Wednesday, 17 June 2026

சித்தர் கதை

 சித்தர்களின் அருள் பார்வை நம்மை சுற்றி எப்போதும் நிறைந்திருக்கிறது.  ஆனால் நாம் தான் அதை உணருவதில்லை.  கண் முன் நடக்கும் நிகழ்ச்சிகளில் கவனத்தை திருப்பி அதன் வழியில் சென்று எங்கெல்லாமோ அலைகிறோம்.  அவர்களும் பொறுமையாக இவன் அல்லது இவள் எப்போது இதை உணரப்போகிறார்கள் என்று நாம் நடிக்கும் வாழ்க்கை  நாடகத்தை கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள்.  என் நண்பர் அடிக்கடி சொல்வார்.  இந்த உலகத்தை சித்தர்கள், இறைவன் உத்தரவால் கட்டிக்காக்கிறார்கள்.  அதனால் தான் இன்றும் தர்மம் நிலைத்து நிற்க, நாம் எத்தனை மிகப் பெரிய தவறு செய்திருந்தாலும் மன்னித்தருளி, நம்மை நல் வழியில் நடத்தி செல்கிறார்கள்.  உலகத்தில் தர்மத்தின் பலம் கூடக் கூட, சுபிக்ஷம் என்றும் நிலத்து நிற்கும்.  நம்மிடம் உண்மையான எதிர்பார்ப்பில்லாத சரணடைந்த அன்பு இருந்தால் போதும்,  எந்த சூழ்நிலையிலும் நம்மை சுற்றி அவர்களின் ஒரு வளையம் நின்று காக்கும்.  இனி உண்மையாக நடந்த ஒரு நிகழ்ச்சியை பார்ப்போம்.


அது ஒரு ஏழ்மையான குடும்பம்.  கணவன் மனைவி, அவர்களின் மகன், அவன் மனைவி,  மகனும் அவன் மனைவியும் வேலைக்கு சென்று வருபவர்கள்.  இவர்களுக்கு இரு குழந்தைகள்.  குடும்பத்தலைவியான அந்த  அம்மையார் சித்தர்கள் மீது மிகுந்த பக்தி உடையவர்  கோவில்களுக்கு செல்வதில்லை.  ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வீட்டிலேயே, தெரிந்தவர்கள் கொண்டு தந்த சித்தர்கள் படத்தை வைத்து பூசை செய்வார்.  அவருக்கு சித்தர்களை பிரித்து பார்க்கும் நோக்கு கூட தெரியாது.  அவரை பொருத்தவரை எல்லா சித்தரும் ஒருவரே 


தினமும் விடியற்காலையில் எழுந்து விளக்கேற்றி த்யானத்தில் அமருவார்.  த்யானத்தின் மிகுந்த நேரமும் "அசைவில்லா மௌனமே"  மந்திரமாயிற்று. நாள் விடிந்து வீட்டில் தேவைகளுக்கான அவசர வேலைகள் அழைக்கும் போது பூசையை முடித்துக்கொண்டு சமையலறைக்குள் புகுந்துவிடுவார்.


சில நாட்களில் ஆழ்ந்த த்யானத்தில் இருந்து விடவே, கணவர் வந்து அவரை உணர்த்த வேண்டிய சூழ்நிலைகளும் உருவாகும்.  ஒன்று இரண்டு நாட்கள் பொறுத்துப் பார்த்த கணவர் மெதுவாக எரிச்சலடைய தொடங்கினார்.


"வீட்டுக்கு வீடு வாசற்படி" என்பதற்கிணங்க அவர்கள் வீட்டிலும் பிரச்சினைகள் இருந்தது.  அவர்கள் பேரக் குழந்தைகளில் ஒன்று வாய் ஊமை.  எத்தனையோ விதமான மருத்துவ சிகிற்சை செய்தும், எல்லா மருத்துவர்களும் கை விரித்துவிட்டனர்.  ஆனால் குழந்தையின் உடலில் ஊமையாக போனதற்கான எந்த குறையும் காணப்படவில்லை.  தொண்டை குழாய், அதை சூழ்ந்திருக்கும் தசைகள், நரம்புகள் எல்லாம் சரியாக இருந்தும் "அம்மா" என்று ஒரு வார்த்தை கூட அந்தக் குழந்தை பேசி அவர்கள் கேட்டதில்லை.


அந்த அம்மையார், குடும்பத்தை சூழ்ந்து நிற்கும் இந்த பிரச்சினைக்கு விடை கேட்டு பிரார்த்தனை செய்யாத நாள் ஒன்று கூட இல்லை, எனலாம்.  சித்தர்கள் இருக்கிறார்கள், அவர்கள் அருள் நமக்குண்டு.  இருந்தாலும் இந்த பிரச்சினையை நாம் தான் அவர்களிடம் கொண்டு சென்று "ஏதேனும் ஒரு வழிகாட்டக் கூடாதா" என்று வேண்டிக் கொள்ளத்தான் வேண்டும் என்று ஆணித்தரமாக நம்புகிறவர் 


எதற்கும் ஒரு காலம் உண்டு.  சிலவேளை ஒரு நாடகத்தை சித்தர்கள் நடத்திய பின்னரே அருளுவார்கள்.


ஒரு நாள், பொறுமை இழந்த அவரது கணவர் அந்த அம்மையாரிடம் 


"நீயும் தினமும் பூசை செய்கிறாய்.  என்ன பலன்! நம் வீட்டுக் குழந்தையின் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்க மாட்டேன் என்கிறது.  அது என்ன பாபம் செய்ததோ! இங்கு வந்து இப்படி பிறந்து தானும் கஷ்டப்பட்டு பிறரையும் வேதனைக்கு உள்ளாக்குகிறது.  நீ பிரார்த்தனை செய்கிற சித்தர்கள் எல்லோரும் கண் மூடிக் கொண்டிருக்கிறார்களா? என்று நமக்கு விடிவுகாலம் பிறக்கும்?  இதற்கு விடை தேடாமல், சும்மா கண் மூடி "த்யானம்" என்று நேரத்தை கடத்துகிறாய்.  இதை எல்லாம் விட்டுவிட்டு, வீட்டு வேலையை கவனிக்கிற வழியை பார்.  போதும் நீ செய்கிற பூசை" என்று சற்றே கோபத்துடன் பேசினார்.


தன் புருஷன் சொன்னதை கவனிக்காமல் அவர் தான் செய்கிற பூசை, த்யானத்தில் ஒன்றிப்போய் இருந்தார்.  அவருக்குள் ஏதோ ஒரு வைராக்கியம் பிறந்தது.  "அவன் சொல்வதை புறக்கணித்துவிடு" என்று யாரோ சொல்வது போல் உணர்ந்தார்.


"சரி இப்போது கவனிக்கவில்லை. பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என்று வெளியே போய் பத்து நிமிடம் கழிந்து வந்து பார்த்த அவள் கணவர், அப்பொழுதும் அந்த அம்மையார் த்யானத்தில் அமர்ந்திருப்பதை பார்த்து,


"எத்தனை முறை உன்னிடம் சொல்லியாயிற்று, அப்படி உனக்கு எப்படி என் வார்த்தையை மீறுகிற தைரியம் வந்தது" என்று கேட்டுக் கொண்டே அந்த அம்மையாரை உதைத்து தள்ளினார்.


திடீர் தாக்குதலில் நிலை குலைந்த அவர் எழுந்து 


"என்னங்க! இப்படி பண்ணறீங்க.  என்ன தப்பு நடந்துவிட்டது?" என்று விசாரித்தார்.


"என்ன தப்பு நடந்ததா?  இங்க ஒருத்தன் நாய் மாதிரி நின்று கத்திக்கொண்டிருக்கிறேன், நீ பாட்டுக்கு எப்போதும் த்யானம் பூசை என்று உட்கார்ந்து விடுகிறாய்.  நீ இத்தனை செய்தும் ஒரு புண்ணியமும் இல்லை.  நம் பேரக் குழந்தைக்காகத்தான் என்று சொல்கிறாய்.  இன்றுவரை நீ பூசை செய்யும் சித்தர்கள் நமக்கு என்ன செய்து விட்டார்கள்? " 


என்று கூறி பூசை அறையில் இருந்த சித்தர்கள் படங்களை எடுத்து தூக்கி வீசினார்.


இதைக் கண்டு அரண்டு போன அம்மையார் 


"என்னங்க இப்படி பண்ணாதீங்க!   இது ரொம்ப பாவம்.  செய்யக்கூடாத தவறை செய்யறீங்க.  இதன் பலன் எப்படி வேண்டுமானாலும் நம் குடும்பத்தை தாக்கும்!  வேண்டாங்க!" என்று கண்ணீர் மல்க கீழே கிடந்த படங்களை எடுத்து பழயபடி அதன் இடத்தில் வைக்க தொடங்கினார்.


இதைக் கண்ட கணவர் 


"இந்த படங்கள் இருந்தால் தானே பூசை செய்வாய். .  இனிமேல் நீ இங்கு பூசையே செய்யக்கூடாது" என்று கூறி ஒவ்வொரு படத்தையும் இரண்டாக கிழித்துப் போடத் தொடங்கினார்.


இதைக் கண்ட அந்த அம்மையார் கதறி அழத்தொடங்கினார்.


கிழிந்ததையும் விட்டு வைத்தால் எடுத்து ஒட்டி பூசை அறையில் வைத்து மறுபடியும் பூசை செய்வார் என்று உணர்ந்து , அத்தனை படங்களையும் அந்த அறையில் ஒரே இடத்தில் குவித்து  வைத்து தீ மூட்டினார்.  தீ மள மளவென படங்களில் பரவ தொடங்கியது.


இதைக் கண்ட அம்மையார் அப்படியே மூர்ச்சையானார், அப்படியே தரையில் நினைவின்றி வீழ்ந்தார்.


புத்தியிழந்து மேலும் மேலும் தவறை செய்த கணவர், அந்த அம்மையார் நினைவிழந்ததை கூட ஒரு நாடகமாக நினைத்து அவரை கவனிக்காமல் வீட்டை விட்டு வெளியே சென்றார்.


ஒரு பக்கத்தில் தீ எரிந்து கொண்டிருக்க, அதன் அருகில் அந்த அம்மையார் நினைவிழந்து கிடக்க, வேறு யாரும் இல்லாத நேரத்தில், அந்தக் குழந்தை மெதுவாக நடந்து வந்து அந்த அம்மையாரின் மார்பின் மீதேறி படுத்துக்கொண்டது.  சற்று நேரத்தில் விரல் சூப்பிக்கொண்டே உறங்கிப்போனது.


எங்கிருந்தோ வீசிய காற்றில் அந்த அம்மையார் உடுத்தியிருக்கும் புடவையின் முந்தானை மெதுவாக விலகி தீ ஜ்வாலையில் பட நெருப்பு அவரின் முந்தானையில் பிடிக்கத் தொடங்கியது.


சித்தர்களின் படத்தை எரித்ததையும் விட, மிகப் பெரிய தவறாக அந்த அம்மையாரை நினைவு இன்றியும், வாய் பேசாத குழந்தையை தனியாக விட்டு வந்ததையும், எல்லாவற்றுக்கும் மேலாக தீயை ஆபத்தான பரவும் நிலையில் விட்டு வந்ததையும் உணர்ந்த அவள் கணவர், வேகமாக வீட்டுக்குள் ஓடினார்.


அவர் சென்று பார்த்த காட்சியில்  இருதயமே ஒரு நிமிடம் நின்று போனது.  நினைவிழந்த மனைவி, மார்பில் உறங்கும் பேரக் குழந்தை, நீண்ட முந்தானையில் தீ பிடித்து தோளை நோக்கிய அக்னியின் பயணம்.


சரேலென்று ஓடிச் சென்று குழந்தையை தூக்கியவர், அருகில் ஒரு பாத்திரத்தில் இருந்த தண்ணீரை எடுத்து அந்த அம்மையாரின் கழுத்தை நோக்கி சத்தம் போட்டுக்கொண்டே வீசினார்.


வீசிய அவசரத்தில் தண்ணீர் எங்கேயோ போய் விழுந்தது.  தீ அணையவில்லை.  இதற்குள் தீயின் திசை வேறு பக்கமாக பரவி பக்கத்தில் இருந்த திரைசீலையில் படர, இவர் போட்ட சப்ததத்தில் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிவந்து தீயை அணைக்க, அந்த அம்மையாரை உடனடியாக தூக்கி வெளி அறைக்கு கொண்டுவந்து தண்ணீர் தெளித்து எழுப்பினார்.


நடந்தது ஏதுமறியாத அந்த அம்மையார் தன உடலில் துணி கருகிய வாசனை வர என்னவென்று பார்த்தார்.


முந்தானையின் பெரும்பாகம் கருகிப்போய் இருந்தது.


தன கணவரை நிமிர்ந்து பார்க்க, குற்ற உணர்வினால் அவர் தலை குனிந்து நின்றார்.


மெதுவாக எழுந்தவர், அவர் அறைக்குள் சென்று பார்க்க அத்தனை படமும் தீயில் சாம்பலாகியிருந்தது.


வருத்தத்துடன் அறைக்குள் சென்றவர் பின், கணவரும் சென்றார்.


உள்ளே சென்ற அம்மையார், உடை மாற்ற நினைத்து தன பெட்டியை திறக்க,


அதனுள் தீயில் அழிந்துபோன அத்தனை சித்தர் படமும் புது பொலிவுடன் இருந்தது.  இதை கண்ட கணவர் அரண்டு போய் தீ போட்ட அறைக்குள் சென்று பார்க்க 


அங்கே எரிந்து போன சாம்பல் கூட தடமின்றி மறைந்து போயிருந்தது.


அதிர்ச்சியுடன் அத்தனையையும் கவனித்துக் கொண்டிருக்கும்போது 


வாசலிலிருந்து யாரோ கூப்பிடும் சப்தம் கேட்டது.


வாசலுக்கு சென்ற கணவர் யாரோ ஒரு சாது நிற்பதை கண்டு எரிச்சலுடன் 


"என்னய்யா வேண்டும்?" என்று குரல் உயர்த்தி கேட்டார்.


