Sunday 29 May 2022

My Nadi 29May22


 My Nadi 29May22



அகத்தியர் ஜீவ அருள் நாடி வாக்கு


பொகளூர் , கோவை


29.05.2022


 


வாசிப்பவர் - குருஜி இறைசித்தர் செந்தில்


கேட்பவர்  - தி. இரா. சந்தானம்


 


வாக்கு :


 


அருவாய் உருவாய் திருவாய் போற்றி


திருவாய் மலரடி பணிந்தாய் போற்றி


வருவாய் குகனே அருள்வாய் போற்றி


காவாய் கனகத்திரளே போற்றி


என் கயிலை மலையானே


போற்றி போற்றி போற்றி


 


சிரம் தாழ்ந்து வணங்கும் அடியோரின்


தேவ தேவனே போற்றி


 


சிரம் தாழ்ந்து அகஸ்தியன் நானே


என் நிலை இறக்கி


இக்கலியுகம் தன்னிலே


கந்த வடிவேலவனின் அருள் பெற்று


அருள் தனை உரைக்கிறேன் என் மைந்தனுக்கு


கேள் மகனே


 


இன்னவன் வாழ்வு தன்னிலே


சென்றுட்ட சிறு வேளையிலே


சிறியதோர் துயர் பட்டாய்


 


மனம் கலங்கி நின்றாய்


என் மைந்தா


உமை யாம் பக்குவ நிலை படுத்தவே


சிறு இன்னல் தந்தோம்


 


பக்குவ நிலை நீ பெற்றாய் , என் மகனே


நிறைவு பெறும் அப்பா உனது வாழ்வு


யாம் அன்றல்ல இன்றல்ல ,


என்றும் உமை காப்போம்


 


உன் அருகில் அல்ல


உம்முள் இருந்து


உமை யாம் காப்போம்


 


பூரண நல்லாசிகளே


நிலை பெறுவாய்


ஆலய கைங்கர்யங்கள் அதை


முன்னின்று செய் அப்பா


 


உமக்கு எம் பூரண நல்லாசிகள்


 


பெரும் உயர் நிலை நீ அடைவாய்


 


நிலை பெறுவாய் என் மகனே


என் மகனே


யாம் உனக்கு அன்றுரைத்தோம்


நீ செய்யும் தான தர்ம நிகழ் காரியங்களை


யாம் உற்று நோக்கி உள்ளோம்


யாம் மனமகிழ்ந்தோம் என் மழலையே


திரைவடிவில் காட்டாதே


தான தர்ம காரியங்கள் மேலோங்கும் அப்பா


உன் மனை தன்னிலே


யாகம் பூசை புனஸ்காரங்களை செய்


உமையவள் லோபாமுத்திரையுடன் உடன் இருந்து


உமை யாம் ஆசீர்வதிப்போம்

No comments:

Post a Comment