Saturday 2 March 2019

திருவள்ளுர் அஷ்ட லிங்கங்கள்

திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குள் - திருவேற்காடு வேதபுரீஸ்வரர் சந்நிதானத்தைச் சுற்றிலும் அருள் தரும்அஷ்டலிங்கங்களாக ஒவ்வொரு திக்பாலகரது திருநாமத்தைக் கொண்டுவிளங்குகின்றனஒவ்வொரு லிங்கமும் தனித்தனியான வாழ்க்கை நலன்களைஅருள்பவை என்றாலும் அவற்றை ஒரேநாளில் 18 கி.மீஎல்லைச் சுற்றுக்குள்தரிசித்து விடுவதே சிறப்பானது.  அந்தவரிசையில் எண்கயிலாய தரிசனமாகசென்னையின் தென்பகுதியான தொண்டைமண்டலத்தில் வள்ளிக் கொல்லைமேடுநூம்பல்செந்நீர்கு ப்பம்பாரிவாக்கம்மேட்டுப்பாளையம்பருத்திப்பட்டுசுந்தரசோழபுரம்சின்னக்கோலடி ஆகியதலங்களை வழிபடலாம்.

இனிமை தரும் இந்திர லிங்கம்:- வேதபுரீஸ்வரர் கோயிலில் இருந்து நேர்கிழக்காக வள்ளிக் கொல்லைமேடு என்றஇடத்தில் இந்திரசேனாபதீஸ்வரர் என்றதிருநாமத்துடன் அருள்கிறார்பதவி உயர்வுஅரசு அனுகூலம் பெற்றுத் தருகிற இந்தசுவாமியை நெய்தீபம் ஏற்றி வைத்து    வழிபடவும்.
இடர்களையும் அக்கினி லிங்கம்அகத்தியர் தனித்து பூஜை செய்த லிங்கமாகஆனந்தவல்லி உடனுறையும்அகத்தீஸ்வரராக தென்கிழக்கு திசையில்நூம்பல் என்ற தலத்தில் அருள் தரும் இவர்முன் நெய்தீபம் ஏற்றினால்      வழக்குகளில்    வெற்றி      உண்டாகும்.
எதிர்க்கும் வினைகளையும் எம லிங்கம்மரகதாம்பிகை உடனுறை கைலாசநாதர்எனும் திருநாமத்துடன் பூந்தமல்லிஆவடிசாலையில் தென்திசை லிங்கமாகசெந்நீர்குப்பம் என்ற தலத்தில் சிவமூர்த்தங்களோடு கருங்கற்கோயிலில்காட்சி தருகிறார்ஏழரைச்சனிகண்டச்சனிவிலகிஇரும்புத் தொழிலில் முன்னேற்றம்காண நெய்தீபம் ஏற்றி      வணங்குங்கள்.
நிம்மதி அருளும் நிருதி லிங்கம் : வேதபுரீஸ்வரர் சந்நதியிலிருந்துதென்மேற்கு திசையில்சுமார், 2000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகஓலைச்சுவடிச் செய்திகளோடு பாலாம்பிகை உடனுறை பாலீஸ்வரர் என்ற திருநாமத்துடன்பூந்தமல்லிபட்டாபிராம் இடையில்பாரிவாக்கத்தில் (மகாநாடு நிறுத்தத்தில்அருள்கிறார்கொடுத்த  கடன் திரும்பவும்உறவினர் மூலம் நன்மை பெறவும் நெய்தீபம்ஏற்றி வழிபட வேண்டும்.
                
