Tuesday 9 February 2021

பஜகோவிந்தம் - பொருளுறையுடன்

 *பஜகோவிந்தம் - பொருளுறையுடன்*


பஜகோவிந்தம் பஜகோவிந்தம் 

பஜகோவிந்தம் மூடமதே |

சம்ப்ராப்தே சந்நிஹிதே காலே 

நஹிநஹி ரக்ஷதி டுக்ரிங்கரணே


துதி கோவிந்தனை,துதிகோவிந்தனை ,

கதி கோவிந்தனே, மடமதியே!

கதவினைக்காலன் தட்டிடும் நேரம் 

உதவிடுமோ உந்தன் இலக்கண ஞானம் ?


மூட ஜஹீஹி தனாகம த்ருஷ்ணாம் 

.குரு சத்புத்தி மனசி வித்ருஷ்ணாம் |

யல்லபசே நிஜகர்மோபாத்தம் 

.வித்தம் தேன விநோதயசித்தம் |


மூடா!பொன்பொருள் மோகம் அறுப்பாய் ;

நாடுவாய் மெய்ப்பொருள் நிர்மல நெஞ்சால் ;

பாடுபட்டுழைத்து நீதேடிடும் தனத்தால் 

கூடிடும் சுகத்துடன் குறையின்றி வாழ்வாய்.


யாவத்வித்தோபார்ஜனசக்த--

ஸ்தாவன்நிஜபரிவாரோ ரக்த :|

பச்சாஜ்ஜீவதி ஜர்ஜரதேஹே 

வார்த்தா கோபி ந ப்ருச்சதி கேஹே |


சம்பாதித்திடும் தெம்புள்ளவரையில்

அன்பைப் பொழிந்திடும் உன்பரிவாரம், 

ஓடாய் உழைத்துநீ ஓய்ந்திடும் நேரம்

வேண்டாதவனாய் ஒதுக்கிடும் உன்னை.


மா குறு தனஜன யௌவன கர்வம் 

ஹரதி நிமேஷத்கால : சர்வம் |

மாயாமயமிதமகிலம் ஹித்வா 

ப்ரம்ஹபதம் த்வம் பிரவிஷா விதித்வா |


பணம்,படை,இளமையால் ஆணவம் வேண்டாம் ;

கணத்தினிலழிபவை இவையென அறிவாய் ;

மாயாமயமிந்த வாழ்வென உணர்ந்தே

தூயப்ரம்ம நிலைதனை யடைவாய் .


சுரமந்திரதரு மூலநிவாசஹ 

ஷய்யாமூதலமஜினம் வாசஹ |

ஸர்வப்பரிக்ரஹமோகத்யாகஹ 

கஸ்ய சுகம் ந கரோதிவிராகஹ |

உறங்கிட ஆலயமும் மரநிழலும் ;

உடலினை மூடுவதோ தோலாடை ;

இங்ஙனம் யாவும் துறந்தவர் மனத்தில் 

பொங்கிடும் மகிழ்ச்சி மங்குவதேது ?


பகவத்கீதா கிஞ்சித தீதா 

கங்காஜலலவகணிகா பீதா |

சக்ருதபி ஏன முராரி சமர்ச்சா 

த்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா ||


சில வரியேனுங் கீதை படிப்போரும்,

துளியேனுங் கங்கை நீர் குடிப்போரும்,

அரங்கனைக் கணமேனுந் துதிப்போரும்,

கலங்குவதில்லை கூற்றுவன் வரினும். 


புனரபி ஜனனம் புனரபி மரணம் 

புனரபி ஜனனிஜடரே சயனம் |

இஹ சன்சாரே பஹுதுஸ்தாரே 

க்ருபயா பாரே பாஹி முராரே ||


மாண்டபின் ஜனனம்;மறுபடி மரணம் ;

மீண்டுந்தாயின் கருப்பையிலுறக்கம்;

பிறவிக்கடலிதைக் கடப்பது கடினம்;

கரை சேர்த்தருள்வாய் ,முராரி!சரணம் .


கேயம் கீதா நாம சஹஸ்ரம் 

த்யேயம் ஸ்ரீபதிரூபமஜஸ்ரம் | 

நேயம் சஜ்ஜன சங்கே சித்தம் 

தேயம் தீனஜனாய ச வித்தம் ||


கீதையும்,அரங்கனின் ஆயிரம்பேரும் 

ஓதி நினைப்பாய் கமலையின் பதியை;

நிதம் நாடிடுவாய் நல்லோர் நட்பை;

இதயங்குளிர்வாய் இல்லார்க்கீந்தே! 


அர்த்தமனர்த்தம் பாவய நித்யம் 

நாஸ்தி தத ஹ சுகலேஷஹ சத்யம் |

புத்ராதிபி தனபாஜாம் பீதிஹி 

சர்வத்ரைஷா விஹிதா ரீதிஹி 


செல்வத்தால் தொல்லையே சுகமென்றுமில்லை; 

உள்ளத்திலுறுதியாய்ப் பதி இவ்வுண்மையை. 

தனயனும் சொத்தால் உன்பகையாவான் .

மனிதஇயல்பிதை மறந்திடவேண்டாம் .


குருசரணாம்புஜ நிற்பர பக்தஹ 

சம்சாராதசிராத்பவமுக்தஹ |

செந்த்ரியமானச நியமாதேவம் 

த்ரக்ஷ்யசி நிஜஹ்ருதயச்தம் தேவம்


குருவின் பதகமலம் பற்றிய பக்தா! 

அறநெறி நின்று, ஐம்புலனடக்கி

விடுபடு பிறவிப் பிணியிலிருந்து ;

உணர்ந்திடுன்னுளமுறை பரம்பொருள்தன்னை !


நன்றி...

No comments:

Post a Comment