ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583 THIS SITE IS BEST VIEWED IN GOOGLE CHROME BROWSER. இந்த வலைத்தளம் கூகிள் குரோம் என்ற சாதனத்தில் சிறப்பாக இயங்கும்.
Friday, 15 May 2026
பொதிகை மலை அகஸ்தியர்
Wednesday, 13 May 2026
வறுமையை போக்கும் அவ்வை பிள்ளையார் வழிபாடு
Monday, 11 May 2026
வள்ளி மலை ஸ்வாமிகள்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் அமைந்துள்ள அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்,
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் அமைந்துள்ள அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், சுமார் 10-ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட பழமையான, முருகப்பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு திருப்புகழ் தலமாகும். வள்ளி-தெய்வானையுடன் கந்தசுவாமி அருள்பாலிக்கும் இக்கோயில், சேய் வரம் (குழந்தை பாக்கியம்) அளிக்கும் தலமாகவும், வேதாளங்களைச் சிவகணங்களாகக் கொண்ட அரிதான தலமாகவும் போற்றப்படுகிறது. [1, 2, 3, 4]
- பழமை: பல்லவர், சோழர் காலத்திற்கும் முந்தையதாகக் கருதப்படும் இக்கோயிலில் கோபுரங்கள் இல்லை.
- மூலவர்: முருகப்பெருமான் வள்ளி மற்றும் தெய்வானையுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
- சிறப்பு சன்னதி: தெற்கு நோக்கிய அலங்கார மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சன்னதிகள் அமைந்துள்ளன.
- தனித்துவம்: இந்த ஆலயத்தில் தட்சிணாமூர்த்திக்கு சன்னதி இல்லை.
- வழிபாடு: அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம். [1, 2, 3]
- கந்தசஷ்டி, சூரசம்ஹாரம்.
- வைகாசி விசாகம், தைப்பூசம்.
- பங்குனி உத்திரம். [1]
- காலை: \(6:00\) AM - \(12:30\) PM
- மாலை: \(4:30\) PM - \(8:00\) PM [1]
மயூரப்பிரியன் முருகன்
🚩 அரிய 'மயூரப்பிரியன்' கோலத்தில் அருளும் குழந்தை வேலப்பர்! 🦚✨
பழனி - தாராபுரம் சாலையில் அமைந்துள்ள ஐவர் மலை, வெறும் குன்று மட்டுமல்ல; அது அதிசயங்களும் ஆன்மீக ரகசியங்களும் நிறைந்த ஒரு புனித பூமி. இங்கு வீற்றிருக்கும் அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில் பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
✨ அபூர்வமான ‘மயூரப்பிரியன்’ திருக்கோலம்
பொதுவாக முருகப்பெருமான் கையில் வேல் ஏந்தி அல்லது மயில் மீது அமர்ந்து காட்சி தருவார். ஆனால் இங்கு முருகப்பெருமான், தோகை விரித்தாடும் மயிலின் கழுத்தை தனது இடக்கையால் அன்போடு அணைத்தபடி, வலக்கையை இடுப்பில் வைத்து கம்பீரமாகக் காட்சி தருகிறார். பாதத்தருகே பாம்பு இருப்பதும் ஒரு தனிச்சிறப்பு. இந்த அழகிய கோலத்தையே "மயூரப்பிரியன்" என்று அழைக்கிறார்கள்.
⚠️ முக்கிய குறிப்பு: அலங்கார நேரத்தில் இந்த முழு உருவத்தையும் பார்க்க முடியாது. அபிஷேக நேரத்தில் மட்டுமே முருகனின் இந்த அபூர்வ திருவுருவத்தை முழுமையாகத் தரிசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது!
🧭 இந்தத் தலத்தின் பிற வியக்கத்தக்க சிறப்புகள்:
மேற்கு நோக்கிய சன்னதி: முருகர் கோயில்கள் பெரும்பாலும் கிழக்கு நோக்கியே இருக்கும். ஆனால், இது அரிய அமைப்பாக மேற்கு நோக்கி அமைந்துள்ளது.
வட்ட வடிவ நவகிரகங்கள்: பொதுவாக நவகிரகங்கள் சதுர வடிவில் இருக்கும். ஆனால் இங்கு அவை வட்ட வடிவில் அமைந்திருப்பது மிகவும் அரிதானது.
வரலாற்றுச் சான்று: இம்மலையில் காணப்படும் சமணர் கால கல்வெட்டுகள், குகைகள் மற்றும் சமணப் படுக்கைகள் இந்த இடம் பல நூற்றாண்டுகள் பழமையானது என்பதைப் பறைசாற்றுகின்றன.
அணையாத அடுப்பு: ஐவர் மலையில் உள்ள வள்ளலார் ஜோதி மண்டபத்தில் சுமார் 150 ஆண்டுகளாக அணையாமல் எரியும் அடுப்பு பக்தர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.
🧘 தியானத்திற்கு உகந்த தலம்
சித்தர்களும் துறவிகளும் இன்றும் இம்மலையில் சூட்சுமமாக தவம் செய்து வருவதாக நம்பப்படுகிறது. மன அமைதி தேடுபவர்களுக்கும், தியானம் செய்ய விரும்புவோருக்கும் இந்த மலைப்பகுதி ஒரு சிறந்த இடமாகும்.
🔱 மீண்டு வந்த அதிசயம்!
1997-ம் ஆண்டு திருடப்பட்ட இக்கோயிலின் உற்சவர் சிலை, பல போராட்டங்களுக்குப் பிறகு மீண்டும் அதிசயமான முறையில் இக்கோயிலுக்கே வந்து சேர்ந்தது. இது முருகனின் திருவிளையாடல் என்றே பக்தர்களால் போற்றப்படுகிறது.
வெற்றியைத் தரும் வேல் முருகனை, இந்த தனித்துவமான கோலத்தில் ஒருமுறையாவது நேரில் தரிசித்துப் பலன் பெறுங்கள்! 🙏
📍 இடம்: ஐவர் மலை, பழனி அருகே.
யோக பயிற்சிகள் வாசி யோகம் சர வித்தை சர யோகம்
Sunday, 10 May 2026
குழந்தையானந்தர் சித்தர்
சுமார்350 ஆண்டுகள் வாழ்ந்து நான்கு முறை அவதாரம் எடுத்து மதுரை காளவாசல் பகுதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் குழந்தையானந்தர் சித்தர் பற்றிய பதிவு
மகான்களின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல;
புதிரானதும் கூட.
அத்தகைய மகான்களுள் நான்கு இடங்களில் ஜீவசமாதியானதாகக் குறிப்பிடப்படுபவர் மகான் ராஜபூஜித ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள்.
கிட்டத்தட்ட 250 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர் என்று கூறப்படும் இம்மகானின் வாழ்க்கை வரலாறு பல்வேறு அற்புதங்களை உள்ளடக்கியது.
இம்மகானும் ஸ்ரீ ஷிர்டி சாயிபாபாவைப் போலவே விஜயதசமி நன்னாளைத்தான் தனது சமாதி காலத்திற்குத் தேர்ந்தெடுத்தார் என்பது மற்றொரு விந்தையான சிறப்பாகும்.
குழந்தையானந்தரின் அவதார தோற்றம்:
சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை அடுத்த சமயநல்லூரிலே அவதரித்த மஹான் ஸ்ரீ குழந்தையானந்தர். அங்கு ராமஸ்வாமி ஐயர் – திரிபுரசுந்தரி என்ற அம்பிகையைப் போற்றி வணங்கும் பக்த குடும்பம் வாழ்ந்து வந்தது. குழந்தைப் பேறு இல்லாத தன் நிலையை எண்ணி வருந்திய அந்த தம்பதியினர் குழந்தை வரம் வேண்டி அம்பிகையை உருக்கமாக வேண்டியதோடு குழந்தை பிறந்தால் அதை அம்பிகைக்கே அர்ப்பணித்து விடுவதாகப் பிரார்த்தனையும் செய்து கொண்டனர்.
ஒரு நாள் தம்பதிகள் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய, பழம்,புஷ்பம் உள்ளிட்ட தேவையான அனைத்தையும் நைவேத்திய பிரசாதத்துடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக ஐயர் உள்ளே சென்றார். மேலக்கோபுர வாசலில் சர்க்கரைப் பொங்கல், வடை போன்ற நிவேதனப் பொருள்களுடன் பின்னால் தொடர்ந்து கொண்டிருந்த திரிபுரசுந்தரியிடம் இரு பிச்சைக்கார சிறுவர்கள் வந்து, “ரொம்பப் பசியாய் இருக்குதம்மா” என்று கூறினர். “கொஞ்சம் பொறுங்கள். அம்மனுக்கு நைவேத்யம் செய்து விட்டு தருகிறேன்” என்றார் திரிபுரசுந்தரி.
“அவ்வளவு நேரம் பசி பொறுக்க முடியாதம்மா” என்ற அவர்களின் உருக்கமான வேண்டுகோளைக் கேட்ட அவர் நிவேதனப் பொருள்களை வயிறார பிச்சைக்காரச் சிறுவர்களுக்குக் கொடுத்தார். பசி தீர்ந்த மகிழ்ச்சியில் அவரை அவர்கள் வாழ்த்தினர்.
நடந்ததைக் கேட்ட ஐயருக்குக் கடுங்கோபம் வந்தது. நிவேதனப் பொருள்களை அம்மனுக்கு நைவேத்யம் செய்யாமல்; மனைவி செய்த காரியத்தை அவரால் மன்னிக்க முடியவில்லை. கோபத்துடன் வீடு திரும்பி விட்டார்.
அம்பாளை மனமுருகப் பிரார்த்தித்த திரிபுரசுந்தரி, “எப்படியோ, பிரசாதப் பொருள்களை என் வீட்டிற்கே நீ தான் அனுப்ப வேண்டும்” என்று மீனாட்சியம்மனை வேண்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.
உள்ளே பயந்து நடுநடுங்கிக் கொண்டு திரிபுரசுந்தரி தவிக்க கோபம் ஆறாத ஐயர் திண்ணையில் உட்கார்ந்திருந்தார்.
அப்போது, ஒரு சிறுவன் வந்து அவரிடம்,” ஐயா, அம்பாள் பிரசாதம் இதோ” என்று புஷ்பம், பழம்,சர்க்கரைப் பொங்கல், வடை ஆகியவற்றைத் தந்தான்.
ஒன்றும் புரியாத ஐயர் விழிக்கவே, உள்ளேயிருந்து ஓடி வந்த அவர் மனைவி, “ஒன்றும் பேசாமல் அதை வாங்கிக் கொள்ளுங்கள். அந்தப் பையன் எங்கிருந்து வருகிறான்” என்பதைத் தொடர்ந்து சென்று பாருங்கள்” என்றாள்.
ஒன்றும் புரியாத நிலையில் பையனைத் தொடர்ந்து சென்ற ஐயர் அந்தப் பையன் பிச்சைக்காரர்களுக்கு பிரசாதப் பொருள்க்ளைத் தந்த அதே இடத்தில் திடீரென்று மறைந்து விட்டான்.
எவ்வளவு தேடியும் அவனைக் காண முடியவில்லை. ஊர் திரும்பி வந்த ஐயர் நடந்ததைச் சொல்ல திரிபுரசுந்தரி அது அம்பிகையின் திருவிளையாடலே என்று
உறுதிபடக் கூறினாள்.
சரியாக பத்து மாதம் கழித்து தம்பதிகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
ராமன் லட்சுமணன் என்று அவர்களுக்குப் பெயரிடப்பட்டது. இருவரின் ராமன் மட்டும் தாய்ப்பாலை அருந்தவே இல்லை.அழவும் இல்லை.
இது எதனால் என்று குழம்பி இருந்த் திரிபுரசுந்தரி அம்மாளுக்கு கனவில் அம்மன் தோன்றி, ‘பிரார்த்தித்தபடி குழந்தையைக் கொடு’ என்று கேட்டாள்
இருவரில் எந்தக் குழந்தையைக் கொடுப்பது? தம்பதிகள் குழந்தைகளுடன் மீனாட்சியம்மன் ஆலயம் சென்றனர்.
அங்கு பட்டருக்கு அருள் வந்து எந்தக் குழந்தைக்கு காலில் சங்கும் சக்கரமும் உள்ளதோ எதன் நாவில் நாராயண நாமம் இருக்கிறதோ அந்தக் குழந்தையை கொடுத்துவிடு என்று உத்தரவு பிறந்தது.
அதுவரை கவனிக்காத சங்கு சக்கர அடையாளங்களைக் குழந்தை ராமனின் காலில் அனைவரும் கண்டன்ர்.
மேலும் அது வரை பேசாமல் இருந்த குழந்தை ராமன் அம்மா என்று கூறியவாறே மீனாட்சியம்மனை நோக்கித் தவழ்ந்து சென்றது.
ராமனை பிரிய மனமின்றி அன்னை மீனாட்சியின் ஆணையின்படி மீனாட்சி கோவிலில் குழ்தையை விட்டு விட்டு தம்பதியினர் வீடு திரும்பினர்.
இரவு வந்தது. குழந்தையை என்ன செய்வது என பட்டர் யோசித்தார். (அந்தக் காலத்தில் பட்டரின் கவனிப்பிலேயே கோவில்கள் இருந்தன) அப்போது அசரீரி ஒன்று குழந்தையை கோவிலிலேயே விடுமாறு உத்தரவைப் பிறப்பித்தது.
அது முதல் ராமன் கோவிலில் வளர ஆரம்பித்தான்.
திருஞானசம்பந்தருக்கு ஞானப்பாலைத் தந்த அம்பிகை குழந்தையானந்தரையும் பால் கொடுத்து வளர்த்தாள்.
ஏழு வய்தான போது ராமனுக்கு உபநயனம் செய்விக்க உத்தரவு கிடை்கப்பெற்றது. ஆகவே உபநயனமும் கோவில் பட்டர்களால் செய்து வைக்கப்பட்டது.
ராஜகோபாலன் என்ற தீட்சா நாமமும் சூட்டப்பட்டது.
பின்னர் 900 ஆண்டுகள் வாழ்ந்து வரும் பெரிய சித்தரான ஸ்ரீ கணபதி பாபாவைக் குருவாகக் கொள்ளுமாறு அன்னை மீனாட்சியிடமிருந்து அருள் ஆணை பிறந்தது.
ஒருநாள், அன்னை மீனாட்சியை தரிசிப்பதற்காக காசியிலிருந்து கணபதி பாபா என்ற மகான் வந்திருந்தார்.
ஒரு நல்ல சீடனை தேடிக் கொண்டிருந்த அவருக்கு ராஜகோபாலனைக் கண்டதும் அவனே அதற்குத் தகுதியானவன் என்ற எண்ணம் தோன்றியது.
ஆலயத்தினரின் அனுமதி பெற்று ராஜகோபாலனைத் தன்னுடன் அழைத்துச் சென்றார்.
காசியில் ஸ்ரீகணபதி பாபாவிடமிருந்து சகல சாஸ்திரங்களையும் பயின்றார் ராஜகோபாலன்.
