Thursday 26 May 2022

சித்தர்கள் அருளிய காரிய சித்தி மந்திரங்கள்

 சித்தர்களின் குரல் முகநூல் பதிவில் இருந்து எடுக்கப்பட்டது


சுப்ரமணியர் மந்திரம்:-

                  புருவ மத்தி சுழுமுனையில் பார்வையை வைத்து "ஓம்-கிலி-ஓம்" என்று இலட்சம் உரு தியானிக்க சுப்ரமணியர் வடிவேலுடன் சோதி மயமாய்ப் பிரசன்னமாகி வேண்டிய வரமளிப்பார். கர்ம வினைகளை விலக்குவிப்பார்.


கணபதி மந்திரம்:-

                 ஓங்காரம் வரைந்து அதன் நடுவில் "உம்-ரீங்-கங்-கங்" என்று விபூதியிலாவது தங்க, வெள்ளித் தகட்டிலுவது எழுதி புருவ மத்தியில் மனதை வைத்துக் கொண்டு "உம்-ரங்-ஓம்-ஸ்ரீ-கங்-கங்-கணபதியே-நமா" என்று ஒரு இலட்சம் உரு செபம் செய்து வந்தால் தீட்சா மந்திரங்கள் சித்தியாகும். வல் பிணிகள் போம். சகல ஜீவன்களும் வசியமாகும், ஏவல் கேட்கும்


நந்தீசர் மந்திரம்:-

             "அங்-ரீங்-சிங்-சிம்-சிவா" என்று இலட்சம் உரு தியானிக்க புருவ மத்தியில் எண்ணம் இருக்க வேண்டும். தேகம் தங்கம் போல் பிரகாசிக்கும். யோக ஞான சித்தியும் உண்டாகும்.


அகத்தீசர்  மந்திரம்:-

"அம்-உம்-ஓம்-வம்-மம்-மகத்தான-அகத்தீசாய -நம"

         எண்ணங்கள் புருவ மத்தியில் வைத்து இலட்சம் உரு தியானிக்க.....


"யநம-சிவ" 

                என்று ஜெபித்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.


"அங்-சிவாய-நம"

                   என்று ஜெபித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.


"அரி-ஓம்-நமசிவாய" 

                என்று ஜெபித்தால் தேகத்தில் நோய் அணுகாது


"அம்-கிலி-சிவாய-நம"

                    என்று ஜெபித்தால் யோக சித்தி கிடைக்கும்.


"லங்-சிவாய-நம"

                   என்று ஜெபித்தால் ஆயுள் விருத்தியாகும்.


"இம்-ஏ-சிவாய-நம"

                     என்று ஜெபித்தால் ஓடாத பூத பிசாசுகளும் ஓடிவிடும.


"ஓம்-கிலியும்-நம-சிவாய"

                    என்று ஜெபித்தால் அரச வசியம, பல வசியம்.


"ஐயும்-நமசிவாய"

                     என்று ஜெபித்தால் படிப்பில் முதன்மையாக வரலாம்


"நமசிவாய"

                    என்று ஜெபித்தால் நினைத்தது நடக்கும்


"நமசிவாய-ஊம்-நமசிவாய"

                     என்று ஜெபித்தால் குளிர் ஜிரம் போகும்.


"நமசிவாயா-சூலிங்-நமசிவாய"

                        என்று ஜெபித்தால் பூமி நன்கு விளையும.


"நமசிவாய-மவ்வும்-சிவாய நம"

                        என்று ஜெபித்தால் அஷ்ட நாக விஷம் நீங்கும்


"ஓம்-குசம்-பிரேம்-சிவாய-நம"

                          என்று ஜெபித்தால் பசு பூமி பாக்கியம் கிடைக்கும்


"ஓங்-சங்-சிவாய-நம"

                      என்று ஜெபித்தால் தேவ கன்னிகள் வலிய வந்து சேருவார்கள்.


"லம்-அங்கிஷ-சிவாய-நம"

                        என்று ஜெபித்தால் முக்குணத்தையும் வெல்லலாம்.


"டங்-சிவச்-சிவாய-சிவாய-நம"

                         என்று ஜெபித்தால் பாதாள கமனம் சித்தியாகும்.


"ஓங்-ஐயும்-சிவாய-நம"

                       என்று ஜெபித்தால் ஆறு சாஸ்திரங்கள் மற்றும் கேள்வி ஞானம் பெறலாம்.


"லிங்க-லிங்க-ஓம்-சிவாய-நம"

                       என்று ஜெபித்தால் பொன்னுலகம் காணலாம்.


"சங்-வங்-சிவாய-நம"

                         என்று ஜெபித்தால்   ஜலஸ்தம்பமெழுப்பலாம். நினைத்தெல்லாம் உருவமாய் வந்து ஏவல் கேட்கும்.


"ஓம்-சிவாய-நம"

                      என்று ஜெபித்தால் அஷ்ட கருமங்களும் சித்தியாகும்.


"ஸ்ரீயும்-ஸ்ரீயும்-சிவ-சிவாய-நம"      

                         என்று ஜெபித்தால் கேட்டதெல்லாம் கொடுக்கும்.


"பிரங்-பிரங்குசாப-சிங்-சிவாய-நம"

                         என்று ஜெபித்தால் மரங்கள் காய்கனிகளை பறிக்க வளைந்து கொடுக்கும்.


"மங்-மங்-நங்-சிவாய-நம"

                  என்று ஜெபித்தால் பசிக்காது.


"வங்-லங்-வங்-லங்-சிவாய-நம"

                          என்று ஜெபித்தால் மழையில் நனையாமல் நடக்கலாம்.


"ஆகார-ஓம்-ஙங்-ங்-ஙங்-ஸ்ரீயும்-சிவாய-நம"

                      என்று ஜெபித்தால் தேவனை காணலாம்.


"இரிங்-ஸ்ரீறிங்-சிவாய-நம"

                    என்று ஜெபித்தால் ஆறுகள் பிரவாகமாக ஓடும்.


"சி-யம்-சிவ-சிவா-உங்-உங்-சிவாய-நம"

                   என்று ஜெபித்தால் கடலில் ஊடுருவி செல்லலாம்.


"சங்-சங்-யவசி-நம"

                   என்று ஜெபித்தால் வெந்நீர் ஜலத்தில் நடக்கலாம். இலட்ச கணக்கில் உருவேற்றி ஜெபம் செய்து வந்தால் சித்தியாகும்.


"ஐயும்-சிவாய-நம"

                       என்று ஜெபித்தால் தேவ விமானம் வந்து நிற்க்கும்.


"டங்-தெங்-கெங்-ஓங்-சிவாய-நம"

                        என்று ஜெபித்தால்  தருக்கள் உதவி செய்யும்.


"கங்-கங்-ஊங்-கங்-நசி-ஓங்"

                       என்று ஜெபித்தால் காமதேனு உதவி புரியும்.


"நுங்-நுங்-சிங்-ஓம்-நமோ"

                       என்று ஜெபித்தால் சக்தி வந்து உதவி புரிவாள்.

No comments:

Post a Comment