Saturday, 6 December 2025

கம்பர் நிகழ்த்திய அற்புதங்கள்

 #இது_சத்தியமான_ஒர்_சொல் 


#ஶ்ரீராமனின்_அருள் #இருந்தால்_மட்டுமே #இதை_உங்களால் #தொடர்ந்து_படிக்க_முடியும்!


#கம்பராமாயண #அரங்கேற்றம்:


கம்பர் இராமாயணத்தை அரங்கேற்ற கம்பர் பட்ட பாடு



“பத்தாயிரம் கவிதை முத்தாகப் பாடிவைத்த சத்தான கம்பனுக்கு ஈடு இனி வித்தாக வில்லையென்று பாடு”

-கண்ணதாசன்.


கண்ணதாசன் கூறியதைப் போல பத்தாயிரம் கவிகளில் திருமாலின் இராமாவதாரத்தைப் பாடிய கம்பருக்கு இணையாக யாரும் இதுவரைத் தோன்றவில்லை; தோன்றவும் போவதில்லை. சரஸ்வதிதேவி, காளிதேவி, திருமால் ஆகியோரின் பரிபூரண அருளைப் பெற்ற கம்பர், தனது இராமாவாரத்தை அரங்கேற்றம் செய்வதற்குள் அவர் பட்ட பாடு மிக அதிகம்.


மனிதர்கள் இடைஞ்சலாக இருந்தாலும், இறைவனே அவருக்கு உறுதுணையாக இருந்தார்.


இராமரின் வரலாறான வால்மீகி ராமாயணத்தை பின்பற்றி, அதன் வழி நூலாகத் தமிழில் இராமாயணத்தை எழுதினார் கம்பர். ( கம்பராமாயணம் மொழிபெயர்ப்பு நூல் அல்ல; வழி நூல்) அதற்கு “இராமாவதாரம்” என்று பெயரிட்டு அதை ஶ்ரீரங்கம் கோயிலில் அரங்கேற்றம் செய்ய நினைத்தாராம் கம்பர்.


திருமாலின் இராமாவதாரத்தைச் சிறப்பித்துச் சொல்லும் நூலானாலும், அதனை அத்தனை சுலபமாக ஏற்கவில்லை வைஷ்ணவர்கள்.


ஏனென்றால் இது அரியதொரு நூல் என்பது அவர்களுக்கும் தெரியும்; இருப்பினும் இந்நூலைச் சைவர்களே ஆதரிக்க வேண்டும்; அப்போது தான் இதன் மகிமை இன்னும் கூடும்! என எண்ணினர் வைஷ்ணவப் பெரியோர்கள்.


எனவே தில்லை மூவாயிரவர்களிடம் சென்று இந்நூலுக்கு நற்சான்று வாங்கி வந்தால் தான், இதை அரங்கேற்ற அனுமதிப்போம்! என்றனராம் ஶ்ரீரங்கத்து வைஷ்ணவர்கள்.


சிவபெருமான் நடராஜராக வீற்றிருக்கும் சிதம்பரமே தில்லை. அக்காலத்தில் சைவ, வைஷ்ணவ வேறுபாடுகள் தீவிரமாக இருந்த சமயம்.


ஒருவரையொருவர் தீவிரமாக எதிர்த்துக் கொள்வர். அப்படிப்பட்ட காலத்தில் சிதம்பரம் நகரில் சிவபெருமானுக்குப் பூஜை செய்வதற்கென்றே உரிமைப்பெற்ற தீவிர சைவர்கள் மூவாயிரம் குடும்பத்தார் அங்கே இருந்தனர்.


அவர்களே “தில்லை மூவாயிரவர்கள்” என அழைக்கப்பட்டனர். தீவிர சைவர்களான மூவாயிரவரும் இணைந்து கம்பரது இராமாயணம் அருமையானது! என நற்சான்று! தர வேண்டும்! என்பதே ஶ்ரீரங்கத்து வைஷ்ணவர்களின் கூற்று.


#இதை_எப்படி_சாதித்தார் கம்பர்?


கம்பராமாயணம் அரங்கேற சிவபெருமானே அருள் புரியும் போது, அவரால் சாதிக்க முடியாதா என்ன?


கம்பர் தில்லைக்குச் சென்று ஒவ்வொரு நாளும் தில்லை மூவாயிரவர்களில் பலரையும் சந்தித்து, தனது வேண்டுகோளை வைத்தார் ‘நாங்கள் மூவாயிரவர்களும் என்றைக்கு ஒன்றாக ஓரிடத்தில் குழுமி இருக்கிறோமோ, அன்று வந்து உமது நூலைப் பற்றிச் சொல்லி, நற்சான்று வாங்கிக் கொள்ளும்!’ என தில்லை வாழ் தீட்சிதர்கள் கம்பரிடம் கூறிவிட்டனர்.


