Wednesday 13 December 2017

குரு ராகவேந்திர ராயரு

சரணடைந்தவர் களைக் காப்பாற்றுவது என்பது எல்லா சித்தர்களுக்கும் இயல்பாக உள்ள ஒரு குணம்.

அவர்கள் தாங்கள் இறைநிலை அடைவதோடு நின்றுவிடு வதில்லை. தொடர்ந்து தங்கள் அடியவர்களை
ஆபத்துக் காலத்தில் காப்பாற்றுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் அடியவர்களின் துயரங்களைத்
தீர்ப்பதன் பொருட்டுத்தான் அவர்கள் இறைநிலையையே அடைகிறார்கள். அடியவர்கள் பால் அவர்கள்
கொண்டுள்ள கருணை அளப்பரியது.

பல்லாண்டுகள் பல நூல் களைப் பயின்று சரஸ்வதி கடாட்சம் பெற்ற ராகவேந்திரர், தம் வாழ்வில்
நிகழ்த் திய ஓர் அற்புதம் அவரது பேராற்றலை மட்டுமல்ல; அவரது பெருங்கருணையையும்
புலப்படுத்துகிறது.

 ஏழை
எளிய விவசாயிகளை அதிக எண்ணிக்கையில் கொண்ட கிராமம் அது. அந்த கிராமத்தில் வெங்கண்ணா
என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். கள்ளங்கபடமற்ற மனம் படைத்த ஏழைச் சிறுவன்.

என்ன துரதிர்ஷ்டம்! அவன் வாழ்வில் பெரும் சோதனைகள் நேர்ந்தன. அடுத்தடுத்துத் தன் தாய்- தந்தை
இருவரையும் பறிகொடுத்தான்.

இனி அவனை வளர்க்கும் பொறுப்பை யார்
மேற்கொள்ளப் போகிறார்கள்?

 கடவுளைத் தவிர வேறு நாதியற்ற அவன், தன் தாய்மாமனிடம் போய்ச் சேர்ந்தான்.

தாய்மாமன் வெங்கண்ணாவையும் தன் சொந்தக் குழந்தையாக எண்ணி வளர்த்திருக்க வேண்டும். அதுதான்
கடவுளின் விருப்பமாய் இருந்திருக்கும். ஆனால் வெங்கண்ணாவைத் தன் பிள்ளைபோல் கருத அந்தத்
தாய்மாமனுக்கு மனம் வரவில்லை.

அவனைப் பள்ளிக்கு அனுப்பினால் செலவுதானே?

தாய்- தந்தையற்ற அநாதைப் பயலுக்கு ஏன் செலவு
செய்ய வேண்டும்?

செலவு செய்வதால் தனக்கென்ன பயன்?

 இப்படி எண்ணிய தாய்மாமன், வெங்கண்ணா
வுக்கு எழுதப் படிக்கவே கற்பிக்க வில்லை.

தினந்தோறும் தன் வீட்டு எருமை மாடுகளை
மேய்த்துவரும் பணியில் வெங்கண்ணாவை ஈடுபடுத்தினான்.

வெங்கண்ணாவும் விதியை நொந்துகொண்டு அந்த வேலையைச் செய்துவரலானான். கல்வி கற்க வேண்டும்
என்ற தன் ஆசையில் மண் விழுந்ததை அவன் புரிந்துகொண் டான். மாடு மேய்ப்பதற்கு மறுத்தால்,
கிடைக்கும் கொஞ்ச உணவும் கிடைக் காது என்று அவனுக்குத் தெரியும்.

மாடு மேய்ப்பது மட்டுமென்ன சாதாரண தொழிலா?

#கிருஷ்ண பகவானே செய்த தொழிலல்லவா அது!

இப்படி எண்ணி அவன் தன் மனதைத் தேற்றிக் கொண்டான்.

ஒருநாள் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு ஒரு மரத்தடி நிழலிலில் அவன் இளைப்பாறிக்
கொண்டிருந்த போது, அந்த வழியே கை, கால் முளைத்த ஒரு பூரணச் சந்திரன் வெயிலிலில்
நடந்து வந்து கொண்டிருந் தது.

 வேறு யாருமல்ல;

#மகான்_ராகவேந்திரர்தான் அவர்.

சந்நியாசிகள் எந்த ஊரிலும் நெடுநாட்கள் தங்க லாகாது என்ற மரபுப்படி அந்தப் பிரதேசத்தை
விட்டு வேறு பிரதேசத் திற்கு  நடந்து போய்க்கொண்டி ருந்தார் அவர்.

