Friday 29 December 2017

அரங்கன் வரலாற்று கதை




ஸ்ரீரங்கம் அருகே   அகண்ட -காவேரி   என்னும் ஒரு சிற்றூரில் --காவேரி என்னும் இளம் ஏழை (விதவை) பெண் வாழ்ந்து வந்தாள் ---இரவும் --பகலும் ---அரங்கன் பெயரை உச்சரிப்பதே லட்சியம் என  வாழ்ந்தாள்  ---இவளுக்கு ஒரே மகன் அவனுக்கு அரங்கன் என்றே பெயர் சூட்டி அழைத்தாள்----அரங்கனுக்கு அவ்வூரில் மாடு மேய்க்கும் வேலை கிடைத்தது ----தினமும் பொழுது புலர்ந்ததும் அரங்கன் மாடு மேய்க்க கிளம்பிவிடுவான் ---நண்பகல் ஆனதும் காவேரி அரங்கனுக்கு கலையத்தில் கஞ்சி எடுத்து கொண்டு அவன் மாடு மேய்க்கும் இடத்தின் அருகே ஒரு மர-நிழலில் அமர்ந்து அரங்கா அரங்கா என்று இருமுறை அழைப்பாள் ---தாயின் குரல் கேட்டு அரங்கனும் ஓடி வந்து ---கலையத்தில் உள்ள கஞ்சியை அருந்திவிட்டு ----ஓலை பாய் ஒன்று விரித்து ---அதில் சற்று இளைப்பாறி விட்டு மீண்டும் மாடு மேய்க்க கிளம்பிவிடுவான் -----அவன் போனதும் மகன் அருந்தி  எஞ்சி இருந்த கஞ்சியை காவேரி அருந்திவிட்டு ---கலையத்தை கழுவி விட்டு இல்லத்திற்கு வந்து விடுவாள் ----இப்படி இருக்க ஒரு நாள் நண்பகலில் காவேரி மரத்தடியில் கஞ்சி கலையத்தை இறக்கி வைத்து விட்டு அரங்கா ---அரங்கா ---என்று இருமுறை அழைத்தாள் மகன் வரவில்லை ---பெற்றவளின் உள்ளம் கலங்கியது ----இரு முறை அழைத்து மகன் வரவில்லையே மகனுக்கு ஏதும் நேர்ந்துவிட்டதோ என்று மூன்றாவது முறையாக அரங்கா என்று  உரக்க கத்தினாள் ---அவள் மூன்றாவது முறையாக உரக்க கத்தியது திருவரங்கத்தில் பள்ளிகொண்ட திருமாலின் காதில் விழுந்தது ----உடனே படுக்கையை விட்டு எழுந்து காவேரி மகன் அரங்கனை போல் வேடம் தாங்கி  ----காவேரி இருக்கும் இடம் நோக்கி ஓடி வந்தார் ----அம்மா அம்மா இதோ வந்து விட்டேன் என்று ----கண் கலங்கி நின்ற காவேரி மகனின் குரல் கேட்டு அவன் அருகே வந்ததும் உச்சி முகர்ந்து முத்தமிட்டு --அரங்கா ஏன் இவ்வளோ தாமதம் என்று கேட்டாள்-----அரங்கன் ---அம்மா பசு கன்று ஒன்று வழி  தவறி ஓடி விட்டது அதை தேடி பிடித்து தாய் பசுவிடம் சேர்க்க தாமதம் ஆயிற்று ---கஞ்சி ஊத்தம்மா பசி எடுக்கிறது என்று கூறி கலையத்தை தாயிடம் இருந்து பெற்று அருந்திவிட்டு ---உடனே எழுந்தார் ---காவேரி பதட்டமாக என்னடா எப்பவும் கஞ்சி அருந்தி சிறிது இளைப்பாறிவிட்டு தானே செல்வாய் ----இன்று உடனே  செல்கிறாயே ஏன் என்றாள் -----அரங்கன்--- அம்மா இன்று  கொஞ்சம் வேலை அதிகம் ---எப்பவும் படுக்கையில் இளைப்பாறி கொண்டுதானே இருக்கிறேன் என்று கூறி கிளம்பி மறைந்து விட்டார் திருமால் ---காவேரி மீதம்முள்ள கஞ்சியை அருந்திவிட்டு ----கலையத்தை கழுவி கிளம்பும் நேரம் ----அம்மா அம்மா என்று குரல் கொடுத்துக்கொண்டே உண்மையான அவள் மகன் அரங்கன் வந்தான் ---காவேரி ஆச்சரியமாக என்னடா இப்போதான் வேலை அதிகம் என்று போனாய் அதற்குள் வந்து விட்டாயே ----என்று கேட்க ----அரங்கன் என்னமா சொல்கிறாய் நான் இப்போதுதான் இங்கே வருகிறேன் --பசு கன்று ஒன்று