ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583 THIS SITE IS BEST VIEWED IN GOOGLE CHROME BROWSER. இந்த வலைத்தளம் கூகிள் குரோம் என்ற சாதனத்தில் சிறப்பாக இயங்கும்.
Friday, 27 February 2026
நம்பிக்கை தான் வாழ்க்கை
மஹாலட்சுமி மந்திரம்
வேதத்தில் உள்ள அதி சூட்சுமமான மஹாலட்சுமி மந்திரம்
...
ஸ்ரீ மஹாலட்சுமி அஸ்டோத்திரம்
அர்ச்சனை
அர்சுத்தியான தியானந்தீம் த்ரீலோதனம்
ஹாரந்தீம் லக்ஷ்மீம் தேவி விதிந்தேம்
இது வேதத்தில் உள்ள அதி சூட்சுமமான ரகசியம்.
ஓம் ஸ்ரீ பார்வதி சரஸ்வதி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ விஷ்ணு ப்ரியே மஹாமாயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ கமலே விமலேதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ காருண்ய நிலையேதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ தாரித்திர துக்க சமனி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஸ்ரீதேவி நித்ய கல்யாணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சமுத்திரா தனயே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ராஜலக்ஷ்மி, ராஜ்யலக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வீர லக்ஷ்மி, விஸ்வ லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மோக மந்த்ரீ மந்த்ர ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மஹிசாசுர சம்கர்த்தீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மதுகைடப நித்ராவே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சங்கு சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வைகுண்ட ஹிருதய வாசே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பக்ஷ்சேந்திர வாகனே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ தான்ய ரூபே, தான்ய லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஸ்வர்ண ரூபே ஸ்வர்ண லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வித்ய ரூபே வித்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஹரிப்ரியே வேத ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பல ரூபே பல ஹாத்திரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ நிஷ் குல்லே நிர்மலே நித்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ரத்ன ரூபே ரத்ன லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சீதரூபே சீதா லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வேத ரூபியே நாத ரூபியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பிராண ரூபே பிராண மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பிராணமானந்த மகஸ்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பிரம்ம ரூபியே பிரம்ம தாத்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஜாத வேத சொரூபிணியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஆதார ஹர்ஸ நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஸூஸ்மாந்த்ரா சுசிலாந்தஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ யோகானந்த பிரதாயின்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ செளந்தரியே ரூபிணி தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சித்த லக்ஷ்மி சித்த ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சர்வ சந்தோஷ சத் ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ துசிதே புசிதே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ராஜ ராஜார்த்திய பதயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சார சொரூபே திவ் யாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ தாரித்திர திவ்ய சுத்தாக்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வேத குஹே சுபே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ தர்மார்த்த காம ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மோட்ச சாம்ராஜ்ய நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சர்வகமே சர்வ ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மோகினி மோக ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பஞ்ச பூதாந்திரஸ்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ நாராயண ப்யதமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ காருணி கார்ய ரூபிணியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஆனந்த சர்ப்ப சயனி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ லோகைக ஜனனீ வந்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சம்பு ரூபே சம்பு முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ப்ரம்ம ரூபே ப்ரம்ம முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ விஷ்ணு ரூபே விஷ்ணு மாயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஆக்ஞ்யா சக்ராப்த்ய நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஆகார ரேக சக்ராம்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஹிருதய பூஜ தீபாத்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஆதார மூல நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ப்ரம்ம கிரந்தி பிரகாசாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ குண்டலினி சயனா நந்தி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஜீவாத்மா ரூபிணி மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஸ்தூல சூசும பிரகாஸ் சித்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ப்ரம்மாண்ட பாண்ட ஜனனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ அஸ்வத்தா ப்ரஷ சந்துஷ்டே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ காரிண்ய பூர்ணே ஸ்ரீதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மூர்த்தித்தியே சொருபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பானு மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சூர்ய ப்ரகாச ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சந்திர மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வஹி மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பீதாம்பர தர தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ திவ்ய ஆபரண சோபாடே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ப்ராமண ஆராதனா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ நரசிம்ஹக்ரவா சிந்தோ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வரதே மங்களே மன்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பட் மாடவி நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வியாசாதி திவ்ய சம பூஜே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஜெய லக்ஷ்மி சித்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ராஜ்ய முத்ரே விஷ்ணு முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சர்வார்த்த சாதகி நித்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஹனுமன் பக்தி சந்துஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மகநீ கீத நாதஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ரதி ரூபே ரம்ய ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ காமத்மி காம ஜனனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சுதா பூர்ணே சுதா ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ இந்திர வன்யே தேவ லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ அஷ்ட ஐஸ்வர்ய சொரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ தர்ம ராஜ சொரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ரட்சோவர புரி லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ரத்னாகர ப்ரபாகரமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மருது புர மஹானந்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ குபேர லக்ஷ்மி மாதாங்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஈசான லக்ஷ்மி சர்வேசி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ப்ரம்ம பீடே மஹா பீடே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மாயா பீடஸ்திதே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சக்ர வாசினி கன்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ அஷ்ட பைரவ சம்பூஜே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ அஸ்திதானந்த பூரி நாதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சித்த லட்சுமி மஹா வித்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ புத்தீந்திராதி நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ லோக தாரித்ர சமனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ மிருத்யூ சந்தாப நாசினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பதி ப்ரியே பதி விரதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சதுர் புஜே கோமாளங்கி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பட்ச ரூபே முக்தி தாத்நீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஜனா நந்த மயே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ பக்தி ப்ரியே பக்தி கமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஸ்தோத்ரப்ரியே ரமே ராமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ராம நாம ப்ரிய தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ கங்காப்ரியே சுத்த ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ விஷ்வ பர்த்தி விஷ்வ மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ க்ருஷ்ணப்ரியே க்ருஷ்ணரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ கீத ரூபியே ராக மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சாவித்ரீ பூத சாவித்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ காயத்ரீ ப்ரம்ம காயத்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ப்ரம்மே சரஸ்வதி தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சுகாலினி சுத்தாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வீணாதர ஸ்தோத்ர ஹமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ அஃஞாதரி ப்ருக்ஞானே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ வேதாந்த வன சாராங்கி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ நாதாந்த ரஷ புயஸ்ஸே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ திவ்ய சக்தி மஹாசக்தி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ந்ருத்த புரியே நிருத்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ சதுர் சஷ்டி கலா ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ திவ்ய சுந்தாகரங்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ முக்திதே முக்தி தேகஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ யக்ஞ சாரார்த்த சுத்தாக்னீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ அஷ்ட லஷ்மியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஸர்வ மங்கள சம்பூர்ணே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஓம் ஸ்ரீ ஸர்வ மங்கள மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி.
லஷ்மி ....எத்தனை லஷ்மி
லஷ்மி ....எத்தனை லஷ்மி
லஷ்மி ....எத்தனை லஷ்மி !
உதாரணமாக, சுக்கிரன்
அசுவினியில் இருந்தால் வித்யாலஷ்மியாகவும்,
பரணியில் இருந்தால் அன்ன லஷ்மியாகவும்,
கிருத்திகையில் ஜோதி லஷ்மியாகவும்,
ரோஹிணியில் தனலஷ்மியாகவும்,
மிருக சீரிடத்தில் முத்து லஷ்மியாகவும்,
திரு வாதிரையில் வீர லஷ்மியாகவும்,
புனர் பூசத்தில் ராம லஷ்மியாகவும்,
பூசத்தில் குரு லஷ்மியாகவும்,
ஆயில்யத்தில் நாக லஷ்மியாகவும்,
மகத்தில் தான்ய லஷ்மியாகவும்,
பூரத்தில் சந்தான லஷ்மியாகவும்,
உத்திரத்தில் சீதா லஷ்மியாகவும்,
ஹஸ்தத்தில் கான லஷ்மியாகவும்,
சித்திரையில் சுப லஷ்மியாகவும்,
சுவாதியில் தீப லஷ்மியாகவும்,
விசாகத்தில் சுப்பு லஷ்மியாகவும்,
அனுஷத்தில் ஆனந்த லஷ்மியாகவும்,
கேட்டையில் யோக லஷ்மியாகவும்,
மூலத்தில் வசந்த லஷ்மியாகவும்,
உத்திராடத்தில் ராஜ லஷ்மியாகவும்,
திரு வோணத்தில் மகா லஷ்மியாகவும்,
அவிட்டத்தில் அஷ்ட லஷ்மியாகவும்,
சதயத்தில் விஜய லஷ்மியாகவும்,
பூரட்டாதியில் பாக்கிய லஷ்மியாகவும்,
உத்திரட்டாதியில் வேங்கட லஷ்மியாகவும்,
ரேவதியில் கஜ லஷ்மியாகவும்
பெயர் அமைப்புகள் மாறும். குண பாவங்களும் மாறிக்கொண்டே இருக்கும்.
Courtesy: Sri krishna ravi @ krishnalaya
...
16 வகை லட்சுமி
மகாலட்சுமி பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள். அந்த ஒவ்வொரு பெயருக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
1. ஸ்ரீதனலட்சுமி:-நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.
