Thursday 28 January 2021

நமது ஐயனின் பெயரில் நித்திய அன்னதான திட்டம்

*தர்ம சிறகுகள் அமைப்பில் பகிர்ந்து கொண்ட செய்தியை உங்கள் பார்வைக்கு,  இங்கே பதிவு செய்கிறேன்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


இந்த மாதம் நமது அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடத்துக்கு அன்னதானத்துக்கு மேலும் 5 டேபிள் 15 சேர் ஆகியவை சுமார் 20000 விலையில் நமது தர்ம சிறகுகள் குழு மூலமாக வாங்கி அளிக்க உத்தரவு ஆகி உள்ளது .

ஏற்கனவே நாம் வாங்கி கொடுத்த சேர் டேபிள் எல்லாம் சிறந்த முறையில் உபயோகமாக உள்ளது . 

*மற்றுமொரு முக்கிய செய்தியாக நமது குருஜி அவர்கள் நித்திய அன்னதான பீடம் ஒன்றை ஹைவே சாலையில் ஒரு இரண்டு சென்ட் இடம் வாடகைக்கு எடுத்து ஒரு சிறிய செட் அமைத்து அதில் தினமும் மதிய உணவாக 100 பேருக்கு அன்னதானம் வருடம் முழுவதும் எல்லா நாட்களிலும் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது*

இதற்கு பல பல நன்கொடையாளர்கள் பங்கு எடுத்து கொள்வார்கள் என்று குருஜி சங்கல்பம் செய்துள்ளார் . 

இதன் ஒரு படியாக நமது இந்த சேர் டேபிள் தானம் இந்த மாதம் செய்ய போகிறோம். குருஜி அவர்கள் என்னிடம் இந்த சேர் டேபிள் இங்கே தேவைப்படுகிறது அதனை யாசகம் பெற்று வாங்கி அளிக்கவும் என்று நேற்று என்னிடம் கேட்டுக் கொண்டார். அதன்படி இது செயல்படுத்தப்படுகிறது .

*பின்னாட்களில் நமது பிரதான தர்ம காரியமாக நாம் முழுமையாக இந்த நித்திய அன்னதானத்தை ஏற்று நடத்துவோம் என்று சங்கல்பம் செய்கிறோம்.*

 உதாரணத்திற்கு தற்போது மாதம் 50 ஆயிரம் என்ற அளவில் தான தர்மம் செய்து வருகிறோம் இங்கே தினமும் 25 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் தேவைப்படுகிறது சமையல் கூலி தினமும் 500 ரூபாய் ஆகும் மேலும் குடிநீர் கைகழுவ நீர் வாழை இலை போன்ற தேவைகள் உண்டு மாதம் ரூபாய் ஐம்பதாயிரம் இருந்தால் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும் .

குருஜி அவர்கள் ஏற்கனவே புகலூர் ஊர் தலைவரிடம் இடம் கேட்டு உள்ளார் அன்னூரில் இருந்து ஊட்டி செல்லும் அனைத்து வாகனங்களும் செல்லும் வழியில் ரோட்டின் மேல் புகலூர் பேருந்து நிறுத்தம் அருகே இந்த அன்னதான கூடம் அமைப்பதற்கு இடம் கோரப்பட்டுள்ளது . 

அங்கே அகத்தியரின் பெயரில் அகத்தியர் சித்தர் பீடம் அன்னதானம் என்று வைத்து அனைவருக்கும் வருடம் முழுவதும் இலவச உணவு அளிக்கப்படும் . சுற்று வட்டாரத்தில் சுமார் 25 கிலோ மீட்டர் அல்லது ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் யாருமே இதுபோல செய்யவில்லை.  எனக்கு தெரிந்து மாவட்டம் முழுவதும் எடுத்தால் கூட யாரும் அகத்தியர் பெயரில் அன்னதானம் செய்யவில்லை . 

*நாம் செய்ய போவது ஒரு மிகச்சிறந்த பலன்களை கொடுக்கக்கூடிய ஒரு தானமாக இருக்கும் தானத்தில் சிறந்தது மற்றவர் பசியை ஆற்றுவது அது அனைத்து விதமான தோஷங்களையும் களையும் . அன்னதானத்தில் ஆண் பெண் வேறுபாடு இல்லை ஜாதி மத வேறுபாடு இல்லை கீழ்ஜாதி மேல்ஜாதி போன்ற வேறுபாடுகள் இல்லை அனைவருக்கும் பொதுவானது நித்தியம் நடைபெற உள்ள இந்த அன்னதானம் ஆனது பெரும் அளவிலான புண்ணிய பலன்களை அளிக்கும். என்பது சர்வ நிச்சயம் மற்றவர்கள் அதனை செய்வதை விட அகத்தியர் தினமும் ஒளி எழுத்துக்களாக தோன்றி ஆசி வழங்கும் இடத்தில் அவருடைய அம்சமாக இருக்கும் குருஜியும் யானும் சேர்ந்து இந்த அன்னதான திட்டத்திற்கு பொறுப்பேற்று அகத்தியரின் வழி நடத்துதலும் பெயரில் சிறந்த முறையில் அகத்தியருடைய நேரடியான மேற்பார்வையில் செய்வது என்பது நேரிடையான பலன்களை அளிக்கும் மேலும் இந்த தர்ம சிறகுகள் என்று அகத்தியரே பெயரிட்டு வைத்திருக்கும் இந்த குழுவில் உள்ள அனைவருக்கும் ஜீவ அருள் நாடி மூலமாக அகத்தியரிடம் ஆசி கிடைக்கும்.


No comments:

Post a Comment