Monday 5 October 2020

வள்ளலார் பிறந்த தினம்..!! வரலாறு சுருக்கம் தொடர்ச்சி 2

 வள்ளலார் பிறந்த தினம்..!!


வரலாறு சுருக்கம்

தொடர்ச்சி 2



அண்ணனும் அண்ணியும் இராமலிங்கத்தை வணங்குதல்.!

சோமு செட்டியார் வீட்டில் நடந்த விழாவில் கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்றிவிட்டு வண்டியில் வீடு வந்து சேர்கிறார் இராமலிங்கம்..

இராமலிங்கம் வீட்டிற்குள் வந்ததும் அண்ணனும் அண்ணியாரும் இராமலிங்கம் காலில் விழுந்து வணங்குகிறார்கள்,அண்ணா அண்ணி இது என்ன விபரீதம் ,என்ன கொடுமை,என்காலில் நீங்கள் விழுந்து வணங்குவதா ? என்னால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது,நீங்கள் இருவரும் என்னில் உயர்ந்தவர்கள்,எனக்கு முதியவர்கள் நீங்கள் என்னுடைய காலில் விழுந்து வணங்குவது ஏற்றுக் கொள்ள முடியாத பாவச்செயல்களாகும்,கடவுள் என்னை மன்னிக்க மாட்டார் .தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்,இப்படி செய்தால் இன்றே நான் வீட்டைவிட்டு சென்று விடுவேன்.என்ன மன்னித்து விடுங்கள் என்று இருவரையும் கைக்கூப்பி வணங்கி அவர்கள் இருவரின் கால்களில்  விழுந்து வணங்குகிறார்.

இராமலிங்கம் நீ என்னுடைய தம்பி என்று நினைத்து பள்ளிக்கு செல்லவில்லையே என்று உன்னை இந்த கைகள் அடித்து இருக்கின்றன,இந்த வாய் உனக்கு சோறு போட வேண்டாம் என்று சொல்லி உள்ளது.உன்னை திட்டி உள்ளது,என்னை மன்னித்துவிடு.....நீ என்தம்பி இல்லை !...நீ கடவுளின் குழந்தை என்று அறியாமல் உனக்கு பலவகையில் தண்டனைக் கொடுதது உள்ளேன்.இந்த பாவியை கடவுள் மன்னிக்க மாட்டார் என்று புலம்பி அழுது கதறுகின்றார் .அதைக் கண்ட அண்ணியார் இராமலிங்கத்தை கட்டித் தழுவி உச்சிமோந்து எனக்குத் தெரியும் நீ யார் என்று ,உன்னுடைய அறிவும் ஆற்றலும் ஒவ்வொரு நாளும் நான் பார்த்து பார்த்து பரவசமாகி உள்ளேன்...நீ இனிமேல் எங்கும் செல்லவேண்டாம் எங்கள் உடனே இருந்துவிடு, உனக்கு எந்த தொந்தரவும் செய்யமாட்டோம் .நீ எங்களுடன் இருந்தால் அதுவே போதும் இந்த பிறவியில் நீ எங்களுடன் இருப்பது நாங்கள் செய்த புண்ணியம் என்று கண்ணீர் விட்டு கதறி அழுகின்றார்.

அண்ணா அண்ணி நீங்கள் இருவரும் இப்படி செய்தால் நான் இவ்விடம் இருக்கமாட்டேன்,தயவு செய்து இப்படி எல்லாம் சொல்லி என்னை வேறு படுத்தி விடாதீர்கள்.நீங்கள் இருவரும் தாயாகவும் தந்தையாகவும் இருந்து என்னை பாதுகாத்து வருகிறீர்கள் .உங்களை விட இந்த உலகத்தில் யார் இருக்கிறார்கள் ,நீங்கள் இருவரும் எனக்கு கண்கண்ட தெய்வங்கள் .உங்கள் அன்பில் அரவணைப்பில் நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் இனிமேல் என்னை உயர்த்தி உங்களைத் தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.இதுவே கடைசியும் முதலுமாக இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு வீட்டிற்குள் சென்று விடுகின்றார்.இராமலிங்கம்.

அன்றிலிருந்து இராமலிங்கம் எது செய்தாலும் அண்ணனும் அண்ணியும் தெய்வம் செய்வதாகவே நினைத்து மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்து பெருமை கொண்டனர் .


திரு ஒற்றியூர் கோவில் !


ராமலிங்கம் தன் பன்னிரண்டாம் வயதில் திருவொற்றியூர் சென்று வழிபடத் தொடங்கினார். அவர் வசித்து வந்த ஏழுகிணறு பகுதியிலிருந்து திருவொற்றியூருக்குத் தினமும் நடந்தே

சென்று வழிபடுவது வழக்கமாகக் கொண்டார்.

வழிபடும் காலங்களில் கருத்தாழமுள்ள பக்திப் பாடல்கள் ஆயிரக் கணக்கில் பாடியும் எழுதியும் வைத்துள்ளார் .கருத்து வேறுபாடு இல்லாமல் அனைத்து தெய்வங்கள் பற்றியும் பாமாலை இயற்றி உள்ளார்,அவை அனைத்தும் மக்களுக்காக பாடியதாகும் .தான் பாடிய பாடல்கள் அனைத்தும் பக்தி பாடல்களாக இருந்தாலும்,உண்மையான தெய்வத்தை தேடிக்கொண்டே இருந்தேன்,இந்த சிலைகள் எல்லாம் உண்மையான தெய்வங்கள் இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன் என்கிறார் ..மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்ட இந்த பூத உடம்பில் வாழ்ந்ததால் தத்துவ உருவங்களைப் பற்றி பாடல்கள் பாட நேர்ந்தது .ஆன்மாவின் விழிப்பால் உண்மையான தெய்வத்தை தேடிக் கொண்டு உள்ளேன்.உலகில் உள்ள அனைத்தையும் உன்னுடைய சாயையாகத்தான் பார்த்தேன் பார்க்கிறேன் .என்பதை பதிவு செய்துள்ள் பாடில் இதோ ;--

மாயையாற் கலங்கி வருந்திய போதும்

வள்ளல் உன்தன்னையே மதித்துன்

சாயையாப் பிறரைப் பார்த்ததே யல்லாற்

தலைவா வேறு எண்ணிய துண்டோ

தூய பொற்பாதம் அறிய நான் அறியேன்

துயர் இனிச் சிறிதும் இங்கு காற்றேன்

நாயகா வெனது மயக்கெலாம் தவிர்த்தே

நன்றருள் புரிவது உன்கடனே !

