Thursday 29 September 2022

நமது பீடத்தின் கோரிக்கை செய்தி

 அகத்திய அடியவர்களுக்கு வணக்கம் 


நமது குருஜி அவர்களிடம் இருந்து வந்துள்ள செய்தி .


நமது அகத்தியர் ஆலய பணிகள் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே .

தற்போது அகத்தியர் கருவறை கட்டிடம் எழுப்பப்பட்டு வருகிறது . அங்கே அகத்தியர் விக்ரகம் பிரதிட்டை செய்யப்படும் இடத்தில் , பூமிக்கு அடியில் ஓம் அகத்தீசாய நமஹ , ஓம் அகத்தியர் திருப்பாதம் போற்றி ஓம் லோபாமுத்திராய நமஹ  என்று செப்பு காகிதத்தில் ஒரு லட்சம் உரு எழுதி மண்ணிற்குள் , அகத்தியர் விக்ரகம் அமையும் இடத்தில் போட வேண்டும் . அகத்தியரின் மேல் பக்தி கொண்டவர்கள் , அகத்தியருக்கு தனி ஆலயம் அமைய வேண்டும் என்று விரும்புவர்கள் , இந்த கைங்கர்யத்தில் கட்டாயம் பங்கு கொண்டு , ஒவ்வொருவரும் தலா குறைந்தது 108 முறையாவது செப்பு தகட்டில் எழுதி நமது பீடத்திற்கு வந்து சேருமாறு ஆவண செய்ய குருஜி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார் . 10-15 நாட்களுக்குள் அகத்தியர் நாம வாசகங்கள் மண்ணில் புதைக்கப்படும் , அதற்கு பிறகு கொடுத்தால் , கொண்டு செல்ல முடியாது , தளம் போடப்பட்டுவிடும். இந்த பெரும் புண்ணிய காரியத்தில் பங்கு பெறுபவர்களுக்கு  சித்தர் விக்ரகம் பிரதிட்டை செய்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ , அது கிடைக்கும் , நம்மால் அருவமாக  பீடத்தில் உருவமாக விக்ரகம் பிரதிட்டை செய்யும் வாய்ப்பு எப்போது யாருக்கு அமையுமோ , இப்பிறவியில் இல்லை என்றால் , பின் எப்பிறவியோ , எங்கு பிறப்போமோ , எப்படி பிறப்போமோ , தெரியாது . எனவே நமது கண் முன் இந்த வாய்ப்பு இப்பிறவியிலேயே வாய்க்கும் போது பயன்படுத்தி கொள்ள வேண்டும் . அகத்தியர் நேரிடையாக பக்தர்களிடம் உரையாடும் ஆலயம் ஆதலால் , அய்யாவின் நேரடி பார்வை பக்தர்களின் மீது விழும் , அவரவர் எழுதிய எழுத்துக்கள் , அதனால் தான் காலத்தால் நிலைத்து நிற்கும் செப்பு காகிதத்தில் எழுதி கொடுக்க சொல்கிறோம் . அந்த எழுத்துக்கள் பல வருடம் அப்படியே இருக்கும் , அவை இருக்கும் வரை அய்யனின் அருளும் நமக்கு எங்கிருந்தாலும் கிடைத்து கொண்டே இருக்கும் . பலருக்கு அய்யா அவர்கள் நாடியில் இவ்வாறு  உரைத்திருப்பார்கள் , உதாரணம் - நீ சென்ற பிறவிகளில் பிரதிட்டை செய்திட்ட சிவன் ஆலயம் இன்றும் மக்களிடையே வழிபாட்டில் உள்ளது - என்று முற்பிறவி பற்றி கூறும் போது சிலருக்கு உரைத்திருப்பார் , ஆகவே , இதனால் புரிந்து கொள்வது என்னவென்றால் , எவ்வளவு பிறவி ஆனாலும் , நாம் செய்யும் நற்கருமம் , பல பிறவிகளுக்கு தொடர்ந்து வந்து நாம் ஜென்மம் கடைத்தேற  முக்தி அடையும் வரை அகத்தியர் அருள் காலம் கடந்த நிலையில் துணை நிற்கும் . தயவு செய்து எவ்வளவு புண்ணியம் சேர்க்க முடியுமோ சேர்த்து கொள்ளுங்கள். 


மிக்க நன்றி 


இன்னும் நிறைய எழுத வேண்டும் என்று நினைக்கிறேன் , ஆனால் அலுவலக பணி வெகுவாக உள்ளதால் , சுருக்கமாக நமது வேண்டுகோளை  செய்கிறேன் 


அனைவரும் , அகத்தியர் நாமம் எழுதி குருஜி இடம் ஒப்படைக்கவும் 


சந்தானம்


ஓம் அகஸ்தியர் திருப்பாதம் போற்றி அகஸ்திய அன்பர்களே அகஸ்தியர் சித்தர் பீடம் புகலூர் தன்னிலே இருந்து குருஜி ஆலயம் அமைப்பதென்பது பெரும் புண்ணிய காரியம் அதுவும் அகத்தியருக்கு ஆலயம் அமைப்பது என்பது பெரும் புண்ணியம் இந்த புண்ணியம் தண்ணிலே அகஸ்திய என் மக்களே உங்கள் கரத்தால் செம்பு தகட்டினிலே ஓம் அகத்தீஸ்வராய நமக இல்லையேல் அகஸ்தியர் பாதம் போற்றி என்ற திருநாமத்தை ஒன்றுக்கு ஒன்று என்ற தகட்டினிலே ஆயிரம் எட்டு முறை அதற்கு மேலோ உங்களால் என்ற அளவு அகத்திய பெருமானின் திருநாமத்தை எழுதி அகஸ்தியர் பிரதிஷ்டை செய்யப்படும் இடம் தண்ணிலே அடிகளே பதித்து அத்தனை மேலே அமர்த்தி அகஸ்தியர் கைங்கரியமும் தனிலே செய்து புண்ணியத்தை பெறுவீர் மக்களே தகட்டினிலே ஒரு பக்கம் மற்றும் எழவும் பின்புறம் வேண்டாம் இந்த தகடுகள் கோயமுத்தூர் பூ மார்க்கெட் முத்தையா ஸ்டோரில் கிடைக்கும் பெற்றுக் கொள்ளுங்கள் தீர்ந்து பால் பைன் பேனாவுக்கு எழுதுவது உத்தமம் அழகைத் தரும் அகஸ்தியர் திருநாமம் போற்றி குரு குருஜி டி ஆர் சந்தானம் அகஸ்தியர் திருப்பாதம் போற்றி

No comments:

Post a Comment