"ரொம்ப தாகமாக இருக்கிறது! குடிக்க தண்ணீர் வேண்டுமே!" என்று சாவதானமாக கேட்டார்.


"கொஞ்சம் பொறுங்கள்" என்று கூறி உள்ளே சென்று தண்ணீருடன் வெளியே வந்து பார்த்த போது 


அவரை காணவில்லை.


ஒரு ஓலைச் சுவடி வாசற் படியில் இருந்தது.


கையிலிருந்த தண்ணீர் டம்ளரை கீழே வைத்துவிட்டு. அந்த ஓலையில் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம் என்று கை நடுக்கத்துடன் எடுத்தார்.


அதில் கீழ்வருமாறு எழுதியிருந்தது.


"மூடனே! இறை பக்தியுடன் இருந்து சொந்தமாக எதுவும் செய்யாத உன்னை, உன் மனைவியின் வேண்டுதலால் இத்தனை நாட்களாக காப்பாற்றி வந்தோம்.  எத்தனை தவறுகளை செய்வாய்.  சுயமாக நல்ல சிந்தனை செய்யாவிடிலும், அடுத்தவர் நம்பிக்கையை அழிக்க உனக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?  உன் பேரக் குழந்தை பேச முடியாமல் போனது நீ உன் வாலிப பருவத்தில் எத்தனை மகான்களை தவறாக பேசினாய், திட்டினாய்.  அவர்களை தவறாக பேசிய சாபம் தான் குழந்தை வழியாக உன்னை இத்தனை நாட்களாக வருத்தியது.  இருக்கும் வாழ்க்கையில் நல்லது செய்யாவிடினும், நல்லதே பேசாவிடினும், பிறருக்கு தீங்கு விளைவிக்கவோ, பிறரை தவறாக பேசாமல் மட்டும் இருந்தால் போதுமானது.  அத்தனை தவறையும் மனம் போனபடி ஏற்று செய்துவிட்டு இன்று எங்களை குறை கூறுகிறாயே.  உனக்கு இதுவே கடைசி வாய்ப்பு!  முடிந்தால் பிறர் நம்பிக்கையை போற்று.  இல்லையேல் விலகி நில், பிறரை அவர் நம்பிக்கை படி வாழவிடு.  இன்னும் சில மாதங்களில் உன் பேரக்  குழந்தை பேச ஆரம்பித்துவிடும்." 


அத்தனைக்கும் கீழே ஒரு பெயர் இருந்தது.  அது "கருவூரார்" என்றிருந்தது.


அதிர்ந்து போன அவர், அந்த ஓலைச்சுவடியை கொண்டு போய் தன மனைவியிடம் கொடுத்துவிட்டு அமைதியாக நின்றார்.


அதில் எழுதியிருந்ததை படித்த அந்த அம்மையார் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.


"நான் நம்பிய சித்தர்கள் என்னை கைவிடவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது" என்று கூறி அந்த ஓலைச்சுவடியை கண்ணில் ஒற்றிக்கொண்டார்.


உடனேயே அந்த ஓலைச் சுவடியை கொண்டு போய் பூசை அறையில் உள்ள கருவூறாரின் படத்தின் கீழ் வைத்து பணிவுடன் நமஸ்காரம் செய்தார்.


மறுநாள் விடியற்காலை, எப்போதும் போல எழுந்து குளித்து பூசை அறைக்கு சென்ற அம்மையாருக்கு ஆச்சரியம் காத்திருந்தது.


அங்கே விளக்கேற்றி வைக்கப்பட்டிருந்தது.  சாம்பிராணி, ஊதுபத்தி போன்றவையின் நறுமணம்.  


ஒரு ஓரமாக,........


இவருக்கு முன்னே எழுந்து அமைதியாக த்யானத்தில் அமர்ந்திருந்தார் அந்த கணவர்.  அவர்கள் வாழ்வில் அன்று ஒரு புது அத்யாயம் தொடங்கப்பட்டது.


சித்தர் அருளியது போல் சில மாதங்களில் அவர்கள் பேரக் குழந்தை மற்ற குழந்தைகளை போல் பேசத்தொடங்கி அந்த குடும்பத்தில் சந்தோஷம் மறுபடியும் தாண்டவமாடத் தொடங்கியது.


இன்று 


அந்த தம்பதியர்கள் சித்தர்களின் அடியவர்களாகவே மாறிவிட்டனர்.


சித்தர்கள் நம்முடன் எப்போதும் இருக்கிறார்கள்.  நம்மை சுற்றி நின்று நாம் செய்வதை பார்த்துக் கொண்டு நாம் வழுகும் காலங்களில், கை தூக்கிவிட்டுக்கொண்டு..............   நாம் தான் உணருவதில்லை, ஏன் என்றால் நடப்பதை உன்னிப்பாக கவனிப்பதில்லை.  திட நம்பிக்கையை மனதில் விதைத்து வளரவிட்டால் அவர்கள் அருள் நமக்கு எப்போதும் கிடைக்கும்.

ஶ்ரீ கமலாம்பிகை பிள்ளைத்தமிழ் :

 ஶ்ரீ கமலாம்பிகை பிள்ளைத்தமிழ் :


"கைலை நாகேச்சுரம் வெண்காடு தில்லைநகர் கந்தபுரி காஞ்சி காழி

காருயவையாறு வேதிகுடி வலிவலம் கற்குடி நாகை தெங்கூர்

மயிலை யெழு மாகாளம் முதுகுன்று நெல்வேலி  வாஞ்சியம் குடந்தை வாய்மூர்

மதுரை வீரட்டம் எட்டு அம்பர் மாயூரநகர் வண்டுறை சேது நல்லூர்

இயமனூர் சாய்க்காடு கஞ்சனூர் நல்லாறு இருக்கைநகர் துருத்தி வீழி

இடைமருது தஞ்சை நகர் நாரையூர் விரிஞ்சனூர் ஐயாறு ஏடகம் மறைசை காசி

செயவந்தியூர்க் கமலையுறை ராசக்தி செங்கீரையாடி அருளே"


திருக்கயிலையில் ஶ்ரீபார்வதிதேவியாக

திருநாகேச்வரத்தில் ஶ்ரீகிரிகுஜாம்பிகையாக

திருவெண்காட்டில் ஶ்ரீப்ரம்மவித்யாம்பிகையாக

திருத்தில்லையில் ஶ்ரீசிவகாமஸுந்தரி அம்மையாக

கந்தபுரி எனும் செம்பொனார்க்கோவிலேலே ஶ்ரீசுகந்தகுந்தளாம்பிகையாக

திருக்காஞ்சியிலே ஶ்ரீகாமாக்ஷி அம்பிகையாக

சீர்காழியிலே ஶ்ரீஸ்திரசுந்தரியாக

திருவையாற்றிலே ஶ்ரீதர்மஸம்வர்த்தினியாக

திருவேதிக்குடியிலே ஶ்ரீமங்கையர்க்கரசி அம்மையாக

திருவலிவலத்திலே ஶ்ரீமத்யாயதாக்ஷியாக

திருகற்குடியிலே ஶ்ரீஅஞ்சனாக்ஷி தேவியாக

திருநாகையிலே ஶ்ரீநீலாயதாக்ஷி அம்மையாக

திருத்தெங்கூரிலே ஶ்ரீப்ருஹந்நாயகியாக

திருமயிலையிலே ஶ்ரீகற்பகவல்லி அம்மையாக

திருமாகாளத்திலே ஶ்ரீபயக்ஷயாம்பிகையாக

திருமுதுகுன்றிலே ஶ்ரீவ்ருத்தாம்பிகை ஶ்ரீபாலாம்பிகையாக

திருநெல்வேலியிலே ஶ்ரீகாந்திமதிமதியம்மையாக

திருவாஞ்சியத்திலே ஶ்ரீமங்களநாயகியாக

கும்பகோணத்திலே ஶ்ரீமங்களாம்பிகையாக

திருவாய்மூரிலே ஶ்ரீக்ஷீரோபவசனியாக

மதுராபுரியிலே ஶ்ரீமீனாக்ஷி அம்பிகையாக


அட்ட வீரட்டமாம்

1) திருக்கண்டியூரில் ஶ்ரீமங்களாம்பிகையாக

2) திருக்கோவிலூரில் ஶ்ரீசிவாநந்தவல்லியாக

3) திருவதிகையில் ஶ்ரீதிரிபுரசுந்தரியாக

4) திருப்பறியலூரில் ஶ்ரீபாலாம்பிகையாக

5) திருவிற்குடியில் ஶ்ரீமங்களாம்பிகையாக

6) திருவழுவூரில் ஶ்ரீபாலாங்குராம்பாளாக

7) திருக்குறுக்கையிலே ஶ்ரீஞானாம்பிகையாக

8) திருக்கடவூரிலே ஶ்ரீஅபிராமவல்லியம்மையாக


அம்பர் எனும் தலத்திலே ஶ்ரீசுகந்தகுந்தளாம்பிகையாக

மாயூரத்திலே ஶ்ரீஅபயப்ரதாம்பிகையாக

திருவண்துறையிலே ஶ்ரீசக்தயாயதாக்ஷியாக

சேது எனும் ஶ்ரீராமேச்வரத்திலே ஶ்ரீபர்வதவர்த்தினியாக

நல்லூரிலே ஶ்ரீகல்யாணசுந்தரியாக

இயமனூரிலே -- தலம் சரியாக அறியமுடியவில்லை

திருச்சாய்க்காட்டிலே ஶ்ரீகோஷாம்பிகையாக

திருநள்ளாற்றிலே ஶ்ரீப்ராணாம்பிகையாக

இருக்கை நகர் எனும் ருஷிவந்தியத்திலே ஶ்ரீபாகம்பிரியாள் அம்மையாக

திருத்துருத்தியிலே ஶ்ரீம்ருதுமுகிளகுசாம்பிகையாக

திருவீழிமிழலையிலே ஶ்ரீசுந்தரகுசாம்பிகையாக

திருவிடைமருதூரிலே ஶ்ரீப்ருஹத்சுந்தரகுசாம்பாளாக

தஞ்சாபுரத்திலே ஶ்ரீஆனந்தவல்லியம்மையாக

திருநாரையூரிலே ஶ்ரீதிரிபுரஸுந்தரியாக

திருவிரிஞ்சனூரிலே ஶ்ரீப்ரம்மஸம்பத்கௌரியாக

திருவேடகத்திலே ஶ்ரீசுகந்தகுந்தளாம்பிகையாக

திருவேதாரண்யத்திலே ஶ்ரீவீணாவாதவிதூஷணியாக

திருக்காசியிலே ஶ்ரீஅன்னபூர்ணா ஶ்ரீவிசாலாக்ஷியாக

செயவந்தியூராம் கமலாபுரியில் உறையும் தலைவியாக


இத்தனை வடிவங்களிலே அந்தந்த தலங்களிலே அந்தந்த தேவியராக விளங்கும் திருவாரூர் கமலையுறை பராசக்தியான கமலாம்பிகைத் தாயே!! எங்கே ஒரு காலை நீட்டி ஒரு காலை மடக்கி தலையைத் தூக்கி செங்கீரை ஆடு பார்ப்போம்!!


அனைத்து க்ஷேத்ரங்களில் விளங்கும் அத்தனை தேவியரும் கமலாம்பிகை ஒருத்தியே என்பது கருத்து


உலகிலுள்ள அனைத்து தலங்களுக்கும் மூலாதாரமான மஹாசக்திபீடமாக திருவாரூர் உள்ளது என்றும், ஶ்ரீலலிதா பரமேச்வரி திருவாரூரிலே கமலாயலயமாம் சிதக்னியிலே தோன்றி பண்டாஸுரனை வதைத்தாள் என்பதும் ஶ்ரீவித்யோபஸகர்க்கு மிகவும் தெரிந்த விஷயங்களே!!


மூலாதாரமான மஹாபீடமாதலால் உலகிலுள்ள தேவியர் அனைவரும் கமலாம்பிகையிடமே தோன்றி, கமலாம்பிகையிடமே ஒடுங்குவர் என்பதாலும் இவள் மஹாகாமகலேசுவரி. ஶ்ரீராஜராஜேச்வரியே இவளுக்கு பரிவார தேவதையாவதால் இவள் ஸர்வமும் ஸங்கமிக்கும் ஆதியான மஹாகாமகலாக்ஷரத்திற்கு ஈச்வரி!!


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

Friday, 15 May 2026

பொதிகை மலை அகஸ்தியர்


 

Wednesday, 13 May 2026

Monday, 11 May 2026

வள்ளி மலை ஸ்வாமிகள்


 

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் அமைந்துள்ள அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்,

 செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் அமைந்துள்ள அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், சுமார் 10-ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட பழமையான, முருகப்பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு திருப்புகழ் தலமாகும். வள்ளி-தெய்வானையுடன் கந்தசுவாமி அருள்பாலிக்கும் இக்கோயில், சேய் வரம் (குழந்தை பாக்கியம்) அளிக்கும் தலமாகவும், வேதாளங்களைச் சிவகணங்களாகக் கொண்ட அரிதான தலமாகவும் போற்றப்படுகிறது. [1, 2, 3, 4]

சிறப்பம்சங்கள்:
  • பழமை: பல்லவர், சோழர் காலத்திற்கும் முந்தையதாகக் கருதப்படும் இக்கோயிலில் கோபுரங்கள் இல்லை.
  • மூலவர்: முருகப்பெருமான் வள்ளி மற்றும் தெய்வானையுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
  • சிறப்பு சன்னதி: தெற்கு நோக்கிய அலங்கார மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சன்னதிகள் அமைந்துள்ளன.
  • தனித்துவம்: இந்த ஆலயத்தில் தட்சிணாமூர்த்திக்கு சன்னதி இல்லை.
  • வழிபாடு: அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம். [1, 2, 3]
திருவிழாக்கள்:
  • கந்தசஷ்டி, சூரசம்ஹாரம்.
  • வைகாசி விசாகம், தைப்பூசம்.
  • பங்குனி உத்திரம். [1]
அமைவிடம்:
  • முகவரி: செய்யூர், செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு.
  • அருகிலுள்ள இடம்: மதுராந்தகத்திலிருந்து சுமார் \(26-29\) கி.மீ தொலைவிலும், கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) எல்லையம்மன் கோயில் நிறுத்தத்திலிருந்து \(5\) கி.மீ தொலைவிலும் உள்ளது.
  • ரயில் நிலையம்: மேல்மருவத்தூர். [1, 2, 3, 4]
கோயில் நேரம்:
  • காலை: \(6:00\) AM - \(12:30\) PM
  • மாலை: \(4:30\) PM - \(8:00\) PM [1]
இது தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பழமையான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க வழிபாட்டுத் தலமாகும். [1]

மயூரப்பிரியன் முருகன்

 🚩 அரிய 'மயூரப்பிரியன்' கோலத்தில் அருளும் குழந்தை வேலப்பர்! 🦚✨

பழனி - தாராபுரம் சாலையில் அமைந்துள்ள ஐவர் மலை, வெறும் குன்று மட்டுமல்ல; அது அதிசயங்களும் ஆன்மீக ரகசியங்களும் நிறைந்த ஒரு புனித பூமி. இங்கு வீற்றிருக்கும் அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில் பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.


✨ அபூர்வமான ‘மயூரப்பிரியன்’ திருக்கோலம்

பொதுவாக முருகப்பெருமான் கையில் வேல் ஏந்தி அல்லது மயில் மீது அமர்ந்து காட்சி தருவார். ஆனால் இங்கு முருகப்பெருமான், தோகை விரித்தாடும் மயிலின் கழுத்தை தனது இடக்கையால் அன்போடு அணைத்தபடி, வலக்கையை இடுப்பில் வைத்து கம்பீரமாகக் காட்சி தருகிறார். பாதத்தருகே பாம்பு இருப்பதும் ஒரு தனிச்சிறப்பு. இந்த அழகிய கோலத்தையே "மயூரப்பிரியன்" என்று அழைக்கிறார்கள்.


⚠️ முக்கிய குறிப்பு: அலங்கார நேரத்தில் இந்த முழு உருவத்தையும் பார்க்க முடியாது. அபிஷேக நேரத்தில் மட்டுமே முருகனின் இந்த அபூர்வ திருவுருவத்தை முழுமையாகத் தரிசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது!


🧭 இந்தத் தலத்தின் பிற வியக்கத்தக்க சிறப்புகள்:

மேற்கு நோக்கிய சன்னதி: முருகர் கோயில்கள் பெரும்பாலும் கிழக்கு நோக்கியே இருக்கும். ஆனால், இது அரிய அமைப்பாக மேற்கு நோக்கி அமைந்துள்ளது.


வட்ட வடிவ நவகிரகங்கள்: பொதுவாக நவகிரகங்கள் சதுர வடிவில் இருக்கும். ஆனால் இங்கு அவை வட்ட வடிவில் அமைந்திருப்பது மிகவும் அரிதானது.


வரலாற்றுச் சான்று: இம்மலையில் காணப்படும் சமணர் கால கல்வெட்டுகள், குகைகள் மற்றும் சமணப் படுக்கைகள் இந்த இடம் பல நூற்றாண்டுகள் பழமையானது என்பதைப் பறைசாற்றுகின்றன.


அணையாத அடுப்பு: ஐவர் மலையில் உள்ள வள்ளலார் ஜோதி மண்டபத்தில் சுமார் 150 ஆண்டுகளாக அணையாமல் எரியும் அடுப்பு பக்தர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.


🧘 தியானத்திற்கு உகந்த தலம்

சித்தர்களும் துறவிகளும் இன்றும் இம்மலையில் சூட்சுமமாக தவம் செய்து வருவதாக நம்பப்படுகிறது. மன அமைதி தேடுபவர்களுக்கும், தியானம் செய்ய விரும்புவோருக்கும் இந்த மலைப்பகுதி ஒரு சிறந்த இடமாகும்.


🔱 மீண்டு வந்த அதிசயம்!

1997-ம் ஆண்டு திருடப்பட்ட இக்கோயிலின் உற்சவர் சிலை, பல போராட்டங்களுக்குப் பிறகு மீண்டும் அதிசயமான முறையில் இக்கோயிலுக்கே வந்து சேர்ந்தது. இது முருகனின் திருவிளையாடல் என்றே பக்தர்களால் போற்றப்படுகிறது.


வெற்றியைத் தரும் வேல் முருகனை, இந்த தனித்துவமான கோலத்தில் ஒருமுறையாவது நேரில் தரிசித்துப் பலன் பெறுங்கள்! 🙏


📍 இடம்: ஐவர் மலை, பழனி அருகே.

 


Source


யோக பயிற்சிகள் வாசி யோகம் சர வித்தை சர யோகம்

 










Source https://www.facebook.com/share/1JYtGGEJv8/

Sunday, 10 May 2026

குழந்தையானந்தர் சித்தர்

 சுமார்350 ஆண்டுகள் வாழ்ந்து நான்கு முறை அவதாரம் எடுத்து மதுரை காளவாசல் பகுதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் குழந்தையானந்தர் சித்தர் பற்றிய பதிவு


மகான்களின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல;

 புதிரானதும் கூட. 


அத்தகைய மகான்களுள் நான்கு இடங்களில் ஜீவசமாதியானதாகக் குறிப்பிடப்படுபவர் மகான் ராஜபூஜித ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள். 


கிட்டத்தட்ட 250 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர் என்று கூறப்படும் இம்மகானின் வாழ்க்கை வரலாறு பல்வேறு அற்புதங்களை உள்ளடக்கியது. 


இம்மகானும் ஸ்ரீ ஷிர்டி சாயிபாபாவைப் போலவே விஜயதசமி நன்னாளைத்தான் தனது சமாதி காலத்திற்குத் தேர்ந்தெடுத்தார் என்பது மற்றொரு விந்தையான சிறப்பாகும்.


குழந்தையானந்தரின் அவதார தோற்றம்:


சுமார் நானூறு ஆண்டுகளுக்கு  முன்னர் மதுரையை அடுத்த சமயநல்லூரிலே அவதரித்த மஹான் ஸ்ரீ குழந்தையானந்தர். அங்கு ராமஸ்வாமி ஐயர் – திரிபுரசுந்தரி என்ற அம்பிகையைப் போற்றி வணங்கும் பக்த குடும்பம் வாழ்ந்து வந்தது. குழந்தைப் பேறு இல்லாத தன் நிலையை எண்ணி வருந்திய அந்த தம்பதியினர்  குழந்தை வரம் வேண்டி அம்பிகையை உருக்கமாக வேண்டியதோடு குழந்தை பிறந்தால் அதை அம்பிகைக்கே அர்ப்பணித்து விடுவதாகப் பிரார்த்தனையும் செய்து கொண்டனர்.


ஒரு நாள் தம்பதிகள் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய, பழம்,புஷ்பம் உள்ளிட்ட தேவையான அனைத்தையும் நைவேத்திய பிரசாதத்துடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக ஐயர் உள்ளே சென்றார். மேலக்கோபுர வாசலில் சர்க்கரைப் பொங்கல், வடை போன்ற நிவேதனப் பொருள்களுடன் பின்னால் தொடர்ந்து கொண்டிருந்த திரிபுரசுந்தரியிடம் இரு பிச்சைக்கார சிறுவர்கள் வந்து, “ரொம்பப் பசியாய் இருக்குதம்மா” என்று கூறினர். “கொஞ்சம் பொறுங்கள். அம்மனுக்கு நைவேத்யம் செய்து விட்டு தருகிறேன்” என்றார் திரிபுரசுந்தரி.


“அவ்வளவு நேரம் பசி பொறுக்க முடியாதம்மா” என்ற அவர்களின் உருக்கமான வேண்டுகோளைக் கேட்ட அவர் நிவேதனப் பொருள்களை வயிறார பிச்சைக்காரச் சிறுவர்களுக்குக் கொடுத்தார். பசி தீர்ந்த மகிழ்ச்சியில் அவரை அவர்கள் வாழ்த்தினர்.


நடந்ததைக் கேட்ட ஐயருக்குக் கடுங்கோபம் வந்தது. நிவேதனப் பொருள்களை அம்மனுக்கு நைவேத்யம் செய்யாமல்; மனைவி செய்த காரியத்தை அவரால் மன்னிக்க முடியவில்லை.  கோபத்துடன் வீடு திரும்பி விட்டார்.


அம்பாளை மனமுருகப் பிரார்த்தித்த திரிபுரசுந்தரி, “எப்படியோ, பிரசாதப் பொருள்களை என் வீட்டிற்கே நீ தான் அனுப்ப வேண்டும்” என்று  மீனாட்சியம்மனை வேண்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.


உள்ளே பயந்து நடுநடுங்கிக் கொண்டு திரிபுரசுந்தரி தவிக்க கோபம் ஆறாத ஐயர் திண்ணையில் உட்கார்ந்திருந்தார்.


அப்போது, ஒரு சிறுவன் வந்து அவரிடம்,” ஐயா, அம்பாள் பிரசாதம் இதோ” என்று புஷ்பம், பழம்,சர்க்கரைப் பொங்கல், வடை ஆகியவற்றைத் தந்தான்.


ஒன்றும் புரியாத ஐயர் விழிக்கவே, உள்ளேயிருந்து ஓடி வந்த அவர் மனைவி, “ஒன்றும் பேசாமல் அதை வாங்கிக் கொள்ளுங்கள். அந்தப் பையன் எங்கிருந்து வருகிறான்” என்பதைத் தொடர்ந்து சென்று பாருங்கள்” என்றாள்.


ஒன்றும் புரியாத நிலையில் பையனைத் தொடர்ந்து சென்ற ஐயர் அந்தப் பையன் பிச்சைக்காரர்களுக்கு  பிரசாதப் பொருள்க்ளைத் தந்த அதே இடத்தில் திடீரென்று மறைந்து விட்டான். 


எவ்வளவு தேடியும் அவனைக் காண முடியவில்லை. ஊர் திரும்பி வந்த ஐயர் நடந்ததைச் சொல்ல திரிபுரசுந்தரி அது அம்பிகையின் திருவிளையாடலே என்று 

உறுதிபடக் கூறினாள்.


சரியாக பத்து மாதம் கழித்து தம்பதிகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.


ராமன் லட்சுமணன் என்று அவர்களுக்குப் பெயரிடப்பட்டது. இருவரின் ராமன் மட்டும் தாய்ப்பாலை அருந்தவே இல்லை.அழவும் இல்லை.


இது எதனால் என்று குழம்பி இருந்த் திரிபுரசுந்தரி அம்மாளுக்கு கனவில் அம்மன் தோன்றி, ‘பிரார்த்தித்தபடி குழந்தையைக் கொடு’ என்று கேட்டாள்


இருவரில் எந்தக் குழந்தையைக் கொடுப்பது? தம்பதிகள் குழந்தைகளுடன் மீனாட்சியம்மன் ஆலயம் சென்றனர்.


அங்கு பட்டருக்கு அருள் வந்து எந்தக் குழந்தைக்கு காலில் சங்கும் சக்கரமும் உள்ளதோ எதன் நாவில் நாராயண நாமம் இருக்கிறதோ அந்தக் குழந்தையை கொடுத்துவிடு என்று உத்தரவு பிறந்தது.


அதுவரை கவனிக்காத சங்கு சக்கர அடையாளங்களைக் குழந்தை ராமனின் காலில் அனைவரும் கண்டன்ர்.


மேலும் அது வரை பேசாமல் இருந்த குழந்தை ராமன் அம்மா என்று கூறியவாறே மீனாட்சியம்மனை நோக்கித் தவழ்ந்து சென்றது.


ராமனை பிரிய மனமின்றி  அன்னை மீனாட்சியின் ஆணையின்படி மீனாட்சி கோவிலில் குழ்தையை விட்டு விட்டு தம்பதியினர் வீடு திரும்பினர்.


இரவு வந்தது. குழந்தையை என்ன செய்வது என பட்டர் யோசித்தார். (அந்தக் காலத்தில் பட்டரின் கவனிப்பிலேயே கோவில்கள் இருந்தன) அப்போது அசரீரி ஒன்று குழந்தையை கோவிலிலேயே விடுமாறு உத்தரவைப் பிறப்பித்தது.


அது முதல் ராமன் கோவிலில் வளர ஆரம்பித்தான்.


திருஞானசம்பந்தருக்கு ஞானப்பாலைத் தந்த அம்பிகை குழந்தையானந்தரையும் பால் கொடுத்து வளர்த்தாள்.


ஏழு வய்தான போது ராமனுக்கு உபநயனம் செய்விக்க உத்தரவு கிடை்கப்பெற்றது. ஆகவே உபநயனமும் கோவில் பட்டர்களால் செய்து வைக்கப்பட்டது.

ராஜகோபாலன் என்ற தீட்சா நாமமும் சூட்டப்பட்டது.


பின்னர் 900 ஆண்டுகள் வாழ்ந்து வரும் பெரிய சித்தரான ஸ்ரீ கணபதி பாபாவைக் குருவாகக் கொள்ளுமாறு அன்னை மீனாட்சியிடமிருந்து அருள் ஆணை பிறந்தது.


ஒருநாள், அன்னை மீனாட்சியை தரிசிப்பதற்காக காசியிலிருந்து கணபதி பாபா என்ற மகான் வந்திருந்தார். 


ஒரு நல்ல சீடனை தேடிக் கொண்டிருந்த அவருக்கு ராஜகோபாலனைக் கண்டதும் அவனே அதற்குத் தகுதியானவன் என்ற எண்ணம் தோன்றியது. 


ஆலயத்தினரின் அனுமதி பெற்று ராஜகோபாலனைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். 


காசியில் ஸ்ரீகணபதி பாபாவிடமிருந்து சகல சாஸ்திரங்களையும் பயின்றார் ராஜகோபாலன்.


முதல் சமாதி


குருநாதர் கணபதி பாபாவிடம் சகல சாஸ்திரங்களையும் பயின்ற ராஜகோபாலனுக்கு ஸ்ரீத்ரிலிங்க ஸ்வாமிகள்  என்ற பெயர் ஏற்பட்டது. 


ஸ்ரீத்ரிலிங்க ஸ்வாமிகள் என்ற பெயரில் கைலாய மலையிலும், மகாமேரு சிகரத்திலும் அமர்ந்து அருள்பாலித்தார். 