ஆனால் ஒருநாளும் மூவாயிரவரையும் ஒருங்கே பார்க்கக் கம்பரால் இயலவில்லை இறைவன் மீது கொண்ட தீவிர பக்தியால் மனம் தளராது, கம்பரும் முயற்சித்துக் கொண்டேயிருந்தார்.


#திருவிளையாடல்களைப் புரிவதில்வல்ல

#சிவபெருமானே கம்பருக்கு உதவ #முன்வந்தார்! எனலாம். அன்று தலைமை தீட்சிதரின் மகனைப் பாம்பு கடித்து, சாகும் தறுவாயில் இருந்தான். பாலகனின் அருகே தில்லை மூவாயிரவரும் கூடியிருந்தனர்.


இந்த சோகமயமான இடத்தில் கம்பர் வந்து #நின்றார்; இவரைக் கண்டதும் சினம் தலைக்கேறியது தீட்சிதர்களுக்கு 

#எங்கே_வந்து உங்கள் நூலுக்கு நற்சான்று பெற #வந்திருக்கிறீர்? என்றனர் தீட்திதர்கள்.


தீட்சிதர்களே! கோபம் வேண்டாம்; எம்பெருமான் அருளால் இந்த பாம்புக்கடி விஷமும் விலகும்! அவ்வாறு விலகி, உங்கள் மகன் #உயிர்ப்பிழைத்தால் எனது 

#நூலுக்குச்சான்றுதருவீர்களா? என்றார் கம்பர்.


#உம்மால்_எப்படி_முடியும்?


புத்திரனைப் 

#பிழைக்க_வைத்தால், நற்சான்று தருகிறோம்! என்றனர் தீட்சிதர்கள்.


இலங்கையில் அரக்கர்களோடு இராமசேனை போர்புரிகையில், இராவணனின் மகன் இந்திரஜித் (மேகநாதன்) முறையானப் போரில் இவர்களை வெல்ல இயலாது ! என மாயப்போர் புரிந்தான்.


இலட்சுமணரும், இந்திரஜித்தும் செய்த போரில் இலட்சுமணரின் தாக்குதலைச் சமாளிக்க இயலாது, தனது மாயவித்தையால் விண்ணில் மறைந்து நின்று கொண்டு, நாகப்பாசத்தைப் போட்டுவிட்டு அரண்மனைக்குத் திரும்பினான் இந்திரஜித்.


கொடிய நாகங்களே பாணத்தின் வடிவில் அனைவரையும் பிணைத்திருக்கும். இராம, இலட்சுமணர்கள் உட்பட அனைவரும் நினைவிழந்துக் கிடந்தனர்.


அனுமனை எந்த ஆயுதமும் தாக்காதென்பது முன்பு இந்திரன் மற்றும் சிவபெருமான் அளித்த வரமாதலால், சிரஞ்சீவியான அவருக்கு எப்பாதிப்பும் இல்லை.


கரடிகளின் தலைவரான ஜாம்பவானும் சிரஞ்சீவி ஆதலால், அவரும் அனுமனும், இராமரைத் தேடி வந்தனர்.


நாகப்பாசத்திலிருந்து விடுபட்டுவிட்ட இராமர், தம்பி இலட்சுமணன் நினைவிழந்துக் கிடப்பதைக் கண்டு துக்கித்தார்.


இராமர் கலங்குவதைக் கண்டு மனம்பொறாதத் திருமாலின் வாகனமான பெரிய திருவடியாம்! கருடாழ்வார் விண்ணும் , மண்ணும் கலங்கப் பெரியதொரு செம்பொன் மலையே பறந்து வருவதைப் போல, பறந்து வந்தார்.


கருடனைக் கண்டால் நாகங்கள் பயந்தோடிவிடும்! என்பதால், பாணங்களின் வடிவிலிருந்தச் சர்ப்பங்கள், கருடனின் நிழல் பட்டதுமே தெறித்து ஓடிவிட்டன.


கருடன், இராம, இலட்சுமணர்களை வருடிக் கொடுத்துவிட்டு பறந்தது சென்றது. நாக பாசத்திலிருந்து யாருமே தப்ப இயலாது, அப்படியிருக்க இம்மானிடர்கள் எப்படி மீண்டனர்? எனக் கலங்கினான் இராவணனைவிட மாவீரனான இந்திரஜித்.


கம்பர் இதை ‘யுத்தகாண்டத்தில்’

“நாக பாச பலம் ” எனப் பாடியுள்ளார்.


