Sunday 9 April 2023

சகாதேவர் கால சாஸ்திரம்

 🌳 பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான

சகாதேவன் சாஸ்திரத்தில் வல்லவர். 🌳

🌕 இவர் இயற்றிய இந்த சாஸ்திரம் தமிழில் இருக்கிறது. கால ஸாஸ்திரம் <<<<<<<<<>>>>>>>>>

⭕ கால அளவை கூறும் கால ஸாஸ்திரம்

தாமரை இதழ்களை எட்டு அடுக்கி ஒரு

நுட்பமான ஊசிக்கொண்டு துவாரம் பண்ணுவதற்கு ஆகும் நேரமே ஒரு க்ஷணமாகும்.

02க்ஷணம்கள் 01இல்லம்

02இல்லம்கள் 01காஷ்டை

02காஷ்டைகள் 01நிமேஷம்

02நிமேஷங்கள் 01துடி (15விதற்பரைகள்)

02துடிகள் 01துரிதம் (30விதற்பரைகள்)

02துரிதம்கள் 01தற்பரை (60விதற்பரைகள்)

60தற்பரைகள் 01வினாழிகை

60வினாழிகைகள் 01நாழிகை

60நாழிகைகள் 01நாள்

07நாட்கள் 01வாரம்

(ஞாயிறு,திங்கள்,செவ்வாய்,புதன்,வியாழன்,வெள்ளி,சனி இவையே ஏழு நாட்கள்)

🔥 பதினைந்து நாட்கள் ஒரு பக்ஷம்,

(ப்ரதமை,த்வீதியை,த்ரீதியை,சதுர்த்தி,பஞ்சமி,ஷஷ்டி,ஸப்தமி,அஷ்டமி,நவமி,தசமி,ஏகாதசி,த்வாதசி,த்ரயோதசி,

சதுர்தசி,பௌர்ணமி.இதுசுக்லபக்ஷம்)(ப்ரதமை,த்வீதியை,

த்ரீதியை,சதுர்த்தி,பஞ்சமி,ஷஷ்டி,ஸப்தமி,அஷ்டமி,நவமி,தசமி,ஏகாதசி,த்வாதசி,த்ரயோதசி,சதுர்தசி,அமாவாசை.

இது க்ருஷ்ணபக்ஷம்.)இரண்டு பக்ஷங்கள் ஒரு மாதம்

மாதங்கள் இரண்டுவகைப்படும்

01சந்திரமானம்

02ஸௌரமானம்

01சைத்திரம்

02வைசாகம்

03ஜேஷ்டம்

04ஆஷாடம்

05ச்ராவணம்

06பாத்ரபதம்

07ஆஸ்வீயுஜம்

08கார்திகம்

09மார்கசிரம்

10புஷ்யம்

11மாகம்

12பால்குனம்

என இப்பன்னிரெண்டும் சாந்திரமான மாதங்கள் இவை சூரிய சந்திர்கள் கூடி பிரிதல் மூலம் எற்படுவதாம்.

01மேஷம் (சித்திரை)

02ரிஷபம் (வைகாசி)

03மிதுனம் (ஆனி)

04கடகம் (ஆடி)

05சிம்மம்(ஆவணி)

06கன்னி (புரட்டாசி)

07துலா (ஐப்பசி)

08வ்ருச்சிகம் (கார்திகை)

09தனுஸு (மார்கழி)

10மகரம் (தை)

11கும்பம் (மாசி)

12மீனம் (பங்குனி)

என இப்பன்னிரெண்டு மாதங்கள் ஸௌரமான மாதங்களாகும்.

இவை ஸூரியனுடைய ஓட்டத்தால் மட்டுமே ஏற்படுவதாகும்.

இரண்டு மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது,

01வஸந்தம், (சித்தியரை,வைகாசி)

02க்ரீஷ்மம்,(ஆனி,ஆடி)

03வர்ஷம்,(ஆவணி புரட்டாசி)

04சரத்,(ஐப்பசி,கார்த்திகை)

05ஹேமந்தம்,(மார்கழி,தை)

06சிசிரம்.(மாசி,பங்குனி)

என ருதுக்கள் ஆறு வகைப்படும்.

