Saturday 13 February 2021

ஒரு அன்பரின் அகத்தியர் பீட அனுபவம்

 வணக்கம் அகத்தியர் அனுபவம் எனது தந்தை (68வயது) மூல நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார்(19/01/2021) கடந்த மூன்று நாட்களாக ரத்தக்கசிவு ஏற்பட்டது கடுமையான வலியால் அவதிப்பட்டார் ஆதலால் மருத்துவமனை சென்று பார்க்க முடிவெடுத்தோம் அதற்காக வாடகை  கார் புக் செய்ய முடிவு செய்தோம் ஆனால் இரண்டு மூன்று நிறுவனங்களிடம் கேட்டும் வாடகைக்கார் கிடைக்கவில்லை (red taxi,go taxi).




  

பின்னர் அகத்தியர் pogalur blog யில் இதற்கான மருந்து இருப்பதாக பதிவு இருந்தது. 

http://agathiyarpogalur.blogspot.com/2020/07/blog-post_95.html?m=0

உடனடியாக அகத்தியர் ஜீவநாடி pogalur பீடத்துக்கு  சென்றோம் அங்கு குருஜியிடம் இதைப் பற்றி சொல்ல அவர் நீங்கள் மருத்துவமனை சென்றால் கண்டிப்பாக ஆபரேஷன் செய்ய வற்புறுத்துவார்கள் ஆனால் இந்த பிரச்சனை மீண்டும் வரும். ஆதலால் நமது அகத்தியர் ஜீவ நாடியில்

வந்த  மருந்தை   தந்தார்கள் அதனுடன் அகத்தியரிடம் இருந்த சில பூக்கள் கொடுத்தார் இதை உங்கள் தந்தையிடம் கொடுங்கள் உடனடியாக வலி சரியாகும் பின்னர் இந்த மருந்துகளை உட்கொள்ளுங்கள் அனைத்தும் சரியாகும் என்று கூறினார் விடைபெற்றோம்.

குருஜி வாக்களித்தது போல் அனைத்தும் சரியானது. 

இதில்

 அகத்தியர் திருவிளையாடல்  என்னவென்றால் அகத்தியர் பக்தர்களை என்றும் விட்டுக்கொடுக்காமல் பாதுகாத்து வருகிறார் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் கார் வருவதை தடுத்து .தனது இடத்திற்கு வர வைத்து மருந்தை உட்கொள்ளச் செய்து இந்த நோயை சரி செய்தார்...

No comments:

Post a Comment