மேலும் பல வடிவங்கள் வண்ணங்கள் உடைய கடவுள்களின் உருவங்கள்ப் பற்றிப் பதிவு செய்துள்ள பாடலை பதிவு செய்துள்ளார் !

வண்ணம் வேறு எனினும் வடிவம் வேறு எனினும்

மன்னிய உண்மை யொன்று றென்றே

எண்ணிய தல்லாற் சச்சிதா னந்தத் திறையும்

வேறு எண்ணியது உண்டோ

அண்ணனின் பாதம் அறிய நான் அறியேன்

அஞர் இனிச் சிறிதும் இங்காற்றேன்

திண்ணமே நின்மேல் ஆணை என்தன்னைத்

தெளிவித்துக் காப்பது உன்கடனே !

என்ற பாடல்கள் வாயிலாக இறைவனுடைய  உண்மையைத் தேடிக் கொண்டே உள்ளார் வள்ளலார் .எல்லாவற்றுக்கும் காரண காரிய மாக ஒன்று இருக்க வேண்டும் ,அதை எனக்கு தெரிய தெளிவுப் படுத்துவது ,மெய்ப்பொருளான உன்னுடைய கடமையாகும்  கடனாகும் என்பதை ஆணை {சத்தியம் }வைத்து கேட்கும் ,அவருடைய தேடுதலை அறிய முடிகிறது


.சிறுவதில் இருந்தே ஆன்மா விளக்கம் அடைய வேண்டும் ,ஆன்மாவின் உண்மையை அறிய வேண்டும். ஆன்மாவின் உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்னும்,''ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமை'' பேராசைப் பற்றியே தேடிக் கொண்டு உள்ளார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் .

உலகில் உள்ள அருளாளர்கள் யாரையும் வள்ளலார் பின் பற்றவில்லை ,வாழையடி வாழை என வந்த திருக்கூட்ட மரபினில் ''ஒருவர் அல்லர்''எனபதை ,அவர் பதிவு செய்துள்ள பாடல்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.இறைவனால் வருவிக்க உற்றவர் ஆயிற்றே ! இறைவனே அவர் ஆனாமாவின் உள் ஒளியில் இருந்து இயக்கிக் கொண்டு உள்ளார் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

வாழையடி வாழை என வந்த திருக் கூட்ட

மரபினில் யான் ஒருவன் அன்றோ வகை அறியேன் இந்த

ஏழைபடும் பாடு உனக்குத் திருவுளச் சம்மதமோ

இதுதகுமோ இதுமுறையோ இது தருமந்தானோ

மாழைப் மணிப் பொது நடஞ் செய் வள்ளால் யான் உனக்கு

மகன் அலனோ நீ எனக்கு வாய்த்த தந்தை அலையோ

கோழை உலக உயிர்த் துயரம் இனிப் பொறுக்க மாட்டேன்

கொடுத்தருள் நின் அருள் ஒளியைக் கொடுத்தருள் இப்பொழுதே !

என்னும் பாடல் வாயிலாக தெளிவுப் படுத்தி உள்ளார்.நான் மற்றவர்கள் போல் வந்தவன் அல்ல மற்ற அருளாளர்கள் போல் வந்தவனா நான்,நான் உங்கள் மகன் அல்லவா இந்த ஏழைபடும் பாடு உன் திரு உள்ளத்துக்கு சம்மதமோ ,வகை அறியாமல் கேட்கின்றேன். நீ அனுப்பியவன் அல்லவா ? நான் எதற்க்காக வந்தவன் என்று உமக்குத் தெரியாதா ?தருமத்திற்கு மாறாக நீங்கள் செய்வது சரியாகுமா ?நான் உமக்கு மகன் அல்லவா ?நீ எனக்கு வாய்த்த தந்தை அல்லவா உலக உயிர்களை காப்பாற்ற நீ அனுப்பி நான் வந்தவன் ஆச்சே .இன்னும் ஏன் மற்றவர்களுக்கு செய்வதுபோல் எனக்கு அருளை வழங்க காலம் தாழ்த்துகின்றாய் .உலக உயிர்களின் துயரத்தை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன் .இப்பொழுதே உங்கள் அருள் ஒளியை கொடுத்து மக்கள் குறைகளை நீக்க அருள் செய்வாய் என்று இறைவனிடம் கேட்கிறார் வள்ளல்பெருமான் .

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன ? வாழையடி வாழை என வந்த திருக் கூட்டத்தில் ஒருவன் அல்ல .இறைவனால் நேரடியாக அனுப்பி வைக்கப் பட்டவன் என்பதை வள்ளலார் தெளிவுப் படுத்துகிறார்.            

.

திருமணம் !


பலரது வற்புறுத்தலுக்கு இணங்க, ராமலிங்கம் தன் இருபத்தேழாவது வயதில் திருமணத்துக்குச் சம்மதித்தார். அவர் சகோதரி உண்ணாமுலையின் மகள் தனக்கோடியைத் திருமணம் செய்து கொண்டார்.

ஏன் திருமணம் செய்து கொண்டார் ? தன்னுடைய தாய் உலக வழக்கப்படி தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டால் தன்னுடைய கடமை தீர்ந்து விடும் எண்ணத்தில் செயல் படுகிறார் .உலக வாழ்க்கையில் விருப்பம் இல்லாத இராமலிங்கம் திருமணம் வேண்டாம் என்கிறார்.அனைவருடைய வற்புறுத்துதலின் பேரில் ஒப்புக் கொள்கிறார் எனபதைத்தான் நாம் படித்துள்ளோம் .

தன்னுடைய அக்காள் மகள் தனக்கோட்டி, "தன்னுடைய தாய் மாமன் வள்ளலாரைத் திருமணம் செய்து கொள்வதில் மிகுந்த ஆசையும் ஆர்வமும் உள்ளார் என்பதை அறிந்து கொள்கிறார் வள்ளலார்.!தனக்கோட்டியின் குணம் இராமலிங்கத்திற்கு தெரியும் ! இராமலிங்கத்தின் குணம் தனக்கோட்டிக்குத் தெரியும் .ஆதலால் இருவரும் சமத்திக்கின்றனர்,உலக வழக்கபடி  திருமணம் நடைபெறுகிறது .


முதல் இரவில் என்ன நடந்தது ?


இருவரும் உள்ளே சென்று அமைதியுடன் உட்கார்ந்து இருக்கிறார்கள் --பருவத்தின் தலைவாசலில் கால் வைத்திருக்கும் கன்னிப் பெண் தனக்கோடி எத்தனை ஆயிரம் ஆசைகளை செஞ்சிலே தேக்கிக் வைத்துக் கொண்டு இங்கே வந்து அமர்ந்திருப்பாள் என நினைக்கத் தோன்றும் .அவள் அமைதியாக அமர்ந்து இருக்கிறாள் .