உடல் திறன் கூட்டும் வருண லிங்கம் : வேதபுரீசர் கோயிலிலிருந்து மேற்கு திக்கில்மேட்டுப்பாளையம் என்ற பூமியில்ஜலகண்டீஸ்வரி உடனுறை ஜலகண்டீஸ்வரசுவாமி என்ற திருநாமத்துடன் ஆலயம்இன்றி வெட்டவெளியில் அருள்  தருகிறார்புத்திரப்பேறுநோய் நீக்கம்விவசாயவிருத்தி போன்ற பலன்கள் பெற நெய்தீபம்ஏற்றி வைத்து வழிபடுங்கள்பூந்தமல்லி - ஆவடி  சாலையில் காடுவெட்டி என்றஇடத்தில்  உள்ளது.
குறைவிலா செல்வம் தரும் குபேரலிங்கம் :- ஆவடி-திருவேற்காடு சாலையில்வடக்கு திசை லிங்கத் திருமேனியாக சுந்தரசோழபுரம் என்ற தலத்தில்வேம்புநாயகியோடு குபேரபுரீஸ்வரர் ஏகதளவிமானக் கருவறையில் அருளாட்சிசெய்கிறார்பைரவர்வாயு தேவர்துர்க்கைநவநாயகர் மற்றும் சத்திய நாராயணருடன்அருள் தருகிறார்ஆலய வரலாற்றுக்குறிப்பைக் காணும்போது இவ்வூரில்சுந்தரன் என்ற சோழ அரசன் சிலகாலம்ஆட்சிபுரிந்தமையால் சுந்தர சோழர்புரம்என்ற பெயர் நிலைத்ததாக உள்ளதுஇத்தலஈசனை வழிபட பொருட் சேர்க்கையோடு சகலசம்பத்துக்களும் கிட்டும்.
வாழ வழி காட்டும் வாயு லிங்கம் :- வேற்காட்டீஸ்வரர் தலத்திலிருந்து வடமேற்குதிசையில்  விருத்தாம்பிகை உடன் வாழவந்தவாயுலிங்க மூர்த்தியாக அழகானசிவாலயத்துள்சிவமூர் த்தங்களோடு அருள்தருகிறார்ஆவடி சாலையில் பருத்திப்பட்டுஎன்ற தலத்தில் கோயில் கொண்ட இந்தசிவலிங்கத் திருமேனி அருகே  இலவம்பஞ்சுமரங்களின் காய்கள் வெடித்துச் சிதறுவதால்பஞ்சுகள் இறைவன் மேல் படர்வதால்அப்பெயர் நிலைத்து விட்டதுசந்நதியில்நெய்தீபம்  ஏற்றி துதி கூறி வழிபட இழந்தபொருளை மீட்பீர்கள் 
எடுத்த செயல் முடிக்க வைக்கும் ஈசானலிங்கம் :- வேதபுரீஸ்வரர் கோயிலில்இருந்து வடகிழக்கு திசையில் திருவேற்காடு - கோலடி சாலையில் சின்னக்வகோலடி என்றஇடத்தில் வெட்ட வெளிச்  சிவலிங்கமாகநானேஸ்வரி உடனுறையும் ஈசான சிவன்அருள் தருகிறார்தொண்டை மண்டலகோட்டத்தில் ஆட்சிபுரிந்த மன்னர்கள்எப்போதும் ஒரு  செயல் வெற்றியாக ஈசனைலிங்க வழிபாடு செய்தபின்பே புறப்பட்டுச்சென்றதாக கால வரலாறு சொல்கிறதுவீடுகட்ட இயலாமைகாரியத் தடை,  கண்திருஷ்டிவண்டி வாகனத்தில் லாபம்இல்லாமை ஆகியவை விலகிடநெய்தீபத்துடன் நல்லெண்ணெய் ஏற்றிவணங்க   வேண்டும்.
திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குள் உள்ளதிருவேற்காடு தலத்தை மையமாக வைத்துஇந்த லிங்கங்கள் எட்டையும் சுமார் மூன்றுமணி நேரத்திற்குள்  ஆட்டோ அல்லதுகார்களில் சென்று வழிபட்டு வரலாம்இந்தஊரின் சோமவார வழிபாட்டுக் குழுவினரும்அஷ்டலிங்கத் தரிசன குழுவும் எண் கயிலாயதரிசன சேவைக்கு உதவுகின்றனர்