Tuesday, 13 January 2026

மாந்தி

 மர்மம் நிறைந்த மாந்தி கிரகம் !

மாந்தி  என்பது வேத ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் ஒரு உபகிரகம் (Upagraha). இது நவகிரகங்களில் சேராது; உடல், ஒளி, பாதை ஆகியவை இல்லாத நிழல் கிரகம். மாந்தி, சனி தேவனின் கர்ம–கால சக்தியின் உள்நிழல் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது. ஆகவே மாந்தி ஜாதகத்தில் கணித–கால கணக்கீடு மூலம் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது. 


புராண நிகழ்வின்படி இராவணன் நவகிரகங்களை சிறைப்படுத்திய போது ...சனி பகவான் சிறைக்கு வெளியே தனது கனுக்காலை நீட்டி, அந்த கால் பாதத்தின் வெப்ப நிழலில் இருந்து வெளிப்படவைத்த ஓர் சக்தி தான் மாந்தி கிரகம். அந்த கிரகத்தை வைத்து ராவணனை பலவீனப்படுத்தியதாக விவரிக்கிறது.


ஜோதிட ரீதியில், மாந்தி பூர்வஜன்ம கர்மச் சுமை, மன அழுத்தம், நீடித்த தடைகள் ஆகியவற்றைக் குறிக்கிறது. இது திடீர் அதிர்ச்சிகளை விட, மெதுவாக நீளும் துன்பங்களைச் சுட்டும். மாந்தி லக்னம், 4, 6, 8, 12 போன்ற வீடுகளில் இருப்பின் அதன் பலன் தீவிரமாகும்; மனச்சோர்வு, தனிமை உணர்வு, குடும்ப அல்லது தொழில் தாமதங்கள் போன்றவை வெளிப்படும். அதே நேரத்தில், நன்மை கிரக பார்வை இருந்தால் இத்துன்பம் ஆன்மீக விழிப்புணர்வாக மாறும்.


புராண–தாந்திரீக விளக்கத்தில், மாந்தி என்பது சனியின் உள்நீதிக் குரல். அது மனிதனை வெளியில் தண்டிப்பதைவிட, உள்ளே சோதித்து சீரமைக்கும் சக்தி. சித்தர் மரபில், மாந்தி சித்த சுத்தி—அஹங்கார கரைவு, சுய விசாரணை, மௌனம்—இவற்றை ஊக்குவிப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் பல யோகிகள், துறவிகள் ஜாதகங்களில் மாந்தி வலுவாக இருப்பது காணப்படுகிறது.


மாந்தி கிரகம் துன்பத்தின் அடையாளம் மட்டுமல்ல; துன்பத்தைத் தாண்டி ஞானத்திற்கான வாயில். அதை “தோஷம்” எனப் பார்ப்பதைவிட, கர்மப் பாடம் எனப் புரிந்துகொள்ளும் போது, மாந்தி வாழ்க்கையை ஆழப்படுத்தும் ஆசிரியனாக மாறுகிறது. 


மாந்தி மனத்தை இருட்டில் நிறுத்தி உன்னைப் பார்க்கச் செய்வான்; 

குலிகன் உடலை அசைத்துப் “நீ உடல் அல்ல” என்று உணர்த்துவான். 


தாந்திரீக விளக்கம்:

மாந்தி = சித்த சுத்தி (Purification of Mind)

அவர் அஹங்காரத்தை மெதுவாகக் கரைக்கும் சக்தி.


குலிகன் = பிராண சுத்தி (Purification of Life-force)

அவர் அஹங்காரத்தை உடைப்பவன். 


தாந்திரிகத்தில் மாந்தி மற்றும் குலிகன் இருவரும்

தனி தெய்வங்கள் அல்ல; சனி தேவனின்

கர்ம–கால சக்தி மனித உடல்–மன அமைப்பில் செயல்படும் நிழல் சக்திகள்.


“ஒளி வெளியில் தெரியும்; நிழல் உள்ளே வேலை செய்கிறது.” – இதுவே மாந்தி–குலிகன் தத்துவம். 


புராண மரபில்: 

யமன் → மரணத்திற்கு பின் தீர்ப்பு.

சனி → வாழும் காலத்திலேயே தீர்ப்பு.

குலிகன், யமனின் துறைக்கு நெருக்கமான சக்தியாகக் கருதப்படுகிறார்.மாந்தி, சனியின் உள்நீதித் துறையின் பிரதிநிதி. 


பிரபஞ்ச சமநிலைக்காக, சனியின் சக்தி இரண்டு நிழல் வடிவங்களாக பிரிந்தது !

1. மாந்தி – உள்மன கர்ம நிழல்,

சனியின் உள்நோக்கி இயங்கும் சக்தி,

மனம், நினைவு, சிந்தனை, வேதனை,

மெதுவாக, நீடித்து துன்பம் தரும் !


2. குலிகன் – உடல்/உயிர் கர்ம நிழல்,

சனியின் வெளிநோக்கி இயங்கும் சக்தி,

உடல், விபத்து, விஷம், மரணம்,

திடீரென, கடுமையாக விளையும் !


இவர்கள் பிறந்தவர்கள் அல்ல –

பிரித்தெடுக்கப்பட்ட கர்ம சக்திகள். 

சிலர் ஜோதிட ரிதியாக மாந்தி பரிகாரம் செய்கிறேன் என ஜேஷ்டா தேவிக்கு அருகில் இருக்கும் உப தேவதைகளுக்கு செய்கிறார்கள். இது பெரும் சாஸ்திர பிழை ! அவ்வாறு செய்வது எதிர்மறை விளைவே ஏற்படும். ஜேஷ்டா தேவிக்கும் சனி பகவானுக்கு பிறந்தவர்கள் தான் மாந்தி, குளிகன் என செய்யும் பிரச்சாரம் பெரும் பிழையான ஓன்று..

No comments:

Post a Comment