Saturday 10 March 2018

பொது நாடி 09/03/2018


பொது நாடி 09/03/2018

சில நாட்களாக முகநூலில் சிலர் நமது அகத்தியர் சீவ நாடிக்கு எதிராக பதிவுகளை இட்டுக்கொண்டு இருந்தது அனைவரும் அறிந்ததே. நான் யாரிடமும் வாதாடாமால் அவர்களை பொருட்படுத்தாது நமது முகநூலில் இருந்து நீக்கி விட்டேன். பின்னர் இறைசித்தன் அய்யா அவரிடம் அதனை பற்றி எடுத்து உரைத்தேன்., அவரும் இதை எல்லாம் பொருட்படுத்த வேண்டாம், நமது பணி அகத்தியரின் பெருமையை உலகு அறிய செய்வதே. இடையில் வரும் இடையூறுகளை பொருட்படுத்த வேண்டாம் என்று உரைத்தார்.

நேற்று, சிறு மன சஞ்சலத்துடன் அவர் நாடியை பிரித்த போது, அகத்தியரே அவரின் மனதில் உள்ளதை அறிந்து கொண்டு, நாடியில் உரைத்ததாவது கிழே கொடுக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------
திரை வடிவில் வரும் செய்திகள் எதையுமே செவி கொண்டு கேட்க்காதே

அவனவன் கர்மாவை அவனவன் கையிலேந்தியே தீருவான். கூடிய விரைவிலேயே அவன் அந்த கருமத்தை கையில் ஏந்துவான்.

எண்ணிக்கையில் பதிமூன்று நாட்களுக்குள் அவன் வாழ்வில் ஒரு பெரிய பாதிப்பு வரும்

அவர்களை பற்றிய எண்ணங்களை மனதிலே இருந்து விட்டுவிடு.

ஒருவர் சீவ நாடியை பொய் என்று பதிவிட்டார். அதற்க்கு அகத்தியர் கூறியதாவது,

நீ பூஜை செய்த பொது உனக்கு சிலை வடிவில் வந்துவிழி விழித்து காட்டினேனே, அப்போதும் கூட அறியவில்லையா மூடனே !!

மற்ற எவரும் என்னை அறிய வேண்டும் என்று அவசியமில்லை, நீ என்னை அறிந்தால் அது போதும்.

மனதினை ஒருநிலைப்படுத்து

*************************************************************************

மேலும் சில அமானுஷ்யங்களை அகத்தியர் உரைத்தார், அவை கீழ் வருமாறு :

பொகளூர் அகத்தியர் சீவ நாடி குடிலின் எதிரில் அமைந்துள்ள வன்னி மரத்தின் கீழ் உள்ள விநாயகர் கோவிலைப்பற்றிய தகவல் தான் அது.

வன்னி மரத்தின் கீழே அமைந்துள்ள திட்டுக்குள் சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் "குப்பை சித்தர்" என்ற ஒரு மாபெரும் சித்தர் சீவ சமாதியாகி உள்ளார்" என்ற தகவல் வந்துள்ளது.

இந்த வன்னி மரமே அவர் சீவ சமாதி ஆன பிறகு தானாகவே முளைத்தது. இது யாரும் வந்து நட்டு வைத்த மரம் கிடையாது.

ஒரு யுகம் முன்பாக  (ஒரு யுகம் என்றால் சுமார் ஆயிரம் வருடம்), இந்த இடத்தில் ஒரு பெரிய ஆல் மரம் இருந்தது, அதன் நிழழில் ஒரு பள்ளிகூடம் நடந்தது. இந்த ஆல் மரத்தின் அடியில் தான் குப்பை சித்தன் எப்போதும் அமர்ந்திருப்பான். சுமார் முந்நூறு வருடங்கள் வளர்ந்த அந்த ஆலமரம் ஒரு சமயம் கீழே சாய்ந்தது. பிறகு சில காலம் கழித்து குப்பை சித்தர் அங்கேயே சீவ சமாதி கொண்டார். அவர் சீவ சமாதி கொண்ட அந்த இடத்தில் பூசை இடுவதற்காகவே யாம் உன்னை இந்த ஊருக்கு அழைத்தோம். இந்த சீவ சமாதி உள்ள இடத்தில் காலை, மாலை தீபமிட்டு அர்ச்சித்து வா.

________________________________________________________________

கடவுள் மறுப்பு கொள்கையில் இருப்பவர்கள் பற்றி :

கலியுகத்தில் இதெல்லாம் நடக்குமடா. இதையெல்லாம் நாங்களும் பார்த்துக்கொண்டு தான் உள்ளோம். அவர்களுக்கெல்லாம் வேற்று கிரக வாசிகளால் அழிவு உண்டு.

வேற்று கிரக வாசிகள் பூமிக்கு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை, சில வருடங்களில் நடக்கும். தற்போது தருமம் சிறிது சாய்ந்துள்ளது, அதர்மம் ஓங்கி உள்ளது. தருமத்தை நிலை நாட்டவே சித்தர்கள் ஆட்சி பூமியில் துவங்கி உள்ளது. அப்போது வேற்று கிரக வாசிகள் வந்து உலகில் உள்ள அனைவரையும் தாக்குவார்கள். அப்போது ஆன்மீகத்தில் உள்ளவர்களும், சித்தர்களை வழிபடுபவர்களையும் நாங்கள் காத்து ரட்சிப்போம். ஏனைய அதர்ம வழியில் செல்பவர்கள் வேற்று கிரக வாசிகளின் தாக்குதலில் பலியாவார்கள்.

இறைவனை நம்பாதவனை, அதர்ம வழியில் செல்பவனது கர்மாவை நாங்கள் கையிலெடுக்க மாட்டோம். அதை பற்றி பேசுவதோ, அவர்களை பெயரை கூறுவதோ கூட ஒரு பாவச்செயல். கடவுள் மறுப்பு கொள்கை யில் இருப்பவனடமிருந்து விலகி இரு. அவர்களை பார்த்தாலே நமக்கு கருமம் வந்து சேரும். அவர்களுடன் எந்த தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம். அவர்களுக்கெல்லாம் துர்மரணமே நேரும். ஆன்மீக நாட்டமில்லாமல், அக்கிரும செயல்களில் ஈடுபடுபவர்கள், மாற்றான் மனைவிக்கு ஆசைப்படுபவர்கள், ஏனைய பல பாதக செயல்களை செய்பவர்கள் அனைவருக்குமே வேற்று கிரக வாசிகளால் துர்மரணம் நேருமடா !!

ஏற்கனவே வேற்று கிரக வாசிகள் பாதிப்பு செயலில் தயாராக உள்ளனர். சித்தர்கள் அவர்களைதடுத்துநிறுத்திய வண்ணம் உள்ளனர். சித்தர் ஆட்சி துவங்கி விட்டது. இனிமேல் அவர்களும் பூமியில் வருவார்கள். பெரும் போர் நடக்கும். மிகப்பெரிய அம்மனுஷ்யங்கள் இந்த பூவுலகில் அரங்கேறும். அப்போது தருமம் சிறிது தலை சாயும், அதர்மம் தழைத்தோங்கும். ஆனால் மீண்டும் தருமம் நிலை பெரும். வரும் காலங்களில் பெரிய மாற்றங்கள் நிகழும். அரசியல் மாற்றங்கள் உடனே நிகழும்.

ஆசிகள், சுபம்.
_______________________________________________