Thursday 28 January 2021

சித்தர்கள் ஒளி ரூப காட்சி

 இன்று நமது புகலூர் அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடத்தில் வெகு சிறப்பாக தை பௌர்ணமி யாகம் அபிஷேகம் அலங்காரம் ஆகியவை நடத்தப்பட்டது 


வெகு சிலரே இந்த விழாவில் பங்கு கொண்டனர்   விழாவின் இறுதியில் எதேச்சையாக நான் ஒரு சிறிய காணொளி எடுக்கலாம் என்று எண்ணி எனது அலைபேசியில் வீடியோ பட்டனை அழுத்தியவுடன் பல ஒளி ரூபத்தில் பல நகர்வுகள் வீடியோவில் தெரிந்தன ஆனால் நேரில் பார்க்கும் போது வெறும் தங்களால் எந்த காட்சியும் தெரியவில்லை . பூச்சிகள் எதுவும் பறக்கவில்லை ஆனால் ஒளி உருவமாக பலவேறு நகர்வுகள் காணொளியில் பதிவாகின.  நான் நமது பீடத்தை சேர்ந்த மேலும் சில அன்பர்களை அழைத்து காட்டினேன் அவர்களும் ஆமாம் என்று எனது கருத்தை ஆமோதித்தார்கள். 


 அவர்களுக்கும் நேரில் வெறும் கண்களால் எந்த காட்சியும் தெரியவில்லை ஆனால் அலைபேசியில் நகர்வுகள் தெரிந்தன. இந்த காணொளியை உங்களுடன் பகிர்ந்து உள்ளேன் . 


இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் 5 நிமிடத்திற்கு பிறகு அதே இடத்தில் மீண்டும் பார்த்த போது எந்த ஒரு ஒளி நகர்வும் காணொளியில் தெரியவில்லை .  


இது சர்வ நிச்சயமாக சித்தர்களின் ஒளி ரூப நடமாட்டம் என்பது தெரிகிறது .கைபேசியில் கோளாறு எதுவும் இல்லை மேலும் அதே இடத்தில் அவர்கள் சென்ற பிறகு, எடுத்த காட்சியில், எந்த ஒளி நகர்வும் தெரியவில்லை


மேலும் அங்கு அகத்தியர் படத்திற்கு முன் விளக்கிலிருந்து நீரில் பட்டு பிரதிபலித்த விளக்கின் ஒளி விட்டு விட்டு விட்டு விட்டு ஒரு காட்சியாக வித்தியாசமாக ஒளியில் பதிவாகியது ஆனால் நேரில் சாதாரண கண்களுக்கு எதுவும் தெரியவில்லை


Video 1 to 3, ஒளி நகர்வுகள்

Video 4, எந்த ஒளி நகர்வும் இல்லை..










மற்ற படங்கள் காணொளிகள்


















































1 comment: