Monday, 3 February 2025

அகத்தியர் கும்பாபிஷேகம்

 வணக்கம் அகத்திய அடியவர்களே 


நமது பொகலூர் அகஸ்தியர் ஜீவ அருள் நாடி பீடம் , பெரும் ஆலயமாகி நிற்கிறது .  அகத்தியர் எம்பெருமான் ஒரு விளக்கு ஒளி மூலம் அங்கே கும்ப அபிஷேகத்திற்கு முன்னால் 21 நாட்கள் ஒரு விளக்கு ஒளி மூலம் இப்போது உள்ள பீடத்தில் எழுந்தருளி , பிறகு அவ்விளக்கை புதிய ஆலயத்தில் ஏற்றி வழிபட்ட உடன் இங்கே இருந்து குடி பெயர்ந்து புதிய நிலைக்கு அரூபமாக சென்று விடுவார் . 21 நாட்களும் அணையா தீபமாக , இப்போது இருக்கும் குடிலில் தொடர்ந்து ஒளிர வேண்டும் என்பது அகத்தியர் எங்களுக்கு ஜீவ நாடியில் உறைத்துள்ள வாக்கு . 


ஒன்று அறியாத சிறு குழந்தைகள் போல் உள்ள எங்களுக்கு ஆசானாய் குருவாய் உள்ள அகத்தியரின் நேரடி உத்தரவை மட்டுமே நாம் அடிபணிந்து செயலாற்றி கொண்டு உள்ளோம் . எங்களுக்கு பெரிதாக ஆலய விதிகள் எதுவும் தெரியாது . நாங்கள் எப்போதும் அகத்தியர் ஆட்டுவிக்கும் பொம்மையாக உள்ளோம் , ஆட்டுவிப்பவர் அவரே. 


எனவே , இதனை உணர்ந்து , பக்தர்கள் அனைவரும் , தம் தமது வாழ்வில் அகத்தியரின் வழி காட்டுதல் எப்போதும் இருக்க வேண்டும் என்றால் , அதற்கு அவர் தொடர்ந்து மிகவும் ஆழமாக நிலை நிற்க வேண்டும் . அதற்கு தான் இந்த ஆலயம் .நமது சுயநலத்திற்காக , நமது பக்தர்கள் வாழ்வில் சிறப்புகள் பெற்று தடைகள் அகன்று உயர வேண்டும் என்பதற்காக ஒரு உண்மையான வழிகாட்டி அரூபமாக இருந்து ஜீவ நாடி மூலம் நேரிடையாக உரையாடி அருள , அவருக்கு மிகவும் தகுந்த இடமாக இந்த ஆலயம் இருக்கும் .


*எனவே , ஏற்கனவே நமது அகத்தியர் அருள் மூலம் பயன் பெற்ற அடியவர்கள் , ஏதோ ஒரு வகையில் தங்களால் இயன்ற பொருளதவியை செய்து இந்த ஆலயம் எழும்ப தோள் கொடுக்குமாறு தாழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்*


நமது தேவை 50 நபர்கள் , தலா  10000 வீதம் அளித்தால் , நன்கொடை சேகரிப்பு விரைவில் முடிவடையும் 


*ஆலயம் எழும்பினால் நமக்கு தான் நல்லது , நமது வாழ்வு மேலும் சிறக்கும் , ஆலயம் கோபுரம் உயர உயிர் பெற , அதற்கு உறுதுணையாக இருந்த பக்தர்கள் வாழ்வும் படிப்படியாக உயரும் என்பது அகத்தியர் ஜீவ நாடியில் உரைத்த வாக்கு*


நமக்கு இன்னும் சுமார் 35 நாட்கள் மட்டுமே உள்ளன - கும்பாபிஷேகம் மார்ச்சு மாதம் 8 ஆம் தேதி துவங்கி 10 ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் கும்பத்திற்கு அபிஷேகம் நடைபெறும் 


*இதற்கு கும்பாபிஷேகம் செய்து வைக்கும் வேத விற்பன்னர்கள் குழுவிற்கும் , பூஜை பொருட்களுக்கும் மொத்தமாக 2 லட்சம் கொடுப்பதாக பேசி இருக்கிறோம் . வசதி படைத்தவர்கள் மனது வைத்தால் , இந்த 2 லட்சம் ரூபாயை யாரேனும் கொடுக்க முன்வரலாம் , பணத்தை கூட நேரிடையாக வந்து இருந்து கும்பாபிஷேகம் செய்து வைக்கும் உயர்திரு கல்கி கண்ணன் ஸ்வாமிஜி  சாஸ்திரிகள் அவரிடமே நேரிடையாக கொடுக்கலாம்* விருப்பம் இருப்பவர்கள் , வசதி உள்ளவர்கள் யாரேனும் இருந்தால் , இந்த கைங்கர்யமான் 2 லட்சம் ரூபாயை ஏற்று கொள்ளவும் . ராஜ பட்டாபிஷேகத்தில் , கிரீடம் எவ்வளவு முக்கியமானதோ , அதை போன்று , கும்பாபிஷேகத்தில் , புரோகிதமும் வேத மந்திரங்களும் , பூஜை திரவியங்களும் தான் பிரதானம் . அதே போல, ஒரு கல்யாணத்தில் , தாலி கயிறு திருமாங்கல்யம் எவ்வளவு முங்கியமோ , அதை போல தான் இந்த வேத கைங்கர்யம் . இந்த கைங்கரிய செலவை ஏற்று கொள்பவர்களுக்கு பிரதானமான கும்பிஷேக புண்ணிய பலன் சென்று சேரும்.