2. ஸ்ரீவித்யாலட்சுமி:-எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்.
3. ஸ்ரீதான்யலட்சுமி:- ஸ்ரீதேவியானவள் பசி நீக்கும் தான்ய உருவில் இருப்பதால் பசியோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீதான் யட்சுமியின் அருளை நிச்சயம் பெறலாம்.
4. ஸ்ரீவரலட்சுமி:- உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும், ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும் பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும், நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.
5. ஸ்ரீசவுபாக்யலட்சுமி:- ஸ்ரீதேவி எங்கும் எதிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு மறற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்க வேண்டும். பிறர் மனது நோகாமல் நடந்தால் சவுபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழலாம்.
6. ஸ்ரீசந்தானலட்சுமி:- எல்லா குழந்தைகளையும் தன் குழந்தையாக பாவிக்கும் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வேண் டும். தாயன்புடன் ஸ்ரீசந்தான லட்சுமியை துதித்தால் நிச்சயம் பலன் உண்டு.
7. ஸ்ரீகாருண்யலட்சுமி:- எல்லா உயிர்களிடமும் கருணையோடு பழக வேண்டும், உயிர்வதை கூடாது, உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லை, ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடை பிடித்தால் ஸ்ரீ காருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.
8. ஸ்ரீமகாலட்சுமி:- நாம் நம்மால் முடிந்ததை மற்றவர் களுக்கு கொடுக்க வேண்டும் என்றுமே நம் உள்ளத் தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் ஸ்ரீ மகாலட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள்.
9. ஸ்ரீசக்திலட்சுமி:- எந்த வேலையும் என்னால் முடி யாது என்ற சொல்லாமல் எதையும் சிந்தித்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் ஸ்ரீசக்தி லட்சுமி நமக்கு என்றும் சக்தியைக் கொடுப்பாள்.
10. ஸ்ரீசாந்திலட்சுமி:- நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமமாக பாவித்து வாழ பழக வேண்டும். நிம்மதி என்பது வெளியில் இல்லை. நம் மனதை இருக்குமிடத்திலேயே நாம் சாந்தப்படுத்த முடியும். ஸ்ரீசாந்தி லட்சுமியை தியானம் செய்தால் எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.
11. ஸ்ரீசாயாலட்சுமி:- நாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல கடமையை செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார்க்கத்தில் சாய்ந்து ஸ்ரீசாயாலட்சுமியை தியானித்து அருளைப் பெற வேண்டும்.
12. ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமி:- எப்போதும் நாம் பக்தி வேட்கையுடன் இருக்க வேண்டும், பிறருக்கு உதவ வேண்டும், ஞானம் பெற வேண்டும், பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையுடன் ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமியைத் துதித்து நலம் அடையலாம்.
13. ஸ்ரீசாந்தலட்சுமி:- பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தார் பூமியை ஆள்வார். பொறுமையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.
14. ஸ்ரீகிருத்திலட்சுமி:- நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால், புகழ் தானாக வரும். மேலும் ஸ்ரீகீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
15. ஸ்ரீவிஜயலட்சுமி:- விடாத முயற்சியும் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜயலட்சுமி எப்பொழுதும் நம்முடன் இருப்பாள்.
16. ஸ்ரீஆரோக்கிய லட்சுமி:- நாம் நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்தால் மட்டும் போதாது, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், கோபம், பொறுமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஸ்ரீஆரோக்கிய லட்சுமியை வணங்க வேண்டும்.
Courtesy: "தமிழ்மறை"
Monday, 23 February 2026
Sunday, 22 February 2026
லாட சன்யாசி கதை மற்றும் கொடி மர பிராத்திட்டை காட்சிகள்
Thursday, 19 February 2026
ஆன்மீக தகவல் மற்றும் கொடி மர பூஜை காட்சிகள்
*சிவராத்திரியில் மட்டும் பூக்கும் குங்கிலிய மலர்*
சிவபெருமானுக்கு மிகவும் உகந்தது குங்கிலிய மலர் ஆகும். இது ஈசனுக்கு மிக உகந்த சிவராத்திரியில் மட்டுமே பூக்கும் என்பதும் ஆச்சரியம். மூலிகை மருத்துவ குணம் உடையது குங்கிலிய மரம். இந்த மரத்தில் சால் மற்றும் ஜலரி எனும் இரு வகைகள் உள்ளன.
