Thursday 28 February 2019

ஸ்ரீ ராமஜெயம் சொல்வது எவ்வளவு புண்ணியமோ அப்படியே ஸ்ரீ லக்ஷ்மண ஜெயம் சொல்வது புண்ணியமே

லக்ஷ்மண விரதம் -----ஸ்ரீ-ராமர் -பட்டாபிஷேகம் ஏற்ற பின் ராமரை பார்த்து ஆசி கூற அகஸ்திய -மா-முனிவர் அயோத்திக்கு வருகை புரிந்தார் ---அகஸ்தியர் சபையில் அமர்ந்ததும் ராவண வதம் பற்றி விவாதிக்கலாயினர் அனைவரும் --அப்பொழுது அகஸ்தியர் சபையினரை பார்த்து  --ராவண --கும்பகர்ண --வதத்தை விட --லக்ஷ்மணன்  --ராவணன் மகன் மேகநாதனை வதைத்ததே மா-பெரும் வீர செயல் என்றார் அகஸ்தியர் ---அதை கேட்டு அனைவரும் ஆச்சிரியமாக அகஸ்தியரை பார்க்க --ஸ்ரீ --ராமர் --ஏதும் அறியாதவர் போல் --ஸ்வாமி எதை வைத்து அப்படி கூறினீர்கள் மேகநாதன் அவ்வளவு சக்தியுள்ளவனா என்று கேட்க---அகஸ்தியர் -- ராமா எல்லாம் அறிந்தவன் நீ ஆனால் ஏதும் அறியாதவன் போல் லக்ஷ்மணின் பெருமையை என் வாயாலே கூறவேண்டும் என்றுதானே இப்படி அறியாதவன் போல் கேட்கிறாய் சரி நானே கூறுகிறேன் ---சபையோர்களே --ராவணன் மகன் மேகநாதன் தேவலோக அரசன் இந்திரனுடன் போர்புரிந்து அவனை  வென்று   சிறையில் அடைத்து வைத்தது யாவரும் அறிந்ததே --நான்-முக --கடவுளான பிரம்மா இந்திரனை விடுவிக்க மேகநாதனிடம் கோரிக்கை வைக்க ---மேகநாதன் இந்திரனை விடுவிக்க வேண்டுமென்றால் தாங்கள் எனக்கு மூன்று அறிய வரங்கள் தரவேண்டும் என நிபந்தனை வைத்தான் --அவை ---1 ,பதினான்கு ஆண்டுகள் உணவு உண்ணாதவனும்---2 ,,,,அதே பதினான்கு ஆண்டுகள்  ஒரு நொடி கூட உறங்காது இருப்பவனும் ---3 ,,,அதே பதினான்கு ஆண்டுகள் எந்த ஒரு பெண் முகத்தையும் ஏறெடுத்து பார்க்காது இருப்பவன் --எவனோ அவனால் மட்டுமே எனக்கு மரணம் நிகழவேண்டும் --என்று பிரம்மாவிடம் மூன்று அறியவரங்களை பெற்று இந்திரனை விடுவித்தான் அதனால் மேகநாதனை யாவரும் இந்திரஜித் என்று அழைத்தனர் -----இப்படி பட்ட மேகநாதனை வதம் செய்த பெருமை லக்ஷ்மணனையே சேரும் என்று கூறி முடிக்க --ராமர் -ஸ்வாமி லக்ஷ்மணன் என்னுடன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் இருந்த போது---அவன் எந்த ஒரு மாதையும்(பெண்ணையும்) ஏறெடுத்து பார்த்ததில்லை என்பதை நான் அறிவேன் ஆனால் உணவும் --உறக்கமும் இல்லாமல் எப்படி இருந்திருப்பான் என்று கேள்வி எழுப்ப --அகஸ்தியர் --அனைத்தும் அறிந்து வைத்து கொண்டே கேட்கிறாயே சரி சற்று பொறு உன் கேள்விக்கான விடையை லக்ஷ்மணனிடமே கேட்டு தெரிந்துகொள்வோம் என்று கூறி லக்ஷ்மணனை அழைத்து வர ஏற்பாடு செய்தார் அகஸ்தியர் ---சபைக்கு வந்த