முதல் சமாதி
குருநாதர் கணபதி பாபாவிடம் சகல சாஸ்திரங்களையும் பயின்ற ராஜகோபாலனுக்கு ஸ்ரீத்ரிலிங்க ஸ்வாமிகள் என்ற பெயர் ஏற்பட்டது.
ஸ்ரீத்ரிலிங்க ஸ்வாமிகள் என்ற பெயரில் கைலாய மலையிலும், மகாமேரு சிகரத்திலும் அமர்ந்து அருள்பாலித்தார்.
மானஸரோவர், கங்கோத்ரி, அமர்நாத், கேதார்நாத் ஸ்தலங்களில் நிர்விகல்ப சமாதியில் நீண்ட நாட்கள் இருந்திருக்கிறார்.
கஜானந்தேந்திர சரஸ்வதி என்ற திருநாமத்துடன் இமாலயத்திலுள்ள ஆதிசங்கர பீடத்தை அலங்கரித்தார்.
புனிதத் தலங்களை தரிசிப்பதற்காக
பல தல யாத்திரைகளை
மேற்கொண்டு மன்னர்களால் ராஜபூஜித ஸ்ரீ ராஜகோபால சுவாமிகள் என்று அவர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.
இமயமலை பகுதிகளில் சஞ்சாரம் செய்த அவரை ஏராள்மானோர் தரிசித்து அருள் பெற்றனர்.
கணபதி பாபா சமாதியடைந்த பின்பு கங்கை கரையில் சமுத்திரகூடம் என்னுமிடத்தில் உள்ள குகையில் நீண்ட காலம் தவமிருந்தார்.
(இந்த குகையைத்தான் பின்னாளில் சுவாமி விவேகானந்தர் கண்டு பிடித்து இந்த இடத்தில் தவம் இருந்து விஜய யாத்திரையை ஆரம்பித்தார்.)
இந்த தனி குகையில் பல ஆண்டுகாலம் நிஷ்டையில் இருந்த சுவாமிகள், பின் தாமும் ஒரு சமாதிக் குழியை ஏற்படுத்தி அதில் இறங்கி ஜீவ சமாதி ஆனார்.
இவ்வாறு த்ரிலிங்க ஸ்வாமிகளின் முதல் ஜீவ சமாதி காசியில் ஏற்பட்டது. கணபதி பாபா சமாதிக்கு அருகிலேயே இது உள்ளது.
கணபதி பாபாவை கணபதி ப்ரம்மம் என்று கூறுவார்கள். அவரது சமாதி இன்றும் காசியில் பஞ்சலிங்க கட்டத்தில் உள்ளது.
இன்றும் வெள்ளைச் சலவைக் கல்லிலானான அவரது சிலையை அங்கு பார்க்கலாம்.
இரண்டாவது சமாதி
பின்னர் அவர் நேபாளம் சென்றார். நேபாள ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குஷ்ட நோய் பீடிக்கவே அவர் ஸ்வாமிகளிடம் சரணடைந்தார்.
அவருக்கு ஸ்வாமிகளின் அருளால் குஷ்ட்ம் நீங்கிற்று. ப்ல காலம் நேபாள அரசரின் அரண்மனையில் அவர் பூஜிக்கப்பட்டார்.
ஸ்வாமிகள் எப்போதும் அணிந்திருந்த மகர கண்டியும், கௌரிசங்கர ருத்ராட்ச மாலையும் நேபாள அரசர் கொடுத்தவையே.
ஸ்வாமிகளின் இரண்டாவது சமாதி நேபாளத்தில் பசுபதிநாதர் கோவிலில் உள்ளது.
ஸ்ரீ த்ரிலிங்க ஸ்வாமிகளை ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்வாமி விவேகானந்தர் உள்ளிட்ட ஏராளமான மகான்கள் தரிசித்திருக்கின்றனர்.
ஸ்வாமிகளை நேரில் தரிசித்த , ராமகிருஷ்ண பரமஹம்சர் இவர் தான் உண்மையான பரமஹம்சம் என போற்றி புகழ்ந்தார்.
மூன்றாவது சமாதி
நேபாள சமாதியிலிருந்து எழுந்த ஸ்வாமிகள் வட இந்தியா முழுவதும் சஞ்சரித்துப் பின்னர் ஆந்திர பிரதேசம் வந்தார். பின்னர் தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்தார். ஏராளமான பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்தார்.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் மூன்றாவது சமாதியை எய்தினார். இது நெல்லையப்பர் சமாதி என்று அழைக்கப்படுகிறது.தென்காசியில் சன்னதி மடம் தெருவில் சங்கரன் பிள்ளை என்ற பக்தர் வீட்டில் இந்த சமாதி உள்ளது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆவணி ஆயில்ய நட்சத்திரத்தில் குருபூஜை கொண்டாடப்படுகிறது.
குழந்தையானந்தர் காசியில் தங்கியிருந்த காலத்தில் விஸ்வநாதர் கோயிலையும், காலபைரவர் கோயிலையும் சிறப்பாக பராமரித்தார்.
1887ல் காசியில் தன்னை ஒரு பெட்டியில் வைத்து கங்கையில் விடுமாறு தன் சீடர்களுக்கு கட்டளையிட்டு, அப்பெட்டியுடன் தென்னகத்தில் திருவண்ணாமலை, சுருளி ஆகிய இடங்களில் தோன்றி பக்தர்களுக்கு நீண்ட காலம் அருள்பாலித்தார்.
நான்காவது சமாதி
மூன்றாவது சமாதி நிலையிலிருந்து எழுந்த ஸ்வாமிகள் மதுரையம்பதிக்கு எழுந்தருளினார்.
அங்கு அவர் இருபது வருஷங்களுக்கும் மேலாக நடத்திய அருள் லீலைகளை ஆனந்தமாக அனுபவித்தோர் சென்ற தலைமுறையைச் சார்ந்தவர்கள்.
சதா யோகநித்திரையில் இருந்த அவரது திருவாக்கிலிருந்து எழும் அமுத மொழிகள் மூவாண்டுகளே நிரம்பப் பெற்ற குழந்தை பேசும் மழலை மொழி போல்வே இருந்தது.
அத்துடன் மட்டுமன்றி அவர் வாயிலிருந்து அமுதூற்றை ஒத்த சாளவாய் வழிந்து கொண்டிருந்தது.
குள்ளமான உருவம். பருத்த தொந்தி. வட்டமான முகம். சாளவாய் ஒழுகிக் கொண்டிருக்கும் வாய்.,மழலைப் பேச்சு என்று சுவாமிகளின் தோற்றம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
குழந்தையைப் போன்ற தோற்றம். சிரித்த, ஆனால் மரியாதையைத் தோற்றுவிக்கும் முகம் என்பதாக சுவாமிகளின் உருவ அமைப்பு அமைந்திருந்தது.
‘கண்ணுரெண்டும் எச்சி, கறந்த பாலும் எச்சி ‘ என்று அடிக்கடிச் சொல்லுவார். குழந்தை போல குழறிக் குழறிப் பேசுவார் என்பதாலேயே அவருக்கு ‘குழந்தையானந்தர்’ என்ற பெயர் நிலைத்து விட்டது.
பருத்த தொந்தி. அருள் பொங்கும் முகம். பத்ம பாதங்களோ மஹாவிஷ்ணுவின் அம்சத்தைக் குறிக்கும் சங்கு சக்ரங்களைக் கொண்டவை. நிகழ்த்திய திருவிளையாடல்களோ மெய்சிலிர்க்க வைத்தவை.
1919ம் ஆண்டு மதுரையிலிருந்து வத்தலக்குண்டு சென்ற போது அங்கு தனக்கு தன் சீடர் மூலம் ஒரு கோயிலை நிர்மாணித்தார்.
1932ஆம் ஆண்டு மதுரை லக்ஷ்மிநாராயணபுர அக்ரஹாரம் 4அம் நம்பர் கிருஹத்தில் நவராத்திரி உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
ஸ்வாமிகள் சுமார் 300 பவுன்களில் செய்து வைத்திருந்த ஸ்ரீசக்ரத்திற்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன.
எட்டாம் நாளன்று சிஷ்யர் ராமலிங்கய்யர் வெந்நீர் கொண்டு வந்து வைக்க மகாலிங்க பண்டாரம் என்பவர் நெய்யை ஸ்வாமிகளுக்கு தேய்த்து விட்டுக் கொண்டிருந்தார்.
மகாலிங்கம் அவரது கையில் ஏற்பட்ட பிளவையைக் கண்டு அவர் அடங்கி விடப் போகிறாரா?என்று ராமலிங்கய்யரிடம் கேட்க, குழந்தையானந்தர், “என்னடா சொல்கிறான் திருட்டுப் பயல்! அதெல்லாம் ஒண்ணுமில்லையடா! எல்லாம் நாளன்னிக்கி தான்!” என்று அருளினார்.
சனிக்கிழமை சரஸ்வதி பூஜை முடிந்தது. மதியம் மூன்று மணிக்கு ஸ்வாமிகளே என்று கூப்பிட்ட போது மூன்றாம் முறை கண்ணை விழித்துப் பார்த்தார் அவர்.
ராமலிங்கய்யர் சிறிது பாலை வாயில் ஊற்ற இரண்டு வாய் உள்ளே சென்ற பால் அப்படியே நின்று விட்டது.
இறுதியாக 1932ஆம் ஆண்டு, ஆங்கீரஸ வருஷம், புரட்டாசி மாதம் 23ஆம் தேதி சனிக்கிழமை தசமி திதி திருவோண நக்ஷத்திரம் கூடிய சுபதினத்தில் அடங்கி விட்டார்.
அவர் அடங்கி விட்டாரா? யார் நிர்ணயிப்பது?
அனைவரும் பிரமித்து நின்றனர். பின்னர் தேதியூர் பிரம்மஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்திரிகள் ஸ்வாமிகள் சமாதியடைந்ததை நிர்ணயித்து ஊர்ஜிதம் செய்தார்.
ஸ்வாமிகளை பலகாலம் ஆஸ்ரயித்து வந்த மிராசுதார் கன்கசபாபதி செட்டியார் ஆனையூரில் உள்ள தன் மனையில் அடக்கம் செய்ய விரும்பினார்.
சௌராஷ்டிர பக்தர்களோ திருப்பரங்குன்றம் ரோடில் தற்போது விவேகானந்த ம்டம் உள்ள இடத்தில் அடக்கம் செய்ய விரும்பினர்.
மற்றொரு சாரார் சின்னமணி ஐயர் என்பவரால் யதிகள் சமாதிக்காக விடப்பட்டுள்ள இடத்தில் அடக்கம் செய்ய விரும்பினர்.
இறுதியில் அனுமார் கோவிலில் திருவுளச் சீட்டு போட்டுப் பார்க்கப்பட்டது. அதில் வந்த இடம் சின்னமணி ஐயரின் இடம்.
அது அரசரடியில் காளவாசல் சந்திப்பில் உள்ளது.
மதுரை காளவாசல் அருகே உள்ள கோயிலில் நான்காவது ஸ்வாமிகளின் அதிஷ்டானம் அமைக்கபட்டது.
தனது அதிஷ்டானம் அமைக்கும் போது வழக்கமாக செய்யகூடிய சடங்குகள் ஏதும் செய்ய வேண்டாம் என்று சுவாமிகள் அடங்குவதற்கு முன்பு கூறியுள்ளார்.
மதுரை காளவாசல் அருகே உள்ள கோயிலில் சுவாமிகளின் அதிஷ்டானம் அமைக்கபட்ட பிறகு வத்தலக்குண்டில் தனக்காக எழுப்பப்பட்ட கோயிலில் மீண்டும் எழுந்தருளினார்.
மதுரையை அடுத்த சித்தாலங்குடி என்ற கிராமத்தில் குழந்தை சித்தராய் தங்கி, பல சித்துகள் செய்து சமாதி அடைந்து மீண்டும் வெளியே வந்து வேறொரு இடத்தில் தோன்றியருளினார்.
சித்தாலங்குடியில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 4,5,6 தேதிகளில் குருபூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் அவதார புருஷராக அவதாரம் எடுத்து சமாதி நிலை அடைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் குழந்தையானந்த சுவாமிகள்.
அவர் சமாதியின் உள்ளே இருக்கிறாரா,அடுத்து வெளிக் கிளம்பி எங்கேனும் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாரா? யார் சொல்ல முடியும் அதை?!
சுவாமிகளின் முந்தைய சமாதிகளை ஊர்ஜிதம் செய்த சம்பவங்கள்:
ஸ்வாமிகள் மதுரையில் தங்கியிருந்த வீடு ஒன்றில் த்ரிலிங்க ஸ்வாமிகள் படம் மாட்டப்பட்டிருந்தது. அதைக் கண்ட குழந்தையானந்த ஸ்வாமிகள், “அடே, என்னுடைய அந்த வேஷத்தையும் வைத்திருக்கிறாயா? இங்கே தான் நம்மைக் குழந்தையாக்கி விட்டார்கள்’ என்று கூறினார். இதனால் அவரே த்ரிலிங்க ஸ்வாமிகள் என்பது அவர் வாயாலேயே நிரூபணம் ஆயிற்று.
தன்னிடம் இருந்த 300 பவுனை வைத்து ஸ்ரீசக்ரம் செய்ய தென்காசி சென்றார் குழந்தையானந்த ஸ்வாமிகள். அவரது பக்தரான சங்கரன் பிள்ளை வீட்டுக்கு சென்ற ஸ்வாமிகள் திடீரென்று உள்ளே சென்று அங்கிருந்த சமாதியில் அமர்ந்து விட்டார். என்னதான் பக்தராக இருந்தாலும் தன் முன்னோர் சமாதியில், பரம்பரையாக பூஜித்து வரும் இடத்தில் குழந்தையானந்தர் அமர்ந்திருப்பதைக் கண்ட சங்கரன் பிள்ளைக்கு ச்மாதானமாயில்லை. கேட்கவோ துணிவில்லை.
குழந்தையானந்தர் அவர்கள் உள்ளத்திலிருப்பதை அறிந்து கொண்டு, “என் இடத்தில் உட்கார யாரையடா கேட்கணும்” என்றார்.
பின்னர் சங்கரன் பிள்ளையின் வமிசத்தின் பலதலைமுறையினரின்
விருத்தாந்தங்களை விளக்கினார். எல்லோரும் பிரமித்து வியந்து அவரைத் தொழுது வணங்கினர்.
ஆக த்ரிலிங்க ஸ்வாமிகள் மற்றும் நெல்லையப்பர் சமாதி தன்னுடையவையே என்பதை ஸ்வாமிகளே அருளிக் கூறியிருப்பதால் அவர் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்தவர் என்பது நிர்ணயிக்கப்படுகிறது.
இன்றும் ஸ்வாமிகளின் அரசரடி அதிஷ்டானத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று அருள் பெற்று வருகின்றனர்.
சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள்:
சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் பலப்பல. அவற்றுள் ஒன்று இன்னமும் அவரது பக்தர்களால் நினைவு கூரப்படஉகிறது.
ஒருநாள் மதுரை ரயில் நிலையத்தில் சென்னைக்குச் செல்ல இருந்த ரயில் ஒன்றில் சுவாமி ஏறி அமர்ந்து கொண்டார் குழந்தையானந்தர்.
அது வெள்ளைக்கார அதிகாரி ஒருவருக்கு ரிசர்வ் செய்யப்பட்டிருந்த முதல் வகுப்புப் பெட்டி.
தனக்கென ரிசர்வ் செய்த அந்த இடத்தில் குழந்தையானந்தர் அமர்ந்திருந்ததைப் பார்த்ததும் அந்த அதிகாரி கடும் கோபம் கொண்டார்.
உடனடியாக அந்த இடத்தை விட்டு எழுந்து கொள்ளுமாறு சுவாமிகளை அதிகாரம் செய்தார்.
ஆனால் சுவாமிகள் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் மௌனமாக அமர்ந்திருந்தார்.
அதிகாரி, ஸ்டேஷன் மாஸ்டரிடம் புகார் செய்தார்.
அப்போது கல்யாணராம அய்யர் என்பவர் ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியாற்றி வந்தார்.
அவர் சுவாமிகளைப் பரிசோதித்து டிக்கட் இல்லை என்பதால் கீழே இறக்கி விட்டார்.
சுவாமிகள் பிளாட்பாரத்தில் .
அமர்ந்து விட்டார்.
ரயில் கிளம்ப பச்சைக்கொடி காட்டப்பட்டது. டிரைவர் எஞ்சினை இயக்கினார். ரயில் கிளம்பவில்லை.
பலமுறை முயன்றும் பலனில்லை. அப்போது அங்கு வந்த சுவாமிகளின் மகிமை அறிந்த சிலர், ஸ்டேஷன் மாஸ்டரிடம் சுவாமிகளின் பெருமை பற்றிச் சொல்லி, அவரிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லினர்.
கல்யாணராம அய்யரும் பணிவுடன் சுவாமிகளிடம் மன்னிப்பு வேண்டினார்.
சுவாமிகளை முதலில் அமர்ந்திருந்த ஆசனத்திலேயே அமர்த்தினார். வெள்ளைக்கார அதிகாரிக்கு மாற்று ஏற்பாடு செய்தார்.
உடனே சுவாமிகள் சந்தோஷம் பொங்க ‘ டேய், ரயில் இனிமேல் போகும்டா’ என்றார்.
டிரைவர் உடனே எஞ்சினை இயக்க, ரயில் கிளம்பியது.
ஒருமுறை பக்தர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தார் குழந்தையானந்த சுவாமிகள்.
அந்த வீட்டில் சுவாமிகளின் திருவுருவப் படத்தோடு அவர் முந்தைய உருவமான த்ரையலிங்க சுவாமிகளின் படத்தையும் வைத்து வழிபட்டு வந்தனர்.
அதைப் பார்த்த சுவாமிகள், ‘அடேய், எனது இந்த வேஷத்தையும் வைத்திருக்கிறாயா? பேஷ், பேஷ்’ என்றார் புன்னகையுடன்.
இதன் மூலம் குழந்தையானந்தரின் பூர்வ ஜென்மமே ஸ்ரீ த்ரையலிங்க சுவாமிகள் என்ற உண்மையை அறிந்து கொள்ள இயலுகிறது.
இவ்வாறு மூன்று முறை ஜீவசமாதியிலிருந்து வெளித்தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்த இம்மகான், 1932ம் வருடம் விஜயதசமி அன்று, மதுரை லட்சுமி நாராயணபுரத்தில் சமாதி அடைந்தார்.
மதுரை அரசரடியில் அமைந்திருக்கும் இவரது ஜீவ சமாதியிலிருந்து சூட்சும ரீதியாக பக்தர்களுக்கு இன்றும் ஸ்ரீ குழந்தையானந்தர் உதவி வருகிறார் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
விஜயதசமி அன்று மகானை உளப்பூர்வமாக வழிபடுபவர்களுக்கு எல்லா நன்மையும் பெருகும்.
இவரின் பரிபூரண அருளை பெற்ற சீடர் முருகானந்த சாமிகள் ஆவார் .
இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குமாரலிங்கம் எனும் ஊரில் ஜீவ ஐக்கியம் பெற்றுள்ளார்.
லலிதா சஹஸ்ரநாமம் சொல்வதில் குழந்தையானந்த ஸ்வாமிகள் சொன்ன ஒரு ஆன்மீக இரகசியம்!
பல நூறு ஆண்டுகளாக பாரதத்தில் லலிதா சஹஸ்ரநாமத்தைச் சொல்லி வருவது இயல்பான ஒரு பழக்கமாக பல்லாயிரம் குடும்பங்களில் ஆகி விட்டது.
ஆனால் இதைச் சொல்லுவதில் உள்ள இரகசியத்தை குழந்தையானந்த ஸ்வாமிகள் தன் பக்தை ஒருவருக்கு அனுக்ரஹித்துள்ளார்.
சுவையான அந்த சம்பவத்தின் மூலம் இரகசியம் அனைவருக்கும் வெளிப்பட அனைவரும் அதன் மூலம் பலன் பெறும் பாக்கியமும் ஏற்பட்டுள்ளது.
1927ஆம் ஆண்டு. புதுக்கோட்டை சீஃப் கோர்ட் வக்கீல் சுவாமிநாத ஐயரும் அவரது மனைவி பாகீரதி அம்மாளும் ஸ்வாமிகளின் அநுக்ரஹத்திற்குப் பாத்திரமான சிறந்த பக்தர்கள்.
ஸ்வாமிகளின் மீது பரம் பக்தி அவர்களுக்கு.ஸ்வாமிகள் இரு முறை அவர்கள் வீட்டிற்கு விஜயம் செய்து பல நாட்கள் அங்கு தங்கி இருக்கிறார்.
இரண்டாம் முறை (1927இல்) ஸ்வாமிகள் அவர்கள் வீட்டிற்கு விஜயம் செய்த போது பாகீரதி அம்மாள் ஒன்பது மாத கர்ப்பிணி.
ஸ்வாமிகள் வாய் சிறு குழந்தைகள் குழறுவது போலக் குழறிச் சொற்களை வெளிப்படுத்தும்.
‘பாயி’ என்று பாகீரதி அம்மாளை மாடியிலிருந்து விளித்து ஸ்வாமிகள் கஞ்சியோ காப்பியோ கொண்டு வரச் சொல்லுவது வழக்கம்.
நிறைமாத கர்ப்பிணி படி ஏறி வருதைப் பார்த்து, “உனக்கு சிரமமாய் இருக்கிறதா?” என்று ஸ்வாமிகள் பரிவோடு கேட்பார்.
“நல்ல காரியங்கள் நடக்கும் போது சற்று சிரமம் கூடவே இருக்கும்.ஆனால் அதைப் பொருட்படுத்தக் கூடாது” என்று அருளுரை வழங்கிய ஸ்வாமிகள்,” ஸ் என்று சொல்லாதே! ஸ் என்று போய் விடும்’ என்று அன்பாகக் கூறினார்.
லலிதா சஹஸ்ர நாமம் சொல்லும் வழக்கத்தை பாகீரதி அம்மாள் கொண்டிருந்தார்.
ஒரு நாள் அவரிடம் ஸ்வாமிகள்,”லலிதா சஹஸ்ர நாமம் சொல்லும் போது ஆற்றுக்குக் கரை கட்டுவது போல ஒவ்வொரு நாமத்திற்கும் முன்னும் பின்னும் பிரணவமாகிய'ஓம்'என்பதைச் சேர்த்துச் சொல்” என்று அருளினார்.
ஸ்வாமிகள் மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் வளர்த்த மீனாட்சி அம்மையின் அருள் குழந்தையாவார்.
தன் அன்னையை எப்படி வழிபட்டால் முழுப் பலனும் கிடைக்கும் என்ற இரகசியத்தை அவர் அருளியது அனைவருக்குமான காலத்திற்கேற்ற உபதேசம்.
ஓம் என்னும் உயரிய மந்திரம்
தானம் யக்ஞம் போன்ற சகல காரியங்களையும் ஆரம்பிக்கும் போது ப்ரணவமாகிய ஓம் மந்திரத்தைச் சொல்ல வேண்டும் என்று சாட்யாயனர் அருளியுள்ளார்.
அதே போல காத்யாயனர் ஓம் எனும் ப்ரரணவத்தை சொல்லியே அனைத்துக் காரியங்களையும் ஆரம்பிக்க வேண்டும் என்று அருளியுள்ளார்.
தால்ப்ய பரிசிஷ்டம் என்ற நூலில் ஓம்காரத்தைச் சொல்லாமல் கூறும் சகல மந்திரங்களும் சித்தியைக் கொடுக்க மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது.
ஆகவே தான் லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் ஒவ்வொரு நாமாவுக்கு முன்னரும் பின்னரும் ஸ்வாமிகள் ஓம்காரத்தைச் சேர்த்துச் சொல் என்றார்.
முதலில் சொல்லாவிட்டால் மந்திரம் ஒழுகி விடுமென்றும் கடைசியில் சொல்லாவிட்டால் மந்திரம் பொங்கி வழிந்து விடும் என்றும் காளிகா புராணம் போன்றவற்றில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த அரிய இரகசியத்தை ஸ்வாமிகள் பக்தைக்கு அருளினார்.
பக்தைக்கு ஆண் குழந்தை பிறக்க அது புஷ்ய நட்சத்திரத்தில் பிறந்ததைக் கேட்டு அறிந்த ஸ்வாமிகள், “புஷ்ய நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறான். ஜெகதீசன் என்று பெயர் வை. நன்றாக இருப்பான்” என்று ஆசீர்வாதம் செய்தார்.
ஒவ்வொரு மந்திரம் சொல்லும் விதத்தையும் ஆசார்யர் மூலமாகவே கற்றுத் தெளிந்து உச்சரிக்க வேண்டும் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம்.
காலம் கலி காலமானதால் நமக்குத் தெரியாத இரகசியங்களை இப்படிப் பெரும் மகான்கள் கூறி அருளுவது வழக்கம்.
ஆக லலிதா சஹஸ்ரநாமம் கூறும் வழியை பெரும் மகானான குழந்தையானந்த ஸ்வாமிகள் அருளியுள்ளார்.
அதைக் கடைப்பிடித்து சஹஸ்ர நாமம் சொல்லி முழுப்பலனையும் அன்னையின் அருளால் பெறுவோமாக!
ஸ்ரீ குழந்தையானந்தர்
குரு சரித்திரம் ஆதாரபூர்வமாக
குருவின் வாரிசுகள் மற்றும் பலரால் சொல்லபட்ட உண்மை வரலாறு எல்லோருக்கும் அறிந்துகொள்வதற்காக
குருவின் அருளால் புத்கமாக வெளியிடபட்டுள்ளது.
இந்த புத்தகத்தை படிப்பதற்கு கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திகொள்ளவும் .
https://drive.google.com/open…
இந்த புத்தகத்திற்க்கு copyright
உள்ளது.
இதை மறுபதிப்பு செய்ய
அனுமதி வாங்க வேண்டும் .
குருவே சரணம்!
நன்றி:சென்னையிலிருந்து வெளி வரும் சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் செப்டம்பர் 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரையிலிருந்தும்,
Tamil and Vedas
என்ற இணைதளத்திலிருந்தும் பெறப்பட்ட தகவல்களை தொகுத்து பதிவாக வெளியிடபட்டுள்ளது.
சுவாமி குழந்தையானந்தர் படம்,மதுரை மீனாட்சியம்மன் கோவில் தூணில் அன்னை மீனாட்சியுடன் உள்ள சிற்பத்தின படம்,அவரது ஜீவ சமாதிகளின் படங்கள்
Friday, 1 May 2026
32 முப்பத்தி இரண்டு சிவ தீட்சை
அகத்தியர் அருளியவை முப்பத்தி இரண்டு சிவ தீட்சை என்றால் என்ன ?
இறைவனை காணும் வழி காண நமக்கான குருவிடம் தீட்சை பெற வேண்டும். நமக்கான குருவை தேர்த்தெடுக்க இயலாத பட்சத்தில் சிவ பக்தியும், முறையான சிவ வழிபாடும் நாம் கொண்டிருந்தால் அகத்தியரே நமக்கு குருவாயிருந்து நமக்கான குருவை அடையாளம் காட்டி சிவ தரிசனம் பெற வழிகாட்டுகிறார்.
சித்தர்களின் தலையாய சித்தர், அந்த பரம்பொருளின் பிரியத்துக்குரிய அகத்திய மாமுனி, பாமரனும் தகுதி இருந்தால் இறைவனை அடையலாம் என்பதற்காக , பகிர்ந்துகொண்ட தேவ ரகசியம். சித்த ரகசியம் இவை. இவற்றை உணர்ந்து சித்தியடைந்தவர்களுக்கு ஞானம் பெருகும், பாவம் விலகும் என்கிறார்.மேலும் ஆதி சித்தனான சிவனின் பாத தரிசனம் கிடைக்குமாம்.இந்த தீட்சைகளை நற்குமரனான முருக பெருமான் தனக்கு அருளியதாகவும் கூறுகிறார்.
அகத்தியர் அருளியவை முப்பத்தி இரண்டு சிவ தீட்சைகள். குருவிடம் இருந்து பெறப்படும் உபதேசங்களில் முதன்மையானது இந்த சிவ தீட்சைகள்தான்.இந்த தீட்சைகளை முறையாக குருவின் மூலமாய் பெற்று செபிக்க தீட்சைகள் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.
சிவதீட்சையில் முப்பத்தி இரண்டு
மந்திரங்கள். இவை ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான பலன்கள். நமக்கு தேவையான மந்திரத்தை மட்டும் சொல்லி பலன் பெற்றுக் கொள்ளலாமே என்று நினைக்க வேண்டாம். இந்த முப்பத்தி இரண்டு மந்திரங்களும் ஒவ்வொரு படிநிலையாக கருதப் படுகிறது.ஒவ்வொரு நிலையாக பூரணத்துவம் பெற்று மந்திரம் சித்தியடைந்த பலனை உணர்ந்த பின்னரே அடுத்த நிலைக்கு முன்னேறிச் செல்லுதல் வேண்டும். அகத்தியர் அருளியவை முப்பத்தி இரண்டு சிவ தீட்சைகள் விளக்கத்தை விரிவாக பார்க்கலாம்.
சிவதீட்சை – 1
ஸ்ரீம் அம் ஓம்” என்று லட்சம் முறை செபிக்க முதல் தீட்சை சித்தியாகும். அப்போது இறைவனின் திருக்காட்சியைக் காணலாம் என்கிறார். காட்சியைக் காணும் போது தேகமெல்லாம் வேர்த்துப் போகும். ஆனால் இந்தக் காட்சி கண் மாயை அல்ல, இதைக் கண்டு தேறுவதே முதல் தீட்சையாகும் என்கிறார் அகத்தியர்.
