Tuesday 7 December 2021

நவகுஞ்சரம்

 *இது தான் நவகுஞ்சரம்*


*மகாபாரதத்தில் வரும்* *வித்தியாசமான உடலமைப்பைக்* *கொண்ட பறவை நவகுஞ்சரம்.*


*ஒன்பது மிருகங்களின் உடல் உறுப்புகள் சேர்ந்த கலவை இது.*


*சேவலின் தலை, மயிலின் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடை, பாம்பின்வால், யானை,புலி,* *மானின் கால்கள், மனிதனின்* *கையுடன் கூடிய விலங்கு எப்படி இருக்கும்?* 

*அதுதான் நவகுஞ்சரம்.*


*‘நவ’ என்றால் ஒன்பதைக் குறிக்கிறது.* *ஒன்பது விலங்குகளின் கலவை என்பதால் நவகுஞ்சரம் என்று பெயர்.*

*ஒரிய மொழிக் கவிஞரான சரளதாசர் எழுதிய மகாபாரதக் கதையில் நவகுஞ்சரம் சித்தரிக்கப்பட்டுள்ளது*


*அர்ஜுனன் மலை மீது தவம் செய்துகொண்டிருந்தார்.*


*அப்போது நவகுஞ்சர உருவெடுத்து கிருஷ்ணர்,* *அர்ஜுனன் முன் தோன்றியதாக வருகிறது.*


*தவத்திலிருந்து கண் விழித்த அர்ஜூனன், முதலில் நவகுஞ்சரத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்து திகைத்தார்.*


*பின்னர் அதன் கையில் தாமரைப் பூவைப் பார்த்தார்.*


*வெவ்வேறு விலங்குகளின் உடல் உறுப்புகள் சேர்ந்த* *அதன் உடலமைப்பைப் பார்த்து,* *ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டார்.*


*அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் சொன்ன வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தன.* 


*’மனிதர்களின் எண்ணங்கள் ஒரு வரையறைக்கு உட்பட்டவை.*


*உலகமோ எல்லையற்றது’* *என்பதை உணர்ந்தார் அர்ஜுனன்.*


*இதுவரை பார்த்திராத ஓர் உயிர் இந்த உலகில் இருக்கலாம் என்றும் நினைத்தார்.*


*தன்னைச் சோதிப்பதற்காக இந்த உருவத்தில் வந்திருப்பது கிருஷ்ணன்தான் என்று தெரிந்துகொண்டு, எடுத்த வில்லை கீழே போட்டுவிட்டு வணங்கினார்.*


*ஒடிஷாவில் விளையாடப்படும் கஞ்சிபா சீட்டுக்கட்டு விளையாட்டில் நவகுஞ்சரம் ராஜாவாகவும்,* 


*அர்ஜுனன் மந்திரியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.*


*ஒடிஷாவில் வரையப்படும் ஓவியங்களில் நவகுஞ்சரம் பல வகைகளில் வரையப்படுகிறது.*

*நவகுஞ்சரத்தின்* *உருவம் பூரி கோவிலின் வடக்குப்புரத்தில் செதுக்கப்பட்டுள்ளது*


*அதன் கையில் இருக்கும் நீலச் சக்கிரம் பூரி கோவில் கோபுர கலசத்தின் உச்சாணியில் கம்பீரமாக வீற்றிருக்கிறது*




No comments:

Post a Comment