வெங்கண்ணாவுக்கு அவரைப் பார்க்கப் பார்க்கப் பரவசம் ஏற்பட்டது.

அந்தக் கடும் வெயிலில்
ஸ்ரீராகவேந்திரரின் தரிசனம் அவன் மனதில் பெரும் குளுமையை ஏற்படுத்தியது.

இவர் யாரோ
பெரிய மகான் என்பதைப் புரிந்துகொண்ட வெங்கண்ணா,

 ஓடோடிப் போய் அவர் #கால்களில் விழுந்தான்.

அவர் பாதங்களைக் கெட்டியாய்ப் பற்றிக் கொண்டான்.

தம்மையே சரண் என்று வந்திருக்கும் வெங்கண்ணா வைத் தூக்கி நிறுத்தினார் ஸ்ரீராகவேந்திரர்.

அவன் தலையை வருடியவாறே, ""என்ன விஷயம்?'' என்று பரிவோடு கேட்டார்.

வெங்கண்ணா தன் தாய்மாமனால் தான் கொடுமைப் படுத்தப்படுவதையும்; தனக்குக் கல்வியறிவே
இல்லாமல் போனதையும் மிகுந்த வருத்தத்தோடு கண்ணீர் மல்கத் தெரிவித்துக் கொண்டான்.

அந்த ஏழைச் சிறுவனின் பக்தி ராகவேந்திரரின் உள்ளத்தை உருக்கியது. ""வெங்கண்ணா! எந்த
சோதனையைக் கண்டும் கலங்காதே.

 சோதனை வரும் காலங்களில் என்னை நினைத்துக் கொள்.
ராகவேந்திரர் என்று என்னை அழைப்பார்கள்.

 நீ என்னை நினைத்துக் கொண்டால் நான் எங்கிருந்தாலும்
உனக்குத் தேவையான உதவிகள் ஓடோடி வரும். எதைப் பற்றியும் கலங்காமல் இறை பக்தியில்
தோய்ந்திரு!''

அவனுக்கு அறிவுறுத்திவிட்டு ராகவேந்திரர் தன் வழியில் நடந்து சென்றார்.

அவர் சென்ற
வழியை விழுந்து கும்பிட்டான் வெங்கண்ணா. நாள்தோறும், "எனக்கு நல்வாழ்க்கை அமைய நீயே
அருள்புரிய வேண்டும்!' என்று மானசீகமாக அவரிடம் பிரார்த்தித்து வரலானான். வெங்கண்ணாவைப்
பொறுத்தவரை, ராகவேந்திரர்தான் அவனது கடவுள். அவரது
#புனித_தரிசனத்தால் அப்படியொரு
பக்தியும் ஈர்ப்பும் அவனி டம் ஏற்பட்டுவிட்டன.

ராகவேந்திரரின் அருளை யாசித்தே ஆகவேண்டிய ஒரு கஷ்ட காலம்- மெல்ல மெல்ல வளர்ந்து
இளைஞனாய் மாறியிருந்த வெங்கண்ணாவின் வாழ்வில் ஒருநாள் வந்தது.

அன்றொருநாள் அவன் மாடுமேய்த்துக் கொண்டிருந்த வழியில் நவாப் ஸித்தி #மசூத்கான் குதிரை
மீதேறி தன் பரிவாரங்களோடு வந்துசேர்ந்தான். பீஜப்பூர் சுல்தானின் சிற்றரசனான நவாப் அவன்.
அந்த கிராமத்துக்கு அவன் வந்தது நிலவரியை வசூல் செய்வதற்காக. அவன் அதிகாரம் செய்வதற்கும்
பிறரை அச்சுறுத்துவதற்கும் என்றே பிறந்தவன் என்பது அவன் பார்வையின் தெறிப்பில் தெரிந்தது.

அப்போது குதிரை மேல் வந்துகொண்டிருந்த அவனை நோக்கி எங்கிருந்தோ இன்னொரு வீரன்
குதிரையில் மிக வேகமாக
வந்துசேர்ந் தான்.

மின்னல்போல் வந்த அவன், ஒரு கடிதத்தை நவாபிடம்
தந்துவிட்டு, ஒரு கணத்தில் குதிரை மேல் ஏறி மின்னல் போலவே விரைந்து சென்று
கண்பார்வையிலிலிருந்து மறைந்துவிட்டான்.