எந்த கட்டாயமும் இல்லை . மேலே உள்ள பதிவு வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் . அவர்கள் மட்டும் மனம் வைத்தால் இது நடக்கும். எல்லாம் இறை செயல் ,; நாங்கள் வெறும் கருவிகளே  !!!


இறை இயக்கம் வெற்றி பெறட்டும் !!!! ஓம் அகத்தீஸ்வராய நமஹ ஓம் லோபாமுத்ராய நமஹ 


இங்கனம் 

தி. இரா. சந்தானம் 

03- 02-2025

GPAY 9176012104

Thursday, 30 January 2025

நமது அகத்தியர் ஆலய கும்பாபிஷேகம் 10.03.2025


 🙏🏻வணக்கம்🙏🏻

🙏🏻நமசிவாயம்🙏🏻



ஏப்ரல் 2016, முதல், 8 வருடங்களாக பொகளூர் கிராமத்தில், சிறிய குடிலில் குடிகொண்டு அருள் பாலித்து  அரும்  நமது தந்தை அருள்மிகு அகத்தீஸ்வரர் எம்பெருமான் அவரகளுக்கு பக்தர்களின் பெரும் பொருளுதவியுடன் பிரமாண்டமான ஆலயம் எழுப்பட்டு இன்று கம்பீரமாக நிற்கிறது.


 நமது குருநாதர் அகத்தியர், தம்பதி சமேதராக ஸ்ரீமதி உலோபமுத்திரை தாயாருடன் அருள் பாலிக்க உள்ளார்.


 அத்துடன் இலிங்க  வடிவில் ஈசனும், மற்றும் தம்பதி சமேதராக நீலா சரஸ்வதி சமேத உஜ்ஜிஷ்ட மகா கணபதி பெருமானும் தனி சந்நிதி கொண்டு எழுந்தருள உள்ளார்கள்.


மேலும் திரு அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன்சமேதராக சித்திர வடிவுடன் சித்திர கூடமாக ,  வாசி யோக மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது.


அன்னதான .மண்டபம் தனியே எழுப்பப்பட்டுள்ளது. 


 நவீன் தொழில் நுட்பத்துடன் கூடிய சமையல் கூடம் கட்டப்பட்டுள்ளது.


கோசாலை அமைக்கப்பட்டுள்ளது.


27 நட்சத்திர மரங்கள் கொண்ட நந்தவனம் அமைய பெரும். மரங்கள் நடப்பட தயார் நிலையில் உள்ளன.


பக்தர்கள் வசதிக்காக ஆண், பெண், தனித்தனியே உபயோகிக்கும்  வகையில் கழிப்பிடம் மற்றும் குளியல் அறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.


மஹா கும்பாபிஷேகத்திற்கு நாள் குறிக்க, நம்மிடம் ஜீவ நாடி மூலம் பேசி உரையாடும் மூலவரான கும்பமுனி அகத்தியரே நாள் குறித்து உள்ளார்.


 மற்ற ஆலயங்கள் போல் அல்லாமல், மூலவரே பேசி, தன்னை எப்படி பிரதிட்டை செய்ய வேண்டும், விழா எப்படி நடத்த வேண்டும், எவ்வளவு கலசம் கொண்டு அபிஷேகம் செய்ய  வேண்டும் என்று ஜீவ நாடி மூலம் உரைத்து நடத்தும் கும்பாபிஷேகம்,மனித சக்திக்கு அப்பாற்பட்டு நடக்கும் விழா ஆகும்.


கும்ப அபிஷேக விழாவில்,  அகத்தியர் மனித உருவம் கொண்டு அங்கு வந்திருந்து மக்களை ஆசி புரிவார்.


கும்ப அபிஷேகத்திற்கு யாக சாலை, பூஜை பொருட்கள், பந்தல், அன்னதானம், கலசங்கள், புரோகித செலவு, ஆகியவைக்கு, சுமார்,  5 லட்சம் தேவை படுகிறது. 


50 பேர் சேர்ந்து ஆளுக்கு 10,000 வீதம் பொருள் ஈட்டலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி அகத்தியர் ஆலய கும்ப அபிஷேக பணியை ஏற்று கொண்டு அந்த 50 பாக்கியவான்களில் ஒருவராக ஆகும்படி பீடத்தின் சார்பில் கேட்டு கொள்கிறோம்.


ஒரு பீடம், இன்று ஆலயமாக மாற போகிறது. ஆசிரமமாக மாற போகிறது.


50 பேரில் ஒருவராக விருப்பம் உள்ளவர்கள் பெயர் கொடுக்கவும். 10,000 நன்கொடை மார்ச்சு மாத துவக்கத்திற்குள் கொடுக்கலாம்.


மிக்க நன்றி.


தி. இரா. சந்தானம்

அகத்தியர் பீடம்

Gpay 9176012104