Saturday, 6 December 2025

திருமறைக்காடு திருக்காப்பிடுதல்


சதுரம் மறைதான் றுதிசெய் துவணங்கும்

மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா

இதுநன் கிறைவைத் தருள்செய் கவெனக்குன்

கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே.   1

     1. பொ-ரை: இனிய பொழில்கள் சூழ்ந்த திருமறைக்காட்டில்

வேதங்கள் நான்கும் துதி செய்து வணங்க வீற்றிருக்கும் வலியோனே!

உன் திருக்கோயில் கதவுகள் முன் உள்ளவாறே திருக்காப்புக்

கொள்ளும் கருத்தோடு வினவிய இக்கேள்விகளுக்கு எனக்கு

நல்லவண்ணம் விடை அருள்வாயாக.



No comments:

Post a Comment