Wednesday 19 May 2021

எந்தெந்த இடங்களில் தீபம் ஏற்ற வேண்டும்

 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉    


🙏வீட்டில் எந்தெந்த இடங்களில் தீபம் ஏற்ற வேண்டும்


?


🙏வீட்டில் எந்த இடங்களில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்?


🙏தீப வழிபாடு என்பது தொன்றுதொட்டு   நம் கலாச்சாரத்துடன் கலந்தது ஆகும். 

காலம் காலமாக கடைபிடிகும் மரபாகும்.


🙏நாம் வசிக்கும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை நமஸ்காரம் செய்தால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் மகாலக்ஷ்சுமி கடாக்ஷம் பெருகும்.


🙏மேலும் வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவதால் சுபம், உடல் ஆரோக்கியம், நன்மை, தனவரவு அதிகரித்தல், நல்லபுத்தி  ஏற்ப்படுதல் ஆகியவை பெருகும். தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது.


🙏தீபலக்ஷ்மி ஸ்தோத்திரம் என்றே தனியாக இருக்கிறது.அதை சொல்லி வரலாம்.


🙏தீபம் ஏற்ற வேண்டிய இடங்களும், விளக்குகளும் : 


🙏முக்கியமாக திருகார்திகை தினத்தில்


🙏கோலமிடப்பட்ட வாசலில் : ஐந்து விளக்குகள்


🙏திண்ணைகளில் : நான்கு விளக்குகள்


🙏மாடக்குழிகளில் : இரண்டு விளக்குகள்


🙏நிலைப்படியில் : இரண்டு விளக்குகள்


🙏நடைகளில் : இரண்டு விளக்குகள்


🙏முற்றத்தில் : நான்கு விளக்குகள்


🙏பூஜையறையில் :


🙏இரண்டு கார்த்திகை விளக்குகள்,அல்லது ஒரு குத்து விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலங்கள் உண்டாகும்.


🙏இந்த பழக்கத்தை நாம் எல்லா தினங்களிலும் செய்தல் நலம்.


🙏முக்கியமாக காலையிலும் மாலையிலும் ஸ்வாமி சன்னதியில் திருவிளக்கு ஏற்றியவுடன் நம்மை 

அறியாமலேயே தீய சக்திகள் நம்மை விட்டு நீங்கி, நம் மனம் தூய்மை அடைவதை நாம் காணலாம்.


🙏வீட்டில் பூஜை அறையில் விளக்கேறியவுடன் பால் ,கற்கண்டு நைவேத்தியம் செய்தல் நலம்.


🙏 சமையலறையில் :


🙏ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.


🙏தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில் :


🙏எமனை வேண்டி தீபம் ஏற்றினால் மரண பயம் நீங்கும். 

ஆயுள்விருத்தி உண்டாகும்.


🙏தீபத்தின் வகைகள் :


🙏தீபத்தில் மகாலக்ஷ்மி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் தீபலக்ஷ்மியே நமோ நம: என்று கூறி வணங்குவது அவசியம்.


🙏அத்தோடு தாங்கள் விரும்பும் இஷ்ட தெய்வத்தையும் மனதில் சொல்லி, தீபம் ஏற்றியவுடன் வணங்கலாம்.


🙏 தீபத்தில் பலவகைகள் உண்டு. 

 அவை என்ன என்று பார்க்கலாம்.


🙏சித்ர தீபம் :


🙏வீட்டின் தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபம் சித்ர தீபம் ஆகும்.


🙏மாலா தீபம் :


🙏அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படும் தீபம் மாலா தீபம் ஆகும்.

வைகானஸ ஆகமம் கடைபிடிக்கும் பெருமாள் கோயிலிலும், சிவபெருமான் கோயிலிலும் சாயரட்சை பூஜை சமயம் மாலா தீபம் ஏற்றப்படுவதை நாம் காணலாம்.


🙏ஆகாச தீபம் : 


🙏வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படும் தீபம் ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதிநாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், எம பயம் நீங்கும்.


🙏ஜல தீபம் :


🙏தீபத்தை தாமரை இலையில் ஏற்றி நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபத்திற்கு ஜல தீபம் என்று பெயர். 


🙏படகு தீபம் :


🙏கங்கை நதியில் மாலைவேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றிவைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் கங்கையில் மிதக்கவிடுவதற்கு பெயர் படகு தீபம் ஆகும். 


🙏சர்வ தீபம் :


🙏வீட்டின் அனைத்து பாகங்களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபமாகும்.


🙏மோட்ச தீபம் :


🙏முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, கோயில் கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் தீபம் மோட்ச தீபம் ஆகும்.


🙏சர்வாலய தீபம் :


🙏கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று, மாலைவேளையில் சிவபெருமான் கோவில்களில் ஏற்றப்படுவது சர்வாலய தீபமாகும்.


🙏அகண்ட தீபம் :


🙏மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம் ஆகும்.


🙏லட்ச தீபம் :


🙏ஒரு லட்சம் விளக்குகளால் திருக்கோயிலை அலங்கரிப்பது லட்ச தீபமாகும். 


🙏மாவிளக்கு தீபம் :


🙏அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றுவது மாவிளக்கு தீபம் ஆகும்.



No comments:

Post a Comment