என்ன கடிதம் அது? யார் அனுப்பியது? அதில் என்ன எழுதப்பட்டிருக்கும்? நவாபுக்கு எதுவும்
தெரியவில்லை.

பொதுவாகப் பெரும் பதவியில் இருக்கும் நவாபைப் போன்றவர்கள் தங்களுக்கு வந்த கடிதங்களைத்
தாங்களே படிக்கும் வழக்கமில்லையே?

 யாரிடமாவது கொடுத்து படிக்கச் சொல்லிலிக்
கேட்பதுதானே அவர்கள் வழக்கம்?

 இப்போது யாரிடம் கொடுத்து இந்தக் கடிதத்தைப் படிக்கச் சொல்வது?

மாடு மேய்த்துக் கொண்டிருந்த வெங்கண்ணா, நவாப் கண்களில் பட்டான். ""அடேய்! இங்கே வா!''
என்று அவனைக் கூவி அழைத்த நவாப், தனக்கு வந்த ஓலையை அவன் கையில் திணித்து, ""எங்கே?
இதில் என்ன எழுதி இருக்கிறது என்று படித்துச் சொல்!'' என்று கட்டளை இட்டான்.

வெங்கண்ணாவின் விழிகளிலிலிருந்து கரகரவென கண்ணீர் வழிந்தது. என்ன சங்கடம் இது! எழுதப்
படிக்கத் தெரியாத தன்னிடம் ஓலையைக் கொடுத்துப் படிக்கச் சொல்லிலி பெரும்பதவியில்
இருக்கும் நவாப் கட்டளையிடுகிறாரே?

 கட்டளையை மீறினால் என்ன ஆகுமோ?

 என்றாலும் நம்
நிலைமையை எடுத்துச்  சொல்லிலித்தானே ஆகவேண்டும்?

வெங்கண்ணா அழுதவாறே தனக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று தெரிவித்தான். ஏறக்குறைய
பதினாறு வயதான ஓர் இளைஞன் தனக்கு சுத்தமாக எழுதப் படிக்கத் தெரியாது என்று சொன்னதை
நவாப் நம்பவில்லை. தன் அதிகாரத்திற்குப் பணிய மறுத்து

அவன் பொய் சொல்வ தாகவே நினைத்தது நவாபின் உள்ளம். அவன் கண்களில் அனல் பறந் தது.

"அடேய்!' ஓர் இளை ஞனாக இருக்கிறாய் நீ?

ஒரு கடிதத்தைப் படிக்கக் கூட உன்னால் முடியாது
என்கிறாய். நான் யார் என்று தெரியாமல் என்னிடம் விளையாடுகி றாயா?

 முட்டாளே! இப் போது
இந்தக் கடிதத் தைப் படிக்கிறாயா
அல் லது உயிரை விடுகிறாயா?''

இடுப்பிலிலிருந்து வாளை உருவி, வெங்கண்ணாவை நோக்கி அசைத்த வாறே கர்ஜித்தான் நவாப்.

அந்த முழக்கத்தைக் கேட்டு எளிய இளைஞன் வெங்கண்ணாவின் சப்த நாடிகளும் ஒடுங்கின. இப்போது
என்ன செய்வது?

அவனுக்கு ராகவேந்திரர் அளித்த வாக்குறுதி ஞாபகம் வந்தது.

"#சோதனை காலத்தில் அவர்
எங்கிருந்தாலும் உதவி வரும் என்றாரே?

 என் பிரபோ! ஸ்ரீராகவேந்திரா! என் கடவுள் அல்லவா நீ?

நாள்தோறும் இரவும் பகலும் உன்னைத்தானே நினைத்துக் கொள்கிறேன். இதோ, இன்னும் சில கணங்களில்
என் உயிர் போய்விடும் போல் இருக்கிறதே?

 என்னைக் காப்பாற்றுவது உன் பொறுப்பு அப்பா!
வேறென்ன நான் சொல்வது?'

நடுநடுங்கும் கரங்களோடு நவாப் கொடுத்த ஓலையைக் கையில் வாங்கிக் கொண்டான் வெங்கண்ணா.

அடுத்த கணம்தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது.

 படிப்பறிவே இல்லாத வெங்கண்ணாவுக்கு சரஸ்வதி
கடாட்சம் அருளப்பட்டது.

அவன் மனதில் திடீரென ஒரு பெருமிதமும் நம்பிக்கையும் எழுந்தன.