இராமலிங்கம் பேச தொடங்குகிறார் !''தனக்கோடி'' யைப் பார்த்து .திருமணம் ஆன பெண்ணும் ,ஆணும் --உள்ளம் கலந்து ,உயிர்கலந்து ,பின் உடல்கலந்து மகிழ வேண்டும் என்பதற்கே இந்த முதல் எனற ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.ஆனால் நமக்காக உருவாக்கி உள்ள இந்த ''முதல் இரவு ''நீயும் நானும் தனிமையில் சந்தித்துப் பேசும் ''கடைசி இரவு ''என்பதை நீ அறிவாயா ?என்று கேட்கிறார் .

{அவள் அலறுவாள் !அதிர்ச்சி அடைந்து கண்ணீர் வடிப்பாள் !என்று எதிர்ப்பர்ப்போம் !} அவை எதுவும் நடைபெற வில்லை !

இராமலிங்கம் அறிவாயா ?என்று கேட்ட கேளிவிக்கு எல்லாம் எனக்குத் தெரியும் என்கிறார் தனக்கோடி,

மேலும் இராமலிங்கம் பேச்சைத் தொடங்குகிறார் ,--''தனக்கோடி ''நான் உனக்குத் தாலிக் கட்டியது கடவுளின் கட்டளை !காலத்தின் கட்டாயம் ! திருமணம் முடிந்தாலும் உன்னை மனைவியாகப் பார்க்க முடியவில்லை.!நான் வணங்கும் தெய்வமாக பார்க்கிறேன் ,என்னுடைய ஆன்மாவும் உன்னுடைய ஆன்மாவும் ஒரே தன்மை உள்ளதாக பார்க்கிறேன் ,நீ என்ன நினைக்கிறார் என்று கேட்கிறார் .

தனக்கோடி வாய் விட்டு சிரிக்கிறாள் !மகிழ்ச்சியோடு சிரிக்கிறாள் ! மேலும் பேசத் தொடங்குகிறார் ."'

'நீங்கள் ஆசைகளை வென்றவர் !....நான் ....ஆசைகளைக் கொன்றவள் !...என ஆசைகள் செத்து விட்டன ..!  உங்களை நான் கடவுளாகக் கருதினேன் !இது யாருக்கும் தெரியாது ! எனக்கு மட்டும்தான் தெரியும் !


எப்படியும் உங்களை கணவனாக அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அம்மாவிடமும் .பாட்டியிடமும் சொல்லி திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வற்புறுத்தினேன் ! அதன்படி நம்முடைய திருமணம் நடந்தது !.

இராமலிங்கம் பிரமை பிடித்தவராக, தனக்கோடி சொல்வதை மேலும் கேட்டுக் கொண்டு உள்ளார் !

உங்களை முழுவதுமாக உரிமை கொண்டாட வேண்டும் எனற பேராசைதான் உங்கள் மேல் காதலாக மலர்ந்தது.இப்போதுதான் என உள்ளம் குளிர்ந்த்து.உங்களை என்னைத் தவிர வேறு யாரும் தொட்டுவிடக் கூடாது ,

தனக்கோடி நீ...நீயா ...பேசுகிறாய் "'

ஆமாம் தனக்கோடி தான் பேசுகிறேன்....முன்னைவிட இப்போது எனக்கு உயர்வாகத்  தோன்றுகிறீர்கள் !..எல்லா ஆண்கள் போல் இந்த முதல் இரவில் நீங்கள் என்னைத் தொட்டுத் ...தழுவி ...உறவு கொண்டிருந்தால் நீங்கள் சராசரி மனிதனாகப் போயிருப்பீர்கள் ,உங்களைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும் .

சிற்றின்ப ஆசையை வேறு அறுத்து ...ஆனடவனின் பேரின்ப வீடு நோக்கி பெரும் பயணம் போகும் உங்களுக்கு நான் தடையாக நிற்கமாட்டேன்!என்னை ஆட்கொண்ட தெய்வம் நீங்கள் ..இனி உங்கள் வழியே என்வழி !என்னை வாழ்த்தி வரம் அருளுங்கள் ! என்று இராமலிங்கம் காலில் விழுந்து வழிபடுகிறாள் தனக்கோடி அம்மையார் !

இராமலிங்கம் கண்களுக்கு தனக்கோடி வடியுடை நாயகியாக,சரஸ்வதியாக,பார்வதியாக  மகாலஷ்மியாக ,அருள் தெய்வமாக காட்சித் தருகிறார் .''தாயே'' என்று கண்ணீரோடு கரம் குவிக்கிறார் .

தன்னை இராமலிங்கம் வணங்குவதை விரும்பாத தனக்கோடி ....

சுவாமீ !'' என்று இராமலிங்கம் கூம்பிய கரங்களைத் தொடுகிறார் !

உடனே..... அவர் ஸ்பரிசம் பட்டவுடனே அருள் வந்தவள் போல் ஆகிறாள் .இருவருடைய கண்களிலும் ஒளி பிரகாசம் தோன்றுகிறது .

இராமலிங்கத்தின் உடலில் ஏறப்பட்ட ஒளி தனக்கோடியின் கைவழியாக அவள் மேனியிலும் பரவுகிறது..இருவரும் ஒன்றும் புரியாமல் திகைத்து போயினர் .இதுவே முதல் இரவில் நடந்த செயலாகும்.{இதன் விபரங்கள் முழுவதும் நான் அறிந்த வள்ளலார் எனற தலைப்பில் எழுதி வரும் வலைபூவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் }

தனக்கோடி அம்மையார், இராமலிங்கத்தின் அருள் பயணத்திற்கு எந்த தடையும் வராமல்,மன மகிழ்ச்சியுடன் வழி அனுப்பி வைக்கிறார் .தனக்கோடி இராமலிங்கத்தின் கரம் பட்டவுடனே பிறவிப் பயனை அடைந்து விடுகிறார் .[தனக்கோடி புண்ணியம் செய்த ஆன்மாவாகும் }


வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;;--


முனித்த வெவ் வினையோ நின்னருட் செயலோ

தெரிந்திலேன் மோகமே லின்றித்

தனித்தனி யொருசார் மடந்தையர் தமக்குள்

ஒருத்தியைக் கை தொடச் சார்ந்தேன்

குனித்த மற்றவரைத் தொட்டனன் அன்றிக்

கலப்பிலேன் மற்றிது குறித்தே

பனித்தன நினைக்குந் தோறும் உள்ளுடைந்தேன்

பகர்வதென் னெந்தை நீ யறிவாய் !

