Saturday 28 May 2022

அங்காள பரமேஸ்வரி - ஏனாடி செங்கோட்டை என்ற கிராமம்

 சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானா மதுரையில் இருந்து பன்னிரண்டு கிலோ தொலைவில் உள்ளது ஏனாடி செங்கோட்டை என்ற கிராமம். இங்குள்ள ஆலயத்தில் அங்காள பரமேஸ்வரி தன்னுடன் 21 துணை தேவதைகளையும் 64 பிற கடவுட்களையும் வைத்துக்கொண்டு வீற்று உள்ளாள். ஒரு காலத்தில் வாரணாசியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு புனிதப் பயணத்தை மேற்கொண்ட வேடன் ஒருவன் தன்னுடன் தான் வணங்கிய அங்காள பரமேஸ்வரியின் சிலையையும் கொண்டு வந்து இருந்தான். ஒரு நாள் அவன் ஏனாடி சின்னக்கோட்டை கிராமத்தை அடைந்தபோது அங்கு இருந்த ஒரு மரத்தின் அடியில் அதை வைத்து விட்டு பூ பழங்கள் போட்டு அதை பூஜித்தான். அங்காள பரமேஸ்வரிக்கு அந்த இடம் பிடித்துப் போய் விட்டதினால் தான் அங்கேயே இருக்க விரும்புவதாகவும் , அவனை மேற்கொண்டு அவனது யாத்திரையை தொடருமாறும் கூறினாள் . ஆகவே அவளை அங்கேயே விட்டு சென்று விட்டவன் பின்னர் திரும்பி வரவேயில்லை. காலப் போக்கில் அந்த சிலையை மண் மூடியது. எவரும் அதை கவனிக்கவில்லை. அந்த ஊரின் அருகில் இருந்த மரவாநேன்தல் என்ற ஊரை சேர்ந்த யாதவ பால்காரப் பெண்மணி ஒருவள் தினமும் அந்த வழியாக செல்வதுண்டு. ஒரு நாள் அவள் அந்த வழியே சென்றபோது தடுக்கி விழுந்து அத்தனை பாலும் அந்த சிலை மூடி இருந்த மண் மீது மீது கொட்டி விட்டது. அது தினமும் தொடர்ந்து அதே இடத்தில் நடந்தது. அந்த நேரத்தில் தன்னுடைய ஊமை பெண்ணை அழைத்துக் கொண்டு ஒரு பிராமணன் ராமேஸ்வரம் சென்று கொண்டு இருந்தார். அவரும் அந்த வழியாகவே சென்றார். அவருக்கு கிளம்புன் முன் ஒரு அற்புதம் நிகழ உள்ளது என ஆரூடம் கூறப்பட்டு இருந்தது. அவர் தனது ஊமை மகளுடன் அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு இருந்தபோது மீண்டும் அந்த யாதவப் பெண்மணி பால் பாத்திரத்துடன் அதே இடத்தில் விழுந்தாள். ஊமை பெண் அதைப் பார்த்துவிட்டு ' பால் குடத்துடன் அவள் விழுந்து விட்டாள்' எனக் கத்தினாள். ஆகவே ஊமையை பேச வைத்த அந்த இடத்துக்கு எதோ மகிமை உள்ளது என அவர் கிராமத்திடம் கூற அவர்களும் அங்கு வந்து அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது அங்காள பரமேஸ்வரியின் சிலை கிடைக்க அதை ஒரு வன்னி மரத்தடியில் அவர் பிரதிஷ்டை செய்தார். அப்போது ராமநாதபுரத்து மன்னனான சேதுபதியின் மனைவிக்கு தீராத வயிற்று வலி இருந்தது. பிராமணன் அவரிடம் சென்று அங்கு ஆலயம் அமைக்க உதவி கேட்டபோது அவர் தன் மனைவியின் நோயை குணப்படுத்தினால் அதை செய்வதாக வாக்கு தந்தார். அவர் மனைவி குணம் அடைந்தாள். ஆனால் மன்னன் தந்து இருந்த வாக்குறுதியை மறந்து விட்டார். பின்னர் ஒரு நாள் குதிரை மீதேறி அந்த இடம் வழியே செல்கையில் குதிரை தடுக்கி விழுந்து காயம் அடைந்தது. அங்காள பரமேஸ்வரி ஆலயத்து காவலாயை உதவி கேட்க அவனும், அந்த இடத்தில் இருந்த மண்ணை வீபுதி போல குதிரையின் நெற்றியில் தடவ அது உடனடியாக எழுந்து நின்றது. அப்போதுதான் மன்னனுக்கு தான் அங்கு ஆலயம் அமைப்பதாக கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வர உடனடியாக அங்கு ஆலயம் அமைக்க ஏற்பாடு செய்தார். அவளுக்கு உதவியாக இருக்க பாதாள ராக்கு, முத்து ராகாச்சி, முத்து இருளாயி, சந்தனக் கருப்பு, போன்ற இருபத்தி ஒரு துணை கடவுளுக்கும் அறுபத்தி ஒரு படை வீரர்களுக்கும் சிலைகள் வைத்தான். மூன்று கருவறைகள்- அங்காள பரமேஸ்வரி, சந்தனக் கருப்பு மற்றும் இருளாயி போன்றவர்களுக்கு ஏற்பட்டன. அங்காள பரமேஸ்வரி சுத்த சைவம். ஆகவே அவளைத் தவிர்த்து மற்ற தேவதைகளுக்கு மட்டுமே பலிகள் தரப்படுகின்றன.

வருடாந்திர விழா சிவராத்திரிக்கு இரண்டு நாட்கள் முன்னால் துவங்கி எட்டு நாட்கள் நடைபெறும். சிவராத்திரி அன்று அங்காள பரமேஸ்வரி பரி வேட்டை என்ற பெயரில் தான் முன்னர் புதைந்து இடம்வரை ஊர்வலமாக சென்றப் பின் அங்கிருந்து திரும்பி வருவாள். அன்றைய தினம் அவளுக்கு ஒன்பது விதமான தானியங்களை காணிக்கையாகத் தருவார்கள்.

மூன்று வருடங்களுக்கு ஒரு முறை அங்காள பரமேஸ்வரியின் துணை தேவதையான பத்திர காளிக்கு கர்பிணி ஆடு ஒன்றை பலியாகத் தருகிறார்கள்.

அங்காள பரமேஸ்வரிக்கு நிறைய பக்தர்கள் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் உண்டு. ஒரு முறை வைகை நதி நீர் கரை புரண்டு ஓடி அந்த ஆலயத்துக்குள்ளும் தண்ணீர் வந்துவிட்டது. ஆகவே அவளுடைய பக்தர்கள் மஞ்சள் கயிற்றை மஞ்சளுடன் சேர்த்துக் கட்டி அவள் கழுத்தில் போட்டு வைத்தப் பின் அதை ஒரு பானையில் வைத்து நதியில் போட வெள்ள நீர் உள்ளே புகவில்லையாம். வெள்ளமும் வடிந்ததாம்.

No comments:

Post a Comment