Saturday 16 October 2021

லக்ஷ்மி குபேர வசியம்

 வியாழக்கிழமை  குபேர பூஜை செய்யுங்கள் ||


எப்போதும் செல்வம் வீட்டில் நிலைத்து நிற்க ஒவ்வொரு வியாழக்கிழமை மாலையில் லஷ்மி குபேர பூஜை செய்யுங்கள்.


குபேர ஹோரையில் லஷ்மி குபேரரை வழிபட செல்வம் நிலையாக வரும். 


பணம் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது !!!


சரி குபேர ஹோரை என்றால் என்ன ?

 

வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மிக்கு உரிய நாள் என்பது போல், 


வியாழக்கிழமை குபேரருக்கு உரியது. 


அதிலும் வியாழக்கிழமை மாலை 5.00மணி முதல் இரவு 6.30மணிவரை உள்ள காலத்தை குபேர ஹோரை என்றே சொல்வார்கள்.  


இந்த நேரத்தில் குபேரனுக்கு குத்து விளக்கில் நெய் தீபமேற்றி, அதிரசம், பாயசம், கற்கண்டு, ஊறுகாய் வைத்து குபேரனை வழிபட்டால், கடன் தொல்லைகள் அகன்று, செல்வ பெருக்கம், குடும்ப சந்தோஷம் அதிகரித்தல் என நற்பலன்கள் அதிகரிக்கும் என்பார்கள். 


வீட்டில் செல்வம் சேர சில வழிகளை செய்து பாருங்கள் நம்பிக்கையுடன் !!


வீட்டில் ஏற்றும் இரண்டு காமாட்சி விளக்கில் நெய் போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.


வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத் தட்டுப்பாடு நீங்கும்.


வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர் பணம் கிடைக்கும். 


எனவே பல வித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.


நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு நீர் அருந்த தரவும். 

பின் மஞ்சள் குங்குமம் தரவும். 


இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.


அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. 

தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.

அன்று பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. 

முதலில் பித்ருக்களை வழிபட்ட பிறகே எந்த பூஜையும் செய்ய வேண்டும்.


வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.

பணம் ஓடிவிடும்.


பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் அதாவது மஹான்களின் ஆசிபெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.


வெள்ளிக்கிழமை  சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மஹாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது  குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில் பண புழக்கம் அதிகரிக்கும்.


அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெற பணம் நிலைத்திருக்கும்.


யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன் உச்சம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ர ஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.


பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும்.45 நாட்கள் விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.


முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடைநீங்கும்.


வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.


பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும். [அது துலா லக்னம் மற்றும் ரிஷப லக்னம்]


பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.


பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டித லையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் காவிரி நீரில் விடவும் பணப் பிரச்சனை தீரும்.


தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை  உடல் முழுவதும்தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.


குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் பின்னர் முகம் மற்றும் தலையை துடைக்கவும் தரித்திரம் விலகும்.


தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர்  ஆகலாம்.


பூர்வ புண்ணியம் இல்லாதவர் கூட லட்சாதிபதி ஆகலாம்.ஆனால் விடாமல் முயற்சி செய்து பாருங்கள்.


அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப்பெட்டியில் வைக்கபணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு ஆகாது.


குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் மஹாலஷ்மி கடாட்சம் ஏற்படும்.


தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு ஸ்துதி, விஷ்ணு சஹஸ்ரநாமம் கனகாதார ஸ்தோத்ரத்துடன் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்ய வாசம் செய்வாள்.


மஹாலட்சுமிக்கு இளஞ்சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபட வசிய முண்டாகி செல்வ வரத்து உண்டாகும்.


அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமை வரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11தீபமும் ,11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவு நிரந்தரமாகும்.


வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தைவெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும்.


ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று வீட்டில் சத்திய நாராயண பூஜை தொடர்ந்து செய்ய செல்வங்களை பெறலாம்.