என்பதன் மூலம் விளக்கம் அளிக்கிறார் {வள்ளலார் } ஒரு பெண்ணைத் தொட்டுள்ளேன் கலப்புக் கொள்ளவில்லை என்பதை தெளிவாக பதிவு செய்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

ராமலிங்கம் அமைதியை நாடியவர். கடவுள் என்றால் என்ன என்று அறிய விரும்பியவர். எனவே, 1858ஆம் ஆண்டு சென்னை யிலிருந்து புறப்பட்டுப் பல தலங்களைத் தரிசித்து சிதம்பரத்தை அடைந்தார்.

அங்கே அவரைக் கருங்குழி கிராமத்து மணியக்காரரான திருவேங்கடம் என்பவர் சந்தித்துத் தன் ஊரில், தன் இல்லத்தில் வந்து தங்கியிருக்குமாறு வேண்டிக்கொண்டார். அவரது அன்புக்குக் கட்டுப் பட்ட ராமலிங்கம் மணியக்காரரின் இல்லத்தில் ஒன்பது வருடங்கள் தங்கியிருந்தார்.

ராமலிங்கம் தங்கியிருந்த அறையில் விளக்குக்கு எண்ணெய் வைக்கும் மண் கலயம் ஒரு நாள் உடைந்துவிட, மணியக்காரரின் மனைவி புதுக் கலயம் ஒன்றை வைத்தார். அந்தக் கலயம் பழக்கப்பட வேண்டுமென்று அதில் நீர் நிரப்பி வைத்த மணியக்காரரின் மனைவி, பின்னர் அதைச் சுத்தப் படுத்தி எண்ணெய் நிரப்பி வைக்க மறந்துபோனார்.

அன்றிரவு ராமலிங்கம் வெகுநேரம் எழுதிக் கொண்டிருந்தார். விளக்கில் ஒளி மங்கும் போதெல்லாம் கலயத்தில் இருந்த நீரை, எண்ணெய் என்று கருதி விளக்கில் ஊற்றிக் கொண்டே இருந்தார். விடியும்வரை விளக்கு பிரகாசமாகத் தண்ணீரில் எரிந்த அற்புதம் அன்று நிகழ்ந்தது!

கருங்குழியில் தங்கி யிருந்தபோது 1865 ஆம் ஆண்டு ராமலிங்கம் "சமரச வேத சன்மார்க்க சங்கம்" என்ற அமைப்பை உருவாக்கினார். பிற்காலத்தில் அந்தப் பெயரை "சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கம்" என்று மாற்றியமைத்தார். இந்தப் புதிய சங்கத்தின் கொள்கைகளாக அவர் அறிவித்தவை, மக்கள் பின்பற்றக்கூடிய மிக எளிய கொள்கைகள். அவை:


கடவுள் ஒருவரே.


கடவுளை உண்மையான அன்புடன், ஒளி வடிவில் வழிபட வேண்டும்.

சிறு தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி கொடுக்கக்கூடாது.

மாமிச உணவை உண்ணக்கூடாது.

ஜாதி, மத வேறுபாடு கூடாது.

பிற உயிர்களையும் தன்னுயிர் போல் கருத வேண்டும்.

பசித்த உயிர்களுக்கு உணவு அளித்து ஆதரிப்பதும் உயிர்க்கொலை செய்யாத பண்பும் மாகிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்.

ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு !

எல்லா உயிரையும் தம் உயிர்போல் பாவிக்கு


ம் ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமையைக் கடைபிடிக்க வேண்டும் !

கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்கக் வேண்டாம் !

மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்ய வேம்டாம் !

எதிலும் பொது நோக்கம் வேண்டும்.!


வேதம் ஆகமம் ,புராணம்,இதிகாசம்,சாத்திரம் போன்ற எதையும் நம்ப வேண்டாம் !அதில் உண்மையை சொல்ல வில்லை ! 

பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது எல்லாப் புண்ணியங் களுக்கும் மேலானது என்று உபதேசித்து வந்த ராமலிங்க அடிகள், அன்னதானச் சாலை ஒன்றை அமைக்க எண்ணம் கொண்டார்.


வள்ளலார் பிறந்த இடம்


கருங்குழிக்கு அருகிலுள்ள வடலூரில், பார்வதிபுரம் என்னும் கிராமத்து மக்களிடம் எண்பது காணி நிலத்தைத் தானமாகப் பெற்று, 1867--ஆம் ஆண்டு, மே மாதம் 23{வைகாசி மாதம் பதினொன்றாம் தேதி }ஆம் தேதியன்று அங்கு சமரச வேத தருமச்சாலையைத் தொடங்கினார். பின்பு, அதை அவரே சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை எனப் பெயர் மாற்றம் செய்தார்.

இந்தத் தருமச்சாலையில் மக்கள் வழங்கும் பொருள் உதவியைக் கொண்டு சாதி, மத, மொழி, இன, நிறம் நாடு,உயர்ந்தோர்,தாழ்ந்தோர் என்ற பாகுபாடுகள் பாராமல் மூன்று வேளையும் பசித்தவர்க்கு உணவளிக்கும் தொண்டு இன்றும் தொடர்கிறது.

ராமலிங்க அடிகள், வள்ளலார் என அழைக்கப் படலானார். வேட்டவலம் ஜமீன்தாரான அருணாசல வசந்த கிருஷ்ண வாணாதிராய அப்பாசாமி பண்டாரியார் (கொஞ்சம் நீளமான பெயர்தான்!) என்பவருக்கு இரு மனைவியர்.


வள்ளலார் தண்ணீரால் விளக்கேற்றிய வீடு...


ஒருவரை நோயும் இன்னொருவரைப் பேயும் பிடித்துத் துயரப்படுத்தி வந்தன. பல்வேறு மருந்து, மந்திர பூஜைகளுக்குப் பிறகு கடைசியாக வள்ளலார் வேண்டி அழைக்கப்பட்டார்.

வேட்டவலம் ஜமீன்தார் இல்லத்தில் வள்ளலார் அடி வைத்ததும் பேய் விலகியது. அவர் தம் திருக்கரத்தால் மருந்து அளித்ததும் நோய் இறங்கியது. இதன்பிறகு, வேட்டவலம் அம்மன் கோயிலில், வள்ளலார் சொல்படி உயிர்ப்பலி நிறுத்தப்பட்டு, பால் பொங்கலிட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

வள்ளலாரின் புகழ் நாடெங்கும் பரவியது. அவரைச் சுற்றிக் கூட்டம் பெருகியது. தனிமையை விரும்பிய வள்ளலார், வடலூரிலிருந்து விலகி, அருகில் இருக்கும் மேட்டுக்குப்பம் சென்றார். அங்கு சில வருடங்களாக உபயோகப் படாமல் இருந்துவந்த ஒரு வைணவ மதத் திருக்கூடத்தில் தங்கினார். தாம் தங்கிய அந்த இடத்துக்கு Ôசித்தி வளாகத் திருமாளிகைÕ என்றுபெயர் சூட்டினார்.