சிவதீட்சை – 2
“ஆம் ஓம் ஹரீம் ரீம்” என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க இரண்டாவது தீட்சை சித்தியாகும். அப்போது மூச்சு உள்ளடங்குவதுடன் , முக்தியும், சக்தியும் சித்தியாகும் என்கிறார்.
சிவதீட்சை – 3
“குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம்” என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க மூன்றாவது தீட்சை சித்தியாகும். அப்போது சந்திரனை போல தேகம் ஒளிவீசும் என்கிறார்.
சிவதீட்சை – 4
“ஸ்ரீங் அங் உங்” என்று லட்சம் முறை செபிக்க நான்காவது தீட்சை சித்தியாகும். அப்போது மோட்சமும், தேவதைகள் உனக்கு பணியும் தன்மையும் ஏற்படும் என்கிறார்.
சிவதீட்சை – 5
“யங் வங் றீங்” என்று லட்சம் முறை செபிக்க ஐந்தாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேவதைகள் ஒரு சட்டையைத் தரும். அதை அணிந்துகொள் என்கிறார்.
சிவதீட்சை – 6
“சங் ரங் உம் ஆம்” என்று லட்சம் முறை செபிக்க ஆறாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேகத்தில் வாசம் வீசும். அத்துடன் தேகசுத்தியும் சித்திக்கும் என்கிறார்.
சிவதீட்சை – 7
“இங் ரங் அவ்வு” லட்சம் முறை செபிக்க, மானை கையில் ஏந்தி இருக்கும் சிவன் அருகில் இருப்பார். வானவர்கள் மகிழ்ச்சியுடன் வா வா என்று அழைப்பார்கள் என்கிறார்.
சிவதீட்சை – 8
“மங் றீங் ரா ரா” என்று லட்சம் முறை செபிக்க ஆனந்தம் உண்டாகும். அத்துடன் தேவர்கள் வந்து உன்னுடன் இணைவார்கள் என்கிறார்.
சிவதீட்சை – 9
“வங் கிலியும் சிங் அம் ஐம்” என்று லட்சம் முறை செபிக்க உன் வினைகள் எல்லாம் தீர்ந்து உடல் கல்லைப் போல் உறுதிபெறும்.இவ்வாறு ஒன்பதாவது தீட்சை சித்தியாகும் என்கிறார்.
சிவதீட்சை – 10
“வம் வும் அம் இம்” என்று லட்சம் முறை செபித்தால் தேகம் பொன் போல ஆகும். இவை இனிதான பத்தாவது சிவதீட்சை ஆகும் என்கிறார்.
சிவதீட்சை – 11
“மங் றீங் றீங்” என்று லட்சம் முறை செபிக்க பதினோராவது தீட்சை சித்திக்கும். பாதி மதியை சடையில் அணிந்த சிவபெருமானின் திருவடியைப் பணிந்து என்றென்றும் தொண்டனாய் இருப்பாய் செய்துபார் என்கிறார்.
சிவதீட்சை – 12
கற்பம் உண்டு நிலைத்தவர்க்கு சிவபெருமானின் ஒருமுகமான தற்புருசமே இது. “வம் ஆம் நம்” என்று லட்சம் உரு செபிக்க சித்தியாகும். கெவுன மார்க்கம் செலல ஏதுவாக சட்டை ஒன்றும் கிடைக்கும் அதை அணிந்தால் கெவுன சித்தி கிடைக்கும் என்கிறார்.
சிவதீட்சை – 13
அறிவுத் தெளிவுடன் “ஊம் ஆம்” என்று லட்சம் முறை செபிக்க தேகம் வச்சிர தேகமாகும். எமன் கூட அருகில் வர மாட்டான்.இவ்வாறு பதின்மூன்றாவது தீட்சை சித்திக்கும் என்கிறார்.
சிவதீட்சை – 14
“றம் றூம் ஸ்ரீம் அவ்வு” என்று லட்சம் முறை செபிக்க பதின்நான்காவது தீட்சை சித்தியாகும். சாயுட்சய பதம் பெறுவார் என்கிறார் .
சிவதீட்சை – 15
“ஸ்ரீம் றீம் றீம் ஓம்” என்று லட்சம் முறை செபிக்க தேகம் கல்போலாகும். தேர்ந்துபார். என்ன அற்புதம் சிவ சிவா நாதவிந்து கட்டிப்போகும்.இதுவே பதினைந்தாவது தீட்சை ஆகும். இவைகளை ஆய்ந்தறிந்தவர்களுக்குப் பதினாறாம் தீட்சையைச் சொல்கிறேன் கேள் என்று தொடர்கிறார்.
சிவதீட்சை – 16
“சங் இங் றங்” என்று லட்சம் முறை செபிக்க மாந்தளிர் போல் தேகமுள்ள மனோன்மணித் தாய் தன் இருகரம் நீட்டியபடியே மகனே என வருவாள். அவள் வரும் போதே அவளைப் பணிந்துகொள் என்கிறார் அகத்தியர்.இதுவே பதினாறாவது தீட்சையாகும்.
சிவதீட்சை – 17
“றீங் றீங் ஸ்ரீம் ஸ்ரீம்” என்று லட்சம் முறை செபிக்க காய்ப்பான நரையும் இல்லை. திரையும் இல்லை. கற்பத்தை உண்ண சுருக்கான வழி. வழியறியாதவர்கள் உன்னை ஏய்த்து விடுவார்கள். அவர்களின் ஏய்ப்புக்கு நீ ஆளாகிவிடாதே என்கிறார்.மேலும் இது ஒரு நல்வாய்ப்பு என்கிறார் அகத்தியர். இதுவே பதினேழாம் சிவதீட்சையாகும்.
சிவதீட்சை – 18
“சங் சிங் ரா ரா” என்று லட்சம் முறை செபிக்க சட்டை போகும். இது ஈஸ்வரியாளின் தீட்சை என்கிறார். இது பதினெட்டாவது தீட்சையாகும்.
சிவதீட்சை – 19
“திரிநேத்திராயா வா வா” என்று விருப்பமுடன் லட்சம் முறை செபிக்க பத்தொன்பதாவது தீட்சை சித்தியாகும்.இந்த தீட்சை சட்டையை தள்ளும் என்கிறார்.
சிவதீட்சை – 20
“ஸ்ரீங்காரதேவாய நமா” என்று லட்சம் முறை செபிக்க தொட்டதெல்லாம் சித்தியாகும்.இது இருபதாவது சிவதீட்சையாகும்.
சிவதீட்சை – 21
“இங் அங் றங்” என்று லட்சம் முறை செபிக்க எட்டுத் திசையையும் வெல்லலாம்.இதுவே இருபத்தியொன்றாவது சிவதீட்சையாகும்.
சிவதீட்சை – 22
“அரி அரி ஓம்” என்று என்று லட்சம் முறை செபிக்க இருபத்தி இரண்டாவது சிவதீட்சை சித்தியாகும்.
சிவதீட்சை – 23
“ரா ரா ரா றீம் றீம்” என்று லட்சம் முறை செபிக்க இருபத்தி மூன்றாவது சிவதீட்சை சித்தியாகும்.
சிவதீட்சை – 24
குணமாகவும் மறைவாகவும் “லீ லீ லீ அரஹர றீ றீ றி” என்று லட்சம் முறை செபித்து வாழ்த்துவாய் என்கிறார் அகத்தியர்.
சிவதீட்சை – 25
இருபத்தி ஐந்தாவது தீட்சையைக்கேள். கெவுனம் ஓடவென்றால் இதைக்கேள். “ஏ ஏ ஏ ஊ ஊ ஊ” என்று லட்சம் முறை செபிக்க இந்த தீட்சை சித்தியாகும் என்கிறார்.
சிவதீட்சை – 26
இருபத்து ஆறாவது தீட்சையைக்கேள், இது மாதாவின் தீட்சை இது, “இஷயா இஷயா ஓம்” என்று லட்சம் முறை செபிக்க மௌனம் சித்தியாகும் என்கிறார்.
சிவதீட்சை – 27
இருபத்தி ஏழாவது தீட்சையைக்கேள். இத்தீட்சையில் நீயே சிவனாவாய். அதைச் சொல்கிறேன். “ஓம் சிவாய சிவா றீங்” என்று லட்சம் முறை செபிக்க வேண்டும் என்கிறார்.
சிவதீட்சை – 28
இருபத்தி எட்டாவது தீட்சையைக்கேள். “சிவ ஓம் சிவாய நம” என்று லட்சம் முறை செபிக்க உலகத்தில் பூரிப்பான புகழ் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.
சிவதீட்சை – 29
இருபத்தி ஒன்பதாவது தீட்சையைக்கேள். இது போற்றுதற்குரிய புகழ் கிடைக்கும். அதற்கு “சவ்வும் மவ்வும்” என்று லட்சம் முறை செபிக்க வேண்டும் என்கிறார்.
சிவதீட்சை – 30
முப்பதாவது தீட்சையைக்கேள். “மங் சங் கங்” என்று லட்சம் உரு செபிக்க
உன் தேகம் ஒருநாளும் அழியாது. அகம் மகிழ நரையும் இல்லை திரையும் இல்லை. யுகம் வரைக்கும் உன் தேகத்தை நிலைநிறுத்தும்.
சிவதீட்சை – 31
, “ஸ்ரீம் றீம்” என்று ஓதுவாய் லட்சம் உரு இது முப்பத்தியொன்றாம் தீட்சை என்கிறார்.
சிவதீட்சை – 32
முப்பத்து இரண்டாந் தீட்சைகேள். “நங் கிலி சிங் கிலி” என்று லட்சம் உரு செபிக்க கோடி காலம் வரை இறவாமலிருத்தும் மற்றுமுள்ள காலமனைத்தும் வாழ்த்தி தோத்திரங்கள் செய்து கொள்வாய். கொன்றாலும் வாள் கொண்டு வெட்டிப்போட்டாலும் வெட்டுப்பட்ட இடம் சற்றும் குறையாமல் ஒட்டிக்கொள்ளும் என்கிறார்.
Saturday, 25 April 2026
பாரதியார் சங்கல்பம்
ஶ்ரீ பேச்சியம்மன் வரலாறு
☘சிவ சித்தாந்தம்☘
🍃ஶ்ரீ பேச்சியம்மன் வரலாறு🍃
முன்னொரு காலத்தில் வல்லாளன் என்ற அரசன் தனக்கு சகல வல்லமையும் உலகை ரக்ஷிக்கும் உத்தம பிள்ளை வரம் கேட்க விரும்பி ப்ரமனை நோக்கி தவம் செய்தான் தவத்திற்கிரங்கிய பிரமன் தோன்றி என்ன வரம் வேண்டும் ? எனக்கேட்க உலகை ரக்ஷிக்கும் மகன் வேணுமெனக்கேட்க பிரமனும் அப்படியே வரம் தந்தோமென கூறி மறைந்தார். சில காலத்தில் வல்லாளின் மனைவி கருவுற்றாள் இதனையறிந்த தேவர்கள் முனிவர்கள் எல்லாம் கூடி, கருவில் உள்ள சிசு பிறந்து வளர்ந்தால் உலகத்தையும் நம்மையும் அழித்துவிடுவான். என வருந்திட அதனையறிந்த சரஸ்வதி தன் கணவனான பிரமதேவனால் தந்த வரத்திற்கு பரிகாரம் தேட விரும்பி, மிகுந்த கோபத்துடன் சென்று அந்த வல்லாளனை தன் காலினால் மிதித்துக்கொண்டு அவன்
மனைவியை தன் மடியில் கிடத்தி அவள் கர்ப்பத்தில் உள்ள சிசுவை எடுத்து அவள் குடலை மாலையாக அணிந்து பேச்சி காளியாக விளங்கினாள் அதுமுதல் அவள் தீயவர்களை அழித்தும் நல்லவர்களை காத்தும் வரும் பேச்சியாயி ( வாகீஸ்வரி ) என்று மக்கள் வழிபட்டு வருகிறார்கள்.
வரலாறு இவளை கிராம தேவதையாக ஶ்ரீமாரியம்மன் கோயிலில் தனிக்கோயிலாகவும் வைத்து வழிபட்டு வரலாயினர் இவளுடைய தோற்றம் மிக பயங்கர வடிவத்தில் உள்ளது இவளுடைய வடிவத்தை ஆகம தியான சுலோகம்பின்வருமாறு கூறுகிறது.
🌿ஶ்ரீ பேச்சியம்மன் தியானம்
🌿ரக்த வர்ணாம் த்விபுஜாம் கோரவக்தராம் திரிநேத்ரகாம்
குந்தனம் ஊர்த்துவகேசஞ்ச ஆஸ்யோத் கடந ஸம்யுதாம்
🌿சுஷ்கோதரஞ்ச ஜங்கோர்த்வே ஸூஷ்மவஸ்திராங்க பூஷணாம்
பாதாந்தே வல்லாளேந்திரஸ்ய தத்பத்னீஞ்ச த்விஹஸ்தகே
🌿தத்பூர்ண கர்ப்ப பேதிந்யாம் அந்த சுசிகரோஸ்திதாம்
தஸமாம்ஸஞ்சருதிரம் ஸவ்ய ஹஸ்தேன பக்ஷணீம்
🌿ஸர்யேது க்ஷூ ரிகம் சைவ பத்மம் சக்ரஞ்ச தண்டகாம்
வாமே டமரு கேடஞ்ச ஜம்படம் சங்கரஞ்ச வச
🌿மஹாகண்டா ஸம்யுக்தாம் சூலம் ப்ரஹாரமேவச
இத்யேசம் கோர ரூபந்து பேச்சிகாளிம் விபாவயே
🌿பார்வதியின் கோபவடிவமே காளியாகும்
சரஸ்வதியின் கோப வடிவமே பேச்சி ( காளி ) ஆயி
பேச்சி ( வாக்குக்கு அதிபதி சரஸ்வதி ) க்கு ஆயி (தாய்) பேச்சிஆயி
🌿ஓம் ஐம் க்லீம் ஐம்
வாகீஸ்வர்யை நம
🔥🔥🙏🏼🙏🏼🙏🏼🔥🔥
☘சிவ சித்தாந்தம்☘
Friday, 24 April 2026
அவளிவணல்லூர்" சாட்சிநாதர்
கணவன்-மனைவி ஒற்றுமை தரும் "அவளிவணல்லூர்" சாட்சிநாதர் திருக்கோவில் சிறப்புகள்! 🙏✨
தமிழகத்தின் ஆன்மீக பொக்கிஷங்களில் ஒன்றான, திருவாரூர் மாவட்டம் அவளிவணல்லூர் அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோவிலின் மர்மங்களையும், அந்த ஈசனின் கருணையையும் பற்றி இன்று காண்போம்.
📍 தல வரலாறு: "அவள் இவள் தான்!"
