Thursday 23 September 2021

குருவாயூர் கேசவன்

 ஸ்ரீராமஜெயம்🙏

ஸர்வம் ஸ்ரீராம மயம்🙏

ஸ்ரீமதே ராமானுஜாயா நம:🙏



🌹🌺 *ஏகாதசி நாளில் எதுவும் உண்ணாமல் விரதமிருந்து கிருஷ்ணரின் சேவையில் ஈடுபட்ட  பக்த யானை-  விளக்கும் எளிய கதை* 🌹🌺

-----------------------------------------------------------------


🌺🌹 குருவாயூர் கேசவன் -  கேரளாவின் குருவாயூரில் மிக முக்கியமான பக்த யானை . இது அதிசயமான மற்றும் தனித்தன்மை வாய்ந்த இறைவனுக்கு சேவை செய்த மகத்தான யானைகளில் ஒன்றாகும். 


🌺நீலம்பூரில் இருந்த வலியா ராஜா மலபார் கலகத்தில் தனது பறிக்கபட்ட சொத்துக்கள் திரும்ப பெற்றால் குருவாயூரப்பனுக்கு தனது வசம்முள்ள பல யானைகளில் ஒரு யானையினை தானமாக தருவதாக வேண்டிகொண்டார் .


🌺தனது முழு சொத்துகளையும் திரும்பப் பெற்றபின் அவர் தனது வேண்டுதலை நிறைவேற்றினார்..  (கோவிலுக்கு யானையினை தானமாக கொடுப்பது கேரள மாநிலத்தில் உள்ள பொதுவான ஒரு வழிபாட்டு முறையாகும் இதுவும் ஒரு வகையான காணிக்கையாக ஏற்றுக்கொள்ளபடுகிறது.)


🌺மகாராஜாவின் ஆசை நிறைவேறியது அதனால் அவர் வாக்குறுதியை நிறைவேற்றினார்.   1922 ஆம் ஆண்டில் யானை ஒன்றை வழங்கினார்.  அந்த யானைதான் பிரபலமான குருவாயூர் கேசவன்.


🌺யானைக்கு கேசவன் என பெயரிடப்பட்டது. கேசவன் பொதுவாகவே மிகவும் உன்னதமான குணமும், அமைதியாகவும் சில நேரங்களில் முன்னுக்கு பின் முரணாகவும் நடந்து கொள்ளும். 


🌺கேசவன் வந்த போது, பத்மநாபன் என்ற யானை பகவத் கைங்கர்யத்திற்கு ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.


 🌺1923ல் இருந்து கேசவன் யானை கிருஷ்ணரின் சேவையில் தீவிரமாக ஈடுபடலானார். கேசவன் தனக்குச் சில சொந்த விதிகள் வைத்திருந்தார். அவர் உணவு பழக்கங்களில் மிகவும் தேர்ந்தவர்; மற்ற கோயில் யானைகளை விட கேசவன் மிகவும் வித்தியாசமானவர்.


🌺குருவாயூர் ஶ்ரீ கிருஷ்ணரின் கோவிலை தவிர வேறு கோயில்களுக்கு செல்லமாட்டார். கட்டாயப்படுத்தினாலும் அடித்தாலும் அமைதியாக அடிவாங்கிக்கொண்டு கண்ணீர் விடுவார். ரகளை செய்யமாட்டார்.


🌺கேசவன் ஏகாதசி நாளில் எதுவும் உண்ணாமல் விரதமிருப்பார். குருவாயூரப்பனை தவிர வேறு எந்த விக்ரகங்களையும் தன் மீது சுமக்க அனுமதிக்க மாட்டார்.. குருவாயூரப்பன் திடம்பை ஏந்தி தன் மேல் அமர வருபவர்களுக்கு மட்டுமே கேசவன் தன் முன்னங்கால்களைத் தாழ்த்தி ஏற உதவுவார். ஆலவட்டம், குடை, வெண்சமரம் போன்றவற்றை ஏந்தி நிற்போர், பின்னங்கால் துணை கொண்டே ஏற உதவுவார். தனி மனிதனாக தன் பாகன் கூட தன் மேல் ஏறி அமர அனுமதித்ததில்லை கேசவன்.


🌺ஒருமுறை அவர் தனது யானைப் பாகர்களை மதிக்காமல் ஆலயத்திற்கு விரைந்து சென்றார். அந்த இடத்திலுள்ள எல்லோரும் அதைக் கண்டு பயந்தனர் மக்கள் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு ஏழையான, உதவியற்ற குஷ்டரோகியை கேசவன் தனது தும்பிக்கையால் தூக்கி பாதுகாப்பான ஒரு மூலையில் பத்திரமாக வைத்தார் என்று கண்டபோது அவர்கள் ஆச்சரியம் மடைந்தார்கள். ஒரு முறை குருவாயூர் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் இருந்து மூலவரை காக்க மணல் மூட்டைகளைக் கொண்டு வந்து தீயை அணைத்தார். 




🌺1973 ஆம் ஆண்டில் கேசவன் "கஜராஜன்" (யானைகளின் அரசன்) என்ற பட்டம் அளித்துக் கோவிலில் முதல் முறையாக யானையின் சேவையை பொன்விழா ஆண்டு (கோல்ட் ஜூபிலியாகக்) கொண்டாடப்பட்டது.


🌺1976 ஆம் ஆண்டு,  டிசம்பர் 2 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி நாளில்  திருவிழாவில் கேசவன் தனது நித்ய சேவை செய்து கொண்டிருந்த போது,  இறைவனிடம் தனது வணக்கத்தை சமர்பித்துக் கொண்டு, நமஸ்கரிக்கும் பாணியில் தனது உடலை மண்ணில் அர்ப்பணம் செய்துகொண்டே, கேசவனின் உயிர் பிரிந்தது. அவர் வைகுண்ட பிராப்தியடைந்தார்.🌹🌺


------------------------------------------------------------------------


🌻🌺🌹 *சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* 🌼🌻🌺🌹


ஓம் நமோ நாராயணாயா🙏




No comments:

Post a Comment