Friday 26 April 2024

மழை வருவதை முன்கூட்டியே சொல்லும் அதிசய கோவில்

 *மழை வருவதை முன்கூட்டியே சொல்லும் அதிசய கோவில்🔥*

விஞ்ஞானத்திற்கே சவால் விடும் வகையில் பல அதிசய ஆச்சரிய நிகழ்வுகள் கும் கோவில் இது.

https://maps.app.goo.gl/gFYYHNKTJxeU4UcJ6







உத்திர பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் பென்தா என்ற கிராமத்திலருந்து 3 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது ஜெகந்நாதர் ஆலயம். இப்பகுதியில் மக்கள் மழை எப்போது வரும் என்பதை இந்த கோவிலை பார்த்தே சொல்லி விடுகிறார்கள். சுமார் 1000 வருடங்கள் பழமையான இக்கோவிலின் மேற்கூரையில் இருந்து திடீரென தண்ணீர் சொட்ட துவங்கும். சொட்டும் நீரின் அளவை பொருத்து அந்த ஆண்டு எவ்வளவு மழை பெய்யும் என அப்பகுதி மக்கள் கணக்கிட்டு விடுகிறார்கள்.


இந்த கோவிலில் நீர் சொட்ட துவங்கிய 7 நாட்களில் பருவமழை பெய்ய துவங்கி விடும். வெளியில் பருவமழை துவங்கியதும், கோவிலுக்குள் சொட்டிக் கொண்டிருந்த நீர் நின்று விடுகிறது. கோவிலை சுற்றிலும், மரங்களோ, மலையோ ஏதும் இல்லாத நிலையில் எங்கிருந்து நீர் சொட்டுகிறது, இதற்கு என்ன காரணம் என இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. 


பல விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் இங்கு வந்து ஆய்வு செய்து பார்த்தும் இதை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த அற்புதமான நிகழ்வினை ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கண்டு செல்கிறார்கள்.


அது மட்டுமல்ல, கோவிலின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள வட்ட வடிவ அமைப்பு எந்த உலோக கலவையால் உருவாக்கப்பட்டது என்பது இது வரை கண்டுபிடிக்க முடியவில்லை.

பகிர்வு



No comments:

Post a Comment