இந்தக் கோவிலின் பெயருக்குப் பின்னால் ஒரு நெகிழ்ச்சியான கதை உண்டு. இத்தலத்து சிவாச்சாரியாரின் மூத்த மகள் சுசீலை, அம்மை நோயால் பாதிக்கப்பட்டு தன் உருவத்தையும் கண்பார்வையையும் இழந்தாள். நீண்ட யாத்திரை முடிந்து வந்த அவளது கணவன், உருவம் மாறிய மனைவியை அடையாளம் தெரியாமல் ஏற்க மறுத்தான்.
அப்போது அந்த ஈசன் தோன்றி, கோவிலின் சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் சுசீலையை நீராடச் செய்தார். அம்மைத் தழும்புகள் மறைந்து அவள் மீண்டும் பேரழகு பெற்றாள். இறைவன் தன் கணவனிடம் "அவள் இவள் தான்" என்று சாட்சி கூறி இருவரையும் சேர்த்து வைத்தார். இதனால் இறைவனுக்கு "சாட்சிநாதர்" என்றும், ஊருக்கு "அவளிவணல்லூர்" என்றும் பெயர் வந்தது.
🌟 கோவிலின் தனிச்சிறப்புகள்:
சுயம்பு லிங்கம்: இங்குள்ள மூலவர் சாட்சிநாதர் தானாகத் தோன்றிய சுயம்பு மூர்த்தி ஆவார்.
பஞ்ச ஆரண்யம்: காவிரி தென்கரைத் தலங்களில் சிவனின் "பஞ்ச ஆரண்யம்" (ஐந்து காடுகள்) தலங்களில் இதுவும் ஒன்று. (திருவாவடுதுறை போன்ற ஐந்து தலங்களின் வரிசையில் இது முக்கியமான காலசந்தி தலம்).
அம்மன் சவுந்தர நாயகி: பெயருக்கேற்றார் போல பேரழகுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.
தேவாரப் பாடல்: திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் போற்றிப் பாடப்பட்ட 163-வது தேவாரத் தலம்.
🙏 பிரார்த்தனை பலன்கள்:
✅ கண் வியாதிகள்: கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வேண்டிக்கொண்டால் நற்பலன் கிடைக்கும்.
✅ தோல் நோய்கள்: அம்மை மற்றும் இதர சரும நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபடுவது சிறப்பு.
✅ குடும்ப ஒற்றுமை: பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் பெருகவும் சாட்சிநாதர் பேரருள் புரிகிறார்.
ℹ️ கோவில் விபரங்கள்:
📍 ஊர்: அவளிவணல்லூர் (அம்மாபேட்டை அருகில்), திருவாரூர் மாவட்டம்.
⏰ நேரம்: காலை 7:00 - 12:00 | மாலை 4:00 - இரவு 8:30.
📅 முக்கிய நாள்: தை அமாவாசை அன்று இங்கு நீராடுவது மிக விசேஷம்.
வாழ்க வளமுடன்! இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து இறைவனின் அருளைப் பெறச் செய்யுங்கள். 🌸🕉️
Tuesday, 21 April 2026
ஸ்ரீமத் வேங்கட சுபானந்த ஸ்வாமிகள் (தாதா சித்தர்)
#ஜாதகம் சரியில்லாதவர்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய சித்தர் ஜீவசமாதி.
ஸ்ரீமத் வேங்கட சுபானந்த ஸ்வாமிகள் (தாதா சித்தர்) சென்னையில் உள்ள ஒரு சக்திவாய்ந்த சித்தரும், 1796-ல் ஜல ஜீவசமாதி அடைந்தவருமாவார். ஓல்ட் வாஷர்மேன்பேட்டையில் அமைந்துள்ள இவரது சமாதி.
#சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை மகாராணி தியேட்டர் பேருந்து நிறுத்தம் அருகில் ஸ்ரீமத் வேங்கடசுப்பானந்த சுவாமிகளின் #ஜீவசமாதி அமைந்துள்ளது. பக்தர்கள் அனைவரும் இந்த ஜீவசமாதியை ‘தாத்தா கோயில்’ என்று அன்புடன் அழைக்கிறார்கள். இங்கு தாத்தா கோயில் என்று கேட்டால்தான் அனைவருக்கும் வழி தெரிகிறது. மகாராணி போஸ்ட் ஆபீஸ் பின்புறம் கோதண்டராமன் தெருவில் அமைந்துள்ளது இந்த சித்தர் ஜீவசமாதி. வேங்கட சுப்பானந்த சுவாமிகள் ஜல ஜீவசமாதி பக்தர்களால் வணங்கப்படும் அருள் மிகுந்த தலமாகும். கோயிலின் சிறப்புகளும் அதிசயங்களை நிகழ்த்தும் சித்தரைப் பற்றியும் இந்தப் பதிவில் அறிவோம்.
நீர் சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரகக் கோளாறு, நீரால் வரக்கூடிய கண்டங்களை தீர்ப்பவராகவும், மன பயம், மனக்குழப்பம் இருப்பவர்கள் இவரை வழிபட, மன தைரியம், மன வலிமை அதிகரிக்கும்.
மணலை அள்ளி எடுத்துக் கொடுத்து உணவு பொருட்கள் ஆக்கினார். குளத்து தண்ணீரை எடுத்து தெளித்து நோய்களை விரட்டினார்.
இக்கோயிலுக்கு செல்பவர்கள் எலுமிச்சம் பழம் வாங்கிச் சென்று, அந்தப் பழத்தை அவர் பாதத்தில் வைத்து தந்ததும் வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். இந்த எலுமிச்சைக்கு அதீத சக்தி உள்ளதாக நம்புகின்றனர். தொடர்ந்து இங்கு வந்து 3 நல்ல எண்ணெய் விளக்கு போட வேண்டியது கிட்டும்.
Monday, 20 April 2026
மந்திர பரிணாமம்
'அபூர்வம்'
நீங்கள் செய்த மந்திர ஜபம் எங்கே ஒளிந்திருக்கிறது தெரியுமா?
"மந்திரத்தைச் சொன்னேன், ஆனால் பலன் தெரியவில்லையே?" என்று சலித்துக் கொள்பவரா நீங்கள்?
அப்படியானால், நீங்கள் 'அபூர்வம்' என்ற அந்த அற்புத ரகசியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பொதுவாக 'அபூர்வம்' என்றால் நாம் 'அரியது' அல்லது 'முன்பு பார்த்திராதது' என்று பொருள் கொள்கிறோம்.
ஆனால், இந்தியத் தத்துவ மரபில், குறிப்பாக மீமாம்சை மற்றும் தந்திர சாஸ்திரத்தில், இதற்கு மிக நுட்பமான ஒரு பரிமாணம் உண்டு.
விதைக்கும் விளைவுக்கும் இடையே ஒரு பாலம்
நாம் ஒரு செயலைச் செய்கிறோம்; அதன் பலன் சில காலம் கழித்தே கிடைக்கிறது.
உதாரணத்திற்கு, இன்று ஒரு யாகம் செய்கிறோம் அல்லது ஒரு மந்திரத்தை உச்சரிக்கிறோம்.
அந்தச் சத்தம் காற்றில் கரைந்துவிடுகிறது.
பிறகு எப்படி அது பல மாதங்கள் கழித்து நமக்கு ஒரு நற்பலனைத் தருகிறது?
செயல் முடிந்துவிட்டது, பலன் இன்னும் வரவில்லை.
இந்த இடைப்பட்ட காலத்தில் அந்தச் செயல் என்னவாக இருக்கிறது?
இதற்கான விடைதான் 'அபூர்வம்'.
மீமாம்சை தத்துவத்தின் தந்தை ஜைமினி, இதை ஒரு "கண்ணுக்குத் தெரியாத கர்ம சக்தி" (Invisible potency) என்கிறார்.
நீங்கள் செய்த கிரியைக்கும், நீங்கள் அடையப்போகும் பலனுக்கும் இடையில் ஒரு 'நிகழ்நேரச் சேமிப்பாக' இந்த அபூர்வம் செயல்படுகிறது.
கேயாஸ் தியரியும் (Chaos Theory) அபூர்வமும்
இதை நவீன அறிவியலோடு ஒப்பிட்டால் வியப்பாக இருக்கும். கேயாஸ் தியரியில் 'பட்டாம்பூச்சி விளைவு' (Butterfly Effect) என்று ஒன்று உண்டு.
ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைப்பு உலகின் மறுபக்கத்தில் புயலை உருவாக்கலாம்.
மந்திர சாஸ்திரமும் இதையே சொல்கிறது.
நீங்கள் உச்சரிக்கும் ஒவ்வொரு 'வர்ணமும்' (எழுத்து) ஒரு அதிர்வு.
அந்த அதிர்வு பிரபஞ்சப் பெருவெளியில் ஒரு சிறு சலனத்தை ஏற்படுத்துகிறது.
அந்தச் சலனம் உடனடியாகப் பலனாக மாறுவதில்லை. மாறாக, அது பிரபஞ்சத்தின் 'Non-linear' (நேரியல் அற்ற) அமைப்பில் ஒரு தகவலாகச் சேமிக்கப்படுகிறது.
இதுவே அபூர்வ சக்தி.
இது ஒரு வங்கிக் கணக்கில் நாம் சேமிக்கும் பணத்தைப் போன்றது.
பணம் கையில் இல்லை, ஆனால் கணக்கில் இருக்கிறது. தேவைப்படும்போது அது 'பலனாக' உங்கள் கையில் வந்து சேரும்.
சப்தமே சக்தி
'மாத்ருகா சக்ர விவேகம்' போன்ற நூல்கள் கூறுவது போல, 'அ' முதல் 'க்ஷ' வரையான எழுத்துக்கள் வெறும் ஒலிகள் அல்ல;
அவை சக்தியின் வடிவங்கள். மந்திரத்தின் வலிமை அதன் அர்த்தத்தில் இல்லை, அதன் சப்த அமைப்பில் (Phonetic structure) உள்ளது.
நீங்கள் அர்த்தம் தெரியாமல் ஒரு மந்திரத்தைச் சொன்னாலும், அதன் முறையான உச்சரிப்பு பிரபஞ்சத்தில் அந்த 'அபூர்வ' ஆற்றலை விதைத்துக்கொண்டே இருக்கும்.
எனவே, நீங்கள் செய்யும் ஒவ்வொரு மந்திர ஜபமும், நற்செயலும் வீணாவதில்லை.
அவை 'அபூர்வ' நிலையை அடைந்து, பிரபஞ்சத்தின் நுட்பமான விதிகளுக்கு உட்பட்டு வலுப்பெறுகின்றன.
அடுத்த முறை நீங்கள் ஜபம் செய்யும் போது, "பலன் கிடைக்கவில்லையே" என்று எண்ணாதீர்கள்.
நீங்கள் ஒரு மகா சக்தியை (Apūrva) உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அந்தச் சக்தி சரியான தருணத்தில், மிகச் சரியான பலனை உங்களைத் தேடி வரும்படி செய்யும்.
அதுதான் மந்திர சாஸ்திரம் சொல்லும் ரகசியம்!
சிறுகரும்பூர் ஸ்ரீ திரிபுரஸுந்தரி - த்ரிபுராந்தகேஸ்வரர் - ஸ்ரீ சுந்தர காமாக்ஷி அம்பாள் ஆலயம்
நின்ற கோலத்தில் இருக்கும் அதிசய காமாக்ஷி அம்மன் மற்றும் ஸ்ரீசக்ர திருக்கோவில்!
சிறுகரும்பூர் ஸ்ரீ திரிபுரஸுந்தரி - த்ரிபுராந்தகேஸ்வரர் - ஸ்ரீ சுந்தர காமாக்ஷி அம்பாள் ஆலயம்:
காஞ்சிபுரம் நகரில் இருந்து கீழம்பி - திருப்புட்குழி வழியாக வேலூர் செல்லும் பெங்களூரு பிரதான சாலையில், காஞ்சிபுரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில், ஓச்சேரி என்ற கிராமத்திற்கு அடுத்து அமைந்துள்ள ஊர், சிறுகரும்பூர்.
இங்கே அமைந்துள்ளது, சுந்தர காமாக்ஷி அம்பிகை ஆலயம்.
கிட்டத்தட்ட 1500-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம்.
கோவிலை தற்போது பூஜித்தும்,பராமரித்து வரும் நவீன்குருக்கள், கோவிலை பற்றி நமக்குதெரிவித்தார்.
அவர் கூறியமகத்துவங்கள் இதோ :
- வ்யாக்ரபாதர் பூஜித்த ஸ்வயம்புவலிங்கம் இங்குள்ள ஸ்வாமி.
பார்த்தாலே நன்கு அறியலாம், கீழேபரந்தும், மேலே குறுகியும், பிடித்துவைத்தது போன்ற லிங்க மூர்த்தி.கஜப்ருஷ்ட விமான அமைப்பின் கீழேஇருக்கிறார். .
- தல மரம் - சரக்கொன்றை பரமேஸ்வரருக்கு பரம இஷ்டமான மரம்.
-இங்குள்ள தக்ஷிணாமூர்த்தி ரொம்பவும் மஹிமை பெற்றவர்.
அம்பிகை தன்னுள் பாதியாக உள்ளதைஅறிவிக்க, ஒரு காதில் மகரக்குழையும்,மறுகாதில் தோடும் அணிந்திருக்கிறார்.
தொண்டர் தம் பெருமையைசொல்லவும் பெரிதே என்றவாக்கிற்கிணங்க, இவ்வாலயத்தில்அறுபத்து மூவரும் இல்லை.
மாறாக,அறுபத்து மூவரும், தக்ஷிணாமூர்த்தியுடைய தலைசடையில் 63 லிங்கங்களாக காட்சிதருகிறார்கள்.
அதாவது, சிவனை வழிபட்டுசிவமாகவே ஆனதால் லிங்கமாகவும்,அடியார்களை இறைவன் தலை மீதுவைத்து பிள்ளை போல்கொண்டாடுவார் என்பது போல், அவர்தலையிலும் இருப்பது, பக்திக்குமரியாதை.
கோவிலில் ஓரிடத்தில் வில்வமும் வேம்பும் ஒன்றாய் வளர்ந்திருக்கின்றன.
வேப்ப மரம் தனது கிளையை வில்வத்தின் மீது போட்டவாறு வளர்ந்திருக்கிறது.
அம்பாள் சிவனுடைய தோள் மீது கைபோட்டவாறு இருப்பது போல் இருக்கும்.
வில்வ மரம் மூன்று கிளைகள் விட்டு சூல வடிவில் வளர்ந்திருக்கிறது.
அடியில் ஒரு பெரியசிவலிங்கமும் அம்பாளும் உண்டு.
- தவிர அழகு வாய்ந்த விநாயகர்,சண்முகர், நவகிரஹங்கள் சந்நிதிகள்உண்டு.
- ஸ்வாமியின் சந்நிதியில் முழுக்க கல்திருப்பணி.
விமானம் தவிர.