தண்ணீரால் விளக்கேற்றிய இடம் இதுதான் (வீட்டின் உள்ளே)


அங்கேஅவர் அடிக்கடி பிரமதண்டிகா யோகம் செய்து வந்தார். இருபுறமும் இரும்புச் சட்டிகளில் நிலக்கரி கனன்று எரிய, நடுவில் அமர்ந்து தியானத்தில் இருப்பது பிரமதண்டிகா யோகம். அகச்சூடு நிறைந்த வள்ளலார், புறத்தே இவ்விதம் சூடேற்றித் தம் தேகத்தை அக்னிதேகமாக்கி வந்தார்.

இறைவனை ஒளி வடிவாகப் போற்றிய வள்ளலார், சத்திய தருமச்சாலைக்கு அருகில் ஓர் ஒளித் திருக்கோயிலை 1871-ஆம் வருடம் அமைக்கத் தொடங்கினார். சுமார் ஆறு மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட அந்தத் திருக்கோயிலுக்குச் ‘சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபை’ என்று பெயர் சூட்டினார்.


கல்பட்டு ஐயா திருச்சந்நிதி


25.1.1872, தை மாதம் 13|ஆம் நாள் தைப்பூசத் தினத்தன்று முதல் ஒளி வழிபாட்டு விழா நடைபெற்றது.

20.10.1873, செவ்வாய்க்கிழமை காலை எட்டு மணிக்கு சித்திவளாகத் திருமாளிகை முன் கொடியேற்றி வைத்து, கூடியிருந்தவர்களுக்கு நீண்ட அருளுரை வழங்கினார் வள்ளலார். அந்த அருளுரையே ‘பேருபதேசம்’ என்று சொல்லப்படுகிறது.

கொடியேற்றியதற்கு அடுத்த கார்த்திகை மாதம், திருவண்ணாமலை தீபத் திருநாளில், தமது அறையில் எப்போதும் எரிந்து வந்த தீப விளக்கைச் சித்திவளாகத் திருமாளிகையின் முன்புறம் எடுத்து வைத்தார்.

மக்களிடம் தீப விளக்கைத் தொடர்ந்து வழிபட்டு வரச் சொல்லிவிட்டு, ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்கு கிறபடியால், தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் கண்டு ஆராதியுங்கள். நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் என்று செய்தி அளித்தார்.

1874-ஆம் வருடம் தை மாதம் 19|ஆம் நாள், புனர்பூசமும் பூசமும் கூடும் நன்னாளில் வள்ளலார் அனைவருக்கும் அருளாசி வழங்கினார். இரவு பன்னிரண்டு மணிக்குச் சித்திவளாகத் திருமாளிகைத் திருஅறைக்குள் புகுந்தார். அவரது விருப்பப்படி, அவரது பிரதம சீடர்களான தொழுவூர் வேலாயுதமும்,மற்ற தொண்டகர்களும் மூடப்பட்ட அறையின் வெளிப்புற கதவைப் பூட்டினார்கள்.

அன்று முதல் வள்ளலார் உருவமாக நமது கண்களுக்குத் தோன்றாமல், அருவமாக நிறைந்து, அருட்பெருஞ்ஜோதியாக விளங்கிக் கொண்டிருக்கிறார்.


சத்திய ஞானசபை


உலகில் வேறெங்கிலும் இல்லாத தனிப்பெரும் அமைப்பு இது. ஜாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற வேறுபாடுகளைக் கடந்து, அனைவரும் வந்து பிரார்த்தனை செய்யத் தகுந்த இடம் இது. எண்கோண வடிவிலான இந்தக் கட்டடத்தை வள்ளலாரே வடிவமைத்தார்.

மையத்தில் நான்கு தூண்களைக் கொண்ட மண்டபமும் அதன்மீது பன்னிருகால் மண்டபமும், ஒன்றுக்குள் ஒன்றாக உள்ளன. நாற்கால் மண்டபத்தின் மையத்தில


் தான் ஆண்டவர் ஜோதி வடிவில் இருக்கிறார்.


ன்னிருகால் மண்டபத்தில் ஒரு சுற்றுப் பிராகாரமும் பக்தர்கள் உட்கார்ந்து ஆண்டவனைத் தியானிக்க வழிபாட்டுக் கூடமும் இருக்கின்றன.

ஜோதி தரிசனம் ஆனதும் பக்தர்களுக்குத் கற்கண்டும் தரப்படுகின்றன.


சித்திவளாகம்


வடலூருக்கு அருகே மேட்டுக்குப்பத்தில் இருக்கிறது சித்திவளாகம். வள்ளலார் ஏற்றிவைத்த அணையாதீபம் இங்கே வழிபாட்டில் இருக்கிறது. வள்ளலார் சித்தபெற்ற அறையின் கதவு  பூட்டப்பட்டு இருக்கும் கதவுக்கு வெளியே அமர்ந்து தியானம் செய்யலாம்.

தினமும் இங்கே திருவருட்பா பாடல்களை அன்பர்கள் பாடிப் பிரார்த்தனை செய்கின்றனர். மாதா மாதம் பூச நாட்களில் அன்னதானம், சிறப்பு வழிபாடும் நடைபெறு கின்றன.

தைப்பூசத்துக்கு மூன்றாவது நாள் இந்த அறையை ஜன்னல் வழியாகப் பார்க்க அனுமதிக்கப்படுகிறது.


ஜோதி தரிசனம்


ஒவ்வொரு தைப் பூசம் தோறும திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப் படுகிறது.!

ஜோதி தரிசனத்தை அனைவரும் கண்டு களிகின்றார்கள் . அது முதற்கொண்டு ஒவ்வொரு தைப்பூசத்திலும் முழுமையான தரிசனம் நடக்கிறது.