மானஸரோவர், கங்கோத்ரி, அமர்நாத், கேதார்நாத் ஸ்தலங்களில் நிர்விகல்ப சமாதியில் நீண்ட நாட்கள் இருந்திருக்கிறார்.


கஜானந்தேந்திர சரஸ்வதி என்ற திருநாமத்துடன் இமாலயத்திலுள்ள ஆதிசங்கர பீடத்தை அலங்கரித்தார். 


புனிதத் தலங்களை தரிசிப்பதற்காக 

பல தல யாத்திரைகளை 

மேற்கொண்டு மன்னர்களால்  ராஜபூஜித ஸ்ரீ ராஜகோபால சுவாமிகள் என்று அவர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். 


இமயமலை பகுதிகளில் சஞ்சாரம் செய்த அவரை ஏராள்மானோர் தரிசித்து அருள் பெற்றனர்.


கணபதி பாபா சமாதியடைந்த பின்பு கங்கை கரையில் சமுத்திரகூடம் என்னுமிடத்தில் உள்ள குகையில் நீண்ட காலம் தவமிருந்தார். 


(இந்த குகையைத்தான் பின்னாளில் சுவாமி விவேகானந்தர் கண்டு பிடித்து இந்த இடத்தில் தவம் இருந்து விஜய யாத்திரையை ஆரம்பித்தார்.) 


இந்த தனி குகையில் பல ஆண்டுகாலம் நிஷ்டையில் இருந்த சுவாமிகள், பின் தாமும் ஒரு சமாதிக் குழியை ஏற்படுத்தி அதில் இறங்கி ஜீவ சமாதி ஆனார்.


இவ்வாறு த்ரிலிங்க ஸ்வாமிகளின் முதல் ஜீவ சமாதி காசியில் ஏற்பட்டது. கணபதி பாபா சமாதிக்கு அருகிலேயே இது உள்ளது.


கணபதி பாபாவை கணபதி ப்ரம்மம் என்று கூறுவார்கள். அவரது சமாதி இன்றும் காசியில் பஞ்சலிங்க கட்டத்தில் உள்ளது. 


இன்றும் வெள்ளைச் சலவைக் கல்லிலானான அவரது சிலையை அங்கு பார்க்கலாம்.


இரண்டாவது சமாதி


பின்னர் அவர் நேபாளம் சென்றார். நேபாள ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குஷ்ட நோய் பீடிக்கவே அவர் ஸ்வாமிகளிடம் சரணடைந்தார். 


அவருக்கு ஸ்வாமிகளின் அருளால் குஷ்ட்ம் நீங்கிற்று. ப்ல காலம் நேபாள அரசரின் அரண்மனையில் அவர் பூஜிக்கப்பட்டார்.


ஸ்வாமிகள் எப்போதும் அணிந்திருந்த மகர கண்டியும், கௌரிசங்கர ருத்ராட்ச மாலையும் நேபாள அரசர் கொடுத்தவையே. 


ஸ்வாமிகளின் இரண்டாவது சமாதி நேபாளத்தில் பசுபதிநாதர் கோவிலில் உள்ளது.


ஸ்ரீ த்ரிலிங்க ஸ்வாமிகளை ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்வாமி விவேகானந்தர் உள்ளிட்ட ஏராளமான மகான்கள் தரிசித்திருக்கின்றனர்.


ஸ்வாமிகளை நேரில் தரிசித்த , ராமகிருஷ்ண பரமஹம்சர் இவர் தான் உண்மையான பரமஹம்சம் என போற்றி புகழ்ந்தார்.


மூன்றாவது சமாதி    


நேபாள சமாதியிலிருந்து எழுந்த ஸ்வாமிகள் வட இந்தியா முழுவதும் சஞ்சரித்துப் பின்னர் ஆந்திர பிரதேசம் வந்தார். பின்னர் தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்தார். ஏராளமான பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்தார்.


திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில்  மூன்றாவது சமாதியை எய்தினார். இது நெல்லையப்பர் சமாதி என்று அழைக்கப்படுகிறது.தென்காசியில் சன்னதி மடம் தெருவில் சங்கரன் பிள்ளை என்ற பக்தர் வீட்டில் இந்த சமாதி உள்ளது.


இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆவணி ஆயில்ய நட்சத்திரத்தில் குருபூஜை கொண்டாடப்படுகிறது. 


குழந்தையானந்தர் காசியில் தங்கியிருந்த காலத்தில் விஸ்வநாதர் கோயிலையும், காலபைரவர் கோயிலையும் சிறப்பாக பராமரித்தார். 


1887ல் காசியில் தன்னை ஒரு பெட்டியில் வைத்து கங்கையில் விடுமாறு தன் சீடர்களுக்கு கட்டளையிட்டு, அப்பெட்டியுடன் தென்னகத்தில் திருவண்ணாமலை, சுருளி ஆகிய இடங்களில் தோன்றி பக்தர்களுக்கு நீண்ட காலம் அருள்பாலித்தார். 


நான்காவது சமாதி


மூன்றாவது சமாதி நிலையிலிருந்து எழுந்த ஸ்வாமிகள் மதுரையம்பதிக்கு எழுந்தருளினார். 


அங்கு அவர் இருபது வருஷங்களுக்கும் மேலாக நடத்திய அருள் லீலைகளை ஆனந்தமாக அனுபவித்தோர் சென்ற தலைமுறையைச் சார்ந்தவர்கள்.


சதா யோகநித்திரையில் இருந்த அவரது திருவாக்கிலிருந்து எழும் அமுத மொழிகள் மூவாண்டுகளே நிரம்பப் பெற்ற குழந்தை பேசும் மழலை மொழி போல்வே இருந்தது. 


அத்துடன் மட்டுமன்றி அவர் வாயிலிருந்து அமுதூற்றை ஒத்த சாளவாய் வழிந்து கொண்டிருந்தது. 


குள்ளமான உருவம். பருத்த தொந்தி. வட்டமான முகம். சாளவாய் ஒழுகிக் கொண்டிருக்கும் வாய்.,மழலைப் பேச்சு என்று சுவாமிகளின் தோற்றம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. 


குழந்தையைப் போன்ற தோற்றம். சிரித்த, ஆனால் மரியாதையைத் தோற்றுவிக்கும் முகம் என்பதாக சுவாமிகளின் உருவ அமைப்பு அமைந்திருந்தது.


‘கண்ணுரெண்டும் எச்சி, கறந்த பாலும் எச்சி ‘ என்று அடிக்கடிச் சொல்லுவார். குழந்தை போல குழறிக் குழறிப் பேசுவார் என்பதாலேயே அவருக்கு ‘குழந்தையானந்தர்’ என்ற பெயர் நிலைத்து விட்டது.


பருத்த தொந்தி. அருள் பொங்கும் முகம். பத்ம பாதங்களோ மஹாவிஷ்ணுவின்  அம்சத்தைக் குறிக்கும் சங்கு சக்ரங்களைக் கொண்டவை. நிகழ்த்திய திருவிளையாடல்களோ மெய்சிலிர்க்க வைத்தவை.


1919ம் ஆண்டு மதுரையிலிருந்து வத்தலக்குண்டு சென்ற போது அங்கு தனக்கு தன் சீடர் மூலம் ஒரு கோயிலை நிர்மாணித்தார். 


1932ஆம் ஆண்டு மதுரை லக்ஷ்மிநாராயணபுர அக்ரஹாரம் 4அம் நம்பர் கிருஹத்தில் நவராத்திரி உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. 


ஸ்வாமிகள் சுமார் 300 பவுன்களில் செய்து வைத்திருந்த ஸ்ரீசக்ரத்திற்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன.


எட்டாம் நாளன்று சிஷ்யர் ராமலிங்கய்யர் வெந்நீர் கொண்டு வந்து வைக்க மகாலிங்க பண்டாரம் என்பவர் நெய்யை ஸ்வாமிகளுக்கு தேய்த்து விட்டுக் கொண்டிருந்தார். 


மகாலிங்கம் அவரது கையில் ஏற்பட்ட பிளவையைக் கண்டு அவர் அடங்கி விடப் போகிறாரா?என்று ராமலிங்கய்யரிடம் கேட்க, குழந்தையானந்தர், “என்னடா சொல்கிறான் திருட்டுப் பயல்! அதெல்லாம் ஒண்ணுமில்லையடா! எல்லாம் நாளன்னிக்கி தான்!” என்று அருளினார்.


சனிக்கிழமை சரஸ்வதி பூஜை முடிந்தது. மதியம் மூன்று மணிக்கு ஸ்வாமிகளே என்று கூப்பிட்ட போது மூன்றாம் முறை கண்ணை விழித்துப் பார்த்தார் அவர். 


ராமலிங்கய்யர் சிறிது பாலை வாயில் ஊற்ற இரண்டு வாய் உள்ளே சென்ற பால் அப்படியே நின்று விட்டது.


இறுதியாக 1932ஆம் ஆண்டு, ஆங்கீரஸ வருஷம், புரட்டாசி மாதம் 23ஆம் தேதி சனிக்கிழமை தசமி திதி திருவோண நக்ஷத்திரம் கூடிய சுபதினத்தில் அடங்கி விட்டார்.


அவர் அடங்கி விட்டாரா? யார் நிர்ணயிப்பது?


அனைவரும் பிரமித்து நின்றனர். பின்னர் தேதியூர் பிரம்மஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்திரிகள் ஸ்வாமிகள் சமாதியடைந்ததை நிர்ணயித்து ஊர்ஜிதம் செய்தார்.


ஸ்வாமிகளை பலகாலம் ஆஸ்ரயித்து வந்த மிராசுதார் கன்கசபாபதி செட்டியார் ஆனையூரில் உள்ள தன் மனையில் அடக்கம் செய்ய விரும்பினார். 


சௌராஷ்டிர பக்தர்களோ திருப்பரங்குன்றம் ரோடில் தற்போது விவேகானந்த ம்டம் உள்ள இடத்தில் அடக்கம் செய்ய விரும்பினர்.


மற்றொரு சாரார் சின்னமணி ஐயர் என்பவரால் யதிகள் சமாதிக்காக விடப்பட்டுள்ள இடத்தில் அடக்கம் செய்ய விரும்பினர். 


இறுதியில் அனுமார் கோவிலில் திருவுளச் சீட்டு போட்டுப் பார்க்கப்பட்டது. அதில் வந்த இடம் சின்னமணி ஐயரின் இடம். 


அது அரசரடியில் காளவாசல் சந்திப்பில் உள்ளது.


மதுரை காளவாசல் அருகே உள்ள கோயிலில் நான்காவது ஸ்வாமிகளின் அதிஷ்டானம் அமைக்கபட்டது.


தனது அதிஷ்டானம் அமைக்கும் போது வழக்கமாக செய்யகூடிய சடங்குகள் ஏதும் செய்ய வேண்டாம் என்று  சுவாமிகள் அடங்குவதற்கு முன்பு கூறியுள்ளார்.


மதுரை காளவாசல் அருகே உள்ள கோயிலில் சுவாமிகளின் அதிஷ்டானம் அமைக்கபட்ட பிறகு வத்தலக்குண்டில் தனக்காக எழுப்பப்பட்ட கோயிலில் மீண்டும் எழுந்தருளினார். 


மதுரையை அடுத்த சித்தாலங்குடி என்ற கிராமத்தில் குழந்தை சித்தராய் தங்கி, பல சித்துகள் செய்து சமாதி அடைந்து மீண்டும் வெளியே வந்து வேறொரு இடத்தில் தோன்றியருளினார். 


சித்தாலங்குடியில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 4,5,6 தேதிகளில் குருபூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் அவதார புருஷராக அவதாரம் எடுத்து சமாதி நிலை அடைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் குழந்தையானந்த சுவாமிகள்.


அவர் சமாதியின் உள்ளே இருக்கிறாரா,அடுத்து வெளிக் கிளம்பி எங்கேனும் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாரா? யார் சொல்ல முடியும் அதை?!


சுவாமிகளின் முந்தைய சமாதிகளை ஊர்ஜிதம் செய்த சம்பவங்கள்:


ஸ்வாமிகள் மதுரையில் தங்கியிருந்த வீடு ஒன்றில் த்ரிலிங்க ஸ்வாமிகள் படம் மாட்டப்பட்டிருந்தது. அதைக் கண்ட குழந்தையானந்த ஸ்வாமிகள், “அடே, என்னுடைய அந்த வேஷத்தையும் வைத்திருக்கிறாயா? இங்கே தான் நம்மைக் குழந்தையாக்கி விட்டார்கள்’ என்று கூறினார். இதனால் அவரே த்ரிலிங்க ஸ்வாமிகள் என்பது அவர் வாயாலேயே நிரூபணம் ஆயிற்று.


தன்னிடம் இருந்த 300 பவுனை வைத்து ஸ்ரீசக்ரம் செய்ய தென்காசி சென்றார் குழந்தையானந்த ஸ்வாமிகள். அவரது பக்தரான சங்கரன் பிள்ளை வீட்டுக்கு சென்ற ஸ்வாமிகள் திடீரென்று உள்ளே சென்று அங்கிருந்த சமாதியில் அமர்ந்து விட்டார். என்னதான் பக்தராக இருந்தாலும் தன்  முன்னோர் சமாதியில், பரம்பரையாக பூஜித்து வரும் இடத்தில் குழந்தையானந்தர் அமர்ந்திருப்பதைக் கண்ட சங்கரன் பிள்ளைக்கு ச்மாதானமாயில்லை. கேட்கவோ துணிவில்லை.


குழந்தையானந்தர் அவர்கள் உள்ளத்திலிருப்பதை அறிந்து கொண்டு, “என் இடத்தில் உட்கார யாரையடா கேட்கணும்” என்றார்.


பின்னர் சங்கரன் பிள்ளையின் வமிசத்தின் பலதலைமுறையினரின்

விருத்தாந்தங்களை விளக்கினார். எல்லோரும் பிரமித்து வியந்து அவரைத் தொழுது வணங்கினர்.


