Monday 29 March 2021

அனுபவ பதிவு: 27.03.2021ராயர் - கருப்பராயர் - வெள்ளை கருப்பர் ஆட்டம் , அதுவே ஒரு தேரோட்டம் -

அந்த காலத்துல எல்லாம் சாமி கிட்ட நேர்ல பேசி பேசி தான் சாமி கும்பிடறாங்க . ஆனா இப்போ அப்பிடி இல்ல . சாமி யாரு கிட்டயும் பேசறது இல்ல . அந்த காலத்துல நல்லா யோகம் செஞ்சு , நல்ல உடல் வலிமையோட , நல்ல பழக்க வழக்கங்களோட இருக்கறவங்க கடவுளை தன்னோட உடல்ல எழுப்பறதுக்கு தகுதி உண்டாக்கிட்டு கடவுள் முன்னால போய் நின்னாலே அவர் உடல்ல கடவுள் அருளாக இறங்கி மக்களோட பேசி என்ன , ஏது ன்னு விவரங்கள் எல்லாம் சொல்லி , மக்களோட கொறைய தீத்து வெக்கற வழி முறை சொல்வாங்க . இந்த காலத்துல சில இறந்த ஆத்மாக்கள் , சாமி ஆடி உடல்ல இறங்கி , எனக்கு அத கொண்டா , எனக்கு இதை கொண்டா , அப்போ தான் நான் போவேன் ன்னு சொல்லி திரியராங்க , கடவுளோட பேசற பழக்க வழக்கம் எல்லாம் காணாம போச்சு . ஆனா இன்னமும் சில பேர் உண்மையா தனது தேகத்தை கடுவினுள் கிட்ட கொடுத்துட்டு , அவங்கள தன மூலமா மக்கள்\கிட்ட பேச விட்டு , எல்லாருக்கும் நல்லது செய்யணும் னு நெனைக்கறாங்க . நம்ம ஒடம்பு நல்ல விஷயத்துக்காக பயன் படட்டுமே . எங்கேயோ போறோம் , கண்டதை திங்கறோம் , கண்டபடி பேசறோம் , கண்டதை குடிக்கறோம் , மாலா ஜலம் கழிக்கறோம் . அந்த மல ஜலம் கூட சரியா போக முடியாம கஷ்ட படர அளவுக்கு நம்ம ஒடம்ப உலக சுகம் அப்பிடீங்கற பேருல கஷ்டப்படுத்தறோம் . எல்லா சுகங்களையும் அனுபவிக்க கூடிய பணம் வெச்சிருக்கறவன் , உப்பு காரம் , மசாலா எல்லாம் கம்மியா போட்டு , சக்கரை கம்மியா போட்டு , காலையிலே எழுந்து ஓடி உடல் உழைப்பு செஞ்சு வாழறான் . ஆனா நாமளோ இருக்கறது கொஞ்சூண்டு , அதையும் எப்படியாவது சுகம் அனுபவிக்கலாம் னு கார் , நகை உடை, தின்பண்டம் அப்பிடீன்னு ஒடம்புக்கு சேராத விஷயங்களை புகுத்தரோம் , விஷயம் தெரிஞ்சவன் , பணம் உள்ளவன் அமைதியா இருக்கான் . ஒன்னும் இல்லாதவன் தான் ஆடறான். இப்பிடி இருக்கற வாழ்க்கையிலே , நம்ம தேகத்துனால ஆண்டவன் மற்றவர்களுக்கு ஏதாவது பிரயோஜனம் செய்ய முடியுமான அது போதும் ன்னு ஒரு சில பேரு தான் இருக்கறாங்க . அவங்க தேகத்தை ஆண்டவன் ஆள்பவன் அவனே தேர்ந்து எடுத்துக்கறான். ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஒரு வழிமுறை . ஜீவ நாடி , அருள் வாக்கு , ஜீவனை வெளியே இருத்தி சொல்லும் அருள் வாக்கு ன்னு பல வகைகள் . எல்லாமே மக்களோட நண்மைக்காக . இப்போ இருக்கற கோவில்கள்ல கடவுளை உள்ள கொண்டு வந்து அவரை பேச வைக்க ஆளு இல்ல . நாம போய் கடவுள்கிட்ட பேசிட்டு வருவோம் , அவர் கேட்டு நமக்கு நல்லது செய்வார் னு ஒரு நம்பிக்கை . ஆனா , பழங்கால முறைப்படி மனிதர்கள் , சிறப்பு வாய்ந்தவர்கள் . அவர்கள் கடவுளை தன்  உள்ளே எழுப்பி பேச வைக்கறவங்க . இன்னைக்கும் அந்த முறைப்படி அம்பாள் வாக்கு , சாய் பாபா வாக்கு , அகத்தியர் வாக்கு , போன்றவை தன உடம்புல அந்த அந்த கடவுளை ஏத்தி , அவங்கள பேச வைக்கற ஆளுங்க இன்னைக்கும் இருக்காங்க . அவங்க எல்லாம் சுத்தமானவங்க , மனசுல அழுக்கு இல்லாதவங்க , நல்ல யோக நிலையிலே இருப்பவங்க . அதே போல இந்த காலத்திலேயும் , மகாபாரத புகழ் தர்மராஜா யுதிஷ்டிரர் கூட இதே போல ஒருவரை தேர்ந்தெடுத்து மக்களோட குறைகளை ஒரு ராஜா போல கேட்டு , அதுக்கு பரிகாரம் ஆசீர்வாதம் கூறி நடத்தி கொடுக்கறாரு . தர்ம வழியிலே நடத்துறாரு . அதே போல கருப்புராயர் சாமிய நாம தொட்டோம் . பல வருஷமா