பௌர்ணமி முழு நிலவும் பூச நட்சத்திரமும் ஒன்றுசேரும் நாள்தான் தைப்பூச நாள். அந்த நாளில், நம் ஆன்ம சக்தியும் ஆழ் மனமும் உயர்நிலையை அடைகின்றன. அருட்பெருஞ்ஜோதி தரிசன அனுபவத்தை அந்த நாளில் பெறுவது உகந்ததாக இருக்கும் என்பதுதான் இந்த நாளை வள்ளலார் தேர்ந்தெடுக்கக் காரணம். தைப்பூச நாளில் காலை 6.30, 10.00, மதியம் 1.00, இரவு 7.00, 10.00, மறுநாள் அதிகாலை 5.30 மணி ஆகிய ஆறு காலங்களில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

மாதாந்திர பூச நாளில், இரவு எட்டு மணி முதல் எட்டரை மணிவரை ஆறு திரைகளை விலக்கி, மூன்று முறை அருட்பெருஞ்ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

ஒவ்வொரு மனிதனுக் குள்ளும் மனிதத் தன்மை என்ற ஒப்பற்ற ஜோதி ஆன்மா என்னும் உள் ஒளிதான் என்பதை உஅணர வேண்டும்.


சித்தி வளாகத்தில் உள்ள அணையா ஜோதி...


பிரகாசம் இருக்கிறது. ஆனால், ஆசை, கோபம், சுயநலம், பொய்மை போன்ற பொல்லாத குணங்கள் பல்வேறு திரைகளாகப் படர்ந்து, அந்த மனிதத் தன்மையை அமுக்கி மறைத்துவிடுகிறது.

இந்தப் பொல்லாத குணங்கள் விலகி, நல்ல நெறியை அடையும்போது, மனிதன் தனக்குள் இருக்கும் தெய்வத்தைத் தரிசிக்கிறான். ஜோதி தரிசனம் என்பதும் இது போலத்தான். ஏழு திரைகளை நீக்கிய பிறகுதான் ஜோதியைத் தரிசிக்க முடியும். கறுப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை, கலப்பு வண்ணம் என ஏழு வண்ணத் திரைகள்!

மாயா சக்தி, கிரியா சக்தி, பராசக்தி, இச்சா சக்தி, ஞான சக்தி, ஆதிசக்தி, சித்சக்தி என ஏழுவிதச் சக்திகளைக் கடந்துவிட்டால், ஜோதி வடிவிலான இறைவனைத் தரிசித்து, மரணமில்லாப் பெருவாழ்வை அடையலாம்.

ஞானசபையில் வழிபாடு தொடங்கியபோது, வள்ளலார் தன் கையால் ஒரு அகல்விளக்கை ஏற்றிவைத்தார். அது அணையாத்தீபமாக இன்றுவரை பராமரிக்கப்படுகிறது.

அந்தத் தீபம் ஆறேமுக்கால் அடி உயரமும் நாலேகால் அடி அகலமும் கொண்ட ஒரு கண்ணாடியில் பட்டு எதிரொலிப்பதே ஜோதி ஆகும். அந்தக் கண்ணாடி, வள்ளலாரால் நாற்பத்தெட்டு நாட்கள் விசேஷ வழிபாடு செய்யப்பட்டது.

எனவே, ஒவ்வொரு தைப்பூசத் திருநாளன்றும் சத்திய ஞானசபையில் இந்த ஏழு திரைகளையும் விலக்கி ஜோதி தரிசனம் நிகழும். இதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருப்பார்கள். இறைதரிசனத்தோடு, தங்களையே தாங்கள் தரிசித்துக் கொள்ளும் உணர்வு இந்தச் சந்தர்ப்பத்தில் மக்களுக்குக் கிடைத்து வருகிறது.


ஜீவகாருண்ய ஒழுக்கம்!


வள்ளலார் அறிவுறுத்திய ஜீவகாருண்ய ஒழுக்கத்தின் முக்கியக் குறிக்கோள், பிற உயிர்களின் பசியை ஆற்றுவது.


சத்திய தருமச்சாலை & வெளித்தோற்றம்


ஜீவகாருண்ய ஒழுக்கமானது, மனிதருக்கு முக்தியை அருளும்" என்றார் அவர். ஜீவகாருண்ய வழியைக் கடைப்பிடிப்பது மிக எளிது.


"பசி என்பது என்ன? உயிர்களுக்குப் பசி என்னும் ஒன்று எதனால் இருக்கிறது? பசியின் காரணமாக, மனிதர்கள் என்னென்ன கொடுமைகளைச் செய்யத் துணிவார்கள்? பசியினால் ஓர் உயிருக்கு உண்டாகும் வேதனைகள் என்னென்ன?" என்று வள்ளலார் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை வலியுறுத்த, பசியைப் பற்றி அணுஅணுவாக அலசி ஆராய்ந்திருக்கிறார். பசியைப் பற்றிய அவரது கருத்துகள் இங்கே:


பசி என்ற ஒன்று இருப்பதேன்?


பசி இல்லாவிட்டால் உணவுக்காக மக்கள் ஒருவரை ஒருவர் எதிர்பார்க்க மாட்டார்கள். அப்படி யில்லாத போது, ஒருவருக் கொருவர் உதவ மாட்டார்கள். அப்படி உதவ வில்லை என்றால், மனிதநேயம் இல்லாமல் போய்விடும்.


சத்திய ஞான சபை & வெளித்தோற்றம்


மனிதநேயம் இல்லாவிட்டால், கடவுள் அருள் கிட்டாது. எனவே, கடவுளை அறிய, கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்ட ஓர் உபகாரக் கருவிதான் பசி! பசி என்பது என்ன?


பசி என்பது, ஏழைகளின் உடலில் பற்றி எரியும் நெருப்பு.!


பசி என்பது, ஏழைகளின் அறிவாகிய விளக்கை அணைக்க முயலும் விஷக்காற்று.!


பசி என்பது, ஏழைகளின்மேல் பாய்ந்து கொல்லப் பார்க்கும் புலி.!


பசி என்பது, உச்சி முதல் பாதம் வரை பாய்ந்து பரவும் விஷம்.!


பசி நோயினால் ஏற்படும் கொடுமைகள்!


பசி நோய் என்பது மிகவும்


பயங்கரமானது. அந்நோயைத் தீர்த்துக்கொள்ள, மக்கள் எத்தகைய பாவத்தையும் செய்ய அஞ்சமாட்டார்கள்.!


பெற்றவர்கள், பிள்ளைகளை விற்பார்கள்.!


இதன் விளைவாகப் பிள்ளைகள் அநாதைகளாகத் திரிவார்கள். பிச்சை எடுப்பார்கள். கடின வேலைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.!


பிள்ளைகள், பெற்றவர்களை விற்பார்கள்.!


வள்ளலார் சந்நிதி


இதன் விளைவாக, வயதானவர்கள் பிற தேசங்களில், பிற வீடுகளில் கடின உழைப்பில் ஈடுபட வேண்டியிருக்கும். பிச்சை எடுக்க நேரிடும். முதியோர் இல்லங்களில் தஞ்சம் புகுந்து, கூனிக் குறுக நேரிடும்.