பாம்புகடித்துச் சாகக்கிடக்கும் பாலகனின் அருகில் நின்று

இராம, இலட்சுமணர்களைக் காப்பாற்றிய

நாகபாச படலத்தில் கருடாழ்வார் வரும் பகுதிகளைப் பாட ஆரமாபித்தார்! கம்பர்.


அதுமட்டுமல்லாது, கூடவே ஒரு சில தனிப்பாடல்களையும் பாடி “நச்சரவமே விலகு” என்றார் கம்பர்.


மாசக்தி காளியன்னையே இவர் இராமாயணம் எழுத விளக்கேந்தி நின்றாள்! என்றால், நச்சரவங்கள் இவர் பாடலுக்கு முன் எம்மாத்திரம்?


கம்பர் பாடி முடித்ததும் பாலகனின் உடலில் ஏறியிருந்த விஷத்தை அவனைக் கடித்தப் பாம்பே மீண்டும் வந்து உறிஞ்சிச் சென்றது; பாலகனும் உயிர்பிழைத்து எழுந்தான்.


பன்னிரண்டு பாடல்களில் கருடன், திருமாலைத் துதிப்பதை அழகாகப் பாடியுள்ளார் கம்பர். மனதிற்குள்ளாகவே திருமாலின் மாயையினைத் துதித்தவாறே வந்து நின்றார்! கருடன்! எனப் பாடியுள்ளார்! கம்பர்.


கருடன் வந்ததும் நாகபாசம் விலகியதைக் குறிக்கும் பாடலின் பொருள்:


கொடியவனாகிய இந்திஜித் விட்ட நாகபாசம் வாசனை மிக்க தாமரை மலரின் தண்டிலுள்ள நூலின் தன்மைபோல் மெலிந்தது எனக் கூறுவது எதற்கு? மேகம் என யாரும் நினைக்கக் காரணமான ‘கொடைத் தன்மை மிக்க வலிமையுடைய மேலோனாகிய 

சடையப்ப வள்ளலின் திரு வெண்ணெய் நல்லூரை அடைந்த வேதியர்கள், சொல் வளம் மிக்கப் புலவர்கள் முதலியவர்களை வருத்திய பசி நீங்கியதைப் போல 

அந்நாக பாசம் உருத் தெரியாமல் நீங்கியது’.


இப்பாடலில் தன்னை ஆதரித்தச் சடையப்ப வள்ளலையும் நன்றியோடு புகழ்கிறார் கம்பர்.


அடுத்தப் பாடலின் பொருள்:


பல ஆயிரம் காத தூரம் முடிவு பெறாது பரவியுள்ள இரு பக்கத்தும் அமைந்த சிறகுகளைக் கருடன் வீசுவதால் எழுகின்ற காற்றினால் பூமியில் இதுவரை விலகாதிருந்த இருளானது விலகிச் சென்றது. அப்போது இலட்சுமணர் முதலியோரின் உடம்புகளில் நின்ற நாகக் கணைகள் சிதறி போயின.


அக்கணைகளால் உண்டான தழும்புகளும், எல்லா வகையிலும் பாவத்தை விடுத்து, அறத்தையே போற்றிச் செயல்படுபவனின் மீது, பொய் தகவல்களைப் புனைந்துரைப்பதில் வல்லவன், உண்டாக்கிய பழி நீடித்து நிற்காது அழிவதைப் போல அழிந்தன’ என்கிறார் கம்பர்.


அவரது காலத்திலேயே பொய்தகவல்களைப் பரப்புவோர் இருந்துள்ளனர்! எனத் தெரிகிறது.


“பல்லாயிரத்தின் முடியாத பக்கம் அவைவீச வந்து படர்கால் செல்லா நிலத்தின் இருள் ஆதல் செல்ல உடல் நின்ற வாளி சிதறுற்று…….”


குரங்குச் சேனை வெள்ளங்கள் ஊழிக் காலத்திற்குப் பின் பிரம்மாவால் புதிதாகப் படைக்கப்பட்டதைப் போல உயிருடன் எழுந்து நின்றன! என்கிறார் கம்பர்.


எய்துவிட்டால் உயிரை உறிஞ்சாது செல்லாத நாக பாசங்கள் அனைவரையும் விட்டு விலகியது. எங்களுக்கு உதவிய தாங்கள் யாரென? இராமர், கருடனைப் பார்த்து நன்றியோடு வியந்துக் கேட்க, கருணைக் கடலே! தங்களையே யாரென அறியாத மருட்சி நிலையயாலே, தாங்கள் இவ்வாறு கேட்கிறீர்கள்; இராவணனையும் கொன்ற பின்னர், தங்களிடம் வந்து நமக்கிடையேயுள்ள பழைய உறவுமுறையை விளக்குகிறேன்! எனக் கருடாழ்வார் பறந்து சென்றதாகக் கூறுகிறார் கம்பர்.