ஆக த்ரிலிங்க ஸ்வாமிகள் மற்றும் நெல்லையப்பர் சமாதி தன்னுடையவையே என்பதை ஸ்வாமிகளே அருளிக் கூறியிருப்பதால் அவர் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்தவர் என்பது நிர்ணயிக்கப்படுகிறது.


இன்றும் ஸ்வாமிகளின் அரசரடி அதிஷ்டானத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று அருள் பெற்று வருகின்றனர்.


சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள்:


சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் பலப்பல. அவற்றுள் ஒன்று இன்னமும் அவரது பக்தர்களால் நினைவு கூரப்படஉகிறது.


ஒருநாள் மதுரை ரயில் நிலையத்தில் சென்னைக்குச் செல்ல இருந்த ரயில் ஒன்றில் சுவாமி ஏறி அமர்ந்து கொண்டார் குழந்தையானந்தர். 


அது வெள்ளைக்கார அதிகாரி ஒருவருக்கு ரிசர்வ் செய்யப்பட்டிருந்த முதல் வகுப்புப் பெட்டி. 


தனக்கென ரிசர்வ் செய்த அந்த இடத்தில் குழந்தையானந்தர் அமர்ந்திருந்ததைப் பார்த்ததும் அந்த அதிகாரி கடும் கோபம் கொண்டார். 


உடனடியாக அந்த இடத்தை விட்டு எழுந்து கொள்ளுமாறு சுவாமிகளை அதிகாரம் செய்தார். 


ஆனால் சுவாமிகள் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் மௌனமாக அமர்ந்திருந்தார். 


அதிகாரி, ஸ்டேஷன் மாஸ்டரிடம் புகார் செய்தார். 


அப்போது கல்யாணராம அய்யர் என்பவர் ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியாற்றி வந்தார். 


அவர் சுவாமிகளைப் பரிசோதித்து டிக்கட் இல்லை என்பதால் கீழே இறக்கி விட்டார்.


சுவாமிகள் பிளாட்பாரத்தில் .

அமர்ந்து விட்டார். 


ரயில் கிளம்ப பச்சைக்கொடி காட்டப்பட்டது. டிரைவர் எஞ்சினை இயக்கினார். ரயில் கிளம்பவில்லை. 


பலமுறை முயன்றும் பலனில்லை. அப்போது அங்கு வந்த சுவாமிகளின் மகிமை அறிந்த சிலர், ஸ்டேஷன் மாஸ்டரிடம் சுவாமிகளின் பெருமை பற்றிச் சொல்லி, அவரிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லினர். 


கல்யாணராம அய்யரும் பணிவுடன் சுவாமிகளிடம் மன்னிப்பு வேண்டினார். 


சுவாமிகளை முதலில் அமர்ந்திருந்த ஆசனத்திலேயே அமர்த்தினார். வெள்ளைக்கார அதிகாரிக்கு மாற்று ஏற்பாடு செய்தார்.


உடனே சுவாமிகள் சந்தோஷம் பொங்க ‘ டேய், ரயில் இனிமேல் போகும்டா’ என்றார். 


டிரைவர் உடனே எஞ்சினை இயக்க, ரயில் கிளம்பியது.


ஒருமுறை பக்தர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தார் குழந்தையானந்த சுவாமிகள். 


அந்த வீட்டில் சுவாமிகளின் திருவுருவப் படத்தோடு அவர் முந்தைய உருவமான த்ரையலிங்க சுவாமிகளின் படத்தையும் வைத்து வழிபட்டு வந்தனர். 


அதைப் பார்த்த சுவாமிகள், ‘அடேய், எனது இந்த வேஷத்தையும் வைத்திருக்கிறாயா? பேஷ், பேஷ்’ என்றார் புன்னகையுடன். 


இதன் மூலம் குழந்தையானந்தரின் பூர்வ ஜென்மமே ஸ்ரீ த்ரையலிங்க சுவாமிகள் என்ற உண்மையை அறிந்து கொள்ள இயலுகிறது.


இவ்வாறு மூன்று முறை ஜீவசமாதியிலிருந்து வெளித்தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்த இம்மகான், 1932ம் வருடம் விஜயதசமி அன்று, மதுரை லட்சுமி நாராயணபுரத்தில் சமாதி அடைந்தார். 


மதுரை அரசரடியில் அமைந்திருக்கும் இவரது ஜீவ சமாதியிலிருந்து சூட்சும ரீதியாக பக்தர்களுக்கு இன்றும் ஸ்ரீ குழந்தையானந்தர் உதவி வருகிறார் என்பது பக்தர்கள் நம்பிக்கை. 


விஜயதசமி அன்று மகானை உளப்பூர்வமாக வழிபடுபவர்களுக்கு எல்லா நன்மையும் பெருகும்.


இவரின் பரிபூரண அருளை பெற்ற சீடர் முருகானந்த சாமிகள் ஆவார் .


இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குமாரலிங்கம் எனும் ஊரில் ஜீவ ஐக்கியம் பெற்றுள்ளார்.


லலிதா சஹஸ்ரநாமம் சொல்வதில் குழந்தையானந்த ஸ்வாமிகள் சொன்ன ஒரு ஆன்மீக இரகசியம்!


பல நூறு ஆண்டுகளாக பாரதத்தில் லலிதா சஹஸ்ரநாமத்தைச் சொல்லி வருவது இயல்பான ஒரு பழக்கமாக பல்லாயிரம் குடும்பங்களில் ஆகி விட்டது.


ஆனால் இதைச் சொல்லுவதில் உள்ள இரகசியத்தை குழந்தையானந்த ஸ்வாமிகள் தன் பக்தை ஒருவருக்கு அனுக்ரஹித்துள்ளார்.


சுவையான அந்த சம்பவத்தின் மூலம் இரகசியம் அனைவருக்கும் வெளிப்பட அனைவரும் அதன் மூலம் பலன் பெறும் பாக்கியமும் ஏற்பட்டுள்ளது.


1927ஆம் ஆண்டு. புதுக்கோட்டை சீஃப் கோர்ட் வக்கீல் சுவாமிநாத ஐயரும் அவரது மனைவி பாகீரதி அம்மாளும் ஸ்வாமிகளின் அநுக்ரஹத்திற்குப் பாத்திரமான சிறந்த பக்தர்கள். 


ஸ்வாமிகளின் மீது பரம் பக்தி அவர்களுக்கு.ஸ்வாமிகள் இரு முறை அவர்கள் வீட்டிற்கு விஜயம் செய்து பல நாட்கள் அங்கு தங்கி இருக்கிறார்.


இரண்டாம் முறை (1927இல்) ஸ்வாமிகள் அவர்கள் வீட்டிற்கு விஜயம் செய்த போது பாகீரதி அம்மாள் ஒன்பது மாத கர்ப்பிணி.


ஸ்வாமிகள் வாய் சிறு குழந்தைகள் குழறுவது போலக் குழறிச் சொற்களை வெளிப்படுத்தும்.


‘பாயி’ என்று பாகீரதி அம்மாளை மாடியிலிருந்து விளித்து ஸ்வாமிகள் கஞ்சியோ காப்பியோ கொண்டு வரச் சொல்லுவது வழக்கம்.


நிறைமாத கர்ப்பிணி படி ஏறி வருதைப் பார்த்து, “உனக்கு சிரமமாய் இருக்கிறதா?” என்று ஸ்வாமிகள் பரிவோடு கேட்பார்.


“நல்ல காரியங்கள் நடக்கும் போது சற்று சிரமம் கூடவே இருக்கும்.ஆனால் அதைப் பொருட்படுத்தக் கூடாது” என்று அருளுரை வழங்கிய ஸ்வாமிகள்,” ஸ் என்று சொல்லாதே! ஸ் என்று போய் விடும்’ என்று அன்பாகக் கூறினார்.


லலிதா சஹஸ்ர நாமம் சொல்லும் வழக்கத்தை பாகீரதி அம்மாள் கொண்டிருந்தார்.


ஒரு நாள் அவரிடம் ஸ்வாமிகள்,”லலிதா சஹஸ்ர நாமம் சொல்லும் போது ஆற்றுக்குக் கரை கட்டுவது போல ஒவ்வொரு நாமத்திற்கும் முன்னும் பின்னும் பிரணவமாகிய'ஓம்'என்பதைச் சேர்த்துச் சொல்” என்று அருளினார்.


ஸ்வாமிகள் மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் வளர்த்த மீனாட்சி அம்மையின் அருள் குழந்தையாவார்.


தன் அன்னையை எப்படி வழிபட்டால் முழுப் பலனும் கிடைக்கும் என்ற இரகசியத்தை அவர் அருளியது அனைவருக்குமான காலத்திற்கேற்ற உபதேசம்.


ஓம் என்னும் உயரிய மந்திரம்


தானம் யக்ஞம் போன்ற சகல காரியங்களையும் ஆரம்பிக்கும் போது ப்ரணவமாகிய ஓம் மந்திரத்தைச் சொல்ல வேண்டும் என்று சாட்யாயனர் அருளியுள்ளார்.


அதே போல காத்யாயனர் ஓம் எனும் ப்ரரணவத்தை சொல்லியே அனைத்துக் காரியங்களையும் ஆரம்பிக்க வேண்டும் என்று அருளியுள்ளார்.


தால்ப்ய பரிசிஷ்டம் என்ற நூலில் ஓம்காரத்தைச் சொல்லாமல் கூறும் சகல மந்திரங்களும் சித்தியைக் கொடுக்க மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது.


ஆகவே தான் லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் ஒவ்வொரு நாமாவுக்கு முன்னரும் பின்னரும் ஸ்வாமிகள் ஓம்காரத்தைச் சேர்த்துச் சொல் என்றார்.


முதலில் சொல்லாவிட்டால் மந்திரம் ஒழுகி விடுமென்றும் கடைசியில் சொல்லாவிட்டால் மந்திரம் பொங்கி வழிந்து விடும் என்றும் காளிகா புராணம் போன்றவற்றில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.


இந்த அரிய இரகசியத்தை ஸ்வாமிகள் பக்தைக்கு அருளினார்.


பக்தைக்கு ஆண் குழந்தை பிறக்க அது புஷ்ய நட்சத்திரத்தில் பிறந்ததைக் கேட்டு அறிந்த ஸ்வாமிகள், “புஷ்ய நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறான். ஜெகதீசன் என்று பெயர் வை. நன்றாக இருப்பான்” என்று ஆசீர்வாதம் செய்தார்.


ஒவ்வொரு மந்திரம் சொல்லும் விதத்தையும் ஆசார்யர் மூலமாகவே கற்றுத் தெளிந்து உச்சரிக்க வேண்டும் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம்.


காலம் கலி காலமானதால் நமக்குத் தெரியாத இரகசியங்களை இப்படிப் பெரும் மகான்கள் கூறி அருளுவது வழக்கம்.


ஆக லலிதா சஹஸ்ரநாமம் கூறும் வழியை பெரும் மகானான குழந்தையானந்த ஸ்வாமிகள் அருளியுள்ளார். 


அதைக் கடைப்பிடித்து சஹஸ்ர நாமம் சொல்லி முழுப்பலனையும் அன்னையின் அருளால் பெறுவோமாக!


ஸ்ரீ குழந்தையானந்தர் 

குரு சரித்திரம் ஆதாரபூர்வமாக 

குருவின் வாரிசுகள் மற்றும் பலரால் சொல்லபட்ட உண்மை வரலாறு எல்லோருக்கும் அறிந்துகொள்வதற்காக

 குருவின் அருளால் புத்கமாக வெளியிடபட்டுள்ளது. 


இந்த புத்தகத்தை படிப்பதற்கு கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திகொள்ளவும் .

https://drive.google.com/open… 


இந்த புத்தகத்திற்க்கு copyright 

உள்ளது.


இதை மறுபதிப்பு செய்ய

அனுமதி வாங்க வேண்டும் .


குருவே சரணம்!


நன்றி:சென்னையிலிருந்து வெளி வரும் சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் செப்டம்பர் 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரையிலிருந்தும்,

Tamil and Vedas

என்ற இணைதளத்திலிருந்தும் பெறப்பட்ட தகவல்களை தொகுத்து பதிவாக வெளியிடபட்டுள்ளது.


சுவாமி குழந்தையானந்தர் படம்,மதுரை மீனாட்சியம்மன் கோவில் தூணில் அன்னை மீனாட்சியுடன் உள்ள சிற்பத்தின  படம்,அவரது ஜீவ சமாதிகளின் படங்கள்

Friday, 1 May 2026

32 முப்பத்தி இரண்டு சிவ தீட்சை

 அகத்தியர் அருளியவை முப்பத்தி இரண்டு சிவ தீட்சை என்றால் என்ன ?


இறைவனை காணும் வழி காண நமக்கான குருவிடம் தீட்சை பெற வேண்டும். நமக்கான குருவை தேர்த்தெடுக்க இயலாத பட்சத்தில் சிவ பக்தியும், முறையான சிவ வழிபாடும் நாம் கொண்டிருந்தால் அகத்தியரே நமக்கு குருவாயிருந்து நமக்கான குருவை அடையாளம் காட்டி சிவ தரிசனம் பெற வழிகாட்டுகிறார்.


சித்தர்களின் தலையாய சித்தர், அந்த பரம்பொருளின் பிரியத்துக்குரிய அகத்திய மாமுனி, பாமரனும் தகுதி இருந்தால் இறைவனை அடையலாம் என்பதற்காக , பகிர்ந்துகொண்ட தேவ ரகசியம். சித்த ரகசியம் இவை. இவற்றை உணர்ந்து சித்தியடைந்தவர்களுக்கு ஞானம் பெருகும், பாவம் விலகும் என்கிறார்.மேலும் ஆதி சித்தனான சிவனின் பாத தரிசனம் கிடைக்குமாம்.இந்த தீட்சைகளை நற்குமரனான முருக பெருமான் தனக்கு அருளியதாகவும் கூறுகிறார்.


அகத்தியர் அருளியவை முப்பத்தி இரண்டு சிவ தீட்சைகள். குருவிடம் இருந்து பெறப்படும் உபதேசங்களில் முதன்மையானது இந்த சிவ தீட்சைகள்தான்.இந்த தீட்சைகளை முறையாக குருவின் மூலமாய் பெற்று செபிக்க தீட்சைகள் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.