ஐப்பசி மாத வளர்பிறையில் மஹாலட்சுமியை  வழிபடசெல்வம் பெருகும்.


தொடர்ந்து  11 பெளர்ணமி அன்று இரவு 8.30 மணிக்கு சொர்ணாகர்ஷன பைரவருக்கு தாமரை மாலைஅணிவித்து பிரசாதமாக அவல், பாயாசம் படைத்து வழிபட சொர்ணம் ஆகர்ஷணமாகும்.


மகாலட்சுமிக்கும், குபேரருக்கும் திரிதள வில்வத்தால் அர்சித்து, வில்வ மாலை அணிவித்திட பணம் குவியும்.


ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்து அவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம் குவியும்.


சுக்ர ஓரையில் உப்பு வாங்கிட செல்வம் குவியும்.


வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிக்க செல்வம் சேரும்.


மஹாலட்சுமியை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி திரிதள வில்வத்தால் அர்சித்திட செல்வம் ஆகர்ஷணம் ஆகும்.


சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி தெளித்திடசெல்வம் சேரும்.


சுக்ர ஓரையில் மொச்சை பயிர் வாங்கிட செல்வம் சேரும்.


சொர்ணாகர்ஷன பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர் பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம் சேரும்.


பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகலசெல்வங்களும் வசமாகும்.


வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன் வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்திட லஷ்மிஅருள் பரிபூரணமாக கிட்டும்.


மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும்,தொழில் ஸ்தாபனத்திலும் தெளிக்க ஐஸ்வர்யம் பெருகும்.


ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம் ஆகர்ஷணமாகும்.


தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி  படத்தில்காலை எழுந்தவுடன் கண் விழித்திட பண வரத்து கிடைக்கும்.


தனாகர்ஷண தைலத்தால் விளக்கு ஏற்றிட செல்வம் நிலையாக தங்கும்.


சொர்ணாகர்ஷண பைரவருக்கு 9 நெய் விளக்கு ஏற்றிட,தொடர்ந்து 9 வாரம் செய்து வர குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.


குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றி வழிபட்டால் பணம் வரும்.


குல தெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும் இடைவிடாமல் செய்து வர குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.


திருமலை வெங்கடாஜலபதிக்கு  வெண் பட்டு அணிவித்து வழிபட செல்வம் சேரும்.


துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்துவர தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.


சொர்ண பைரவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்து, அதனை வீட்டில் தெளித்திட சொர்ண லாபம்கிட்டும்.


செவ்வாய் கிழமையில் செவ்வரளி கொண்டு முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி வளம்பெருகும்.


ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபடபூமி லாபமும், செல்வ வளம் கிட்டும்.


கோவிலில் லஷ்மி மீது வைத்த தாமரை மலரைக் கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து மடித்து பணப் பெட்டியில் வைக்க பணம் சேரும்.


சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனைஅன்ன தானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்கு நம்மிடம் வந்து சேரும்.


ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு அணிவித்த சந்தனத்தை பெற்று அதனை தினமும் நெற்றியில் இட்டு வர பணம் வரும்.


வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமிஅஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டுஅர்ச்சிக்க  தனலாபம் கிட்டும்.


ஐஸ்வர்ய லஷ்மி படத்தினில் வாசனை திரவியம் தடவி பணப்பையில் வைக்க பணம் ஆகர்ஷணம் ஆகும்.


தொடர்ந்து 18 நாள் ஸ்ரீ சூக்த பாராயணத்தை வேதபண்டிதர்களை கொண்டு செய்ய லஷ்மி கடாஷம் நிரந்தரமாகும்.


ஸ்ரீ லஷ்மி குபேர சத நாம ஸ்தோத்திரத்தினை தீப தூப ஆராதனையோடு கூறி வர அஷ்ட தரித்திரம் நீங்கி தனலாபம் பெறலாம்.


கனக தாரா ஸ்தோத்திரத்தினை தினமும் கூறியும் கேட்டு வர பணம் கிடைக்கும்.


வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்து மஞ்சளாக பிடித்து அவர்களை  நினைத்து வழிபட, சகலதோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.


மஹாலட்சுமிக்கு  பச்சை பட்டினை அணிவித்து வணங்க பணம் வரும்.


கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மஹா சங்கடஹர சதுர்த்தியில் அர்ச்சித்து வணங்க தொழிலிலுள்ள தடை நீங்கி தனலாபம் கிட்டும்.


அல்லது கணபதி ஹோமம் மற்றும் ஸ்ரீ ஸுதர்சன ஹோமம் மாதம் ஒருமுறை செய்தால் பணம் தடையின்றி கிடைக்கும்.


பச்சை பட்டு உடுத்திய லஷ்மி படத்தனை வாசலில் மாட்டிதினமும் தூபம் காட்டி வர அஷ்ட ஐஸ்வர்யங்களும் வசமாகும்.


செல்வத்திற்கு உரியவள் மஹாலஷ்மி வெள்ளிக்கிழமை தினம் வழிபடவும் 24 வெள்ளிக்கிழமை வழிபாட்டால் பணம் கிடைக்கும்.


தினமும் லஷ்மிகுபேரரை மனதார வழிபட பணம் தடையின்றி கிடைக்கும்.


இந்திராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வு வாழ பணம் கிடைக்கும்.


வியாழன் அன்று குரு ஓரையில் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்ய செல்வம் சேரும்.


வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஓரையில் சுக்ரன்,மகாலஷ்மி இருவரையும் மல்லிகை மலர் கொண்டு 33வாரம் வழிபட செல்வம் கிடைக்கும்.


செந்தாமரையில் அமர்ந்துள்ள அஷ்ட லஷ்மியை வழிபட பணம் கிடைக்கும்.


கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் நாராயண சூக்தம் சுக்ரஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும்.


அவரவர் குல தெய்வத்தை தினம் அதிகாலை நேரத்தில் நம்பிக்கையுடன் வழிபட பணம் கண்டிப்பாக வரும்.


அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில்முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம் செய்த அளவின் மடங்குகள் பணம் வரும்.


திருப்பதி வெங்கடாஜலபதி, பத்மாவதி தாயார் படம் வைத்து தினமும் வழிபட பணம் வரும்.


தனதா யட்சணீ பூஜை வில்வ மரத்தடியில் தந்திர சாஸ்திரப்படி பூஜை செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும்.


சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க கோடி கணக்கில் பணம் கிடைக்கும்.


ஆந்தையை தினமும் வழிபட பணம் கிடைக்கும்.


ஜோடி கழுதை படம், ஓடும் வெள்ளை குதிரை படம்,அடிக்கடி பார்க்க பணம் வரும்.


தனாகர்ஷண மூலிகை சட்டை பாக்கெட்டில் இருக்க பணம் குறையாது.


பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் மற்றும் ஆசனவாயை தொட்டு வணங்க பணம் ஏதாவது ஒரு வழியில் கிடைக்கும்..


குபேர காயத்ரி மந்திரம்


ஓம் யஷ ராஜாய வித்மஹே

வைஷ்ரவணாய தீமஹி

தந்நோ குபேர ப்ரசோதயாத்.


108 முறை


அடடா இதெல்லாம் செய்து பார்த்து விட்டேனே ஆனால் எனக்கு ஒன்றுமே கிடைக்கவில்லையே என்றால் அது உங்கள் கர்மா.


சிறிய உதாரணம் குழந்தைகள் கீழே விழுந்துவிட்டால் மீண்டும் எழும் மீண்டும் விழுந்து விட்டால் மறுபடியும் எழும் அல்லது முயற்சி யாவது செய்யும்.


அதே போல் தான் நாமும் கிடைக்கவில்லை என்றால் மீண்டும் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.


தர்மோ ரஷதி ரஷிதஹ 🙏🏻🙏🏻


ஜெய் ஸ்ரீராம்

சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.

No comments:

Post a Comment