அதேபோல், எங்கும் காணக்கிடைக்காத வகையில், அம்பாளுக்கு முழுவதும் பச்சைக்கல் கொண்டு சந்நிதிஅமைக்கப்பட்டுள்ளது.
- பச்சைக்கல்லுடைய மகிமையால், அம்பாள் சந்நிதியில் உஷ்ணம் நிரம்புவதில்லை.
எப்போதும் குளிர்ச்சியாக இருக்கிறது.
- அந்நியர்களின் படையெடுப்புக்குஅஞ்சி, முற்காலத்தில் எல்லா விக்கிரஹங்களும் ஸ்வாமி சந்நிதியில் வைக்கப்பட்டும், பூமியில் புதைக்கப்பட்டும், மறைக்கப்பட்டன.
கோவில் இருக்குமிடம் தெரியாமல், மண்மேடு அமைத்து கோவிலை மூடிவிட்டனர்.
காலப்போக்கில் இங்குகோவில் இருந்ததே தெரியாமல் போனது.
- பிற்காலத்தில்(1954), காஞ்சி பெரியவர்களின் உத்தரவுப்படி, தொ. மு.பாஸ்கரத்தொண்டைமான் அவர்கள், இங்கே அகழ்வுப்பணி மேற்கொண்டு, மண்மேட்டுக்குள் இருந்த சந்நிதியை கண்டுபிடித்தார்.
- அருகே இருந்த அம்பாள் சந்நிதி வெற்றிடமாக இருந்ததால், சிறுவர்கள் விளையாட சென்றார்களாம், ஆனால் எப்போது போனாலும் ஒரு சர்ப்பம் சீறிக்கொண்டு அவர்களை விரட்டியதாம். கோவில் கண்டுபிடிக்கப்பட்டதையும், சர்ப்பத்தின் சீற்றத்தையும் குறித்து, காஞ்சி மஹாபெரியவாளிடம் தெரிவித்ததை அடுத்து, பெரியவாள் இங்கே விஜயம்செய்து, தரிசனம் செய்தார்களாம்.
- அம்பாள் சந்நிதிக்கு வந்த அவர் (17-04-1978), விக்ரஹம் இல்லாதபோதும் சாந்நித்தியம் இருப்பதால் தான் சர்ப்பம் யாரையும் நுழையவிடாமல் தடுப்பதாக அறிந்தார்.
அதே போல், அங்கே ஒரு அழகிய சிவலிங்க ஆவுடையாரின் மீது, கல்லிலேயே அம்பாளுடைய ஸ்ரீசக்ரயந்த்ரம் இருந்தது.
இதைக்கண்ட பெரியவாள், அங்கிருந்த நெருஞ்சி முட்களின் ஊடே, தர்ப்பைபாயை விரித்து, அமர்ந்துவிட்டார்.
3 நாட்களுக்கு அங்கிருந்து விலகவில்லை.
பின்பு, உடனே திருப்பணி துவங்க அனுக்கிரஹம் தந்தார். காஞ்சியை சேர்ந்த சுப்பையா ஸ்தபதி இதைமேற் கொண்டு செய்தார்.
- திருப்பணி நிறைவடையும் நேரம், தரைத்தளம் போட தரையை தோண்டிய பொழுது, மேலும் ஒரு அம்பாள் சிலையும், அம்பாள் சந்நிதி விமானத்திற்கும் சுவருக்கும் இடையேவர வேண்டிய மேல் வரிசை சிற்பக்கற்களும் கிடைத்தன.
கர்ப்பத்தில் இருக்கும் சிசு, தாயும் தந்தையும் சிசுவோடு இருத்தல் எனபலவித சிற்பங்களை கொண்ட அக்கற்களை இன்றும் பிரகாரத்தில் காணலாம்.
விமானம் எழுப்பப்பட்ட காரணத்தால் அவற்றை மேல்வரிசையில் வைக்க இயலவில்லை.
புதிதாக கிடைத்த அம்பாள் திரிபுரசுந்தரி என்றும், அவள்தான் த்ரிபுராந்தகேஸ்வரஸ்வாமியின் போக சக்தி அம்பாளென்றும், சுந்தர காமாக்ஷி, தானே சிவசக்தி ஐக்கியமான ராஜராஜேஸ்வரிஅம்சமென்றும் பெரியவாளால் தெரிவிக்கப்பட்டு, அவ்வாறே சுவாமி சந்நிதிக்குள்ளேயே தெற்கு நோக்கி திரிபுரசுந்தரி அம்பாளும், தனி பச்சைக்கல் சந்நிதியில் கிழக்குநோக்கி ஸ்ரீ சக்ர பீடத்தோடு சுந்தரகாமாக்ஷி அம்பாளும் அருள்கின்றனர்.
1984ல் கும்பாபிஷேகம் காஞ்சி புதுப்பெரியவர்கள், கிருபானந்த வாரியார் ஆகியோர் முன்னிலையில் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
அம்பாள் ஐக்கிய ரூபத்தில் ஸ்ரீசக்ரபீடத்தோடு இருக்கும் கோவில்களில் ( திருவாரூர், திருநாகேஸ்வரம், சிதம்பரம்) கண்டிப்பாக ஒரு காவல் தெய்வம் உண்டு.
சாஸ்தா, பைரவர், வீரபத்ரர்என யாராவது இருப்பர்.
- இங்கேயும், தக்ஷனுக்கு ஆட்டுத்தலை தந்து, அனுக்கிரஹம் செய்த கோலத்தில் அனுகிரஹ வீரபத்ரர் அம்பாளுக்கு எதிரே இருக்கிறார். அவர் சிரசில் சிவலிங்கம் தாங்கியவாறு காணப்படுகிறார்.
- ஸ்வாமி சந்நிதியில் விலகி இருக்கும் நந்தியும், சுவற்றில் பாதி புலி உடல்கொண்ட ஆண் ஒருபுறம் தீபம்காட்டுவதாகவும், பாதி புலி உடல்கொண்ட பெண் மறுபுறம் தூபம் காட்டுவதாகவும் சிற்பங்கள் உள்ளன.
- சுந்தரகாமாக்ஷி அம்பாள், கிட்டத்தட்ட 6 அடி உயரம். கைகளில் பாசாங்குசம் அபய வரதத்தோடு கூடிய பேருக்கேற்ற அழகு சொட்டும் திருமேனி.
- முன்னே லிங்கபீடத்தில் ஸ்ரீசக்ரம்.
அம்பாளுக்கு கால்களுக்கு இடையேத்வாரமும், அதன் மூலம் கொலுசுசார்த்தும் வழியும் உள்ளது.
- அம்பாளுடைய முகலாவண்யம் சொல்லில் அடங்காதது.
அங்கே சென்று நின்று அனுபவிப்பவர்களுக்கே அதன் உள்ளர்த்தம் புரியும்.
அபிஷேகத்தில் தலையில் ஜலம் விடும்போது, கண்களை மூடிக்கொள்வது போலவும், ஜலம் வடிந்தவுடன் மீண்டும் கண்களை திறந்து கொள்வது போலும் காட்டி, அம்பாள் ஜாலம் பண்ணிக்கொண்டேஇருக்கிறாள்.
- அம்பாள் பராசக்தியாக, ஸ்ரீவித்யாமூர்த்தி ஆக இருப்பதால், வாசலில் சுவர்களிலும் தூண்களிலும், கணபதி, ஸ்கந்தர், லட்சுமி, சரஸ்வதி, இரண்டு குதிரைகளோடு சாமரம் வீசும் அஷ்வவல்லி, இரண்டு யானைகளோடு சாமரம் வீசும் கஜவல்லி (அச்வாரூடைசம்பத்கரி என்றும் கொள்ளலாம்) ஆகியவர்கள் காட்சி தருகின்றனர்.
சுவர்களின் இடையே ஒரு மாடத்தில் வாழைப்பழம் உரித்து சாப்பிட்டுக்கொண்டு, அம்பாளை நோக்கியவாறு, அவள் உத்தரவுக்கு காத்திருக்கும் கோலத்தில், அமர்ந்திருக்கும் குழந்தை ஆஞ்சநேயர்கூட அழகு தான்.
தற்போது பூஜிக்கும் நவீன் குருக்களுடைய தந்தை, சந்திரசேகர குருக்கள் 10 வயது சிறுபிள்ளையாக இருந்தபோது, மஹாபெரியவாளிடம், "இந்த அம்பாளுக்கேன் காமாட்சின்னுபேர்? காமாக்ஷி காஞ்சிலே உக்கார்ந்துண்டு தானே இருப்பா? "என்று கேட்டுள்ளார்.
அவருக்குபெரியவாள் அளித்த பதில்:
"இப்போ, உன் அம்மா எங்கயோ உக்கார்ந்துண்டு இருக்கா, நீ போய் தூத்தமோ காபியோ கேக்கறே... என்ன பண்ணுவோ.. பொறுமையா இதோவரேன் னு சொல்லிட்டு, எழுந்து வந்துபோட்டுத்தருவோ... ஆனா, இந்தகாமாக்ஷி பாவம், எதையாதுகேட்டுண்டு வர்ற கொழந்தேளுக்கு,உடனே கொடுத்துடணும்னு ஆசையாம். அதாவது, உக்கார்ந்துண்டு இருக்கறவ எழுந்து வர்ற கொஞ்ச காலதாமதம் கூட அவளுக்கு பண்ண விருப்பம் இல்லையாம். அதான் நின்னுண்டு இருக்கா" .
கேட்டதை கொடுக்க காத்திருக்கும் காமாக்ஷி அம்பிகையை, த்ரிபுராந்தகரை, த்ரிபுரஸுந்தரியை காண சென்று வாருங்கள்.
முடிந்த வரை ஆலயத்தின் பாதுகாப்புக்கும், அபிஷேக அலங்காரங்களுக்கும் பொருட்களை தந்து, பணி செய்யுங்கள்.
ஆலயத்தில், நித்யபூஜை, தீபம் ஏற்ற எண்ணெய், சந்தனம் குங்குமம் மற்றும் அபிஷேகப்பொருட்கள் ஆகியவை உள்பட, பல்வேறு கைங்கர்யங்களில் உதவி தேவைப்படுகிறது.
செய்ய சக்தியும், மனமும் விருப்பமும் உடைய அன்பர்கள், கீழே தந்துள்ள ஆலய அர்ச்சகரை தொடர்பு கொண்டு, அல்லது நேரில் சென்றோ முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
காலம் காலமாக கருணை பொழியும் காமாக்ஷி அம்மை, நம்மை நிச்சயம் கடைத்தேற்றுவாள், வேண்டிய வரம் தருவாள். காமாக்ஷியை நம்பினோர்கைவிடப்படார். காப்பது அவள் கடன்.சுந்தர காமாக்ஷி சுபிக்ஷம் தரட்டும்!
தொடர்பு விவரங்கள் : ஆலய அர்ச்சகர் நவீன் சுந்தர் குருக்கள் - 9791505077, 9486060120, 9486370223
ஆலயம் தரிசனம் செய்ய செல்லுவோர் அர்ச்சகருக்கு தொடர்பு கொண்டு தகவல் அளித்துவிட்டு செல்லவும்.
Thursday, 16 April 2026
சுகப்ரம்மர்
ஶுகப்ரம்ம ரிஷி உண்மையில் கிளி முகம் உடையவரா?
அல்லது அந்தப் பெயரில் ஒரு குறியீட்டு விளக்கம் இருக்கிறதா?
ஶுக என்றால் பொதுவாக சமஸ்க்ருதத்தில் கிளி என்று அர்த்தம்! ஆனால் அது மாத்திரம் அர்த்தமல்ல!
கிளி சொன்னதை திருப்பி அப்படியே சொல்லும்!
அதுபோல் உண்மையை மாற்றாமல் வெளிப்படுத்துபவர்.
ஶுகருடைய மனம் எந்த விகாரமும், குழப்பமும் இல்லாது! பிரம்மத்தை அப்படியே உள்ளதை உள்ளபடி சொல்லக்கூடியது.
ஆகவே ஶுக மகரிஷியின் முகம் கிளியாகச் சொல்லப்பட்டது அவரின் முகம் கிளி என்பது அர்த்தமல்ல!
அது அர்த்தம் அறியா புராணவாதிகள் இயற்றிய கதை!
கிளி எப்படி சொன்னதை சொன்னபடி மாறுபாடில்லாமல் சொல்லுமோ அப்படி அவர் தனது தெளிந்த நிர்விகல்ப மனதில் பெற்ற பிரம்ம ஞானத்தை எந்த மாறுபாடும் இல்லாமல் சொல்லக்கூடிய வல்லமை உள்ளவர் என்பது அதன் அர்த்தம்!
அது மாத்திரமல்ல, கிளி என்பது காமத்தினை பரிபூரணமாக இன்பமாக ஆனந்தமாக உருமாற்றியதன் குறியீடு.
இதில் ஶுக மகரிஷி பரிபூரணமாக பிரம்மானந்தமாக உருமாற்றிய உயர்ந்த ரிஷி என்பதே அவரிற்கு கிளி முகம் என்பதன் இரகசியர்த்தம்!
ஶுகப்ரம்மம் என்றால் பிரம்மத்தை மாறுபடாமல் வெளிப்படுத்தும் ஆற்றல் உள்ளவர் என்பதாலே பாகவதம், புராணங்கள் ஶுக மகரிஷியின் வாயால் உபதேசிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
ஆகவே ஶுகப்ரம்ம ரிஷியைப் வணங்கும் போது அவரது உயர்ந்த நிர்விகல்ப யோக நிலையுடன் உள்ள தூய உணர்வினைச் சிந்தியுங்கள்!
வெறுமனே கார்டூனில் கிளிமுகத்துடன் இருப்பதைப் போன்ற உருவம் வெறுமனே ஒரு குறியீடு அன்றி அவரது உண்மையான உருவம் இல்லை!
குண்டுமணி அம்மன்
இந்த ஆலயத்தை குண்டுமணி அம்மன் கோயில் என்று அழைப்பார்கள். இந்த கோயில் அருகில் கோவானூர் முருகன் கோவில் ஒன்று உள்ளது. அங்கே இன்றும் சித்தர்கள் வந்து அம்மனையும் முருகனையும் வணங்கி வருகின்றனர். பௌர்ணமி இரவில் குண்டுமணி அம்மன் கோவில் வெளியில் தங்கி இறை உணர்வை பெறுங்கள் இந்த பாடல் சித்தர்கள் நூலில் உள்ளது என்று சிவகங்கையை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். இன்றும் அந்த கோவிலில் புலிப்பாணி சித்தர் வந்து பூஜித்து செல்கிறார். இந்த கோவில் மிகச்சிறிய கிராமத்துக்கோவில் இங்கு சித்ரா பௌர்ணமி அன்று வெளி மாநிலத்தில் இருந்து நிறைய சித்த மருத்துவர்கள் வந்து தங்கி பூ நீர் எடுத்து செல்வார்கள். இதன் மகத்துவம் மிக புனிதமானது. இந்த ஆலயம் சிவகங்கையில் இருந்து மதுரை செல்லும் வழியில் உள்ளது. இங்கு தாமரைத்தண்டு திரியில் நெய் விளக்கேற்றி மல்லிகை பூ சாற்றி வணங்கினால் உங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்ற சித்தர் நாடியில் உள்ளது.
