Wednesday 14 November 2018

முக்கிய செய்தி : அகத்தியர் ஜீவ நாடி அருள் வாக்கு பொது நாடி வாக்கு

முக்கிய  செய்தி :

அகத்தியர் ஜீவ நாடி அருள் வாக்கு

பொது நாடி வாக்கு

உரைத்த இடம்  - பொகளூர் அகத்தியர்  ஜீவ நாடி பீடம்

வாசித்தவர்  : குருஜி இறைசித்தன்

தேதி : 15-11-2018 அதிகாலை 3:30 AM






தட்டச்சு - தி.இரா.சந்தானம் , கோவை
****************************************************************************

அகத்தியரின் வரிகள் கீழ்வருமாறு  :

சிங்கார திருத்தாண்டவம் புரியும் சிவ சிவா போற்றி

சீர்மிகு உலகை படைத்த பரனே போற்றி

உலகையாளும் என் அப்பன் ஈசனே போற்றி

உமையாள் பாதம் தொழுது அகத்தியன் யானே என் தமிழுக்கு அருள்தனை உரைப்பேன் கேளடா !!!!

இயற்கை சீற்றமது இன்னலும் தந்து விடுமோ என்று வீண் கவலை  ஏதும் கொள்ளாதே மான் மகனே

ஆங்காங்கே தமிழகத்தில் இயற்கை சீற்றமது நடக்குமப்பா

யாம் அசூர ரூபமாக  நவகோடி சித்தர்களின் கடல் பகுதியில் தோன்றி அந்த இயற்கை சீற்றமதை யாம் காப்போம்.

தமிழகம் முதற்கொண்டு புதுவை சில இடங்களிலும் கடலூர் மற்றும் என் சிஷ்யனவன் கோரக்கன் இருக்கும் நாகப்பட்டினத்திலும்  சிறு இடர்பாடுகள் இருக்குமே, படுமே

இடர் நீக்கி வாழ வைக்க யாம் உரைக்கிறோம் பரிகாரம் அதை கவனமுடன் கேளாய் என் மகனே

அவரவர் வீட்டிலே சரவணபவா என்னும் வட்ட கோலமிட்டு,
வட்ட கோலம் தனிலே, மாவிலை ஐந்தை அங்கும் இங்கும் வைத்து,
ஒவ்வொரு நல்லெண்ணெய் அகல் தன்னை ஏற்றி
சரவணபவா  என்னும் ப்ரணய  மந்திரத்தை 31 முறை உச்சரித்து,
நமசிவாய என்னும் ப்ரணய மந்திரத்தை 51 முறை உச்சரித்து,
அகத்தீஸ்வரா என்னும் நாமமதை 16 முறை உச்சரித்து,
நவ கோடி சித்தர்களே வருக அருள் தருக, அடியேன் உங்கள் திருப்பாதம் தொழுதேன் என்ற மந்திரத்தை உச்சரித்து
அகல் தன்னை ஏற்றி
மண்டியிட்டு தொழுதாலே

இயற்கை சீற்றமது நிற்குமப்பா,

இன்னலை யாம் குறைப்போம் மனம் தளராதே தூயவனே

இயற்கை சீற்றமது அரங்கேறுமே

சீற்றத்திலே இருந்து பலம் குறையவே சித்தர்களாகிய நாங்களே சீருடனே வந்து காப்போம்

மனம் தளர வேண்டாம். எம் மக்கள்,

தமிழ் வாழும் 

என் அப்பன்  வேல் கொண்டு வினை தீர்ப்பான் வேலவனும்

ஆதி சக்தியின் அருளால் அன்னை காப்பாள்

அகிலம் காக்கும் என் அப்பன் காப்பான்

வேலுண்டு வினையில்லை அய்யா

வினைகள் அகலும் அய்யா

மான் மகனே யாம் இருக்கிறோம் மக்களை காக்க

மனம் தளர வேண்டாம்

குருவடி சரணம் திருவடி சரணம்

முற்றே முற்றே முற்றே