ஓலையைப் பிரித்த வெங்கண்ணாவுக்கு ஓலையில் உள்ள எழுத்துகள் எல்லாம் பளிச் பளிச் என கண் ணில்
தெரிந்தன.

கடகடவென ஓலையை மிடுக்கோடு படித்து முடித்தான் படிப்பறிவே அற்ற வெங்கண்ணா!
தானா படிக்கிறோம்?

அவனுக்குத் தன்னையே தன்னால் நம்ப இயலவில்லை. அன்று தொட்டு அவனால்
எல்லா வற்றையும் படிக்க முடிந்தது.

ஆதோனி சமஸ்தானத்துடன் மேலும் சில பகுதி களைச் சேர்த்திருக்கும் நல்ல செய்தியைச்
சொல்லிலிய மங்கல மடல் அது. நவாபின் அதிகார எல்லை மேலும் விரியவிருப்பதைச் சொன்ன ஓலை.
நவாப் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

""இவ்வளவு நன்றாகவும் கம்பீரமாகவும் படிக்கிறாய். பிறகு எனக்கு எழுதப் படிக்கவே
தெரியாது என்று ஏன் பொய் சொல்கிறாய்?

இளைஞனே! உன் பாண்டித்தியம் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி
தருகிறது. எனக்கு நல்ல சேதி வாசித்த உனக்கு நான் ஒரு நல்ல சேதி சொல்லப் போகிறேன்.
உன்னைப் பார்த்தால் உன்மேல் எனக்கு அன்பு பொங்குகிறது. உன்னை இந்தப் பகுதிக்கு #திவானாக
நியமிக்கிறேன்.''

இவ்விதம் அறிவித்த நவாப் உல்லாசமாகத் தன் வீரர்களுடன் புறப்பட்டுச் சென்றான். வெங்கண்ணா
வுக்கு நடந்ததெல்லாம் கனவா நனவா என்றே தெரிய வில்லை. "என்னே என் அப்பன் ராகவேந்திரரின்
அருள்!' என்று அவன் அங்கேயே தரையில் விழுந்து ராகவேந் திரரை #மானசீகமாக நினைத்து
நமஸ்கரித்தான்.

நவாப் சொன்ன சொற்கள் உணர்ச்சிவசப்பட்டு அப்போது பிறப்பித்த உத்தரவல்ல. உண்மையிலேயே
வெங்கண்ணா அந்தப் பகுதியின் திவானாக ஆக்கப் பட்டான்.

 வெங்கண்ணாமேல் பெரும் நம்பிக்கை
வைத்தான் நவாப். வெங்கண்ணாவுக்கு ஒரு  திவானுக்கே உரிய எல்லா
 அதி காரங்களும் செல்வ
வளமும் வந்துசேர்ந்தன.

இதையெல்லாம் பார்க்கத் தன் தாய்- தந்தை இல்லையே என்பது மட்டும்தான்
வெங்கண்ணாவின் வருத்தம்.

வெங்கண்ணாவின் தாய்மாமனுக்குத் தலை சுற்றியது. தன்னால் மாடுமேய்க்க அனுப்பப்பட்டவன்
திவானாகி விட் டானே?

 இவன் எப்போது எப்படி எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டான்?

வெங்கண்ணா தன் தாய்மாமனிடம் விரோதம் பாராட்டவில்லை. அந்தக் குடும்பத்தைத் தன் குடும்பமாக
எண்ணி அவர்களையும் காப்பாற்றி வாழலானான் அவன்.

 ஸ்ரீராகவேந்திரரின் அருள் கடாட்சத்தை
எண்ணும்போதெல்லாம் பக்தன் வெங்கண்ணாவின் மனம் குளிர்ந்தது.

ஆனால் ஒருமுறை தெள்ளத் தெளி வாக நவாபிடம் நடந்த உண்மையைச் சொல்லிலிவிட்டான் வெங்கண்ணா.
நவாப் பிரமிப்புடன் மறுபடி மறுபடி கேட்டான். வெங்கண்ணா தெளிவாக அறிவித்தான்:

""ஆம்; எனக்கு உண்மையிலேயே எழு தப் படிக்கத் தெரியாது. ஆனால் நீங்கள் தந்த ஓலையை
ராகவேந்திரரைப் பிரார்த் தித்துப் பிரித்தேன். அன்றிலிலிருந்து எனக்கு எழுதப் படிக்கத்
தெரிந்துவிட்டது. இது தான்
நடந்த சங்கதி.