லக்ஷ்மணன் அண்ணன் ராமரையும் ---குரு அகஸ்தியரையும் ---சபையோரையும் வணங்கிய பின் ராமர் தன் சந்தேகத்தை கேட்டார் ---லக்ஷ்மணா ---என்னோடு வனவாசம் இருந்தபோது ----எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காமையும் ---உணவு உண்ணாமையும் ---உறக்கம் கொள்ளாமையும் இருந்தாய் என அகஸ்தியர் கூறுகிறாரே ----எப்படி என சபையோர் முன் விளக்கமுடியுமா ----லக்ஷ்மணர் --அண்ணா ---உங்களுக்கு நினைவு இருக்கலாம் ரிஷிமுக பர்வதத்தில் ---மாதா சீதையை தேடி அலைந்த போது மாதாவால் வீசப்பட்ட அணிகலன்களை சுக்ரீவன் நம்மிடம் காட்டும்போது --அன்னையின் பாத அணிகலன்களை தவிர வேறு எதுவும் என்னால் அடையாளம் காண முடியவில்லை காரணம் அன்னையின் பாதத்தை மட்டுமே பார்த்து நான் தினமும் வணங்குவேன் --அதனால் பாத அணிகலன்களை மட்டுமே என்னால் அடையாளம் காணமுடிந்தது ---அடுத்து வனவாசத்தின் போது நீங்களும் மாதாவும் இரவில் உறங்கும்போது நான் காவல் புரியும் நேரம் நித்ராதேவி  என்னை ஆட்கொள்ள வரும் நேரம் -நான் நித்ராதேவியிடம் ஒரு வரம் கேட்டேன் --அம்மா --என் --அண்ணன் ராமரையும் ---என் அண்ணியான மாதா --சீதா தேவியையும் --பாதுகாக்கவே நானும் அண்ணனோடு வனவாசம் வந்துள்ளேன் --அதனால் எங்கள் வனவாசம் முடியும் வரை என்னை நீ ஆட்கொள்ளவே கூடாது ---இந்த வனவாசம் முடியும் வரை எனக்கு உறக்கமே வரக்கூடாது என வேண்டிக்கொண்டேன் ---நித்ராதேவியும் என் வேண்டுதலுக்கு செவி சாய்த்து என்னை பதினான்கு ஆண்டுகள் ஆட்கொள்ளமாட்டேன் என வரமளித்தாள் அதனால் எனக்கு உறக்கம் என்பதே இல்லாமல் இருந்தது வனவாசத்தின் போது ---மூன்றாவது நம் குருநாதராகிய --விஸ்வாமித்திரர் நம் உடல் சோர்வு அடையாமல் இருக்கவும் --பசியே எடுக்காமல் இருக்கவும் ---பலா--அதிபலா ---என்னும் மிகவும் சக்திவாய்ந்த காயத்திரி மந்திரத்தை நம் இருவருக்கும் அவரது யாகம் வெற்றி பெற காவல் புரிந்ததற்காக உபதேசித்தார் ---அந்த பலா --அதிபலா மந்திரத்தை தினமும் உச்சரித்தே எனக்கு பசி ஏற்படாமலும் ---உடல் சோர்வு அடையாமலும் பார்த்துக்கொண்டேன் என்று கூற  சபையினர் எல்லோருமே லக்ஷ்மணனை ஆச்சிரியமாக பார்க்க ---ஆஞ்சநேயர் அயர்ந்தே போனார் ---லக்ஷ்மணின் ராம பக்தியை நினைத்து ---ராமர் அரியணையை விட்டு இறங்கி வந்து லக்ஷ்மணனை கண்ணீருடன் ஆரத்தழுவி கொண்டார் ----ஜெகம் புகழும் புண்ணிய கதை லக்ஷ்மணின் கதையே ---என் கருத்து ---ஸ்ரீ ராமஜெயம் சொல்வது எவ்வளவு புண்ணியமோ அப்படியே ஸ்ரீ லக்ஷ்மண ஜெயம் சொல்வது புண்ணியமே ---ராமா ராமா --/\--