Monday 7 December 2020

பொகளூர் அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடத்தில் நமது ஐயனுக்கு மார்கழி ஆயில்ய குரு பூஜை விழா 02.01.2021

 பெருமதிப்பிற்குரிய அன்பர்களே

நமது பொகளூர் அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடத்தில் நமது ஐயனுக்கு மார்கழி ஆயில்ய குரு பூஜை விழா 02.01.2021 அன்று சனிக்கிழமை சதுர்த்தி திதி அன்று நடக்க இருக்கிறது. அந்த விழாவிற்கு அய்யனிடம் ஜீவ நாடியில் அனுமதி பெறப்பட்டு பத்திரிகை அச்சடிக்கும் பணி நடந்து கொண்டு இருக்கிறது. நமது பீடத்துக்கு வந்து தமது பெயர் முகவரியை பதிவு செய்து உள்ள அணைத்து அன்பர்களுக்கும் பத்திரிகை தபாலில் அனுப்பி வைக்கப்படும். இதற்கு நிறைய நேரம் உடலுழைப்பு, பத்திரிகை எழுதும் வேலையில் நமது அன்பர்கள் சிலர் ஈடுபட்டு உள்ளனர். எழுதி முடித்தவுடன் பத்திரிகை தபால் செய்யப்படும். இந்த செய்தியையே நாங்கள் நேரில் வந்து அழைத்த அழைப்பாக ஏற்றுக்கொண்டு, அனைவரும் முன்கூட்டியே திட்டமிட்டு வந்திருந்து விழாவினை சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

விழாவிற்கான பணிகள் நடந்து கொண்டு வருகின்றன. விழா பந்தல் அமைக்கும் பணிக்கு சுமார் 20000 தேவைப்படுகிறது. அன்னதானத்துக்கு 1000 வாழை இலை, டேபிள் சேர் வாடகை போன்ற சில தேவைகளுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். தினமும் சிறு சிறு நன்கொடைகள் வந்து கொண்டே இருக்கின்றன. அதனை வைத்து விழாவினை திட்டமிடுகிறோம். மிக்க நன்றி

தி. இரா சந்தானம் - 9176012104 - தொலைபேசி வாட்ஸ் அப் மற்றும் GPay




No comments:

Post a Comment