சிவதீட்சையில் முப்பத்தி இரண்டு

மந்திரங்கள். இவை ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான பலன்கள். நமக்கு தேவையான மந்திரத்தை மட்டும் சொல்லி பலன் பெற்றுக் கொள்ளலாமே என்று நினைக்க வேண்டாம். இந்த முப்பத்தி இரண்டு மந்திரங்களும் ஒவ்வொரு படிநிலையாக கருதப் படுகிறது.ஒவ்வொரு நிலையாக பூரணத்துவம் பெற்று மந்திரம் சித்தியடைந்த பலனை உணர்ந்த பின்னரே அடுத்த நிலைக்கு முன்னேறிச் செல்லுதல் வேண்டும். அகத்தியர் அருளியவை முப்பத்தி இரண்டு சிவ தீட்சைகள் விளக்கத்தை விரிவாக பார்க்கலாம்.


சிவதீட்சை – 1


ஸ்ரீம் அம் ஓம்” என்று லட்சம் முறை செபிக்க முதல் தீட்சை சித்தியாகும். அப்போது இறைவனின் திருக்காட்சியைக் காணலாம் என்கிறார். காட்சியைக் காணும் போது தேகமெல்லாம் வேர்த்துப் போகும். ஆனால் இந்தக் காட்சி கண் மாயை அல்ல, இதைக் கண்டு தேறுவதே முதல் தீட்சையாகும் என்கிறார் அகத்தியர்.


சிவதீட்சை – 2


“ஆம் ஓம் ஹரீம் ரீம்” என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க இரண்டாவது தீட்சை சித்தியாகும். அப்போது மூச்சு உள்ளடங்குவதுடன் , முக்தியும், சக்தியும் சித்தியாகும் என்கிறார்.


சிவதீட்சை – 3


“குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம்” என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க மூன்றாவது தீட்சை சித்தியாகும். அப்போது சந்திரனை போல தேகம் ஒளிவீசும் என்கிறார்.


சிவதீட்சை – 4


“ஸ்ரீங் அங் உங்” என்று லட்சம் முறை செபிக்க நான்காவது தீட்சை சித்தியாகும். அப்போது மோட்சமும், தேவதைகள் உனக்கு பணியும் தன்மையும் ஏற்படும் என்கிறார்.


சிவதீட்சை – 5


“யங் வங் றீங்” என்று லட்சம் முறை செபிக்க ஐந்தாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேவதைகள் ஒரு சட்டையைத் தரும். அதை அணிந்துகொள் என்கிறார்.


சிவதீட்சை – 6


“சங் ரங் உம் ஆம்” என்று லட்சம் முறை செபிக்க ஆறாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேகத்தில் வாசம் வீசும். அத்துடன் தேகசுத்தியும் சித்திக்கும் என்கிறார்.


சிவதீட்சை – 7


“இங் ரங் அவ்வு” லட்சம் முறை செபிக்க, மானை கையில் ஏந்தி இருக்கும் சிவன் அருகில் இருப்பார். வானவர்கள் மகிழ்ச்சியுடன் வா வா என்று அழைப்பார்கள் என்கிறார்.


சிவதீட்சை – 8


“மங் றீங் ரா ரா” என்று லட்சம் முறை செபிக்க ஆனந்தம் உண்டாகும். அத்துடன் தேவர்கள் வந்து உன்னுடன் இணைவார்கள் என்கிறார்.


சிவதீட்சை – 9


“வங் கிலியும் சிங் அம் ஐம்” என்று லட்சம் முறை செபிக்க உன் வினைகள் எல்லாம் தீர்ந்து உடல் கல்லைப் போல் உறுதிபெறும்.இவ்வாறு ஒன்பதாவது தீட்சை சித்தியாகும் என்கிறார்.


சிவதீட்சை – 10


“வம் வும் அம் இம்” என்று லட்சம் முறை செபித்தால் தேகம் பொன் போல ஆகும். இவை இனிதான பத்தாவது சிவதீட்சை ஆகும் என்கிறார்.


சிவதீட்சை – 11


“மங் றீங் றீங்” என்று லட்சம் முறை செபிக்க பதினோராவது தீட்சை சித்திக்கும். பாதி மதியை சடையில் அணிந்த சிவபெருமானின் திருவடியைப் பணிந்து என்றென்றும் தொண்டனாய் இருப்பாய் செய்துபார் என்கிறார்.


சிவதீட்சை – 12


கற்பம் உண்டு நிலைத்தவர்க்கு சிவபெருமானின் ஒருமுகமான தற்புருசமே இது. “வம் ஆம் நம்” என்று லட்சம் உரு செபிக்க சித்தியாகும். கெவுன மார்க்கம் செலல ஏதுவாக சட்டை ஒன்றும் கிடைக்கும் அதை அணிந்தால் கெவுன சித்தி கிடைக்கும் என்கிறார்.


சிவதீட்சை – 13


அறிவுத் தெளிவுடன் “ஊம் ஆம்” என்று லட்சம் முறை செபிக்க தேகம் வச்சிர தேகமாகும். எமன் கூட அருகில் வர மாட்டான்.இவ்வாறு பதின்மூன்றாவது தீட்சை சித்திக்கும் என்கிறார்.


சிவதீட்சை – 14


“றம் றூம் ஸ்ரீம் அவ்வு” என்று லட்சம் முறை செபிக்க பதின்நான்காவது தீட்சை சித்தியாகும். சாயுட்சய பதம் பெறுவார் என்கிறார் .


சிவதீட்சை – 15


“ஸ்ரீம் றீம் றீம் ஓம்” என்று லட்சம் முறை செபிக்க தேகம் கல்போலாகும். தேர்ந்துபார். என்ன அற்புதம் சிவ சிவா நாதவிந்து கட்டிப்போகும்.இதுவே பதினைந்தாவது தீட்சை ஆகும். இவைகளை ஆய்ந்தறிந்தவர்களுக்குப் பதினாறாம் தீட்சையைச் சொல்கிறேன் கேள் என்று தொடர்கிறார்.


சிவதீட்சை – 16


“சங் இங் றங்” என்று லட்சம் முறை செபிக்க மாந்தளிர் போல் தேகமுள்ள மனோன்மணித் தாய் தன் இருகரம் நீட்டியபடியே மகனே என வருவாள். அவள் வரும் போதே அவளைப் பணிந்துகொள் என்கிறார் அகத்தியர்.இதுவே பதினாறாவது தீட்சையாகும்.


சிவதீட்சை – 17


“றீங் றீங் ஸ்ரீம் ஸ்ரீம்” என்று லட்சம் முறை செபிக்க காய்ப்பான நரையும் இல்லை. திரையும் இல்லை. கற்பத்தை உண்ண சுருக்கான வழி. வழியறியாதவர்கள் உன்னை ஏய்த்து விடுவார்கள். அவர்களின் ஏய்ப்புக்கு நீ ஆளாகிவிடாதே என்கிறார்.மேலும் இது ஒரு நல்வாய்ப்பு என்கிறார் அகத்தியர். இதுவே பதினேழாம் சிவதீட்சையாகும்.


சிவதீட்சை – 18


“சங் சிங் ரா ரா” என்று லட்சம் முறை செபிக்க சட்டை போகும். இது ஈஸ்வரியாளின் தீட்சை என்கிறார். இது பதினெட்டாவது தீட்சையாகும்.


சிவதீட்சை – 19


“திரிநேத்திராயா வா வா” என்று விருப்பமுடன் லட்சம் முறை செபிக்க பத்தொன்பதாவது தீட்சை சித்தியாகும்.இந்த தீட்சை சட்டையை தள்ளும் என்கிறார்.


சிவதீட்சை – 20


“ஸ்ரீங்காரதேவாய நமா” என்று லட்சம் முறை செபிக்க தொட்டதெல்லாம் சித்தியாகும்.இது இருபதாவது சிவதீட்சையாகும்.


சிவதீட்சை – 21


“இங் அங் றங்” என்று லட்சம் முறை செபிக்க எட்டுத் திசையையும் வெல்லலாம்.இதுவே இருபத்தியொன்றாவது சிவதீட்சையாகும்.


சிவதீட்சை – 22


“அரி அரி ஓம்” என்று என்று லட்சம் முறை செபிக்க இருபத்தி இரண்டாவது சிவதீட்சை சித்தியாகும்.


சிவதீட்சை – 23


“ரா ரா ரா றீம் றீம்” என்று லட்சம் முறை செபிக்க இருபத்தி மூன்றாவது சிவதீட்சை சித்தியாகும்.


சிவதீட்சை – 24


குணமாகவும் மறைவாகவும் “லீ லீ லீ அரஹர றீ றீ றி” என்று லட்சம் முறை செபித்து வாழ்த்துவாய் என்கிறார் அகத்தியர்.


சிவதீட்சை – 25


இருபத்தி ஐந்தாவது தீட்சையைக்கேள். கெவுனம் ஓடவென்றால் இதைக்கேள். “ஏ ஏ ஏ ஊ ஊ ஊ” என்று லட்சம் முறை செபிக்க இந்த தீட்சை சித்தியாகும் என்கிறார்.


சிவதீட்சை – 26


இருபத்து ஆறாவது தீட்சையைக்கேள், இது மாதாவின் தீட்சை இது, “இஷயா இஷயா ஓம்” என்று லட்சம் முறை செபிக்க மௌனம் சித்தியாகும் என்கிறார்.


சிவதீட்சை – 27


இருபத்தி ஏழாவது தீட்சையைக்கேள். இத்தீட்சையில் நீயே சிவனாவாய். அதைச் சொல்கிறேன். “ஓம் சிவாய சிவா றீங்” என்று லட்சம் முறை செபிக்க வேண்டும் என்கிறார்.


சிவதீட்சை – 28


இருபத்தி எட்டாவது தீட்சையைக்கேள். “சிவ ஓம் சிவாய நம” என்று லட்சம் முறை செபிக்க உலகத்தில் பூரிப்பான புகழ் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.


சிவதீட்சை – 29


இருபத்தி ஒன்பதாவது தீட்சையைக்கேள். இது போற்றுதற்குரிய புகழ் கிடைக்கும். அதற்கு “சவ்வும் மவ்வும்” என்று லட்சம் முறை செபிக்க வேண்டும் என்கிறார்.


சிவதீட்சை – 30


முப்பதாவது தீட்சையைக்கேள். “மங் சங் கங்” என்று லட்சம் உரு செபிக்க

உன் தேகம் ஒருநாளும் அழியாது. அகம் மகிழ நரையும் இல்லை திரையும் இல்லை. யுகம் வரைக்கும் உன் தேகத்தை நிலைநிறுத்தும்.


சிவதீட்சை – 31


, “ஸ்ரீம் றீம்” என்று ஓதுவாய் லட்சம் உரு இது முப்பத்தியொன்றாம் தீட்சை என்கிறார்.


சிவதீட்சை – 32


முப்பத்து இரண்டாந் தீட்சைகேள். “நங் கிலி சிங் கிலி” என்று லட்சம் உரு செபிக்க கோடி காலம் வரை இறவாமலிருத்தும் மற்றுமுள்ள காலமனைத்தும் வாழ்த்தி தோத்திரங்கள் செய்து கொள்வாய். கொன்றாலும் வாள் கொண்டு வெட்டிப்போட்டாலும் வெட்டுப்பட்ட இடம் சற்றும் குறையாமல் ஒட்டிக்கொள்ளும் என்கிறார்.

Saturday, 25 April 2026

பாரதியார் சங்கல்பம்


 

ஶ்ரீ பேச்சியம்மன் வரலாறு

 ☘சிவ சித்தாந்தம்☘

  


🍃ஶ்ரீ பேச்சியம்மன் வரலாறு🍃


முன்னொரு காலத்தில் வல்லாளன் என்ற அரசன் தனக்கு சகல வல்லமையும் உலகை ரக்ஷிக்கும் உத்தம பிள்ளை வரம் கேட்க விரும்பி ப்ரமனை நோக்கி தவம் செய்தான் தவத்திற்கிரங்கிய பிரமன் தோன்றி என்ன வரம் வேண்டும் ? எனக்கேட்க உலகை ரக்ஷிக்கும் மகன் வேணுமெனக்கேட்க பிரமனும் அப்படியே வரம் தந்தோமென கூறி மறைந்தார். சில காலத்தில் வல்லாளின் மனைவி கருவுற்றாள் இதனையறிந்த தேவர்கள் முனிவர்கள் எல்லாம் கூடி, கருவில் உள்ள சிசு பிறந்து வளர்ந்தால் உலகத்தையும் நம்மையும் அழித்துவிடுவான். என வருந்திட அதனையறிந்த சரஸ்வதி தன் கணவனான பிரமதேவனால் தந்த வரத்திற்கு பரிகாரம் தேட விரும்பி, மிகுந்த கோபத்துடன் சென்று அந்த வல்லாளனை தன் காலினால் மிதித்துக்கொண்டு அவன்

மனைவியை தன் மடியில் கிடத்தி அவள் கர்ப்பத்தில் உள்ள சிசுவை எடுத்து அவள் குடலை மாலையாக அணிந்து பேச்சி காளியாக விளங்கினாள் அதுமுதல் அவள் தீயவர்களை அழித்தும் நல்லவர்களை காத்தும் வரும் பேச்சியாயி (  வாகீஸ்வரி  ) என்று மக்கள் வழிபட்டு வருகிறார்கள். 

வரலாறு இவளை கிராம தேவதையாக ஶ்ரீமாரியம்மன் கோயிலில் தனிக்கோயிலாகவும் வைத்து வழிபட்டு வரலாயினர் இவளுடைய தோற்றம் மிக பயங்கர வடிவத்தில் உள்ளது இவளுடைய வடிவத்தை ஆகம தியான சுலோகம்பின்வருமாறு கூறுகிறது.


