Sunday 6 January 2019

அகத்தியர் இன்று எனக்குரைத்த அருள் வாக்கு





எனக்கு நாடி வழியே நற்பலன்கள் உரைத்த நாள் 06/01/2019

அருள் கேட்பவர் - தி. இரா. சந்தானம், கோவை

நாடி வாசிப்பவர் - குருஜி இறைசித்தர், பொகளூர் அகத்தியர் ஜீவ நாடி பீடம்
                                               
அகத்தியர் எமக்குரைத்த அருள் வாக்கு

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீராய் திருவையாரா போற்றி
என் அண்ணாமலையும் என் அண்ணா போற்றி
காவாய் கனகத்திறளே போற்றி
கயிலை மலை வாழ் என் அய்யனே போற்றி போற்றி போற்றி

சிரம் தாழ்ந்து வணங்கும் அடியவரின் தேவ தேவனே போற்றி
சிரம் தாழ்ந்து இக்கலியுகம் தன்னிலே எம் நிலை இறக்கி பொதிகை வாழ் அகத்தியன் யானே அருள் தனை உரைக்கிறேன், கேள் மழலையே

யாம் உமையறிவோம்

என் குருபூசை தன்னிலே நீ ஆற்றிய பணியை கண்டு யாம் மனம் மகிழ்ந்தோம் எம் மழலையே.
உமக்கு முன்றேயே உரைத்தோமே
யாகம் தன்னிலே உனக்கு விஸ்வரூப காட்சி தன்னை யாம் தந்தோம்
ஒரு வயோதிகனாக நின்று உமை ஆசீர்வதித்தோம்
கருடனாக வந்து உனை வட்டமிட்டு சென்றேன்
அறிவாய் நீ

உமது நிலை மாறுமப்பா
உமை யாம் முழு சித்த நிலைக்கு யாம் அழைப்போம்
என் நாமம் அதை ஜெபித்து வா
என் நாமம் அதை பறை சாற்று என்று அன்றுரைத்தேன், பறை சாற்று.

யாம் நிலை கொள்ள மண் தனை உனது கரத்தால் பெற்றுத்தா

யாம் பொதிகை மலையிலே உமக்கு யாம் ஒரு  _______________ காட்சி தருவோம்
உமை மலைக்கு யாமே அழைத்தோம் எம் மழலையே
உமது நிலைகள் மாறுமப்பா
வீண் வாதம் அதை தவிர்த்து மௌன நிலையிலே மலை அதை உச்சியிலே அபிஷேகம் செய்.

தானம் செய், த்யானம் செய்

உமக்கு யாம் ________________ காட்சி தனை யாம் தருவோம்
உமை ____________________________________ செல்வோம்.
உணர்வாய் நீ

உன் மழலை வாழ்வு சீர் பெறுமே
கொண்டவுளுடன் ஒரு நல்லுறவு கிட்டுமய்யா
இது கர்மத்தால் வந்த வினைகளின் ஆக்கமே
கர்ம வினைகளது உமை விட்டு படிப்படியே செல்லுமப்பா
அப்போது நீ முழு சித்த நிலை அடையப்பெருவாயே

ஒரு முறை _____________ சித்தனவன் நிலை பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் சென்று, என் அப்பனுக்கு, _________________, மண்டியிட்டு மனமுருகி தொழுது வா.

உனது செய் தொழில் தன்னிலே சிறு சிறு இன்னல்கள் உள்ளதய்யா.
இடர் நீக்கி வாழ வைப்பன் அஞ்சாதே தூயவனே

உமை, யாம் உன் அருகில் அல்ல, உன் உள் இருந்து உமை காப்பேன்

நாத ஒலி தனை யாம் கேட்டோம், குரு பூசை தனிலே, மனமகிழ்ந்தோம்

உனது நாவில் நான் நின்று நல்லதொரு நிலையை உயர்த்துவேனே

செய்தொழிலில் இன்னல் தீருமப்பா

சிருஷ்டி அதை நீ பெறுவாய் காலையே

ஏன் நாமமதை பறை சாற்று

நான் நிலை கொள்ள மண் தனை யாம் உமக்கு அமைத்து தருவோமே
உன் உள் இருந்து யாம் உமை இயக்குவோமே

உனது பணிச்சுமை படிப்படியே விட்டு விலகுமப்பா
இப்பீடத்து ஆசான் வழி நின்று சேவை தனை செய்
நிலை பெறுவாய்
வாழ்வு சிறக்கும்

உனது ஈன்றவள் தேகம் தனை கவனமுடன் நோக்கு என் மகனே
அவளின் நல்லாசி கிட்டுமே.
உனது வாழ்வு சீர் பெரும் அப்பா
யாம் உனை உன் உள் இருந்து உனை காப்பேன் தூயவனே
முற்றே

தனிப்பட்ட அருளுரை காட்சிகள், பரிகாரங்கள் ஆகியவற்றை பகிர வேண்டாம் என்று உத்தரவு, எனவே அவைகளை நீக்கி பதிவிட்டுள்ளேன்.
அகத்தியர் இருக்கிறார், அவர் பக்தர்களை வழி நடத்துகிறார், காக்கிறார், அருள்கிறார் என்று உலகிற்கு உணர்த்தவே மேற்கண்ட எனது பதிவு. அகத்தியர் ஆணைப்படி அவர் நாமம் பரப்பும் பணி. நன்றி.


என்றும் இறை பணியில்

தி.இரா. சந்தானம்
கோவை - 91760 12104