ஜலரி மரங்களில்தான் சிவராத்திரியில் மட்டும் குங்கிலியப் பூக்கள் அபூர்வமாகப் பூக்கின்றன. சிவராத்திரி நாட்களில் மட்டும் இவை பூப்பதால் தெய்வீகத் தன்மை கொண்டவையாக விளங்கும் இந்தப் பூக்களை சிவனுக்கு மாலையாகப் படைக்கும் மலை கிராம மக்கள், சிவனுக்கு உகந்த மலர் பூக்கும் மரம் எனக் கருதி, மறந்தும் கூட இவற்றை வெட்டுவதில்லை.
கன்னடத்தில் குங்கிலிய மரத்தை, ‘தளி’ என அழைப்பர். இந்தப் பெயரிலேயே ஹோசூர் அருகிலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் ஒரு இடம் உள்ளது. இதன் அருகிலுள்ள தேர் பெட்டா மலைப்பகுதியில் வருடந்தோறும் சிவராத்திரியின்போது குங்கிலியப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
இந்தப் பூ மிகவும் அபூர்வ நறுமணம் கொண்டவை. இந்த மரங்கள் இருக்கும் இடத்திலிருந்து 3 கி.மீ. தொலைவு சுற்றளவுக்கு இந்த மலரின் நறுமணம் வீசும். சிவராத்திரியில் மட்டும் பூக்கும் இந்த அதிசயப் பூக்களைக் காணவும், அதன் மணத்தை நுகரவுமே சுற்றுலாப் பயணிகள் பெரும் அளவில் தேர் பெட்டா மலைப்பகுதிக்கு வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.🌹
Thursday, 5 February 2026
அகத்தியர் ஆலயம் கொடி மரம் பிரதிட்டை
இன்று நமது பொகலூர் அகத்தியர் ஆலயத்தில் நமது குருஜி அவர்களால் ஓலை சுவடி மூலம் நமது ஆலயத்தின் கொடிமரம் எப்போது பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அகத்தியர் பெருமானிடம் கேட்கப்பட்டது
அதற்கு அகத்தியர் அவர்கள் ஓலைச்சுவடி மூலமாக உரைத்த வாக்கு, மாசி மாதம் மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிவராத்திரி அன்று கொடிமரத்தை பிரதிஷ்டை செய்யுமாறு உத்தரவு கொடுத்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
அது சமயம் *அனைவரும் வந்திருந்து கொடிமர பிரதிஷ்டை செய்யும் விழாவில் பங்கேற்று அகஸ்தியரின் பூரண நல் ஆசிகளுக்கு உரித்தாகுமாறு கேட்டுக்கொள்கிறோம்*
*உங்களால் முடிந்த நன்கொடைகளை கொடிமர பிரதிஷ்டை செய்யும் பூஜை காரியங்களுக்கு கொடுத்து உதவவும்* மிக்க நன்றி
Sunday, 1 February 2026
குதிரையும் ஏரியும்: ஒரு சித்தரின் பாடம்
குதிரையும் ஏரியும்: ஒரு சித்தரின் பாடம்
பொதிகை மலையின் அடிவாரம். மூலிகைகளின் வாசனை நிறைந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. அங்கே ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் அமைதியாக அமர்ந்திருந்தார் அந்த வயதான சித்தர்.
அவருடைய சீடன் கபிலன், மூச்சிரைக்க ஓடி வந்தான். அவன் முகம் சோர்வாக இருந்தது. கண்கள் எதையோ தேடிக் கொண்டிருந்தன.
"குருவே!" என்று வணங்கினான் கபிலன். "எனக்கு ஒரு பெரிய பிரச்சனை. என்னால் என் மனதை ஒரு நிலையில் நிறுத்த முடியவில்லை. காலையில் எழும்போதே சோர்வாக இருக்கிறது. ஏதோ ஒரு சக்தி என்னை விட்டு வெளியேறிக் கொண்டே இருப்பது போல் உணர்கிறேன். என் ஆற்றலை நான் எப்படிக் கட்டுப்படுத்துவது?"
சித்தர் மெல்லக் கண்களைத் திறந்தார். அவர் உதட்டில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.
ஓடும் குதிரையும் லகானும்
"கபிலா..." என்று அழைத்தார் சித்தர். "உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள். ஒரு வீரன் குதிரையில் சவாரி செய்கிறான். அந்தக் குதிரை மிரண்டு போய், கண்டபடி காட்டிற்குள் ஓடுகிறது. இப்போது அந்த வீரனால் நிம்மதியாகப் பயணம் செய்ய முடியுமா?"
"முடியாது குருவே, அவன் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுவான்," என்றான் கபிலன்.
"சரியாகச் சொன்னாய்! இங்கே அந்த வீரன் தான் உன் மனம். அந்தக் குதிரைதான் உன் மூச்சுக்காற்று."