🌿ஶ்ரீ பேச்சியம்மன் தியானம்


🌿ரக்த வர்ணாம் த்விபுஜாம் கோரவக்தராம் திரிநேத்ரகாம்


குந்தனம் ஊர்த்துவகேசஞ்ச ஆஸ்யோத் கடந ஸம்யுதாம்


🌿சுஷ்கோதரஞ்ச ஜங்கோர்த்வே ஸூஷ்மவஸ்திராங்க பூஷணாம்


பாதாந்தே வல்லாளேந்திரஸ்ய தத்பத்னீஞ்ச த்விஹஸ்தகே


🌿தத்பூர்ண கர்ப்ப பேதிந்யாம் அந்த சுசிகரோஸ்திதாம்


தஸமாம்ஸஞ்சருதிரம் ஸவ்ய ஹஸ்தேன பக்ஷணீம்


🌿ஸர்யேது க்ஷூ ரிகம் சைவ பத்மம் சக்ரஞ்ச தண்டகாம்


வாமே டமரு கேடஞ்ச ஜம்படம் சங்கரஞ்ச வச


🌿மஹாகண்டா ஸம்யுக்தாம் சூலம் ப்ரஹாரமேவச


இத்யேசம் கோர ரூபந்து பேச்சிகாளிம் விபாவயே


🌿பார்வதியின் கோபவடிவமே காளியாகும்

சரஸ்வதியின் கோப வடிவமே பேச்சி ( காளி ) ஆயி

பேச்சி ( வாக்குக்கு அதிபதி சரஸ்வதி ) க்கு ஆயி  (தாய்) பேச்சிஆயி


🌿ஓம் ஐம் க்லீம் ஐம்

  வாகீஸ்வர்யை நம


🔥🔥🙏🏼🙏🏼🙏🏼🔥🔥


☘சிவ சித்தாந்தம்☘


பேச்சி அம்மன், போத்தனூர் காவல் நிலையம், கோவை 



Friday, 24 April 2026

அவளிவணல்லூர்" சாட்சிநாதர்


 

கணவன்-மனைவி ஒற்றுமை தரும் "அவளிவணல்லூர்" சாட்சிநாதர் திருக்கோவில் சிறப்புகள்! 🙏✨

தமிழகத்தின் ஆன்மீக பொக்கிஷங்களில் ஒன்றான, திருவாரூர் மாவட்டம் அவளிவணல்லூர் அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோவிலின் மர்மங்களையும், அந்த ஈசனின் கருணையையும் பற்றி இன்று காண்போம்.

📍 தல வரலாறு: "அவள் இவள் தான்!"
இந்தக் கோவிலின் பெயருக்குப் பின்னால் ஒரு நெகிழ்ச்சியான கதை உண்டு. இத்தலத்து சிவாச்சாரியாரின் மூத்த மகள் சுசீலை, அம்மை நோயால் பாதிக்கப்பட்டு தன் உருவத்தையும் கண்பார்வையையும் இழந்தாள். நீண்ட யாத்திரை முடிந்து வந்த அவளது கணவன், உருவம் மாறிய மனைவியை அடையாளம் தெரியாமல் ஏற்க மறுத்தான்.

அப்போது அந்த ஈசன் தோன்றி, கோவிலின் சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் சுசீலையை நீராடச் செய்தார். அம்மைத் தழும்புகள் மறைந்து அவள் மீண்டும் பேரழகு பெற்றாள். இறைவன் தன் கணவனிடம் "அவள் இவள் தான்" என்று சாட்சி கூறி இருவரையும் சேர்த்து வைத்தார். இதனால் இறைவனுக்கு "சாட்சிநாதர்" என்றும், ஊருக்கு "அவளிவணல்லூர்" என்றும் பெயர் வந்தது.

🌟 கோவிலின் தனிச்சிறப்புகள்:
சுயம்பு லிங்கம்: இங்குள்ள மூலவர் சாட்சிநாதர் தானாகத் தோன்றிய சுயம்பு மூர்த்தி ஆவார்.

பஞ்ச ஆரண்யம்: காவிரி தென்கரைத் தலங்களில் சிவனின் "பஞ்ச ஆரண்யம்" (ஐந்து காடுகள்) தலங்களில் இதுவும் ஒன்று. (திருவாவடுதுறை போன்ற ஐந்து தலங்களின் வரிசையில் இது முக்கியமான காலசந்தி தலம்).

அம்மன் சவுந்தர நாயகி: பெயருக்கேற்றார் போல பேரழகுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.

தேவாரப் பாடல்: திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் போற்றிப் பாடப்பட்ட 163-வது தேவாரத் தலம்.

🙏 பிரார்த்தனை பலன்கள்:
✅ கண் வியாதிகள்: கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வேண்டிக்கொண்டால் நற்பலன் கிடைக்கும்.
✅ தோல் நோய்கள்: அம்மை மற்றும் இதர சரும நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபடுவது சிறப்பு.
✅ குடும்ப ஒற்றுமை: பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் பெருகவும் சாட்சிநாதர் பேரருள் புரிகிறார்.

ℹ️ கோவில் விபரங்கள்:
📍 ஊர்: அவளிவணல்லூர் (அம்மாபேட்டை அருகில்), திருவாரூர் மாவட்டம்.
⏰ நேரம்: காலை 7:00 - 12:00 | மாலை 4:00 - இரவு 8:30.
📅 முக்கிய நாள்: தை அமாவாசை அன்று இங்கு நீராடுவது மிக விசேஷம்.

வாழ்க வளமுடன்! இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து இறைவனின் அருளைப் பெறச் செய்யுங்கள். 🌸🕉️

Tuesday, 21 April 2026

ஸ்ரீமத் வேங்கட சுபானந்த ஸ்வாமிகள் (தாதா சித்தர்)

 #ஜாதகம் சரியில்லாதவர்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய சித்தர் ஜீவசமாதி.

ஸ்ரீமத் வேங்கட சுபானந்த ஸ்வாமிகள் (தாதா சித்தர்) சென்னையில் உள்ள ஒரு சக்திவாய்ந்த சித்தரும், 1796-ல் ஜல ஜீவசமாதி அடைந்தவருமாவார். ஓல்ட் வாஷர்மேன்பேட்டையில் அமைந்துள்ள இவரது சமாதி.

#சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை மகாராணி தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகில் ஸ்ரீமத் வேங்கடசுப்பானந்த சுவாமிகளின் #ஜீவசமாதி அமைந்துள்ளது. பக்தர்கள் அனைவரும் இந்த ஜீவசமாதியை ‘தாத்தா கோயில்’ என்று அன்புடன் அழைக்கிறார்கள். இங்கு தாத்தா கோயில் என்று கேட்டால்தான் அனைவருக்கும் வழி தெரிகிறது. மகாராணி போஸ்ட் ஆபீஸ் பின்புறம் கோதண்டராமன் தெருவில் அமைந்துள்ளது இந்த சித்தர்  ஜீவசமாதி. வேங்கட சுப்பானந்த சுவாமிகள் ஜல ஜீவசமாதி பக்தர்களால் வணங்கப்படும் அருள் மிகுந்த தலமாகும். கோயிலின் சிறப்புகளும் அதிசயங்களை நிகழ்த்தும் சித்தரைப் பற்றியும் இந்தப் பதிவில் அறிவோம்.

நீர் சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரகக் கோளாறு, நீரால் வரக்கூடிய கண்டங்களை தீர்ப்பவராகவும், மன பயம், மனக்குழப்பம் இருப்பவர்கள் இவரை வழிபட, மன தைரியம், மன வலிமை அதிகரிக்கும்.

மணலை அள்ளி எடுத்துக் கொடுத்து உணவு பொருட்கள் ஆக்கினார். குளத்து தண்ணீரை எடுத்து தெளித்து நோய்களை விரட்டினார்.

இக்கோயிலுக்கு செல்பவர்கள் எலுமிச்சம் பழம் வாங்கிச் சென்று, அந்தப் பழத்தை அவர் பாதத்தில் வைத்து தந்ததும் வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். இந்த எலுமிச்சைக்கு அதீத சக்தி உள்ளதாக நம்புகின்றனர். தொடர்ந்து இங்கு வந்து 3 நல்ல எண்ணெய் விளக்கு போட வேண்டியது கிட்டும்.

Monday, 20 April 2026

மந்திர பரிணாமம்

 'அபூர்வம்' 


நீங்கள் செய்த மந்திர ஜபம் எங்கே ஒளிந்திருக்கிறது தெரியுமா?


"மந்திரத்தைச் சொன்னேன், ஆனால் பலன் தெரியவில்லையே?" என்று சலித்துக் கொள்பவரா நீங்கள்? 


அப்படியானால், நீங்கள் 'அபூர்வம்' என்ற அந்த அற்புத ரகசியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.


பொதுவாக 'அபூர்வம்' என்றால் நாம் 'அரியது' அல்லது 'முன்பு பார்த்திராதது' என்று பொருள் கொள்கிறோம். 


ஆனால், இந்தியத் தத்துவ மரபில், குறிப்பாக மீமாம்சை மற்றும் தந்திர சாஸ்திரத்தில், இதற்கு மிக நுட்பமான ஒரு பரிமாணம் உண்டு.


விதைக்கும் விளைவுக்கும் இடையே ஒரு பாலம்


நாம் ஒரு செயலைச் செய்கிறோம்; அதன் பலன் சில காலம் கழித்தே கிடைக்கிறது. 


உதாரணத்திற்கு, இன்று ஒரு யாகம் செய்கிறோம் அல்லது ஒரு மந்திரத்தை உச்சரிக்கிறோம். 


அந்தச் சத்தம் காற்றில் கரைந்துவிடுகிறது. 


பிறகு எப்படி அது பல மாதங்கள் கழித்து நமக்கு ஒரு நற்பலனைத் தருகிறது?


செயல் முடிந்துவிட்டது, பலன் இன்னும் வரவில்லை. 


இந்த இடைப்பட்ட காலத்தில் அந்தச் செயல் என்னவாக இருக்கிறது? 


இதற்கான விடைதான் 'அபூர்வம்'.


மீமாம்சை தத்துவத்தின் தந்தை ஜைமினி, இதை ஒரு "கண்ணுக்குத் தெரியாத கர்ம சக்தி" (Invisible potency) என்கிறார். 


நீங்கள் செய்த கிரியைக்கும், நீங்கள் அடையப்போகும் பலனுக்கும் இடையில் ஒரு 'நிகழ்நேரச் சேமிப்பாக' இந்த அபூர்வம் செயல்படுகிறது.


கேயாஸ் தியரியும் (Chaos Theory) அபூர்வமும்


இதை நவீன அறிவியலோடு ஒப்பிட்டால் வியப்பாக இருக்கும். கேயாஸ் தியரியில் 'பட்டாம்பூச்சி விளைவு' (Butterfly Effect) என்று ஒன்று உண்டு. 


ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைப்பு உலகின் மறுபக்கத்தில் புயலை உருவாக்கலாம்.


மந்திர சாஸ்திரமும் இதையே சொல்கிறது. 


நீங்கள் உச்சரிக்கும் ஒவ்வொரு 'வர்ணமும்' (எழுத்து) ஒரு அதிர்வு. 


அந்த அதிர்வு பிரபஞ்சப் பெருவெளியில் ஒரு சிறு சலனத்தை ஏற்படுத்துகிறது. 


அந்தச் சலனம் உடனடியாகப் பலனாக மாறுவதில்லை. மாறாக, அது பிரபஞ்சத்தின் 'Non-linear' (நேரியல் அற்ற) அமைப்பில் ஒரு தகவலாகச் சேமிக்கப்படுகிறது. 


இதுவே அபூர்வ சக்தி.


இது ஒரு வங்கிக் கணக்கில் நாம் சேமிக்கும் பணத்தைப் போன்றது. 


பணம் கையில் இல்லை, ஆனால் கணக்கில் இருக்கிறது. தேவைப்படும்போது அது 'பலனாக' உங்கள் கையில் வந்து சேரும்.


சப்தமே சக்தி


'மாத்ருகா சக்ர விவேகம்' போன்ற நூல்கள் கூறுவது போல, 'அ' முதல் 'க்ஷ' வரையான எழுத்துக்கள் வெறும் ஒலிகள் அல்ல; 


அவை சக்தியின் வடிவங்கள். மந்திரத்தின் வலிமை அதன் அர்த்தத்தில் இல்லை, அதன் சப்த அமைப்பில் (Phonetic structure) உள்ளது.


நீங்கள் அர்த்தம் தெரியாமல் ஒரு மந்திரத்தைச் சொன்னாலும், அதன் முறையான உச்சரிப்பு பிரபஞ்சத்தில் அந்த 'அபூர்வ' ஆற்றலை விதைத்துக்கொண்டே இருக்கும்.


எனவே, நீங்கள் செய்யும் ஒவ்வொரு மந்திர ஜபமும், நற்செயலும் வீணாவதில்லை. 


அவை 'அபூர்வ' நிலையை அடைந்து, பிரபஞ்சத்தின் நுட்பமான விதிகளுக்கு உட்பட்டு வலுப்பெறுகின்றன.


அடுத்த முறை நீங்கள் ஜபம் செய்யும் போது, "பலன் கிடைக்கவில்லையே" என்று எண்ணாதீர்கள். 


நீங்கள் ஒரு மகா சக்தியை (Apūrva) உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 


அந்தச் சக்தி சரியான தருணத்தில், மிகச் சரியான பலனை உங்களைத் தேடி வரும்படி செய்யும். 


அதுதான் மந்திர சாஸ்திரம் சொல்லும் ரகசியம்!

சிறுகரும்பூர் ஸ்ரீ திரிபுரஸுந்தரி - த்ரிபுராந்தகேஸ்வரர் - ஸ்ரீ சுந்தர காமாக்ஷி அம்பாள் ஆலயம்

 நின்ற கோலத்தில் இருக்கும் அதிசய காமாக்ஷி அம்மன் மற்றும் ஸ்ரீசக்ர திருக்கோவில்!


சிறுகரும்பூர் ஸ்ரீ திரிபுரஸுந்தரி - த்ரிபுராந்தகேஸ்வரர் - ஸ்ரீ சுந்தர காமாக்ஷி அம்பாள் ஆலயம்:


காஞ்சிபுரம் நகரில் இருந்து கீழம்பி - திருப்புட்குழி வழியாக வேலூர் செல்லும் பெங்களூரு பிரதான சாலையில், காஞ்சிபுரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில், ஓச்சேரி என்ற கிராமத்திற்கு அடுத்து அமைந்துள்ள ஊர், சிறுகரும்பூர்.