 உங்களுக்குச் சந்தேக மிருந்தால் என்
தாய்மாமனிடம் விசாரிக் கலாம்.''

தாய்மாமனிடம் விசாரித்து அது உண்மைதான் என்றறிந்தபோது நவாபின் வியப்பு எல்லை கடந்தது.

 #கும்பகோணத்தை விடுத்து மாஞ்சாலியில் இருக்க முடிவு செய்து ஆதோணி வந்து  வெங்கண்ணா இல்லத்தில் மூல ராமருக்கு பூஜை செய்து கொண்டிருந்த போது வந்தான்.


அப்போது இராகவேந்திர சுவாமிகள் மூலராமருக்கு பூஜைகள் செய்து கொண்டிருந்தார். அவரிடம் நவாப் #மாமிசம் கொண்ட ஒரு தட்டை துணி கொண்டு மூடி சமர்பித்தான். அதை இராமருக்கு பூஜை செய்து முடித்தபின் தண்ணீர் தெளித்து திருப்பிக் கொடுத்தார் குருதேவர்.

 துணியை எடுத்துப் பார்த்த நவாபிற்கு ஒரே அதிர்ச்சி தட்டில் இருந்தவை பழங்களும்  மலர்களும்.

குரு இராகவேந்திரரின் மகிமையை உணர்ந்த நவாப் அவரைப் பணிந்து என்ன வேண்டுமென்றாலும்  கேட்க வேண்டினான்.

 அப்போது இராகவேந்திரர் இந்த மாஞ்சாலி கிராமத்தைக் கேட்டார்.  நவாப்பும். அந்த பிரதேசம் பாறைகள் நிறைந்த #வறண்ட_பூமி வேண்டாம், 

வேறு நல்ல வளமான பகுதியை தருகின்றேன் என்றான். ஆயினும் இராகவேந்திரர்   அன்மீக சக்தி மிகுந்த இப்பகுதியே வேண்டுமென கேட்க அதையே தானமாக மனமுவந்து வழங்கி   சாசனம் செய்து குருதேவரை வணங்கி சென்றான்.



பின்னர் இராகவேந்திரர் மாஞ்சாலியில் வாழ ஆரம்பித்தார், அவரது இஷ்டதெய்வமான வெங்கடரமண சுவாமிக்கு  ஒரு ஆலயமும் எழுப்பினார்.

 ஆயிரக்கணக்கில் பக்தர்கள் மாஞ்சாலி கிராமத்திற்கு வரத்தொடங்கினர். இந்த கிராமத்தின் கிராம தேவதை #மாஞ்சாலியம்மன்.

 அவர் இராகவேந்திரரிடம் சென்று  தாங்கள்  வந்த பிறகு என்னை மறந்து விடுவார்களே என்றபோது, இராகவேந்திரர்  என்னை தரிசனம் செய்ய வருபவர்கள் முதலில் உன்னை தரிசனம் செய்த பிறகுதான் என்னை தரிசனம் செய்வார்கள் என்று வரம் தந்தார் பரம கருணாமூர்த்தி குரு ராயரு.

 என்ன சுவையாக இருந்ததா?



 
700 வருடகாலம் பிருந்தாவனத்தில் இருந்து அருள்பாலிப்பேன் என்று அருளியபடி இராகவேந்திரர் இன்றும் தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை நீக்கி பலவித அற்புதங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்.

 நுழைவாயிலில் அப்பணாச்சாரியார் அருளிய       

பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச|
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே ||

 என்ற ஸ்லோகம் நம்மை வரவேற்கின்றது.


இந்த மாஞ்சாலியில் குருநாதர்ஆங்கிலேய பிரபு சர் தாமஸ் மன்றோவுடன் நடத்திய ஒரு அற்புதத்தை காணலாமா? 

 கி.பி. 1812ம் ஆண்டு. பிரிட்டிஷ் அரசு ஒரு சட்டம் இயற்றியது. அதன் மூலம் கோயில் இடத்திற்கான வாரிசுகள் யாரும் இல்லை என்றால் அந்த இடத்தை அரசாங்கமே எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிப்புச் செய்தது. அந்தச் சட்டத்தின் மூலம் பிருந்தாவனத்துக்கு தானமாகக் கொடுக்கப்பட்டிருந்த நிலமானியம் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டது. ஆனால் பொது மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். பல ஆண்டுகளுக்கு முன்னால் அப்பகுதியை ஆண்ட சுல்தான் ஸ்ரீ ராகவேந்திரருக்கு தானமாக வழங்கிய இவ்விடத்தை அரசு கையகப்படுத்தக் கூடாது என்று அவர்கள் எதிர்த்தனர். அதனால் பிரிட்டிஷ் அரசு அப்போது பெல்லாரி மாவட்ட ஆட்சியாளராக இருந்த சர் தாமஸ் மன்றோ தலைமையில் ஒரு குழுவை நியமித்து நிலைமையைச் சரி செய்யச் சொல்லி உத்தரவிட்டது.