இனி அவர் பாம்பின் விஷம் விலகப் பாடியப் பாடல்கள்:


“ஆழியான் பள்ளி அணையே அவன்…. கடைந்த ஆழி வரையின் மணித்தாம்பே

பூழியான் பூணே புரமெரித்த பொற்சிலையில்… பூட்டுகின்ற

நாணே அகல நட”.


1.ஆழி=சக்கரம்,

2.ஆழி=கடல்

சக்ராயுதத்தை ஏந்திய திருமாலின் படுக்கையாக இருப்பவனே!

திருப்பாற்கடலில் மந்தர மலையை மத்தாக இட்டு கடைந்தபோது அதில் கயிறாக இருந்தவனே! (அமுதம் கடைய பயன்பட்டவனே)

பூழியான்= விபூதியைப் பூசிய சிவபெருமான்.

சிவன் முப்புரமெரிக்கப் போனபோது மேருமலையை வில்லாக்கி அதில் பாம்பை நாணாக்கினாராம்.


அத்தகைய சிறப்புடைய பாம்பே நீ இந்த பிள்ளையை விட்டு விலகி நடந்து விடு! என்கிறார் கம்பர்.


“பாரைச் சுமந்த படவரவே பங்கயக்கண் வீரன் கிடந்துறங்கும் மெல்லணையே.. ஈரமதிச் செஞ்சடையான் பூணும் திருவாபரணமே

நஞ்சுடையாய் தூர நட”


பார்=உலகு

உலகையே தாங்கும் ஆதிசேஷனே! தாமரைக்கண்ணனாகிய திருமால் கடலின் மீது படுத்துறங்க மென்மையான அணையாக இருப்பவனே! குளிர்ந்த சந்திரனைத் தலையில் சூடிய சிவபெருமான் அணியும் ஆபரணமே! இத்தகைய சிறப்புடைய நச்சரவமே! உன் நஞ்சை எடுத்துவிட்டு தூர விலகி நட! என ஆணையிடுகிறார்! கம்பர்.


தெய்வீகக் கவியின் வாக்கை மீறும் சக்தி அந்த விஷப் பாம்பிற்கும் உண்டோ? கவிச்சக்கரவர்த்தி கம்பரின் வாக்கைக் கேட்டு பாம்பும் விஷத்தை உறிஞ்சி விலகியது.


தில்லை மூவாயிரவர்களும் கம்பருக்கு நற்சான்று வழங்கினர். 

மகிழ்வோடு கம்பரின் இராமாயணம் ஶ்ரீரங்கத்தில் நரசிங்கர் சந்நதியின் முன்பு அரங்கேற்றமாகியது.


விபீஷணன் , இராவணனுக்குப் புத்தி சொல்லுகையில், இரணியனின் கதையைச் சொல்லி புத்தி சொல்வதாக எழுதியுள்ளார் கம்பர்.


அவ்வாறு நரசிங்கரைப் பற்றி கம்பர் பாடி வருகையில், ஶ்ரீரங்கம் கோயிலில் அருள்பாலிக்கும் மேட்டழகிய சிங்கர் ( நரசிங்கர்) தனது தலையை அசைத்து சிங்கக் கர்ஜனையைச் செய்து, #பிள்ளாய்! #நம்மாழ்வானைப் #பாடினாயா? எனக் கேட்டாராம்.


எனவே இராமாவதாரத்தைப் பாடி முடித்தப் பின்னர், “#சடகோபர்_அந்தாதி” என்ற நூலையும் இயற்றினாராம் கம்பர் (சடகோபர்= நம்மாழ்வார்) #நரசிங்க_மூர்த்தியே சிங்கக் கர்ஜனையைச் செய்து கம்பராமாயணத்தை #அங்கீகரித்தார்! என்றால், அதன் மேன்மையை சாதாரண மானிடர்களால் உணரவும் இயலுமோ?. உயிர் போகும் நிலையில் இருந்தப் பாலகனைத் தன் தெய்வீகப் பாடல்களால் பிழைக்க வைத்தவர், நம் தமிழ்க்கவிஞர், கவிச்சக்கரவர்த்தி கம்பர்.


#எனது மதம்

 #சனாதன தர்மம்

#அற்புதமான வாழ்க்கை

      🐘 ஸ்ரீராமஜயம் 🐘

No comments:

Post a Comment