Tuesday 4 May 2021

அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்

 அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில் 



மூலவர் : ஆகாசபுரீஸ்வரர் அம்மன் / தாயார் - மங்களாம்பிகை 

ஊர் - கடுவெளி மாவட்டம் - தஞ்சாவூர் 


திருவிழா : ஐப்பசியில் அன்னாபிஷேகம் , தைப்பூசம் , சிவராத்திரி , நவராத்திரி , பங்குனி உத்திரம்


தல சிறப்பு : பொதுவாக கோபுரத்திற்குள் அமர்ந்திருக்கும் நந்தி , இத்தலத்தில் கோபுரத்திற்கு வெளியே உள்ளது சிறப்பு.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது . 


திறக்கும் நேரம் :

காலை 9 மணி முதல் 10 மணி வரை , மாலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை திறந்திருக்கும் . பூராடம் நாட்களில் காலை 8-1 மணி வரை திறந்திருக்கும் . 


முகவரி : அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில் , கடுவெளி , திருவையாறு தாலுக்கா , தஞ்சாவூர் மாவட்டம் . போன் :  +91 9626765472 , 94434 47826 


பிரார்த்தனை : பூராடம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர் . திருமணத்தடை உள்ளவர்கள் தங்கள் நட்சத்திர நாளில் சுவாமி சன்னதியில் சாம்பிராணி புகையிட்டு வழிபடுகின்றனர் .


நேர்த்திக்கடன் : இத்தல சிவனுக்கு புனுகு , ஜவ்வாது சாத்தி , கேசரி நைவேத்யம் செய்து வணங்கி வரலாம் .


தலபெருமை : 


பூராடம் நட்சத்திர தலம் : சுவாமி ஆகாசபுரீஸ்வரர் பூராடம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக அருளுகிறார் . மங்களகரமான

வாழ்க்கை தருபவள் என்பதால் , அம்பிகைக்கு மங்களாம்பிகை என்று பெயர் . ஆகாயவெளியில் உள்ள அனைத்து தேவதைகளும் , வாஸ்து பகவானும் , பூராட நட்சத்திர நாளில் ஆகாசபுரீஸ்வரரை வழிபாடு செய்வதாக ஐதீகம் . எனவே , இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் , தங்களது நட்சத்திர நாளில் இத்தல சிவனுக்கு புனுகு , ஜவ்வாது சாத்தி , கேசரி நைவேத்யம் செய்து வணங்கி வரலாம் . திருமணத்தடை உள்ளவர்கள் , தங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சுவாமி சன்னதியில் சாம்பிராணி புகையிட்டு வழிபடுகின்றனர் . 


சித்தர் வழிபாடு : முதலில் இக்கோயிலில் கடுவெளிச்சித்தரின் சிலை வடிவம் இல்லை . சில ஆண்டுகளுக்கு முன் , இக்கோயிலைத் திருப்பணி செய்தபோது , சித்தரின் சிலை கிடைக்கப்பெற்றது . இவர் கோயில் முன் மண்டபத்தில் இருக்கிறார் . சித்தருக்கு சிவன் காட்சி தந்தபோது , அவருக்காக நந்திதேவர் வெளியே நின்று கொண்டார் . இதனடிப்படையில் நந்தி , கோபுரத்திற்கு வெளியே உள்ளது . சித்தர் வழிபாட்டில் ஈடுபாடு உள்ளோர் வழிபட வேண்டிய தலம் இது . 


தல வரலாறு : கடுவெளிச்சித்தரின் அவதாரத்தலம் இது . கடுவெளி என்றால் பரந்தவெளி , இந்த சித்தர் , தான் கண்டுணர்ந்த ஞானத்தை மக்களுக்கு உபதேசித்தார் . இவர் சிவதரிசனம் வேண்டி தவமிருந்தார் . அவருக்காக , இத்தலத்தில் எழுந்தருளிய சிவன் , சித்துக்களில் வல்லமை பெறும்படி அருள் செய்தார் . பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சோழமன்னன் ஒருவன் , சித்தருக்கு அருளிய சிவனுக்கு கோயில் எழுப்பினான் . இவர் பஞ்சபூதங்களில் ஆகாயத்திற்கு அதிபதியாக திகழ்வதால் ஆகாசபுரீஸ்வரர் என்று பெயர் பெற்றார் . இந்த தலத்துக்கு சித்தரின் பெயரையே வைத்தான் . 


சிறப்பம்சம் : பொதுவாக கோபுரத்திற்குள் அமர்ந்திருக்கும் நந்தி , இத்தலத்தில் கோபுரத்திற்கு வெளியே உள்ளது சிறப்பு .

No comments:

Post a Comment