Thursday 15 November 2018

பெண்களின்_திருமணத்தடையினை ,நீக்கும்_திருச்செந்தூர்த்_திருப்புகழ்

#ஶ்ரீஅருணகிரிநாதர்_அருளிய ~
பெண்களின்_திருமணத்தடையினை
,நீக்கும்_திருச்செந்தூர்த்_திருப்புகழ்
.

    🔯🍀🌺விறல்மார_னைந்து🌺🍀🔯

விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
     மிகவானி லிந்து  வெயில்காய

மிதவாடை வந்து தழல்போல வொன்ற
     வினைமாதர் தந்தம்  வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
     கொடிதான துன்ப  மயல்தீர

குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
     குறைதீர வந்து  குறுகாயோ!

மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
     வழிபாடு தந்த  மதியாளா!

மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
     வடிவேலெ றிந்த  அதிதீரா!

அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
     மடியாரி டைஞ்சல்   களைவோனே!

அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
     அலைவாயு கந்த  பெருமாளே!

🍀🔯🍀🔯🍀🔯🍀🔯🍀🔯🍀🔯🍀🔯🍀