தல வரலாறு:
முற்காலத்தில் அகத்தியர், போகர் போன்ற சித்தர்கள் திருப்பூவனம் சென்று பூவனநாதரை வழிபாடு செய்தனர். பிறகு காளையார்கோவில் அருள்மிகு சொர்ண காளீஸ்வரரை வழிபடுவதற்காகச் சென்றனர். செல்லும் வழியில், அப்போது காட்டுப் பகுதியாக இருந்த கோவனூரில் தங்கிவிட்டார்கள். காலையில் எழுந்ததும் நீராடி, சிவபூஜை செய்வதற்காக எங்கேனும் நீர்நிலை இருக்கிறதா என்று சுற்றிலும் பார்த்தனர். எங்குமே தண்ணீர் இல்லாத நிலையில், ஒரு ஊற்றை தோற்றுவித்தார். அதிலிருந்து தனது கமண்டலத்தில் நீர் தேக்கி வழிபாடு செய்ய தொடங்கினார். அப்படி வழிபாடு செய்யும் போது கமண்டலத்திலிருந்த நீர் அருகிலிருந்த செடி மீது பட்டு பூநீராக பெருகியது. சித்த மருத்துவத்தில் இந்தப் பூநீருக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அகத்திய முனிவர் இத்தலத்தில் அமர்ந்து வழிபாடு செய்த இடத்தின் தெய்வீகத்தன்மையை உணர்ந்து, தனது இஷ்ட தெய்வமும், குரு முதல்வரும் ஆன சுப்பிரமணியரை வள்ளி, தெய்வானையுடன் இத்தலத்தில் பிரதிஷ்டை செய்தார். அதன் பின் பாண்டிய மன்னனைக்கொண்டு மூல மூர்த்தி பிரதிஷ்டையும், கோயிலும் கட்ட ஏற்பாடு செய்தார்.
இந்தக் கோயிலின் நித்ய பூஜை கைங்கர்யப் பணிகள் செவ்வனே நடைபெற்று வர நென்மேனி, கீழ்மேனி, வீரவலசை, கிழக்குளம் ஆகிய ஊர்களில் நிலங்களை தானமாகத் தந்துள்ளனர். அவற்றின் மூலம் வரும் வருமானத்தை கோயிலுக்கு அளித்து வந்தனர். இது போன்று வேறு பல தர்மங்களும் கோயிலுக்காக அளிக்கப்பட்டுள்ளது. ஆளரவம் அற்ற அடர்ந்த காட்டுப் பகுதியில் சாந்நித்தியமிக்க கோயிலாக சுப்பிரமணிய சுவாமி கோயில் விளங்குகிறது. நாலாபுறமும் உயர்ந்த மதில்சுவர் எழுப்பப்பட்டுள்ளது.
கோயில் சிறப்புகள்:
சித்தர்கள் அருவமாக வரும் திருத்தலம். கோவனூர்
சித்த மருத்துவர்களுக்கும், சித்த மருந்து சாப்பிடுபவர்களும் வழிபட வேண்டிய தலம்.
மூலவரின் தோற்றம் திருச்செந்தூர் செந்திலாதிபனை போல மிக அழகாக இருக்கும்.
முருகன் சன்னதி முன்பு மயில் மண்டபமும், கோபுர வாசலின் வட புறத்தில் இடும்பன் சன்னதியும், இடது பக்கம் காசி விஸ்வநாதர்-விசாலாட்சி சன்னதியும், விநாயகர் சன்னதியும் தனித்தனியாக அமைந்துள்ளன.
கோபுர வாசல் தாண்டி உள்ளே நுழைந்ததும், விஸ்தாரமான பிராகாரம் காணப்படுகிறது. கோயிலின் எதிரே பலிபீடம், மயில் வாகன மண்டபம் ஆகியவை அமைந்துள்ளது. ஒரு காலத்தில் கொடி மரம் இருந்த இடம் தற்போது வெறுமையாக உள்ளது. பிரதான கோயிலில் மகா மண்டபம் அர்த்த மண்டபம், கருவறை என நேர்த்தியான கற்றளியாக உருவாக்கப்பட்டுள்ளது.
கோவானூரில் சாத்தப்பன் என்ற சிறுவன் இருந்தான். இவனுக்கு சிறுவயதிலிருந்தே இறையுணர்வு அதிகம். ஒரு நாள் இவன் காட்டில் திரிந்து கொண்டிருந்த போது, தாகம் மிகுந்த முனிவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவினான். அந்த முனிவர்களும் இந்த சிறுவனுள் ஆழ்ந்து கிடந்த இறையுணர்வை வெளிக்கொண்டு வர உபதேசம் செய்து சென்றார்கள். இந்த சிறுவன் பிற்காலத்தில் இக்கோயிலே கதி என கிடந்தான். பின் பல தலங்களுக்கு சென்று "சாத்தப்பஞானி" என எல்லோராலும் போற்றப்பட்டார். இவர் தான் சிவகங்கை சீமை தோன்ற காரணமாக இருந்தவர். சிவகங்கை மன்னர்களின் ராஜகுருவாகவும் இருந்தார்.
அகஸ்தியர் இந்த இடத்தில் முருகப்பெருமானை நினைத்து பிரதிஸ்டை செய்துள்ளார். பின்னர் பாண்டிய மன்னர்கள் மூலவரை பிரதிஸ்டை செய்து கோயிலாக உருவாக்கியுள்ளனர். இப்படி தான் இக்கோயிலின் தலவரலாறு தெரிவிக்கிறது.
கோவனூர் தலத்துக்கு மூன்று திசைகளிலும் குண்டுமணி அம்மன், சுந்தரவள்ளி அம்மன், ராக்காச்சி அம்மன் ஆகிய மூவர் காவல் தெய்வங்களாகத் திகழ்கின்றனர். இவற்றுள் கோயிலுக்கு நேர்கிழக்கில் ஒரு கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் குண்டுமணி அம்மன் கோயில்தான் மிகவும் விசேஷமானது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் குண்டுமணி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. சித்ரா பௌர்ணமியன்று இங்கே நடைபெறும் விழா மிகவும் பிரபலம். அன்றுதான் சித்தர்கள் சூட்சும வடிவில் கோவனூர் கோயிலுக்கு வந்து முருகப் பெருமானை வழிபடுகின்றனர்.
சித்ரா பௌர்ணமியில் மட்டுமல்லாமல், மாசிமகம், பங்குனி உத்திரம் போன்ற நாள்களிலும் சித்தர்கள் இங்கே வந்து வழிபாடு செய்வதாக ஒரு செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது. பின்னர் குண்டுமணி அம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனை வழிபட்டு, அங்கே கிடைக்கும் பூநீரைப் பருகுவதாகச் சொல்கிறார்கள். அன்றைய தினம் சித்த வைத்தியர்களும் கோயிலுக்கு வந்து பூநீர் சேகரித்துச் செல்வதை இன்றைக்கும் நாம் காணலாம்.
கோவனூரில் உள்ள முருகன் கோயில் விபூதிப் பிரசாதம் அளவற்ற மகிமை கொண்டது. திருச்செந்தூரில் தருவதுபோலவே இங்கும் இலை விபூதி பிரசாதமாகத் தரப்படுகிறது.
சித்தர்கள் சாகாவரம் பெற்ற ஊர் என்று சொல்லப்படுகின்றது.
கோவனூர் பொட்டலிலே குண்டுமணி அம்மன் சந்நிதியிலே சாகா மூலிகை பூத்திருக்கு சாய்ந்து கொட்டடி ஞானப்பெண்ணே என்ற பாடல் இன்றும் இந்த பகுதியில் பாடப்படுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கோவனூர் முருகன் கோயில்,
பில்லூர் கிராமம்,
கோவனூர்,
சிவகங்கை மாவட்டம்.
அமைவிடம்:
சிவகங்கையில் இருந்து மதுரை செல்லும் ரோட்டில் 7 கி.மீ தூரத்தில் பில்லூர் கிராமம் உள்ளது. இந்த ஊருக்கு சிவகங்கையிலிருந்து திருப்புவனம், பூவந்தி செல்லும் அனைத்து பஸ்களும் செல்லும். பில்லூரிலிருந்து தெற்கே இரண்டு கி.மீ. நடந்து சென்றால் கோவானூர் முருகன் கோயிலை அடையலாம்.
கோவானுர் கிழக்கினிலே குண்டுமணி அம்மன் இருக்கு;
குண்டுமணி அம்மன் வாசலிலே சாகா மூலி ஒன்று பூத்திருக்கு:
- சித்தர் பாடல்.
பழனி தொட்டிச்சி அம்மன்
ஜோதிடர்களின் வாக்கை சித்திக்க வைக்கும் பழனி தொட்டிச்சி அம்மன்..
ஜோதிடர்களுக்கு தேவை ஞானமும் அந்தக் கல்விக்கு தேவையான ஓலைச்சுவடி குறிப்புகளும் தேவை. வலது கரத்தில் ஞானத்தின் வடிவான தாமரை மலரும் இடது கரத்தில் ஓலைச்சுவடியையும் வைத்துக் கொண்டு அருள் பாலித்து கொண்டு இருக்கும் இந்த பழனி தொட்டிச்சியம்மன் வழிபாடு செய்தாலே ஜோதிடர்கள் வாக்கு சித்தி பெறலாம்.
இந்தத் தொட்டிச்சி அம்மாவின் கதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
தொட்டிச்சி அம்மன் குறி சொல்லும் குலத்தில் பிறந்த ஒரு தெய்வமகள். பழனி அடிவாரத்தில் புலிப்பாணி சித்தர் ஜீவசமாதி அருகில் இந்த ஆலயம் உள்ளது.
காலம் கடந்து கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கு மேலாக புலிப்பாணி பெயரும் போகர் பெயரும் மருத்துவம் ஆன்மீகம் ஜோதிடம் என அனைத்து விதத்திலும் இவர்கள் பெயர் காலம் கடந்து நிற்க காரணம் என்ன. எல்லை தெய்வம் என்று சொல்லக்கூடிய இந்த தொட்டிச்சி அம்மன் தான் காரணம்.
திருவாவினகுடியில் முருகன் கோபித்துக் கொண்டு வந்து கோவில் கொண்டது உலகம் அறிந்தது. அன்றைய காலகட்டத்தில் அறிவியல் தொழில்நுட்பம் இல்லாத காலகட்டத்தில் யார் அறிவார்கள். வீடு வீடாகச் சென்று குறி சொல்லும் வீட்டு மகளாக பிறந்து முருகனின் பெருமையை சேர்த்தவள் தான் இந்த தொட்டிச்சி அம்மன்.
குறி சொல்லும் பெண்களின் பெரும்பாலானவர்களுக்கு குல தெய்வமாக விளங்குபவர் முருகப்பெருமான் ஆவார். இந்தத் தொட்டிச்சி அம்மன் ஆணையிட போகர் அவர்கள் பழனியில் நவபாஷாண சிலை பிரதிஷ்டை செய்தது குறிப்பிடத்தக்கது என்பது இவை நான் அங்கு அறிந்து கொண்டது.
இன்று நாம் ஜோதிடம் சொல்கிறோம் பலன் சொல்கிறோம் நம்ம ஜோதிடத்திற்கு முன்னோடி குறி சொல்பவர்களே ஆவார்கள். அவர்களுக்கு இந்த ஞான மார்க்கத்தை வழங்கியது முருகப்பெருமான் ஆவார். முருகப்பெருமானை இன்று உலகறிய செய்தது இந்த குறி செல்லும் குல பெண்கள் ஆவார்கள்.
தொட்டிச்சி அம்மனுக்கும் செவ்வாய்க்கும் என்ன சம்பந்தம். பழனி முருகனை செவ்வாய் என்கிறோம். முருகன் கோபித்துக் கொண்டு வந்தது கோபம் என்பது செவ்வாய் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
அடர்ந்த வனப்பகுதியில் வேள்வி யாகம் செய்யக்கூடியவர் தான் இந்த செவ்வாய் பகவான். செவ்வாயின் அதிதேவதை துர்க்கை பத்திரகாளி வனதேவதை என்று சொல்லலாம். அதில் ஒருவர் தான் இந்த தொட்டிச்சி அம்மன். ஒரு காலத்தில் அதாவது நவீன வளர்ச்சி அடையாத காலகட்டத்தில் பழனி சுற்றிய பகுதி அனைத்துமே வனப்பகுதியாகத்தான் இருந்தது. பெரும்பாலும் குறி சொல்பவர்களுக்க நிரந்தர இடம் என்பது கிடையாது. ஆதிகாலத்தில் இருந்தே எல்லை தெய்வமாக இருந்த இந்த தொட்டிச்சி அம்மன் ஜோதிடத்திற்கும் ஜோதிடர்களுக்கும் முன்னோடி என்று சொன்னால் அது மிகையாகாது. தொட்டிச்சி அம்மன் சாந்த சொரூபமாக நாம் பழனியில் பார்க்கிறோம். பல ஊர் இடங்களில் இது அம்மன் செவ்வாயின் தன்மை கொண்டு உக்கிரமாக இருப்பதை அறியலாம்.
நம்ம ஒரு பெண்ணை ஊர் பெயருடன் அழைத்துச் செல்லும் பொழுது உதாரணமாக பழங்காவேரி என்ற ஊர் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஊரில் இருக்கும் பெண்களை பழங்காரியான் என்று அழைப்பார்கள். இதே போல பல ஊர்களின் பெயர் மருவி அந்த நபர்களை அழைப்பது வழக்கம். தொட்டிச்சி என்ற பெண் தொட்டியம் மதுரை காளி அம்மன் அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பெண்ணும் மதுரையில் இருந்து வந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. இதன் அடிப்படையில் தொட்டியம் அம்மனை தொட்டிச்சி அம்மன் என்று அழைப்பது மரமாக இருந்திருக்கலாம். காலப்போக்கில் நாளடைவில் மருவி வருவது தானே இன்றைய நிலைமையில் உள்ளது.
நவீன காலத்தில் ஜோதிடத்தில் எவ்வளவு பெரிய ஜோதிட ஞானியாக இருந்தாலும் அக்குவேராக ஆணிவேராக ஜாதகத்தை பிரித்து பலன் கூறினாலும் அடுத்து இன்னது தான் நடக்கப் போகிறது என்று தீர்மானித்து சொல்ல இந்த தொட்டிச்சி அம்மன் கடைக்கண் பார்வை இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
திருஈங்கோய்மலை
கரூர் மாவட்டம் திருஈங்கோய்மலை அருள்மிகு ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஶ்ரீ மரகதாசலேஸ்வரர்🙏🙏
*இத்தலம் அம்பாளின் சக்தி பீடமாக கருதப்படுகிறது
*51 சக்தி பீடங்களில் இது சாயா சக்தி பீடம்.ரத்தினாவளி சக்தி பீடம் எனப்படுகிறது
*தீர்த்தம் : - அமிர்த்தீர்தம்
*திரு வெங்கி மலை
திருஈங்கோய்மலை அல்லது ஈங்கோய்மலை என்பது, இப்போது திருவிங்கநாதமலை என்னும் பெயருடன், திருச்சி – நாமக்கல் சாலையில் உள்ளது
*கருவறையில் பச்சை நிற கல்லால் ஆன ரூபத்தில் காட்சி தருகிறார்.மரகதக்கல்லால் அமைந்ததால் சிவபெருமான் மரகதாசலேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். *அவரது கருவறை வாயிலில் இடது புறம் விநாயகரும் வலது புறம் அர்த்தநாரீஸ்வரரும் உள்ளனர்.