ருதுக்கள் மூன்று சேர்ந்த்து ஒரு அயணம்,

01உத்ராயணம்,

02தக்ஷிணாயம்

என அயணங்கள் இரண்டு வகைப்படும்.

இரண்டு அயணங்கள் சேர்ந்தது ஒரு வருஷம்.

இவ்வாறுபக்ஷங்கள்லும்,மாதங்களாலும்,ருதுக்களாலும்,அயணங்களாலும், உருவான வருடங்கள் மொத்தம் அறுபதாகும் (60)

அவையாவன

01ப்ரபவ,02விபவ 03சுக்ல 04ப்ரமோதூத 05ப்ரஜோத்பத்தி 06ஆங்கீரஸ 07ஸ்ரீமுக 08பவ 09யுவ 10தாது 11ஈஸ்வர 12வெகுதான்ய13ப்ரமாதி 14விக்ரம் 15விஷூ16சித்திரபானு 17ஸுபானு 18தாரண 19பார்திப 20விய 21ஸர்வஜித்

22ஸர்வதாரி 23விரோதி24விக்ருதி 25கர 26நந்தன

27விஜய 28ஜய 29மன்மத 30துன்முகி 31ஹேவிளம்பி

32விளம்பி 33விகாரி 34ஸார்வாரி 35பிலவ36சுபக்ருது 37சோபக்ருது 38க்ரோதி 39விசுவாவசு 40பராபவ

41பிலவங்க 42கீலக 43ஸௌம்ய 44ஸாதாரண

45விரோதிக்ருது46பரிதாபி 47ப்ரமாதீச 48ஆனந்த்

49ராக்ஷஸ 50நள 51பிங்கள் 52காளயுக்தி 53ஸித்தார்தி 54ரௌத்ரி 55துன்மதி 56துந்துபி57ருத்ரோத்காரி

58ரக்தாக்ஷி 59க்ரோதன60அக்ஷய. என்பனவையே

60வருடங்களாகும்.

🍒 இவ் அறுபது வருடங்கள் ஒன்று முடிந்தால் ஒரு பரிவ்ருத்தியாகும்.

🍒 ஆறு பரிவ்ருத்திகள் சேர்ந்தால் ஒரு தேவவருடமாகும் அதாவது 360மனித வருடங்களாகும்.

🍒1200தேவ வருடம் ஒரு கலியுகம் (432000மனித வருடம்)

2400தேவ வருடம் ஒரு த்வாபரயுகம் (864000மனித வருடம்)

3600தேவ வருடம் ஒரு த்ரேதாயுகம் (1296000மனித வருடம்)

4800தேவ வருடம் ஒரு க்ருதயுகம் (1728000மனித வருடம்)

மேற்கூறப்பட்ட நான்கு யுகங்கள் ஒன்று சேர்ந்தது 12000தேவயுகமாகும்.(4320000மனித வருடமாகும்)இதை ஒரு சதுர்யுகம் அல்லது ஒரு மஹாயுகம் என்று கூறப்படுகிறது.

🍒 மாஹாயுகங்கள் எழுபத்துஒன்றும்(71)சற்று சந்தி வருடங்களும் சேர்ந்த்து ஒரு மன்வந்த்ரம் எனப்படும்.

இது ஒரு மனுவினுடைய காலமாகும்.

மனுக்கள் மொத்தம் பதினான்கு(14)பேர்களாவார்.

01) ஸ்வயம்புவ மனு 02) ஸ்வாரோசிஷ மனு

03) உத்தம மனு 04) தாமஸ மனு 05) ரைவத மனு

06) ஸாக்ஷூஸமனு 07) வைவஸ்வத மனு 08)ஸாவர்ணிமனு09)தக்ஷஸாவர்ணி மனு 10)ப்ரம்மஸாவர்ணி11)தர்மஸாவர்ணி12)ருத்ரஸாவர்ணி 13) தேவஸாவர்ணி 14) இந்த்ரஸாவர்ணிபோன்றவைகளே பதினான்கு மனுக்களின் பெயர்களாகும்.

