Wednesday 22 September 2021

எனக்கு நானே குரு - குரு உபதேசங்கள்

 எனக்கு நானே குரு - குரு உபதேசங்கள்


மனிதர்கள் பேசுவது , செய்வது எல்லாமே மனதின் வெளிப்பாடு . எண்ணங்களின் வெளிப்பாடு . எண்ணங்கள் பேச்சு , சொல் மூலம் வெளிப்படுகிறது . பலரும் கூறுவார்கள் , இறைவனை உள்முகமாக பார்க்க வேண்டும் , உள்ளே செல்ல வேண்டும் , நம்முள்ளேயே இறைவன் இருக்கிறார் , நம் உள்ளேயே ஜோதி உள்ளது என்றெல்லாம் கூறுகிறீர்கள் . அதற்கு அர்த்தம் அர்த்தம் தான் என்ன . எப்படி உள்ளே செல்வது . வெளியே செல்வதற்கு சாலை , வாகனம் என்றெல்லாம் உள்ளது. உள்ளே செல்வது எவ்வாறு என்று கேள்வி வரும் . இதற்கு விடை மிகவும் எளிமையானது. வெளிப்பாடு - அதன் எதிர் சொல் - உள்பாடு . மேற்கே செல்ல வேண்டும் என்றால் கிழக்கு க்கு எதிர் திசையில் செல்ல வேண்டும் . மேற்கு எது என்று தெரியாவிட்டால் பரவாயில்லை , கிழக்குக்கு எதிர் சென்றால் அது தான் மேற்கு . அதே போல எப்படி வந்தோமோ அதே வழியில் தான் வெளியே போக வேண்டும். அதே போல் , வெளிப்படும் போது செயல் செய்கிறான்  - உதாரணம் , சிரிப்பு அழுகை வியப்பு ஆகியவை , மனதின் அனுபவத்தை வெளிப்படுத்துகின்றன . உள் படுத்த வேண்டுமானால் , எதுவும் வெளிப்படுத்தாமல் வெறுமனே இருக்க வேண்டும் , சிரித்தாலோ , அழுதாலோ , கோவப்பட்டாலோ , வியந்தாலோ , அது வெளிப்பாடு ஆகி விடும் . உள்ளே செல்ல முயற்சி செய்பவர்கள் இவ்வாறு வெளிப்பாடு செய்யாமல் இருந்தால் , அதன் எதிர் திசை ஆன உள்பாடு ஏற்படும் . அதே போல் நடத்தல் , தூக்குதல் .... போன்ற எந்த அசைவுகளும் வெளிப்பாடு ஆகும் . அதன் எதிர் திசை - அசைவற்று இருத்தல் , அது உள்ளே செல்ல வழி வகுக்கும் . நாம் வெளிப்படாமல் வெளிப்படுத்தாமல் இருந்தாலே , நாமே தானாக உள்ளே , உள்முகமாக ஒன்றி இருப்போம். கண்களால் பார்ப்பது , பார்க்கும் பொருட்களை மனதுக்கு கொண்டு சென்று அதன் மூலம் எண்ணம் உருவாகி , சொல் மூலமாகவோ செயல் மூலமாகவோ வெளிப்படும் . எனவே உள்முகமாக இறைவனை நோக்கி செல்ல வேண்டும் என்றால் , கண்களை மூடி இருக்க வேண்டும் . கண் திறந்து பார்த்தால் வெளிப்பாடு , அதன் எதிர் திசை , கண் மூடி இருத்தல் - அதுவே உள்முகம். பேச்சு , சொல் என்பது மனதில் உள்ள எண்ணங்களின் வெளிப்பாடு. அதன் எதிர் செயல் "மௌனம் ". மௌனம் உள்முகம்.  இதில் உனக்கு தெளிவாக புரிந்திருக்கும் , பஞ்ச இந்திரியங்கள் கண் காது மூக்கு செவி தொடுஉணர்வு , அனைத்துமே வெளிப்படுத்தும் செயல்களை செய்கின்றன . அதே போல் உள்பாடு என்பது இறைவன் நிலை என்றால், வெளிப்பாடு என்பது இறைவன் அற்ற நிலை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் . மனிதர்கள் என்ன செய்கிறீர்கள் , பெரும்பாலும் இறைவனில் இருந்து விலகியே வாழ்கிறீர்கள் , மௌனம் என்பது கிடையாது , அசைவற்ற நிலை என்பது கிடையாது , கண் மூடி இருத்தல் கிடையாது . சும்மா இருந்தால் சலிப்பு வருகிறது என்கிறீர்கள் . எவ்வளவு நேரம் சும்மா இருப்பது . பொழுது போகவில்லை என்கிறார்கள் . அனைவருக்கும் இறைநிலை பற்றி தெளிவு வேண்டும் , வெளிப்பாடு என்றால் என்ன , அதன் நிலை என்ன , உள்பாடு என்றால் என்ன , அதன் நிலை என்ன என்று புரியாததால் , உள்படாமல் வாழ்க்கை இறைவனில் இருந்து விலகியே முடிந்து போகிறது . முடிவில் இறந்த போது எந்த வித வெளிப்படுதலும் இல்லாமல் முழுவதும் உள்முகமாகி போகிறது . அந்த உள்முகம் சமாதி ஆகாது , என் என்றால்  மனம் உள்முகத்துக்கு உடன்பட வேண்டும் . உடன்படாததால் , அதற்கு மரணம் என்று பெயர் . அதுவே மனம் உடன்பட்டு , மேற்கூறிய நிலைகளில் உள்முகமாக சென்றால் , அதுவே சமாதி , மரணம் ஆகாது , மீண்டு வெளிப்படலாம். இதற்கு பெயர் தான் த்யானம் , உள்முகப்படுதல் , ஏன்  த்யானத்தில் அசைவற்று இருக்க வேண்டும் , ஏன் கண்களை மூட வேண்டும் , ஏன் மெளனமாக இருக்க வேண்டும் , எது வெளிப்படுதல் , எது அதன் எதிர் திசையில் உள்படுதல் என்று இப்போது விளங்கி இருக்கும் . இது விளங்கா விட்டால் எப்படி த்யானம் செய்ய முடியும் . என்ன செய்கிறோம் எதற்கு செய்கிறோம் என்று தெளிவு வேண்டும், அப்போது தான் அது சித்தி பெரும் . ஆலயம் சென்று இறைவழிபாடு செய்தல் என்பதும் புற செயலே . அதிலே இறைவனை புறத்தில் உருவகப்படுத்தலாம் . இறைவனை யாரும் காண முடியாது. உன்னை  நீயே கண்ணாடி இல்லாமல் காண முடியாது . நீ தான் அது. அது நீயாக இருக்கிறது . வெளிப்படுத்தலில் , நீ அதுவை உணராமல் விலகி தூர செல்கிறாய் . அது மரணத்தில் போய் முடியும் 