வீடு, மாடு, நிலம், மற்ற உடைமைகள் அனைத்தையும் விற்று, மக்கள் பசிப்பிணியை அகற்றப் பார்ப்பார்கள்.


முனிவர்களையும் யோகிகளையும் சித்தர் களையும் கூடப் பசி தாக்கும். அச்சமயங்களில் அவர்கள் பிச்சை கேட்டு ஊருக்குள் நுழைவார்கள். பிச்சை கிடைக்காவிடில் சித்தம் கலங்குவார்கள்.

எந்நேரமும் காமத்தை விரும்பும் காமுகர்கள் கூடப் பசிப்பிணி தாக்கும்போது, காமம் மறந்து கலங்கு வார்கள்.


பசிப்பிணி தாக்கினால் என்னாகும்?


அறிவு மயங்கும்.


கடவுளைப் பற்றிய நினைப்பு அடியோடு ஒழிந்து போகும்.


சித்தம் கலங்கும்.


நம்பிக்கை குலையும்.


கண் பஞ்சடைந்து குழிந்துபோகும்.


காதில் இரைச்சல் ஏற்படும்.


நாக்கு உலர்ந்து போகும்.


கை, கால் சோர்ந்து துவளும்.


வார்த்தை குழறும்.


வயிறு திகு திகுவென எரியும்.


தாபமும் கோபமும் பெருகும்.


உயிர் விலகுவதற்கான அத்தனை அறிகுறிகளும் மேலும் மேலும் தோன்றும்.


நரக வேதனை, ஜனன வேதனை, மரண வேதனை ஆகிய வேதனைகளும் ஒன்று திரண்டால் என்ன வேதனை உண்டாகுமோ, அதுவே பசி வேதனை.

பசி அகன்றால் அடையும் ஆனந்தங்கள்!

உணவு கிடைத்து, உண்டு பசியாறியவுடன், பசியால் நேர்ந்த அத்தனை துன்பங்களும் அகலும்.

தத்துவங்கள் மறுபடி தழைக்கும்.

உள்ளம் குளிரும்.

சித்தம் தெளியும். உள்ளேயும் வெளியேயும் உயிர்க்களை உண்டாகும்.

கடவுள் நம்பிக்கை துளிர்க்கும்


தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், நிலம், பொன், மணி ஆகியவற்றைக் காணும்போது கொள்ளும் மகிழ்ச்சியைவிட, பசியால் வேதனைப்படுபவர்கள் உணவைக் காணும்போது அதிக மகிழ்ச்சி அடைவார்கள். உணவைக் கண்டவுடனேயே அவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும் என்றால், அதை உட் கொண்டபின் அடையும் ஆனந்தம் எப்படிப் பட்டதாக இருக்கும்? ஆதலால், உணவைக் கடவுளுக்குச் சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பிற உயிர்களின் பசியாற்றி, ஒப்பில்லா திருப்தி இன்பத்தை அளிப்பவர்கள் புண்ணியர்கள். இந்தப் புண்ணியத்துக்கு எந்தப் புண்ணியத்தை இணையென்று சொல்ல முடியும்?

இந்தப் புண்ணியத்தைச் செய்கிற புண்ணியர்களை, எந்தத் தெய்வத்துக்கு ஈடாகச் சொல்வது?

இவர்களை, எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகிய கடவுளின் அம்ச மென்றே சத்தியமாக அறியவேண்டும்.


ஜீவகாருண்யம் கடைப்பிடிப்பதால் வரும் நன்மை!

சூலைநோய், குஷ்டநோய் போன்ற தீராத வியாதிகளால் அவதிப்படும் இல்லறவாசிகள், அந்நோய்களிலிருந்து விடுபடுவார்கள் என்பது சத்தியம்.

பல நாட்கள் குழந்தை பாக்கியம் இல்லாமல் மனவருத்தம் கொண்டவர் களுக்கு, குழந்தை பாக்கியம் உண்டாகும்.

தனக்கு அற்ப ஆயுள் என்று ஜோதிடம் மூலமாகவோ, மருத்துவம் மூலமாகவோ அறிந்து, மரணத்துக்குப் பயந்து கலங்கு கிறவர்களுக்கு ஜீவகாருண்ய ஒழுக்கம் நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.

கல்வி, அறிவு, செல்வம், போகம் ஆகியவற்றில் குறை உள்ளவர்கள், பசித்த ஏழைகளின் பசியாற்றினால் கல்வி, அறிவு, செல்வம் மற்றும் மகிழ்ச்சியை அளிக்க வல்ல போகங்கள் அனைத்தும் கிட்டும்.


வள்ளலார் சித்தி அடைந்த வளாகம்...


பசித்தவர்களுக்குப் பசியாற்றுவதை விரதமாகக் கொண்ட மக்களுக்குக் கோடையில் வெயில் வருத்தாது. மண்ணும் சூடு செய்யாது. பெருமழை, பெருநெருப்பு, பெருங்காற்று ஆகியவற்றால் துன்பம் உண்டாகாது.

கள்வர்களாலும் விரோதிகளாலும் துன்புறுத்தப்பட மாட்டார்கள்.

அரசாங்கத்தால் அவமதிக்கப்பட மாட்டார்கள். சிறைவாசம் போன்ற கொடுமைகள் நேரிடாது.

வயல்களில் முயற்சி இன்றியே விளைச்சல் பெருகும்.

வியாபாரத்தில் தடையின்றி லாபம் கிடைக்கும்.

கனவில் சென்று கட்டளையிட்ட பெருமான்!

ஒரு சமயம் தருமச்சாலையில், மறுநாள் அன்னதானத் துக்குத் தேவையான அரிசி இல்லை என்ற நிலை. செய்தியைப் பணியாளர்கள், வள்ளலாரிடம் தயக்கத்துடன் கூறினர்.

வள்ளலார் தனியாக ஓரிடத்தில் அமர்ந்து சற்று நேரம் தியானம் செய்தார். தியானம் முடிந்தபின், அரிசி யும் மற்றவையும் நாளைக்கு வரும் என்று கூறினார்.

மறுநாள் பொழுது புலர்ந்து கொண்டிருக்கும் போதே திருத்துறையூரில் இருந்து மூன்று வண்டிகளில் அரிசியும் பிற உணவுப் பொருட்களும் தருமச்சாலைக்கு வந்து சேர்ந்தன.

அவற்றைக் கொண்டு வந்தவர் வள்ளலாரிடம் அன்பு பூண்ட அன்பர் ஒருவர். முதல் நாளிரவு கனவில், வள்ளலார் வந்து அரிசியையும் மற்றவற்றையும் கொண்டு வந்து தருமாறு கூறியதாகவும், அதை உத்தரவாக எண்ணி உடனே வண்டி கட்டிக்கொண்டு கிளம்பி வந்ததாகவும் அந்த அன்பர் தெரிவித்தார்.


