Monday 19 November 2018

அகத்தியர் எமக்கு உரைத்த வாக்கு - 18/11/2018


18/11/2018, பொகளூர் ஜீவ நாடியில் எமக்கு உரைக்கப்பட்டது

சித்தனின் ஆசி பெற்ற, சீர்மிகு என் மழலையே,
ஸ்ரீனிவாசபெருமானின் திருநாமம் பெற்றவனே,
யாம் உமையறிவோம், உமை காப்போமே

(சில நாட்கள் முன்பு அகத்தியர் வாக்கை பழித்த ஒருவனை பற்றி 
அய்யன் கீழ் வருமாறு உரைக்கிறார்)

மதி கெட்ட மானிடனும் பொய்யுரைப்பானே,
மனமது கலங்காதே,
செவி வழி செய்திகளை நீ கேட்காதே.
அவன் விதிகர்மத்தால் வினை விடுவானே.
யாம் இருக்கிறோம் உமை காக்க, அஞ்சாதே தூயவனே
அன்றுரைத்தேன் அறியவில்லையா, நான் உன் அருகில் அல்ல உன் உள் இருந்து உமைகாப்பேன் என்று.

(என்னுடைய முக்தி நிலை பற்றி அய்யன் உரைத்தது கீழே)

அன்றேயே உரைத்தேன், இந்த ஜென்மத்தில்உன்னை சுற்றி ஒரு கூட்டம் கூடுமப்பா, அப்போது நீ உயர் நிலை அடையக்கடைவாயே என்று.

(அய்யன் ஏன் உடல் நிலை குறித்து உரைத்தது)

இன்னவன் தேகம் தன்னிலே சிறு சிறு இன்னல்கள் பெருகுதய்யா,
கர்மத்தால் வந்த வினையே.
கர்மமது விட்டொழியும்
கவலையேதும் கொள்ளாதே மான் மகனே.

(அய்யன் கூறும் பரிகாரம்) - தனிப்பட்ட பரிகாரம் ஆதலால் விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளது

எண்ணிக்கையில் இரண்டு _______ என்று உரைக்கும் நன்னாளிலே ___________________ ஆலயம் சென்று _________________ க்கு _____________ மாலை சூட்டி ________ அகலிட்டு தொழுது வா. கர்மம் தீருமே.

(அய்யன் எனக்கு கூறும் அறிவுரை)

மனததை மென்மைப்படுத்து. உன் வாழ்வு சீர் பெரும் அப்பா.

(அய்யன் தனது ஆலயப்பணி பற்றி கூறிய வாக்கு)

யாம் நிலை கொள்ள மண் தனை உமக்கு உரைப்போமே பணியதை செய் தர்மம் செழிக்கும் முற்றே.
******************************************************************************************
கேள்வி : அய்யனே நிலம் வாங்குவதில் தடைகள் உள்ளது. தாங்கள் அது குறித்து அருள் வாக்கு உரைத்து ஆசி வழங்க வேண்டும்

நிலை கொள்ள மண் தன்னை அமையப்பெருமே என்று உரைத்தேனே, மதிகெட்டோனே, மதியுடன் கேளடா !!
மண் தனை அமையப்பெற்று, நிலை அதை நிறுத்து. உனக்கு யாம் நாடி வழியே நற்பலன்களை யாம் உரைப்போம்
******************************************************************************************
கேள்வி : ______________ ஆசிரமம் தனில் வெளியிட்டுள்ள புத்தகம், த்யான முறை ஆகியவற்றை பின்பற்றலாமா ? - நாகரீக காரணத்தால் ஆசிரமம் பெயர் வெளியிடப்பட மாட்டாது.

செவி வழி செய்திகளை கேட்காதே என்று உரைத்தேன் அறியவில்லையா !!
உமக்கு ஞான நிலை யாமே தருவோம்

****************************************************************************
கேள்வி : அப்போது அது எல்லாம் பொய்யா

மாயம் உலகத்திலே. இக்கலியுகம் தன்னிலே, அங்கங்கே மாய நிலைகள் தோன்றி அவ்வப்போது மறையுமப்பா. அத்தனையும் மாயை. நீ காண்பதும் மாயை நிற்பதும் மாயை, நிழலும் மாயை, எல்லாம் மாயை. உள் இருக்கும் உனது ஜீவனே நிலை பெற்ற, உத்தமமே.
************************************************************************************
(எனது ஆன்மீக வருங்காலம் பற்றி அய்யன் உரைத்தது) - தனிப்பட்ட வாக்குகள், ரகசியம் காப்பதற்காக பதிவிடப்படவில்லை

வேதங்களும் சாஸ்திரங்களும் உமை தேடி வரும் அப்பா.
_______________ அதை பற்றி நின்ற _______________ நாமம் கொண்ட ஒருவனால் நீ சில ப்ரணய மந்திரங்களையும் யோக முறை சாஸ்திரங்களையும் பயில்வாயே. உமக்கு யாம் உன்னுள் இருந்து காப்போமே

(வாழ்த்து, முடிவுரை)

செய்த பிழை அத்தனையும் விட்டொழியும் அப்பா
உனது வாழ்வு சீர் பெரும் மகனே,
எனது நாமம் அதை ஜெபி,
யாம் இருக்கிறோம்
வாழ்வு வசந்தம் பெரும்
முற்றே.

**************************************************************************************************
கேள்வி : அடுத்த மாதம் வர விருக்கும் குரு பூஜை குறித்து அருள் கூற வேண்டும் அய்யனே

முன் சென்ற எமது குரு பூசை தனிலே பணி தனை கண்டு யாம் மனமகிழ்ந்தோம்.

மார்கழி ஆயில்யம் தனிலே பூசை அதை சிறப்பு மிக்க இடு மகனே

ஏழு கலசமிட்டு,
16 நல்லெண்ணெய் அகலிட்டு,
மா இலை தோரணம் கட்டி,
அன்னதானம் செய்து,
வஸ்திர தானம் செய்து,
சிறப்புடனே பூசை அதை செய்.

சிரம் தாழ்ந்து யாம் வந்து அன்றே ஆசீர்வதிப்போமே !!!
உமது ________________________ வகையில் காட்சி கொடுப்போமே
உமை காக்க யாம் உள்ளோம். மனம் தளராதே
இப்பீடத்து ஆசான் வழி நின்று சேவைகளை செய்.
உன் அருகில் அல்ல. உன் உள் இருந்து உமை காப்பேன்.
*******************************************************************************************