Thursday 29 September 2022

அகத்தியர் ஆலயம் எழுப்புதல்

 ஒரு வீட்ல எத்தனை பேரு இருக்கீங்களா ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சீட்டு அந்த மாதிரி நீங்க வந்து மினிமம் அப்படின்னு சொல்லிட்டு கணக்கு வச்சு கொடுக்கலாம் உதாரணத்துக்கு ஒரு வீட்ல வந்து அஞ்சு பேர் இருந்தாங்க அப்படின்னா அஞ்சு சீட் எழுதிக் கொடுக்கலாம் அப்படின்னு நினைக்கிறேன்


ஓம் அப்படிங்கற பிரணவத்துக்குள்ள அனைத்துமே அடக்கம் அகத்தி என்ற எழுத்துக்குள்ள அனைத்து குருமார்களும் அனைத்து சித்தர்களும் முனிவர்களும் யோகிகளும் அடங்குவார்கள் உலோபாமுத்திரை அன்னை சக்தி வடிவம் அகஸ்தியரின் ஒரு பகுதி எனவே அவர்களும் அதனுள் அடங்குவார்கள் ஈசாய என்று அகத்தீசாய என்று கூறும் போது ஈசனும் அதனுடன் சேர்த்து வருகிறார் ஈசனுடன் சேர்த்து முப்பெரும் தேவர்கள் பிரம்மா விஷ்ணு சிவன் அவர்களுடைய பத்தினிகள் மற்றும் பார்வதி தேவி ஆகியோர்களும் அதில் அடங்குவார்கள் நமக என்று கூறும்போது அனைவருக்காகவும் பொதுவாக அவர்களை வணங்குகிறோம் என்று பொருளாகும் எனவே அகத்தீசாய நமக என்ற நாமத்தில் அனைத்தும் அடங்கும் என்பது பொருள்


பள்ளிக்கூடத்தில் சிறுவர்கள் ஒரு பாடத்தை ஒரு சொல்லை மறந்து விட்டால் அதனை அல்லது தவறாக எழுதி விட்டால் அதற்கு அந்த சொல்லை 100 முறை எழுதி வரும்படி என் ஆசிரியர் ஒரு தண்டனையாக கொடுப்பார் அது தண்டனை அல்ல அந்த சொல்லை மீண்டும் மீண்டும் எழுதும்போது அது நன்றாக உருப்பேற்று மனதில் ஆழமாக பதிகிறது பின்னரது தவறு செய்ய அல்லவோ மறக்கவோ வாய்ப்பு இல்லை எனவே அது போல நாம் நமது உள்ளிருக்கும் உயிர் சக்தியான அகஸ்திய சக்தியை மறந்து நிலையில் வாழ்வில் பல துன்பங்களுக்கு ஆளாகிறோம் அதனை ஞாபகப்படுத்தி கொள்ளவே அந்த நாமத்தை மீண்டும் மீண்டும் நாம் எழுதி வரும்போது அது நம்முள் ஆழமாக பதிந்து நமது வாழ்க்கைக்கு தேவையான அனைத்து செல்வங்களையும் அனைத்து நன்மைகளையும் வாரி வழங்கும் என்பது எள்ளளவும் ஐயமில்லை


லோபா முத்திரை அன்னை நதி வடிவமாக இருக்கிறார் அவருக்கு தாமிரபரணி என்று பெயர் அகஸ்தியர் முனிவர் மகாமுனிவர் மேரு மலையாக பொதிகை மலையாக தமிழகத்தில் இருக்கிறார் அந்த மலையில் இருந்து அகஸ்திய மலை என்று அழைக்கப்படுகிறது அந்த அகஸ்திய மலையிலிருந்து பொங்கி பாயும் நதியாக தாமிரபரணி என்ற லோபா முத்ரா அன்னையாருடன் சேர்ந்து இருவரும் தமிழகத்தில் அருள்பாலிக்கிறார்கள் அந்த நதியின் சிறப்பு தாமிரம் செப்பு அல்லது ஆங்கிலத்தில் காப்பர் என்று கூறுவார்கள் அப்படிப்பட்ட உலோகத்தில் நாம் அகஸ்தியர் நாமத்தை எழுதி கொண்டு இருக்கிறோம் அந்த உலோகம் செப்பு செப்பு காகிதம் என்று கூறப்படுவது தாமிரம் தாமிரபரணி அந்த குளோப முத்திரையின் வடிவமாகும் உலோக முத்திரை அகஸ்தியரை தாங்கும் விதமாக நாம் அகஸ்தியரின் நாமத்தை ஓம் அகத்தீசாய நமக என்று அந்த செப்பு காகிதத்தில் எழுதும்போது உலோப முத்திரை தாயும் அகஸ்தியரும் இணைந்த ஒரு சொரூபம் ஆகிவிடுகிறது சாதாரண செப்பு காகிதத்தில் அந்த மகிமை இல்லை ஆனால் அதிலே அகஸ்தியர் நாமத்தை பொறிக்கும் போது அந்த செப்பு காகிதம் உலோபா முத்திரை தாயராகவும் உடன் சேர்த்து அகஸ்தியரை தாங்கும் விதமாகவும் அமைந்து இந்த பூலோகத்தை ரஷிக்க நமது ஆலயத்தில் மண்ணிற்குள் கலந்து அனைவரையும் காப்பாற்றுவார்கள் என்பது நமது நம்பிக்கை ஓம் அகத்தீசாய நமக ஓம் லோபமுத்ராய நமக




No comments:

Post a Comment