மன்றோ தனது குழுவினருடன் ஆலயத்துக்கு விரைந்தார்.

ஆலயத்தின் நுழைவாயிலில் தனது காலணியையும் , தொப்பியையும் கழற்றி விட்டு பிருந்தாவனத்தை நோக்கிச் சென்றார். ஜீவசமாதி ஆலயம் அருகே சென்ற மன்றோ யாரோ அங்கு இருப்பது போல் வணக்கம் செலுத்தினார். பின் சத்தமாக உரையாட ஆரம்பித்தார். அவருடன் வந்திருந்த குழுவினருக்கு ஒன்றுமே புரியவில்லை. காரணம், அங்கே மன்றோவைத் தவிர எதிரே யாருமே இல்லை. ஆனால் மன்றோவோ யாரோ எதிரில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பது போல சரளமாக ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார்.

வெகு நேரம் கழித்து தனது உரையாடலை முடித்துக் கொண்டு தங்கள் ஆங்கிலேயப் பாணியில் அந்த பிருந்தாவனத்துக்கு ஒரு சல்யூட் வைத்து விட்டு வெளியே வந்தார் மன்றோ. அதுவரை திகைத்துப் போயிருந்த குழுவினர், அவரிடம் யாரிடம் பேசிக் கொண்டிருந்தீர்கள் எனக்  கேட்டனர். அதற்கு மன்றோ, ”பிருந்தாவனத்தின் அருகே காவி உடை அணிந்து ஒளி வீசும் கண்களுடன் உயரமாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவருக்கு நான் அரசு மான்யம் பற்றி சில விளக்கங்களை அளித்தேன். அவரும் என்னிடம் அது குறித்து உரையாடி மடத்தின் சொத்து பற்றிய சரியான விளக்கத்தைத் தந்து விட்டார். இந்த இடம் மடத்துக்குத்தான் சொந்தம் என்பதில் எந்த ஐயமுமில்லை” என்றார். மேலும் அந்த மனிதரது ஒளி வீசும் கண்கள் பற்றியும், அவரது கம்பீரக் குரல் பற்றியும், செழுமையான ஆங்கில உச்சரிப்புப் பற்றியும் வியந்து கூறியவர், ”ஏன், நீங்கள் அவரைக் காணவில்லையா?” என்று கேட்டார், குழுவினரைப் பார்த்து.  தங்கள் கண்களுக்கு அங்கு யாருமே தெரியவில்லை என்று கூறிய அவர்கள், மன்றோவுடன் உரையாடியது சாட்சாத் ஸ்ரீ ராகவேந்திரர்தான் என்பதை அவருக்கு உணர்த்தினர்.

ஒரு   நூற்றாண்டுக்கு முன் பிருந்தாவனஸ்தரான   மகான் தன் முன் நேரில் தோன்றி அதுவும் தனது மொழியான  ஆங்கிலத்தில்யே தன்னுடன் பேசிப் பிரச்சனையைத் தீர்த்த விதம் கண்டு பிரமித்தார் சர் தாமஸ் மன்றோ. தனக்குக் கிடைத்த பாக்கியத்தை எண்ணி மகிழ்ந்தார். அரசுக்கும், ஆளுநருக்கும், அந்த இடம் மடத்துக்குச் சட்டப்படி உரிமை உள்ள நிலம் என்று தகவல் அனுப்பியதுடன் அன்று முதல் ஸ்ரீ ராகவேந்திரரின் பக்தராகவும் ஆகிப் போனார். விரைவிலேயே மன்றோ தாற்காலிக ஆளுநராகப் பொறுப்பேற்கும் நிலை வர, அவர் கையெழுத்திட்ட முதல் கோப்பு, மடத்துக்கு நிலம் அளிப்பது தொடர்பானது தான். இந்தச் சம்பவங்கள் அப்போதைய சென்னை மாகாண கெஜட்டிலும் (அரசு ஆவணக் குறிப்பு) வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி

No comments:

Post a Comment