*ஒரு காலத்தில், பிருங்கி ரிஷியானவர் அம்பிகையைத் துதியாமல் சிவனை மட்டுமே துதித்து வந்தார். அது கண்டு வருந்திய அம்பிகை, மரகதாசலத்தை அடைந்து, லக்ஷ்மி தீர்த்தம் உண்டாக்கிப் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பன்னிரண்டு ஆண்டுகள் ஈசனைக் குறித்துத் தவம் செய்து வந்தாள். கிருபாநிதியாகிய எம்பெருமான் தேவிக்கு முன்னர் தோன்றி, அவள் வேண்டியபடியே தனது நீங்காத பாகமாக ஏற்றதால் அர்த்தநாரீஸ்வரன் என்று அழைக்கப் பட்டான். இருப்பினும் அவ்வடிவிலுள்ள சிவபாகத்தை மட்டும் பிருங்கி முனிவர் வலம் வரவே, தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டது. நிற்கும் சக்தியை இழந்த அவருக்கு இரங்கிய பெருமான் தண்டம் போன்ற கால் தந்து நிற்கும்படிச் செய்ததாக வரலாறு.
*இதன் மூலம் ஆதியில் அம்பிகைக்கு ஈசன் இடப்பாகம் கொடுத்த இடம் இத்தலமே யென்றும், அதன் பின்னரே திருசெங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோயில் கொண்டார் என்றும் கூறப்படுகிறது
*அம்பிகை மரகதவல்லி கருவறையில் முகப்பு மண்டபத்தில் ஒரு புறம் சிறிய லிங்கம் மற்றும் ஒரு அம்பிகை உள்ளனர். இதுவே அம்பாள் இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் என்று கூறப்படுகிறது.
*நந்திக்கு முன் பலி பீடம் உள்ளது இந்த அம்பிகை சக்தி பீடத்தில் ஒன்றென கருதப்படுகிறது.
*வாட்போக்கி, குளித்தலை, ஈங்கோய் மலை மூன்றும் சோமாஸ்கந்த வடிவம் போன்றது. வாட்போக்கி – சிவபெருமான், குளித்தலை - கந்தன், ஈங்கோய்மலை – அன்னை பார்வதி. இந்த சோமாஸ் கந்த வடிவத்தினை ஒரே நாளில் தரிசித்து பிறந்த பயனை அடையலாம்.
*நக்கீரதேவ நாயனார் என்னும் பத்தாம் நூற்றாண்டுப் புலவர், இம் மலையின் பெருமையைத் திருஈங்கோய்மலை எழுபது என்னும் நூலாகப் பாடியுள்ளார்
*ஐநூறு படிகள் கொண்ட இந்த மலையின் முகப்பில் ஒரு சுதை வளைவுடன் கூடிய மதில் சுவரும் அதனை அடுத்து மூன்று நிலை முதன்மை கோபுரம் உள்ளது. *இறைவன் அம்பிகை இருவரும் கிழக்கு நோக்கிய கருவறையில் உள்ளனர், இறைவனின் இடப்புறம் அம்பிகை உள்ளார். கோபுரம் வழி பிரகாரத்தில் உள்ளே நுழையும்போது சன்னல் ஒன்றும் அதில் ஒரு விநாயகர் தரிசனம் அடுத்து பிரகார வலத்தில் முதற்கோயில் விநாயகருடையது இறைவன் கருவறை கோட்டத்தில் நர்த்தன விநாயகர். அடுத்து முருகன் சிற்றாலயம் உள்ளது.
*இந்த மலையின் அடிவாரத்தில் பதினென்சித்தர்களில் ஒருவரான போகர் சித்தர் கிழக்கு நோக்கி தனி கோயில் கொண்டுள்ளார். *அருகில் விளக்கு தூண் ஒன்று இருபது அடி உயரத்தில் படிகளின் துவக்கத்தில் உள்ளது.
*தேவாரம் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இதுவும் ஒன்று
புளிய மரம் நாடகம்
*ஒருமுறை இறைவனை காண சுந்தரர் வருகிறார், அப்போது நண்பராகிய அவரை சிறிது அலைக்கழிக்க எண்ணிய இறைவன் தலவிருட்சமான புளியமரத்தில் மறைந்து கொள்கிறார், சுந்தரர் பலவாறு வேண்டியும் காட்சி கொடுக்கவில்லை, மாறாக பாடியதற்காக ஒரு பொன் புளியங்காயை அவரிடம் எறிகிறார். இறைவன் புளியமரத்தில் இருப்பதை அறிந்து கொண்ட சுந்தரர். எனக்கு காட்சியளிக்காமல் இடம் கொடுத்த புளியமரம் இனி யாருக்கும் மறைவிடமாக இருத்தல் வேண்டாம் என கூறி சென்றுவிடுகிறார். அது முதல் இத்தலத்தில் புளியமரங்கள் காய் இல்லாது போயிற்று
*இத்தல நாதர், மரகத லிங்கமாக விளங்குவதற்கு ஒரு வரலாறு ஒன்று உண்டு.
*ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தியிடம் உபதேசம் பெற்ற சனத் குமார முனிவர், ஒரு சமயம் நந்திகேசுவரரிடம் சென்று , " தாங்கள் முன்பு ஒருமுறை மரகதாசல மகிமை பற்றி சுருங்கக் கூறி அருளியுள்ளீர்கள். தற்போது அதனை விரிவாகக் கூறி அருளவேண்டும் " என்று விண்ணப்பம் செய்தார். அதைக் கேட்டு மகிழ்ந்த நந்தியெம்பெருமான் அத்தலப் பெருமையை விரிவாகக் கூறியருளினார்.முன்பொரு சமயம், ஆதிசேஷனுக்கும் வாயுவுக்கும் தங்களுக்குள் யார் வலிமை மிக்கவர் என்ற போட்டி எழுந்தது. அப்போது ஆதிசேஷனானவன் தனது ஆயிரம் முடிகளாலும் மேரு மலையைச் சுற்றிக் கொண்டு, வாயுவைச் செல்ல முடியாமல் தடுத்தபோது, வாயு சஞ்சாரமற்ற இடங்களில் உயிர்கள் மடியத் தொடங்கின.தேவர்களின் வேண்டுகோளுக்கு இரங்கிய ஆதிசேஷன், தனது முடிகளில் ஒன்றைச் சற்று ஒடுக்கி, வாயு செல்ல வழி ஏற்படுத்தினான். வாயுவும் , தனது முழு வேகத்தோடு, அந்த இடைவெளியில் புகுந்து, மேருச் சிகரங்கள் ஐந்தைப் பிடுங்கியவாறு தென்திசை நோக்கிச் சென்றான். அச்சிகரங்கள் வீழ்ந்த இடங்கள் சிவத்தலங்கள் ஆயின. அவற்றுள் ஒன்றே, மரகதாசலம் ஆகும். அங்கு ஆதிசேஷனின் அம்சமாகப் புளிய மரம் முளைத்தது. அதனைச் சிவ ரூபமாகவும் கூறுவர்
ஆதிசேஷனும், வாயுவும் தத்தம் வல்லமையை நிலை நாட்டிட, கடும் போரில் ஈடுபட்டபோது ஆதிசேஷனால் முழுவதுமாக மூடப்பட்டிருந்த மேரு மலையிலிருந்து வைரம், சிவப்பு மணி, மரகதம், மாணிக்கம் மற்றும் நீலம் ஆகியவை சிதறி விழுந்தன. அவ்வாறு, மரகதம் (பச்சைக்கல்) வீழ்ந்த இடமே, திரு ஈங்கோயில் என்பர். இதன் காரணமாகவே இங்குள்ள மூலவர் மரகதாலேசுவரர் ஆனார்.
*ஏனைய மணிகள் வீழ்ந்த இடங்களும் சிவத்தலங்களே: வைரம் திருப்பாண்டிக் கொடிமுடியிலும், மாணிக்கம் திருஈங்கோய் மலைக்கு அருகிலேயே உள்ள தலமான திருவாட்போக்கியிலும் , நீலம் பொதிகை மலையிலும், சிவப்புக் கல் திருவண்ணாமலையிலும் வீழ்ந்தன எனப்படுகிறது.
*காலைக்கடம்பர், மத்தியானச் சொக்கர், அந்தி ஈங்கோய்நாதர் என்பர். காலையில் குளித்தலை, மதியம் ஐயர்மலை, மாலையில் ஈங்கோய்மலை ஆகிய மூன்று தலங்களையும், ஒரே நாளில் வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. கார்த்திகை சோமவாரத்தில், இவ்வாறாக ஒரே நாளில் வழிபட்டு பலர் பலனடைகின்றனர்.
*அகத்திய மாமுனிவர், ஈ வடிவில் இறைவனைத் தரிசித்தமையால், திரு ஈங்கோய் மலை எனப்படுகிறது.
பார்வதி தேவி, இங்கு சிவனை வழிபட்டமையால், இது சிவசக்தி மலை எனவும் வழங்குகிறது.
*பிரமதேவன் இங்கு வந்து மரகதாசலேசுவரரைப் பூஜித்து , சிருஷ்டித் தொழிலைச் செய்யும் வலிமை பெற்றான் . விஷ்ணுவும் இப்பெருமானை வழிபட்டுக் காக்கும் தொழிலைச் செய்யும் அதிகாரம் பெற்றார். மேலும், யமுனை, ரோமச ரிஷி ஆகியோரும் இங்கு ஈசனை வழிபட்டு நற்கதி பெற்றுள்ளனர்
*ஓங்காரம் அன்னது என நின்றான் மலை (நக்கீரர்)
என எல்லோருக்கும் பரம குருவாய் உள்ள ஓங்கார உருவான ஓங்காரேசுவரன் ஓங்காரப் பொருள் என்ன என்று உனக்குத் தெரியுமோ என்று ஆசிரியன் மாணவனைக் கேட்பது போல் முருகனது ஓங்கார ஞானத்தைச் சோதித்த போது முருகன் ஓங்காரப் பொருளான லிங்கப் பரம்பொருளைத் தொழுது ஓங்காரப் பொருளின் காதில் ஓங்காரப் பொருள் இன்னது என்று கூறினான்
திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் மற்றும் மாணிக்கவாசகர் ஓங்காரத்து நாதர் என போற்றிப் புகழ்ந்த ஈசன்
ஈங்கோய் மலை எந்தாய் போற்றி எனப்புகழ்கிறார் மாணிக்கவாசகர்
*பூஞ்சாரல் ஈங்கோய் மலையாரே, உமையாளொடும் ஈங்கோய் மலையாரே என்று போற்றுகிறார் ஞானசம்பந்தர்
*திருமந்திரத்தில் திருமூலரும் இலிங்க நல்பீடம் இசையும் ஓங்காரம் என ஈங்கோய் நாதனைப் புகழ்கிறார்
*தனக்கு ஏற்படும் இரஜோகுணம் நீங்க வேண்டி, கிருத யுகத்தில் பிரமதேவன் இத் தலத்தை அடைந்து பிரம தீர்த்தம் ஏற்படுத்தி அதில், பிரம்மஞானம் எனத் தொடங்கும் மந்திரத்தை ஜபித்தவனாக அதில் ஸ்நானம் செய்து, திருப் புளிய மர நீழலில் ஜபம் செய்தும், தானங்கள் செய்தும் இறைவனைப் பல காலம் பூஜித்து வந்தான். இவ்விடத்தில் செய்யும் தான பலன்களை அளவிடமுடியாது. இதனைச் செய்பவர்கள் இம்மை மறுமைப் பலன்கள் பெற்று, உத்தம லோகத்தை அடைவர்
*இங்கு சிவராத்திரி தினத்தில் பிரம்ம தீர்த்த ஸ்நானம் செய்து நறு மலர்களாலும், வில்வத்தாலும் இறைவனை அர்ச்சித்தால், பிற தலங்களில் மூன்று கோடி சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதற்கு ஒப்பாகும் என்கின்றனர். புளிய மரத்தடியையும் பெருமானையும் ஒருங்கே வலம் வருவபர்கள் உலகையே வலம் வந்தவர்களாவார்கள் எனவும் சிலாகித்து கூறுகின்றனர்.முனிவர்கள் பலர் இங்குத் தவம் செய்திருக்கிறார்கள். இத்தலத்தில் செய்யப்படும் அன்னதானத்திற்கு விசேஷ பலன் உண்டு. அப்படிச் செய்பவர்கள் செல்வந்தர்களாவர். தெய்வீகம் வாய்ந்த புளிய விருக்ஷத்தை நெடும் தொலைவிலிருந்து தரிசித்தாலும் முக்தி கிட்டும்.
மரகத நாதர் என்னும் திருப்பெயருக்கேற்றவாறு, சிவலிங்கம் பச்சை மாமலை போலப் பளபளக்கும் வண்ணம் கொண்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும், சிவராத்திரி அல்லது அதற்கு முதல் நாளன்று, ஆதவனின் கதிர்கள், இம்மரகத நாதர் மீது படிவது, இத்திருத்தலத்தின் பெரும் சிறப்பு.
இக்கோவிலில் எட்டுக் கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டுள்ளன.
திரிபுவனச்சக்ரவர்த்தி எனப்பட்ட வீரதேவர் காலத்துக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
*இத்தலம் போக மோக்ஷத்தைத் தரவல்லது. கார்த்திகை சுக்கிர வாரத்திலும் பொதுவாக எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் இத்தீர்த்தத்தில் நீராடி, பாயசான்னம் தானம் செய்தால், துன்பங்கள் எல்லாம் நீங்கும் என்பர். நவராத்திரியின்போது வரும் நவமியில் கருநெய்தல் மலர்களால் தேவியின் பாதங்களை அர்ச்சித்தால் கலைகளில் நிபுணர்கள் ஆவார்கள். இத்தீர்த்தத்தைக் கண்ணால் காண்பவன் உலகில் உயர்ந்தவனாவான். சிவபெருமானையும் மரகதாம்பாளையும் நியமத்துடன் வழிபட்டால் முக்தி கிடைக்கும் எனப்படுகிறது
*இத்தலத்தில் துர்க்கையை உக்கிரமாகவும்,சாந்தமாகவும் தரிசிக்கலாம்.
#அம்பலத்தரசன்