இங்கே அமைந்துள்ளது, சுந்தர காமாக்ஷி அம்பிகை ஆலயம். 


கிட்டத்தட்ட 1500-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம். 


கோவிலை தற்போது பூஜித்தும்,பராமரித்து வரும் நவீன்குருக்கள், கோவிலை பற்றி  நமக்குதெரிவித்தார். 


அவர் கூறியமகத்துவங்கள் இதோ : 


- வ்யாக்ரபாதர் பூஜித்த ஸ்வயம்புவலிங்கம் இங்குள்ள ஸ்வாமி.

பார்த்தாலே நன்கு அறியலாம், கீழேபரந்தும், மேலே குறுகியும், பிடித்துவைத்தது போன்ற லிங்க மூர்த்தி.கஜப்ருஷ்ட விமான அமைப்பின் கீழேஇருக்கிறார். .


- தல மரம் - சரக்கொன்றை பரமேஸ்வரருக்கு பரம இஷ்டமான மரம்.


-இங்குள்ள தக்ஷிணாமூர்த்தி ரொம்பவும் மஹிமை பெற்றவர். 


அம்பிகை தன்னுள் பாதியாக உள்ளதைஅறிவிக்க, ஒரு காதில் மகரக்குழையும்,மறுகாதில் தோடும் அணிந்திருக்கிறார்.


தொண்டர் தம் பெருமையைசொல்லவும் பெரிதே என்றவாக்கிற்கிணங்க, இவ்வாலயத்தில்அறுபத்து மூவரும் இல்லை. 


மாறாக,அறுபத்து மூவரும், தக்ஷிணாமூர்த்தியுடைய தலைசடையில் 63 லிங்கங்களாக காட்சிதருகிறார்கள்.


அதாவது, சிவனை வழிபட்டுசிவமாகவே ஆனதால் லிங்கமாகவும்,அடியார்களை இறைவன் தலை மீதுவைத்து பிள்ளை போல்கொண்டாடுவார் என்பது போல், அவர்தலையிலும் இருப்பது, பக்திக்குமரியாதை.


 கோவிலில் ஓரிடத்தில் வில்வமும் வேம்பும் ஒன்றாய் வளர்ந்திருக்கின்றன. 


வேப்ப  மரம் தனது கிளையை வில்வத்தின் மீது போட்டவாறு வளர்ந்திருக்கிறது.


அம்பாள் சிவனுடைய தோள் மீது கைபோட்டவாறு இருப்பது போல் இருக்கும். 


வில்வ மரம் மூன்று கிளைகள் விட்டு சூல வடிவில் வளர்ந்திருக்கிறது. 


அடியில் ஒரு பெரியசிவலிங்கமும் அம்பாளும் உண்டு. 


- தவிர அழகு வாய்ந்த விநாயகர்,சண்முகர், நவகிரஹங்கள்  சந்நிதிகள்உண்டு. 


- ஸ்வாமியின் சந்நிதியில் முழுக்க கல்திருப்பணி. 

விமானம் தவிர.

அதேபோல், எங்கும் காணக்கிடைக்காத வகையில், அம்பாளுக்கு முழுவதும் பச்சைக்கல் கொண்டு சந்நிதிஅமைக்கப்பட்டுள்ளது.


- பச்சைக்கல்லுடைய மகிமையால், அம்பாள் சந்நிதியில் உஷ்ணம் நிரம்புவதில்லை. 


எப்போதும் குளிர்ச்சியாக இருக்கிறது.


- அந்நியர்களின் படையெடுப்புக்குஅஞ்சி, முற்காலத்தில் எல்லா விக்கிரஹங்களும் ஸ்வாமி சந்நிதியில் வைக்கப்பட்டும், பூமியில் புதைக்கப்பட்டும், மறைக்கப்பட்டன.


கோவில் இருக்குமிடம் தெரியாமல், மண்மேடு அமைத்து கோவிலை மூடிவிட்டனர். 


காலப்போக்கில் இங்குகோவில் இருந்ததே தெரியாமல் போனது. 


- பிற்காலத்தில்(1954), காஞ்சி பெரியவர்களின் உத்தரவுப்படி, தொ. மு.பாஸ்கரத்தொண்டைமான் அவர்கள், இங்கே அகழ்வுப்பணி மேற்கொண்டு, மண்மேட்டுக்குள் இருந்த சந்நிதியை கண்டுபிடித்தார்.


- அருகே இருந்த அம்பாள் சந்நிதி வெற்றிடமாக இருந்ததால், சிறுவர்கள் விளையாட சென்றார்களாம், ஆனால் எப்போது போனாலும் ஒரு சர்ப்பம் சீறிக்கொண்டு அவர்களை விரட்டியதாம். கோவில் கண்டுபிடிக்கப்பட்டதையும், சர்ப்பத்தின் சீற்றத்தையும் குறித்து, காஞ்சி மஹாபெரியவாளிடம் தெரிவித்ததை அடுத்து, பெரியவாள் இங்கே விஜயம்செய்து, தரிசனம் செய்தார்களாம். 


- அம்பாள் சந்நிதிக்கு வந்த அவர் (17-04-1978), விக்ரஹம் இல்லாதபோதும் சாந்நித்தியம் இருப்பதால் தான் சர்ப்பம் யாரையும் நுழையவிடாமல் தடுப்பதாக அறிந்தார். 


அதே போல், அங்கே ஒரு அழகிய சிவலிங்க ஆவுடையாரின் மீது, கல்லிலேயே அம்பாளுடைய ஸ்ரீசக்ரயந்த்ரம் இருந்தது.


 இதைக்கண்ட பெரியவாள், அங்கிருந்த நெருஞ்சி முட்களின் ஊடே, தர்ப்பைபாயை விரித்து, அமர்ந்துவிட்டார்.


 3 நாட்களுக்கு அங்கிருந்து விலகவில்லை. 


பின்பு, உடனே திருப்பணி துவங்க அனுக்கிரஹம் தந்தார். காஞ்சியை சேர்ந்த  சுப்பையா ஸ்தபதி இதைமேற் கொண்டு செய்தார்.


- திருப்பணி நிறைவடையும் நேரம், தரைத்தளம் போட தரையை தோண்டிய பொழுது, மேலும் ஒரு அம்பாள் சிலையும், அம்பாள் சந்நிதி விமானத்திற்கும் சுவருக்கும் இடையேவர வேண்டிய மேல் வரிசை சிற்பக்கற்களும் கிடைத்தன.


கர்ப்பத்தில் இருக்கும் சிசு, தாயும் தந்தையும் சிசுவோடு இருத்தல் எனபலவித சிற்பங்களை கொண்ட அக்கற்களை இன்றும் பிரகாரத்தில் காணலாம். 


விமானம் எழுப்பப்பட்ட காரணத்தால் அவற்றை மேல்வரிசையில் வைக்க இயலவில்லை.


புதிதாக கிடைத்த அம்பாள் திரிபுரசுந்தரி என்றும், அவள்தான் த்ரிபுராந்தகேஸ்வரஸ்வாமியின் போக சக்தி அம்பாளென்றும், சுந்தர காமாக்ஷி, தானே சிவசக்தி ஐக்கியமான ராஜராஜேஸ்வரிஅம்சமென்றும் பெரியவாளால் தெரிவிக்கப்பட்டு, அவ்வாறே சுவாமி சந்நிதிக்குள்ளேயே தெற்கு நோக்கி திரிபுரசுந்தரி அம்பாளும், தனி பச்சைக்கல் சந்நிதியில் கிழக்குநோக்கி ஸ்ரீ சக்ர பீடத்தோடு சுந்தரகாமாக்ஷி அம்பாளும் அருள்கின்றனர்.


1984ல் கும்பாபிஷேகம் காஞ்சி புதுப்பெரியவர்கள், கிருபானந்த வாரியார் ஆகியோர் முன்னிலையில் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.


 அம்பாள் ஐக்கிய ரூபத்தில் ஸ்ரீசக்ரபீடத்தோடு இருக்கும் கோவில்களில் ( திருவாரூர், திருநாகேஸ்வரம், சிதம்பரம்) கண்டிப்பாக ஒரு காவல் தெய்வம் உண்டு. 


சாஸ்தா, பைரவர், வீரபத்ரர்என யாராவது  இருப்பர்.


- இங்கேயும், தக்ஷனுக்கு ஆட்டுத்தலை தந்து, அனுக்கிரஹம் செய்த கோலத்தில் அனுகிரஹ வீரபத்ரர் அம்பாளுக்கு எதிரே இருக்கிறார். அவர் சிரசில் சிவலிங்கம் தாங்கியவாறு காணப்படுகிறார்.


- ஸ்வாமி சந்நிதியில் விலகி இருக்கும் நந்தியும், சுவற்றில் பாதி புலி உடல்கொண்ட ஆண் ஒருபுறம் தீபம்காட்டுவதாகவும், பாதி புலி உடல்கொண்ட பெண் மறுபுறம் தூபம் காட்டுவதாகவும் சிற்பங்கள் உள்ளன.


- சுந்தரகாமாக்ஷி அம்பாள், கிட்டத்தட்ட 6 அடி  உயரம். கைகளில் பாசாங்குசம் அபய வரதத்தோடு கூடிய பேருக்கேற்ற அழகு சொட்டும் திருமேனி.


- முன்னே லிங்கபீடத்தில் ஸ்ரீசக்ரம்.


அம்பாளுக்கு கால்களுக்கு இடையேத்வாரமும், அதன் மூலம் கொலுசுசார்த்தும் வழியும் உள்ளது.


- அம்பாளுடைய முகலாவண்யம் சொல்லில் அடங்காதது.


அங்கே சென்று நின்று அனுபவிப்பவர்களுக்கே அதன் உள்ளர்த்தம் புரியும்.


 அபிஷேகத்தில் தலையில் ஜலம் விடும்போது, கண்களை மூடிக்கொள்வது போலவும், ஜலம் வடிந்தவுடன் மீண்டும் கண்களை திறந்து கொள்வது போலும் காட்டி, அம்பாள் ஜாலம் பண்ணிக்கொண்டேஇருக்கிறாள்.


- அம்பாள் பராசக்தியாக, ஸ்ரீவித்யாமூர்த்தி ஆக இருப்பதால், வாசலில் சுவர்களிலும் தூண்களிலும், கணபதி, ஸ்கந்தர், லட்சுமி, சரஸ்வதி, இரண்டு குதிரைகளோடு சாமரம் வீசும் அஷ்வவல்லி, இரண்டு யானைகளோடு சாமரம் வீசும் கஜவல்லி (அச்வாரூடைசம்பத்கரி என்றும் கொள்ளலாம்) ஆகியவர்கள் காட்சி தருகின்றனர்.


சுவர்களின் இடையே ஒரு மாடத்தில் வாழைப்பழம் உரித்து சாப்பிட்டுக்கொண்டு, அம்பாளை நோக்கியவாறு, அவள் உத்தரவுக்கு காத்திருக்கும் கோலத்தில், அமர்ந்திருக்கும் குழந்தை ஆஞ்சநேயர்கூட  அழகு தான்.


தற்போது பூஜிக்கும் நவீன் குருக்களுடைய தந்தை, சந்திரசேகர குருக்கள் 10 வயது சிறுபிள்ளையாக இருந்தபோது, மஹாபெரியவாளிடம், "இந்த அம்பாளுக்கேன் காமாட்சின்னுபேர்? காமாக்ஷி காஞ்சிலே உக்கார்ந்துண்டு தானே இருப்பா? "என்று கேட்டுள்ளார்.


 அவருக்குபெரியவாள் அளித்த பதில்:


"இப்போ, உன் அம்மா எங்கயோ உக்கார்ந்துண்டு இருக்கா, நீ போய் தூத்தமோ காபியோ கேக்கறே... என்ன பண்ணுவோ.. பொறுமையா இதோவரேன் னு சொல்லிட்டு, எழுந்து வந்துபோட்டுத்தருவோ... ஆனா, இந்தகாமாக்ஷி பாவம், எதையாதுகேட்டுண்டு வர்ற கொழந்தேளுக்கு,உடனே கொடுத்துடணும்னு ஆசையாம். அதாவது, உக்கார்ந்துண்டு இருக்கறவ எழுந்து வர்ற கொஞ்ச காலதாமதம் கூட அவளுக்கு பண்ண விருப்பம் இல்லையாம். அதான் நின்னுண்டு இருக்கா" .


 


கேட்டதை கொடுக்க காத்திருக்கும் காமாக்ஷி அம்பிகையை, த்ரிபுராந்தகரை, த்ரிபுரஸுந்தரியை காண சென்று வாருங்கள். 


முடிந்த வரை ஆலயத்தின் பாதுகாப்புக்கும், அபிஷேக அலங்காரங்களுக்கும் பொருட்களை தந்து, பணி செய்யுங்கள். 


ஆலயத்தில், நித்யபூஜை, தீபம் ஏற்ற எண்ணெய், சந்தனம் குங்குமம் மற்றும் அபிஷேகப்பொருட்கள் ஆகியவை உள்பட, பல்வேறு கைங்கர்யங்களில் உதவி தேவைப்படுகிறது. 


செய்ய சக்தியும், மனமும் விருப்பமும் உடைய அன்பர்கள், கீழே தந்துள்ள ஆலய அர்ச்சகரை தொடர்பு கொண்டு, அல்லது நேரில் சென்றோ முடிந்த உதவிகளை செய்யுங்கள்.


காலம் காலமாக கருணை பொழியும் காமாக்ஷி அம்மை, நம்மை நிச்சயம் கடைத்தேற்றுவாள், வேண்டிய வரம் தருவாள். காமாக்ஷியை நம்பினோர்கைவிடப்படார். காப்பது அவள் கடன்.சுந்தர காமாக்ஷி சுபிக்ஷம் தரட்டும்!


தொடர்பு விவரங்கள் : ஆலய அர்ச்சகர் நவீன் சுந்தர் குருக்கள் - 9791505077, 9486060120, 9486370223


ஆலயம் தரிசனம் செய்ய செல்லுவோர் அர்ச்சகருக்கு தொடர்பு கொண்டு தகவல் அளித்துவிட்டு செல்லவும்.