சந்தி வருடங்களுடன் கூடிய இம்மொத்த மனுக்களின் காலமும் ஒன்று சேர்ந்த்து ஒரு கல்பமாகும்.

🍒 ஒரு கல்பம் என்பது மொத்தம் (1000) ஆயிரம் மஹாயுகங்களாகும்.

ஒரு கல்பம் என்பது ப்ரம்மாவிற்கு அரை நாளாகும்.

இரண்டு கல்பம் சேர்ந்த்து ப்ரம்மாவிற்கு ஒரு நாளாகும்.

பகலில் ப்ரம்மாவிழித்திருந்து இரவில் உறங்குவார்.

ப்ரம்மாவின் பகல் பொழுதிலேயே ஸ்ருட்டிகள் நடக்கும் இரவில் ப்ரபஞ்சத்தை ஒடுக்கிக்கொண்டு தூங்குவார்.

ப்ரம்மாவின் மாதத்தில் முப்பது(30) பகல் பொழுதும் முப்பது (30) இரவு பொழுதும் அடங்கும்,

01) வாமதேவ கல்பம் 02) ஸ்வேதவராஹ கல்பம் 03) நீல லோஹித கல்பம் 04) ரந்தர கல்பம் 05) ரௌரவ கல்பம் 06) தேவ கல்பம் 07) ப்ருகத் க்ருஷ்ண கல்பம் 08) கந்தர்ப கல்பம் 09) ஸத்ய கல்பம் 10) ஈசான கல்பம் 11) தம கல்பம் 12) ஸாரஸ்வத கல்பம் 13) உதான கல்பம் 14) காருட கல்பம் 15) கௌரம கல்பம் 16) நாரஸிம்ம கல்பம் 17) சமான கல்பம் 18) ஆக்னேய கல்பம் 19) ஸோம கல்பம் 20) மானவ கல்பம் 21) தத்புருஷ கல்பம் 22) வைகுண்ட கல்பம் 23) லக்ஷ்மி கல்பம் 24) ஸாவித்ரீ கல்பம் 25) கோர கல்பம் 26) வராஹ கல்பம் 27) வைராஜ கல்பம் 28) கௌரீ கல்பம் 29) மஹேஸ்வர கல்பம் 30) பித்ரு,எனஸ்ருஷ்டிகள் நடக்கும் ப்ரம்மாவின் பகல் பொழுதின் பெயர்களாகும்.

இரவு காலத்தில் ப்ரம்மா உறங்குவதால் அந்தந்த கல்பத்தின் இரவாகவே கொள்ளப்படும்.

அறுபது கல்பம்(60) சேர்ந்த்து ப்ரம்மாவிற்கு ஒரு மாதமாகும்,

எழு நூற்று இருபது (720) கல்பம் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு வருடமாகும்,

இந்த கணக்கின் படி ப்ரம்மா (100) ஆண்டு காலம் வாழ்வார்,

பிரம்மாவின் பூர்ண ஆயுள் எழுபத்திரெண்டாயிரம் (72000) கல்பகாலமாகும்.

இனி பிரம்மாவின் ஸ்ருஷ்டி முதல் சென்ற நாட்களை எவ்வாறு கணக்கிட வேண்டும் என்பதை கூறப்போகிறேன் கவனமாக கேட்கவும்.

வாமதேவ கல்பம் முடிவடைந்து ஸ்வேதவராஹ கல்பத்தில் இதுவரை ஆறு மனுக்களின் காலமும் அவர்களின் சந்திவருடங்களும் முடிவடைந்து தற்சமயம் ஏழாவது மனுவான வைவஸ்வதமனுவின் காலத்தில் இருபத்துஏழு சதுர்யுகங்கள் முடிந்து இருபத்து எட்டாவது சதுர்யுகத்தில் நான்காவது யுகமான கலியுகம் நடந்துக்கொண்டிருக்கிறது.

2010வருட கணக்கின் படி கலியுகம் 5111வருடம் முடிந்து விட்டது....இது சகாதேவன்சாஸ்திரத்தில் இருக்கிறது🙏

நன்றி🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥


No comments:

Post a Comment