முச்செடியில் சிக்கி கொண்டது அதை முச்செடியில் இருந்து மீட்டு தாய் பசுவிடம் சேர்த்துவிட்டு இப்போதுதான் வருகிறேன் ----நான் இன்னும் உணவருந்தவில்லை அம்மா என்றான் வருத்தத்தோடு ---காவேரி அதிர்ச்சி ஆகி என்னடா இது நீ வரவில்லையென்றால் வேறு யார்   சற்று முன்  உன் உருவத்தில் வந்து உணவருந்தி சென்றது ----என்று திகைப்புடன் கேட்க ---மகன் அரங்கன் யோசித்து விட்டு அம்மா இதை இப்படியே விடக்கூடாது நாளை இங்கு நீங்கள் வரும் நேரம் நான் இந்த மரத்தின் பின்னே ஒளிந்து கொள்கிறேன் நீங்கள் இன்று அழைத்தது போல் நாளையும் மூன்று முறை அழையுங்கள் அந்த போலி அரங்கன் யார் என்று பார்த்துவிடுவோம் என்று பேசி வைத்து கொண்டனர் இருவரும்  ---அடுத்தநாள் காவேரி நண்பகல் வந்து அரங்கா அரங்கா  என்று இருமுறை அழைத்து மரத்தின் பின் மறைந்து நின்ற மகன் அரங்கனை பார்க்க ----அவன் சைகை செய்தான் மீண்டும் அழைக்க சொல்லி ----காவேரி மூன்றாவது முறையாக அரங்கா என்று அழைக்க ----வந்தார் ரெங்கநாதர் ----அரங்கன் வடிவில் ----அம்மா அம்மா அமுத கஞ்சி கொண்டு வந்துவிட்டாயா என்று கேட்டு கொண்டே ----அவரை  பார்த்ததும் மரத்தின் பின் இருந்த உண்மையான அரங்கன் அம்மா அவன் போலி அரங்கன் பிடித்து இரண்டு அடி அடித்து யார் என்று விசாரியுங்கள் என்றான் ----அரங்கன் வடிவில் இருந்த ரெங்கநாதரோ அம்மா அவன்தான் போலி அரங்கன் நம்பாதே அவனை என்று கூற காவேரிக்கு ஒரே குழப்பம் ---கண்ணீர் மல்க ரெங்க நாதரை கண்மூடி வேண்டினாள் ----அரங்கா இது என்ன விளையாட்டு இந்த ஏழையிடம் என்ன இருக்கிறது ஏன் இந்த சோதனை என்றாள்---அரங்கனாக வந்த ரெங்கநாதர் சுய உருவு கொண்டு ---தாயே விளையாடத்தானே வந்திருக்கிறேன் உன்னிடம் கண்திறந்து பாரம்மா உன் மகனை என்றார் ---காவேரி கண் திறந்து திருமாலை பார்த்து பணிந்து வணங்க ---அரங்கனும் ஓடி வந்து வணங்க ----திருமால் ----தாயே இந்த ஏழையிடம் என்ன இருக்கிறது என்றாயே உண்மையான உன் அன்பு இருக்கிறதே அது போதாதா எனக்கு ----உன் அன்பால் கவரப்பட்டு உன் கையால் அமுதுண்ணவே ---உன்னிடம் இப்படி விளையாடினேன் ----இருவரும் குறைவற வாழ்ந்து வைகுண்ட மோட்சம் அடைவீர்களாக என்று கூறி மறைந்தார் -----இந்த விஷயம் காட்டு தீப்போல் ஊரில் பரவ ----இதை கேள்வி பட்ட ராமானுஜர் ----காவேரிக்கு திருமால் காட்சி தந்த இடத்தில் மண்டபம் எழுப்பி ----திருவரங்க பெருமாளை வருடத்திற்கு ஒரு முறை  அங்கே ரெங்கநாதர்  உற்சவத்தை இறங்க செய்து அமுது உண்ணும் படலம் என்று விழா நடத்த  ஏற்பாடு செய்துள்ளார்  -----அகண்ட காவேரி என்ற ஊரின் பெயரை  ---ஜீயர்புரம் என்று  மாற்றினார் ----இந்த கதைக்கு எனக்குள் எழுந்த வரிகள்  ----வானவர்க்கு அமுதம் வழங்கிய பெருமாளே ----வா என்று அழைத்த தாயின் அன்பு அமுதை பருகிய திருமாலே -----தாய் பசுவை தேடி கன்று வந்தது போல் ----தாயின் அன்பை பெற நீ வந்தாயோ ----அரங்கத்து அம்மானே
ஸ்ரீராமஜயம்





🙏🏿☘சிவ சித்தாந்தம்☘🙏🏿

No comments:

Post a Comment