Saturday 20 February 2021

நமது பீடத்தில் இறை அனுபவம்

 நேற்று குருஜி மோகன மந்திரம் ஜெபம் செய்த உடனே பொகளூரில் மழை பெய்துள்ளது. இன்று பீடத்துக்கு சென்ற போது, "நேற்று நல்ல மழை", என்று கூறினார்கள். நானும் அதை சாதாரண செய்தியாக எடுத்து கொண்டேன். எனக்கு புரியவில்லை. இன்று ஒரு அன்பருக்கு அந்த மந்திரம் தீட்சை கொடுக்கப்பட்டது. அப்போது, நான் உடன் இருந்தேன். குருஜி ஒரு செப்பு தகட்டில் அந்த மந்திரத்தை எழுதி கொடுத்தார். எழுத ஆரம்பிக்கும் போதே, ஒரே நொடியில் கரு மேகங்கள் சூழ்ந்து சட சட வென காற்று அடித்து, பெரும் மழை பொழிந்தது. காலையில் இருந்தே நல்ல வெய்யில். உச்சி வேலையில் நல்ல வெய்யில் அடிக்கும் போது, மந்திர சக்தியால் மழை உடனடியாக பொழிந்தது. எழுதுகோலை செப்பு தகட்டில் வைத்த உடனே, சுவிட்ச் போட்டால் லைட் எரிவது போல மழை வந்தது. அப்போது தான் , "நேற்றும் இதே போல நடந்தது" என்று கூறினார்கள்.


கண் முன்னே பார்த்த சக்தியை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

வீடியோ கீழே

👇👇👇👇👇








No comments:

Post a Comment