எனவே இறைவனை வெளியே பார்க்க முடியாது , வெளியே பார்க்க வேண்டுமானால் இறைவனுக்கு ஒரு பெயர் , ஒரு ஊர் , ஒரு வடிவம் , எல்லாம் கொடுத்து பார்க்க வேண்டும் .  பின்னர் பூஜை செய்து, மனம் அமைதி கொண்டு , நமக்கே தெரியாமல் மனம் உள்முகமாக பயணம் செய்கிறது , சதா இறை சிந்தனை , சதா இறை பூஜை , சதா ஜெபம் ஆகியவை செய்யும் போது , உள்முகம் ஓரளவுக்கு சாத்தியப்படுவது போல இருக்கும் . ஆனால் முழுவதுமாக வெளியே இருந்து நீங்கி , அமைதியாக அமர்ந்து அசைவில்லாமல் , கண்மூடி மௌனத்தில் இருந்தால் நாமே இறைவனாகி உணர்வோம் . அது தான் யோகம் த்யானம் எல்லாமே . அவன் தான் யோகி சித்தர் , அவனே குரு , அவனே இறைவன் . அவனுக்கு ஊர் பேர் கிடையாது , உருவமும் கிடையாது . இறைவன் நிலை முழுவதும் ஆகும் நிலையில் ராமலிங்க வள்ளலார் போல மாணிக்க வாசகர் போல புற உருவம் மறைந்து ஒளிமயமாகும் .

No comments:

Post a Comment