உடல் வேறு! உயிர் வேறு ! ஆன்மா வேறு !


வள்ளலார் தருமச் சாலையின் வெளியே உச்சிப் பொழுதில் வெயிலில் அமர்ந்த


ு தியானத் தில் மூழ்கி இருப்பார். அந்தச் சமயங்களில் வள்ளலாரின் தலைக்கும் சூரியனுக்கும் இடையே ஓர் அக்னிக் கம்பம் இருப்பது போல் தோன்றும்.

இது அனைவருக்கும் பழக்கப்பட்ட காட்சியாக இருந்திருக்கிறது. இதைவிட இன்னொரு காட்சிதான் வள்ளலாரை வெறும் துறவியாக மட்டுமின்றி மாபெரும் சித்தராக உலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.

ஒருநாள் உச்சிவேளையில் தருமச்சாலையில் இருந்து வள்ளலார் வெளியே புறப்பட்டுச் சென்றார். வெகுநேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால், கவலைப்பட்ட சண்முகம் என்னும் அன்பர் வெளியே வந்து தேடினார்.

ஓரிடத்தில் வள்ளலாரின் கை, கால் என்று அனைத்து அங்கங்களும் வெவ் வேறாகிக் கிடப்பதைக் கண்டு பயந்து பதறி மயங்கி விழுந்தார் அவர்.

உடனே வள்ளலாரின் அங்கங்கள் எல்லாம் ஒன்றாகி, சண்முகத்தை எழுப்பி, "இனி இப்படி என்னைத் தேடி வர வேண்டாம்!" என்று கூறி அவருடன் தருமச்சாலைக்குத் திரும்பினார்.


பெய்யெனப் பெய்த மழை!


கோடைகாலத்தில் தருமச்சாலைக்கு வந்தவர்களில் பலர் மழையில்லாத காரணத்தால் பயிர்கள் எல்லாம் வாடுகின்றன என்றும் கால்நடைகளும், மக்களும் பல துன்பங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்றும் வள்ளலாரிடம் முறையிட்டனர்.

சாலைக்கு உள்ளே சென்று கதவை தாள் போட்டு தியானத்தில் சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார் .

ஒரு செம்பு நீரைத் தனது காலில் ஊற்றும்படி கூறினார் வள்ளலார். அன்பர்களும் அவ்வாறே செய்தனர்.

என்ன ஆச்சரியம்! சற்று நேரத்தில் மேகங்கள் திரண்டு நான்கு அங்குல அளவுக்கு மழை பெய்தது.

அது கேட்டு புதுப்பேட்டை என்னும் ஊரில் உள்ள அன்பர்கள் வடலூருக்கு வந்து தங்கள் ஊரிலும் மழை இல்லாதது சொல்லி வள்ளலாரை அழைத்தார்கள்.

வள்ளலார் அங்கு சென்று ஆறு குடம் தண்ணீரைத் தன் தலையில் ஊற்றுமாறு கட்டளையிட்டார். ஊர் மக்களும் அவர் சொல்படி செய்தனர். அவ்வளவுதான்!

புதுப்பேட்டை கிராமத்தில் தண்ணீர் பொங்கியது. ஆறு, கிணறுகளில் நீர் நன்கு ஊறிப் பெருகியது. நீரின் சுவையும் கூடியது. ஊரில் நல்ல மழையும் பொழிந்து செழித்தது.


வள்ளலார் வரவழைத்த தீஞ்சுவை நீரோடை


சித்திவளாகத் திருமாளிகைக்குக் கிழக்குத் திசையில் சற்றுத் தூரத்தில் மரம், செடி, கொடிகளுக்கு இடையே ஒரு நீரோடை இருக்கிறது. வள்ளலாரைக் காண வருபவர்கள் அந்த ஓடையில் நீராடுவது வழக்கம். நீரோடையில் ஒரு முறை நீர் வற்றிவிட்டது. வள்ளலார் அங்கு சென்றார். தமது கரத்தால் நீரோடையைத் தொட, நீர் பொங்கி எழுந்து நிறைந்தது.

அது முதல் அந்த நீரோடை ‘தீஞ்சுவை நீரோடை’ என அழைக்கப்படுகிறது. கோடைகாலத்திலும் நீர் வற்றுவதில்லை. அது மட்டுமல்ல, இந்த ஓடையில் குளித்தாலும், அதன் நீரைப் பருகினாலும் நோய்கள் நீங்குகின்றன.

வள்ளலார் கரம்பட்ட தும் சாதாரண நீரோடை, சக்தி வாய்ந்த நீரோடை ஆகிவிட்டது.


வள்ளலார் உருவாக்கிய தீஞ்சுவை ஊற்று...


வள்ளலார் தமது வாழ்வின் நிகழ்வுகள் அத்தனையையும் பாடல் களாகப் பாடி இருக்கிறார்

இப்படியே ராமலிங்கத்தின் வாழ்க்கை கடந்தது. ஒருமுறை வயலில் விளைந்திருந்த நெல் வாடியிருப்பதைக் கண்டு வருந்திப் பாடினார். இதனால் மக்கள் அவரை தங்களை வாழ்விக்க வந்த வள்ளலாகக் கருதி, "வள்ளலார்' என்ற அடைமொழி தந்தனர். அவர் மக்களுக்கு நற்சிந்தனைகளை போதித்து வந்தார். அவருக்கு 44 வயதாக இருந்தபோது, ஒரு அம்மன் கோயிலில் சொற்பொழிவிற்காக சென்றிருந்தார். அங்கிருந்தவர்கள் அவரை ஒரு பாடல் பாடும்படி கேட்டுக் கொண்டனர். அப்போது, அம்மனுக்கு பலி கொடுப்பதற்காக வைத்திருந்த ஆடு, கோழிகளை பலியிடாமல் இருந்தால் தான் பாடுவதாக சொன்னார் வள்ளலார். அவற்றை பலியிடுவதை நிறுத்தினால் தெய்வ குற்றம் என்று சொல்லி தங்கள் பயத்தை வெளிப்படுத்தினர் மக்கள். அவர்களுக்கு "ஜீவகாருண்ய' உண்மைகளை உணர்த்தி பேசினார் வள்ளலார். இப்படி கருணையின் இருப்பிடமாகவே திகழ்ந்த வள்ளலார்,


வடலூரில் 1872ம் ஆண்டில் சத்தியஞான சபை என்ற அமைப்பை நிறுவினார்


தொடரும்.

No comments:

Post a Comment