒரு சிறப்பு உள்ளது


 நமது பீடத்தில் சென்ற மாதம் காராம் பசு அதனை தானமாக கொடுத்திருந்தோம் . அந்த காராம் பசு சாணத்தை சேகரித்து வைத்து அதை பஸ்மம் செய்து அதில் நமது குருநாதர் உரைத்துள்ள விசேஷ மந்திரங்களை உருவேற்றி உபயோகிப்பவர்களுக்கு அனைத்து காரியங்களும் சித்தி பெரும் வகையில் மிக சிறந்த பிரசாதமாக உருவாக்கப்பட்டுள்ளது.


 நாளை பவுர்ணமி மிகவும் நல்ல ஒரு நாள் குருபூஜை சிறப்பாக செய்து அன்று நேரில் வருபவர்களுக்கு அந்த சக்திவாய்ந்த திருநீற்றை பிரசாதமாக வழங்க குருநாதரின் உத்தரவு கிடைத்துள்ளது 


இந்த அறிய பிரசாதத்தை அனைவரும் வந்து பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்


 குருநாதரை பணிந்து என்றும் இறைபணியில்


-  சந்தானம்.

ஓம் அகத்தீசாய நம

No comments:

Post a Comment