கபிலன் ஆச்சரியத்துடன் பார்த்தான். சித்தர் தொடர்ந்தார்:
"திருமூலர் என்ன சொல்கிறார் தெரியுமா? 'புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை...' என்று பாடுகிறார். அதாவது, உன் மூச்சுக் காற்று ஒரு காட்டுக்குதிரை போல எப்போதும் அலைந்து கொண்டே இருக்கிறது. நீ கோபப்படும்போதும், பதற்றப்படும்போதும் உன் மூச்சின் வேகம் அதிகரிக்கிறது. குதிரை மிரண்டு ஓடினால், மனமாகிய வீரன் தடுமாறுவான். உன் உடலின் சக்தி வீணாகும்."
"இதற்கு என்ன வழி குருவே?"
"லகானை இழுத்துப் பிடி! உன் மூச்சை நீ எப்போது மெதுவாகவும், ஆழமாகவும் இழுத்து விடுகிறாயோ, அப்போதே அந்தக் குதிரை உன் கட்டுப்பாட்டிற்குள் வரும். உன் உடல் அமைதியடையும். குதிரை அடங்கினால், வீரனும் அமைதியாவான். உன் ஆற்றல் உள்ளேயே சேமிக்கப்படும்."
ஏரியும் மதகும்
கபிலன் சற்று யோசித்துவிட்டு கேட்டான், "குருவே, மூச்சைக் கட்டுப்படுத்தினால் அமைதி கிடைக்கும் என்று புரிகிறது. ஆனால், என் உணர்ச்சிகளையும் உடல் வலிமையையும் ஒரே வழியில் சீரமைக்க முடியுமா?"
சித்தர் அவனை அருகில் இருந்த ஒரு அழகான தாமரைக்குளத்திற்கு அழைத்துச் சென்றார்.
"இந்த ஏரியைப் பார் கபிலா. நீர் தளும்பத் தளும்ப நிரம்பியிருக்கிறது. மதகுகள் (Sluice Gates) மூடியிருப்பதால் நீர் வீணாகாமல் சேமிக்கப்படுகிறது. இந்த நீர் தான் உன் உயிர்ச் சக்தி."
"நீ எப்போதெல்லாம் தேவையல்லாத விஷயங்களைப் பேசுகிறாயோ, அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறாயோ, அப்போதெல்லாம் இந்த ஏரியின் மதகைத் திறந்து நீரை வீணக்குகிறாய். நீர் வற்றிய ஏரி போல, நீயும் சோர்வாகிறாய்."
சித்தர் ஒரு கல்லை எடுத்து நீரில் போட்டார். அலைகள் உருவாயின.
"இங்கே ஒரு ரகசியம் இருக்கிறது. இதை 'ஏகலை' என்கிறார் திருமூலர். அதாவது, உனக்குள் இருக்கும் ஆற்றல் ஒன்றுதான். மின்சாரம் ஒன்றுதான்; ஆனால் அது விளக்கில் ஒளியாகவும், விசிறியில் காற்றாகவும் மாறுகிறது அல்லவா? அதேபோலத்தான் இதுவும்."
• அந்த ஆற்றலை நீ கீழான ஆசைகளுக்குப் பாய்ச்சினால், அது வெறும் உடல் இச்சையாக முடியும்.
• அதைச் செயலில் காட்டினால், அது வீரம் மற்றும் உழைப்பாக மாறும்.
• அதே ஆற்றலை மூச்சின் துணை கொண்டு மேலே (மூளைக்கு) மடைமாற்றினால், அதுவே ஞானமாகவும், பேரறிவாகவும் மாறும்.
"கட்டுப்பாடு என்பது ஆற்றலைத் தடுப்பது அல்ல கபிலா; அதைச் சரியான திசையில் திருப்புவது. மடைமாற்றி விட்டால், அந்த நீர் வயலுக்குப் பாய்ந்து செழிப்பைத் தரும். வீணாக விட்டால் சேறாகும்."
கபிலன் ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து மெதுவாக வெளியிட்டான். அவனுக்குள் இருந்த பதற்றம் விலகி, ஒரு தெளிவு பிறந்தது.
"புரிந்தது குருவே! என் மூச்சுதான் அந்தச் சாவி. இனி என் ஏரியின் மதகை நான் வீணாகத் திறக்க மாட்டேன். என் ஆற்றலை அறிவாக மாற்றுவேன்," என்று உறுதியெடுத்தான்.
சித்தர் ஆசிர்வதித்தார். "சென்று வா கபிலா.
ஓம் திருமூலதேவாய நம🔥
