Monday 26 August 2024

அகஸ்தியர் ஆலயம் பொகளூர், விக்கிரகங்கள் செய்யும் பணி

 இன்று நானும் குருஜியும் திருமுருகன் பூண்டி என்னும் ஊருக்கு சென்று அங்கே இருந்த உள்ளூர் மக்களிடம் விசாரித்து சிற்பக் கலைக்கூடங்களில் எது சிறந்த கலைக்கூடம் என்று கேட்டு அறிந்து அந்த கலைக்கூடத்திற்கு சென்று சிலைகளை ஆர்டர் கொடுத்துள்ளோம் 


நமது ஆலயத்தின் நுழைவு வாயில் ஆறடி உயரம் 4 அடி அகலம் கருவறை அளவு 11 அடி நீளம் 10 அடி அகலம் இதற்கு தகுந்தவாறு நாலு அடி அகலத்தில் ஒரு பீடம் அமைக்கப்படும் 


அந்த பீடத்தின் மேல் மற்றொரு சிறிய பீடம் இருக்கும் அந்த பீடத்தில் ஸ்ரீ அகஸ்தியர் ஸ்ரீலோபமுத்ரா சிலைகள் நிறுவப்படும்


இந்த இரண்டு பீடத்திற்கு மத்தியில் அஷ்டபந்தனம் எனப்படும் அஷ்டபந்தனம் போடப்பட்டு இந்த தரை பீடத்தின் மேல் அகஸ்தியர் லோப முத்ரா இருக்கும் இடம் அமர்த்தப்படும் கும்பாபிஷேகத்தின் போது இந்த நிகழ்வு நடைபெறும்


 அகஸ்தியர் சிலை மூன்றேகால் அடி லோப முத்ரா சிலை மூன்று அடி ஆகிய அளவில் இருக்கும் 


பீடத்தின் மொத்த அளவு ஒரு அடி.


சிலையின் உயரம் 3 1/4 அடி . ஆக மொத்தம் தரையில் இருந்து சுமார் 4 அடி உயரத்தில் ஒரு அகஸ்தியர் சிலை வடிவமைக்கப்பட்டு இருக்கும் 


சதுர பீடத்தின் வலது ஓரத்தில் ஆவுடையார் போன்ற அமைப்பு இருக்கும் .  அபிஷேகம் செய்யும் நீர் அந்த ஆவுடையார் வழியாக வெளியேறும் .  



மேலும் அந்த நீர் கட்டிடத்திற்கு வெளியே வந்து விழும் இடத்தில் மூணே கால் அடி நீளத்தில் இருபுறமும் யாழி அமைக்கப்பட்டு அதன் நடுவில் நீர் வந்து கீழே விழுகுமாறு கோமுகம் அமைக்கப்படும் 


இது தவிர அகஸ்தியர் லோப முத்ரா மூணே கால் அடி 3 அடி உயர சிலைகளுக்கு பின்னால் 4 முதல் 4.5 அடி உயரத்தில் வட்ட வடிவில் இரண்டு சிலைகளுக்கும் சேர்த்து ஒரு பெரிய பிரபாவளி கல்லிலே வடிவமைக்கப்பட்டு இருக்கும் 


அந்த பிரபாவளியில் கலை வேலைப்பாடுகள் நிறைய இருக்கும்., பார்ப்பதற்கு அழகாக இருக்கும் 


இதை தவிர உச்சிஷ்ட மா கணபதி சிலை செய்வதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

 உதிஷ்டமகா கணபதி அவர்களது மடியில் அவர்களது மனைவி அவர்கள் அமர்ந்திருப்பார் 


மகா கணபதியின் துதிகை தன்னுடைய மனைவியை தொட்டுக் கொண்டிருக்கும் வகையில் சாஸ்திரப்படி உச்சிஷ்ட மகாகணபதி சிலை அமைக்கப்படும்.


 அகஸ்தியர் தனது விக்கிரகத்திற்கு வாகனம் எதுவும் தேவையில்லை என்று கூறிவிட்டார் 


அதனால் அகஸ்தியர் உலோப முத்ரா விக்கிரகங்களுக்கு வாகனம் அமைக்கப்படவில்லை.


 உஜ்ஜிஷ்ட மகா கணபதி அவர்களுக்கு சாஸ்திரப்படி மூஞ்சூறு வாகனம் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.


 மேலும் உஜ்ஜிஷ்ட மகா கணபதி சிலை நுழைவு வாயிலில் ராகு மற்றும் கேது ஆகியவை பிரதிஷ்டை செய்யப்படும் .


ராகு கேது சிலைகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது


ராகு மற்றும் கேது சிலைகள் நிறுவப்பட்டால் அங்கே திருமணம் செய்யலாம் என்பது சாஸ்திரம் ஆகும்


 இவை அனைத்தும் சேர்த்து அவர்கள் கூறிய விலை ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் 


அவர்கள் 20,000 தள்ளுபடி செய்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் என்ற விலை கூறினார்கள்.


 நாங்கள் மீண்டும் மேலும் பேசி கெஞ்சி கேட்டுக் கொண்டதன் பேரில் மேலும் 20000 குறைத்து ஒரு லட்சம் ரூபாய் என்ற அளவில் இந்த சிலை வேலைப்பாடுகளை வடிவமைத்து கொடுப்பதாக ஒப்புக்கொண்டார்கள்.


 இதற்கு முன் பணமாக 60,000 கொடுக்கப்பட்டுள்ளது. பாக்கி 40 ஆயிரம் ரூபாய் இன்னமும் கொடுக்க வேண்டும் .

இதற்கு நிதி தேவைப்படுகிறது.

 தற்போது சுமார் 58 ஆயிரம் ரூபாய் நிதி சேர்ந்துள்ளது ஏற்கனவே கொடுத்த அட்வான்ஸ் தொகையில் இதுவே 2000 ரூபாய் குறைவு.


 இன்னமும் சிலை டெலிவரி எடுக்கும் போது மேலும் 40 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் .


*எனவே மொத்தமாக இன்னமும் 42 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்*


 பொதுமக்கள் அனைவரும் இரண்டு மூன்று நாட்களுக்குள் இந்த 58 ஆயிரம் என்ற பெரிய தொகையை நிதியாக தந்து உதவியப்படியால் இன்று எங்களுக்கு எளிதாக சென்று 60 ஆயிரம் ரூபாய் என்பது ஒரு முன்பணமாக கொடுக்க முடிந்தது .


மேலும் இன்னமும் 20 நாட்கள் அவகாசம் உள்ளது அதற்குள் இந்த 42 ஆயிரம் ரூபாய் யார் யாருக்கு எல்லாம் எவ்வளவு கொடுக்க முடியுமோ *கொடுக்காதவர்கள் யாராவது இருந்தால் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்* நன்றி






No comments:

Post a Comment