தியானத்துல ஆழ்ந்து போன யோகி ஒருத்தர் , கருப்புராயராக மாறி நித்திய வாழ்வு வாழ்ந்து கொண்டு , ஊர் உலகத்தை காப்பாத்தி இருக்கற சர்வ வல்லமையை கொண்டவர் , சிவ மைந்தர் , வெள்ளை கருப்பு ரூபத்தில் நமது பீடத்தில் எல்லை ஒட்டியே பல வருடமா  எழுந்தருளி இருக்கறார் . அவரு கண்ணு முழிச்சு பாக்கும் போது , பல நாள் நிஷ்ட்டையில் சுமார் 50-60 வருடத்துக்கு மேல ஆயிருச்சு , கோவிலையும் காணோம் , பக்தர்களையும் காணோம் . எல்லாரும் எங்கடா போனீங்க , னு பாக்குறாரு . பக்கத்துலேயே அகத்தியர் , சரி முனி , உமக்கு சின்னதா ஒரு 'கூரை போட்டு சீரமைக்க சொல்றேன் ன்னு சொல்லி என் கிட்ட சொல்லி . நான் உங்க கிட்ட சொல்லி . நான் சொன்னது உங்களுக்கெல்லாம் என்ன புரிஞ்சிதோ , எனக்கே ஒண்ணுமே புரியல , அதுக்குள்ள 10-20 பேரு சேந்து பணம் போட்டு ஒரே நாள்ல பண உதவி செஞ்சு , அருமையா மேடை போட்டு , படிக்கட்டு வெச்சு , கூரை போட்டு பூஜை போட்டு எல்லாமே நடந்தது . அப்போ நைட்டு 11 மணிக்கு பூஜை செய்யும் போது , கருப்பன் நடராஜ் ஒடம்புல இறங்கி வந்து ஆட்டம் காட்ட நெனைச்சாரு . அப்போ  ஒடனே அவரை மலை ஏத்தி அனுப்பிட்டோம் . பாவம் சின்ன பய்யன் , 5 நிமிஷம் கருப்பு வந்ததுக்கே , கீழே விழுந்து மேல விழுந்து , அடிபட்டு , உடம்பெல்லாம் மண் ஆகி . பயந்து போய் , கண்ணெல்லாம் குத்திட்டு போயீ ஒரு வழி ஆயிட்டான் . ஆனா , அவன் வந்து கும்பிடும் போது நேத்து கருப்பு வந்தாரு , இந்த தடவை கூட சில அனுபவம் வாய்ந்த யோகி ஒருத்தர் இருந்தாரு . கறுப்பர் வந்து ஒடம்ப நாலு புறமும் வளச்சு மூச்சை முழுவதும் அடக்கி பல வகையான சுவாச நிலைகளை மிகப்பெரிய யோகி போல செஞ்சு காட்டுனாரு . செஞ்சுட்டு , தனக்கு சந்தனம் வேனும்னு கேட்டாரு , அப்பரும் பால் கேட்டாரு , அப்பறம் எழுமிச்சை கனி கேட்டாரு , அப்பறம் சுருட்டு கேட்டாரு . அப்பறம் அங்கே இருந்தவங்க கிட்ட , ஒரு சில ஆசீர்வாதம் கொடுத்தாரு . என்னை கூப்பிட்டு , நீ என் கோவிலுக்கு நாலா செஞ்சு இருக்கே , ரொம்ப நல்லது , இன்னும் நெறைய நெறைய செய்யு ன்னு உத்தரவு போட்டாரு . இது தான் நடந்தது . அன்னைக்கு நான் தான் அவருக்கு பூஜை செய்ய சொல்லி சந்தனாதி தைல காப்பு , பன்னீர் அபிஷேகம் , தண்ணீர் அபிஷேகம் பண்ணி மலர் மாலை போட்டு கும்பிட நடராஜனை கூப்பிட்டு செய்ய சொன்னேன் . அது பத்தல , அவருக்கு சந்தன காப்பு , பால் , எழுமிச்சை மாலை , சுருட்டு ஆகியவை தான் வேணும் னு கேட்டு வாங்கிக்கிட்டாரு . அந்த பய்யன் ஒடம்புல இறங்கி அவரு சுருட்டு குடிச்ச விதமும் , அவரு பைரவரை போல பல்ல காட்டிய விதமும் . ஒடம்ப குதிரை போல வளச்சு குதிரை சவாரி செஞ்சதும் , ஒரு சொம்பு பால ஒரே மடக்குல குடிச்சதும் , ஒரு சிரிச்சதும் , உறுமுனதும் , பேசுனதும் , ஏறியதும் எறங்கியதும் எல்லாமே பாக்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது . பல வருஷம் கழிச்சு வெளிப்பட்ட ஒரு மிகப்பெரிய யோகி அன்று 27.03.2021. நாம அவருக்கு மேல் கூரை ஏற்படுத்தும் போது , இவ்வளவு சக்தி வாய்ந்தவரா இருப்பார் ன்னு குருஜி சொன்னாரு . அன்னிக்கு தான் நேர்ல பாக்க வாய்ப்பு கெடச்சுது . என்னோட அனுபவத்தை உங்களோட பகிர்ந்துக்கிட்டேன் . இனிமே அவருக்கு புடிச்ச அந்த பொருள்களை கொண்டு பூஜை செய்வதை வழக்கமாக வெச்சுக்க போறேன் . என்னோட சேந்து எல்லாரும் நம்ம கருப்பரையும் கும்பிட்டுக்கோங்க . கருப்பராயருக்கு அரோகரா  !!!!!!!

 

 

No comments:

Post a Comment