Friday 3 March 2023

வாழும் கலை

 24 மணி நேரமும் யோகம், வாசி யோகம், அனைத்து உயிர்களும் 24 மணி நேரமும் வாசி யோகம் செய்து கொண்டு இருக்கின்றன. அட , அது தாங்க , நாம உள்ளே இழுத்து வெளியே விடும் சுவாசம். அதை செய்வது உயிர். உடல் அதனுடன் இணைந்துஇருக்க வேண்டும். அது இல்லாமல், உடலில் ஏற்படும் ஐம்புலன் அனுபவங்களில் சிக்கி பதிவு செய்து, மனம் என்ற ஒரு பதிவுகளால் சூழப்பட்டு யோகத்துடன் இணையாமல், வாழ்ந்து வருகிறோம். இந்த பிறப்பின் ஒரே நோக்கம் மற்றும் செயலே வாசி யோகம். 100 கோடி மக்கள் தொகை இருந்தாலும், 100 கோடி பெரும் ஒன்றாக செய்வது இந்த வாசி யோகம், வாசி யோகம் நின்றால் மரணம். அனைத்து வாழும் விலங்குகள் பறவைகள் செய்வது மூச்சு காற்று என்னும் வாசி யோகம்.  பறவைகள் விலங்குகளை விட மனிதர்கள் மேம்பட்ட வாசி யோகிகள். பறவைகள் விலங்குகள் வாசி யோகத்தில் தேர்ச்சி பெற்று மேம்படும் போது மனிதர்களாக பிறக்கின்றன. வாசி யோகம் மட்டுமே உலகத்தின் இயக்கம். உயிரின் செயல். நாம் அந்த யோகத்தில் இணைந்தால், மனதை சுவாசத்தில் கவனம் கொள்ள செய்து, எண்ணங்கள் அற்று, உயிருடன் உடலை இணைத்து இருந்தால், சுவாசம் உள்ளடங்கி உள்ளேயே ஓடும் நிலை கிடைக்கும். அந்த நிலையில் சகலமும் கிடைக்கும். மரணமில்லாத பெரும் வாழ்வு கிட்டும். 


பிறந்ததில் இருந்து 24 மணி நேரமும் இந்த நொடி வரை நடந்து கொண்டே இருக்கும் ஒரே செயல், வாசி யோகம் மட்டுமே. இறக்கும் கடைசி நொடி வரை வாசி யோகம் நடக்கும்.கண்ணுக்கு முன்னாள் உள்ளங்கையில் இருக்கும் இந்த பேருண்மையை புரிந்து கொள்ளாமல் எதை எதையோ தேடி அலைந்து, சுவாசத்தை துளி அளவேனும் கவனம் கொள்ளாமல், உயிருடன் உடன்படாமல் வாழ்வதால், உயிர் கொஞ்சம் கொஞ்சமாக தனது வாசி யோகத்தை குறைத்து குறைத்து, முதுமை எய்தி, இறப்பில் முடிகிறது. தானாக நடக்கும் வாசி யோகத்துடன் இணையாத இந்த உடலும் மனமும், காரணம் புரியாமல் நலிவுறுகிறது. 


தினமும் கொஞ்ச நேரம் சுவாசத்தை கவனியுங்கள். வேலை குடும்பம் பிழைப்பு நண்பர்கள் எல்லாமே நம்மை வாசி யோகத்தில் இருந்து திசை திருப்பும் மனதை பலப்படுத்தும் செயல்கள். கொஞ்ச நேரம் இதனை உணர்ந்து மனதை அலை பாய விடாமல் சுவாசத்தை கவனிக்க பழகுங்கள். பெரும் அமைதி கிடைக்கும், நிம்மதி இருக்கும். வாழ்வாங்கு வாழலாம்.


ஆக்கம்

தி. இரா. சந்தானம்

3 comments:

  1. ஆத்ம நமஸ்காரம் ஐயா நல்லதுங்க நன்று நன்று நன்று அடியேனும் ஆறுமுகசிவனருளால் அப்பா ஞானவள்ளல் சுவாமி சிவானந்த பரமஹம்சர் அருளிய சித்தவித்தையை அப்பியாசிக்கும் பெரும் பேறு வாய்க்கப் பெற்றேன் ஓம் ஆதியயே துணை உலகம் சாந்தியும் சமாதானமும் பெற்றுய்யட்டும்.

    ReplyDelete
  2. பிரம்ம ஸ்ரீ ராமகிருஷ்ணன் துறையூர் திருச்சி மாவட்டம்.
    7598513918

    ReplyDelete
  3. தங்களது ஆத்ம நேர கூட்டிணைவிற்கு ஆனந்தம் நன்றி ஐயா

    ReplyDelete