Friday, 18 July 2025

மருத்துவ நாடி பார்க்கும் முறை

 சித்தர்கள் அருளிய நாடி முறை !!!


ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் முன் அவர் எந்த நோயால் பாதிக்ப்பட்டிருக்கிறார் என்பதையும், அந்த நோயின் தனமையையம் முழுவதுமாக அறிந்து கொள்வது மிக மிக முக்கியம். சித்த மருத்துவ முறையில் நாடி பார்ப்பது மூலம் இதனைக் கண்டறிகிறார்கள். நாடி பார்ப்பது என்பது சித்த மருத்துவத்தின் அடிப்படை மட்டுமல்ல, சிறப்பும் கூட. அப்படிப்பட்ட நாடி பற்றி தெரிந்து கொள்வோம்.


நாடி என்றால் என்ன?

அது எத்தனை வகைப்படும்….அதை எப்படி சாமான்ய ஆட்கள் கண்டுகொள்வது?மனித

உடலில் பத்து இடங்களில் நாடி பார்க்க முடியும். இது மருத்துவம் – உடல் மாற்றம்

மற்றும் பல விஷயங்களுக்கு நமது முன்னோர்கள் பார்த்து வைத்தியம் செய்திருக்கின்றனர்.


பல சிடி ஸ்கேன் செய்ய முடியாததை கூட இந்த நாடி டக்கென்றுடாக்டர் அல்லாத

ஒரு சாதாரண பாட்டி கூட சொல்ல முடியும் அதிசயம். நாடி பெரும்பாலும் கைமணிக்கட்டில் பார்ப்பது தான் பெஸ்ட் – இதை பல்ஸ் ரீடிங் என கூறுவர்.


நாடி தலையில் இருந்து கீழ் நோக்கி வரும். இதை மூன்று கை விரல்களில் கண்டு கொள்ள முடியும்.கட்டை விரல் / மோதிர விரல் ஆள் காட்டி விரல் தான் அவை. வாதம் /கபம் / பித்தம் இந்த நாடி மூலம் மிக துள்ளியமாக கணிக்க முடியும். இதை எப்ப்டி கண்டுபிடிப்பது மற்றும் பல நாடிகளை பற்றி விலாவாரியாக கூறுகிறேன்.  


வாத நாடி – நாடி 

அதாவது பல்ஸ் பிடித்து பார்க்கும் போது Index finger எனப்படும் ஆள்காட்டி விரலில் தெரியும் 


பித்த நாடி – நாடி

அதாவது பல்ஸ்  பிடித்து பார்க்கும் போது நடு Middle Finger விரலில் தெரிவது .


கப நாடி – நாடி 

அதாவது பல்ஸ் பிடித்து பார்க்கும் போது மோதிர விரலில் Ring Finger தெரிந்தால் அது கப நாடி.


ஆத்ம நாடி – .நாடி அதாவது பல்ஸ் பிடித்து பார்க்கும் போது சிறிய விரலில் பிடித்து பார்ப்பது 


பூத நாடி – நாடி

அதாவது பல்ஸ் பிடித்து பார்க்கும் போது Suzhumunai Imbalance என்னும் மூளை தடுமாற்றம் தான் பூத நாடி. இது கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நடுவே தெரியும் அல்லது நெற்றியில் தெரியும் இது பாலச்சந்திரா அடங்கல் எனப்படும். 


குரு நாடி  : 

குரு நாடி – என்றால் வாதம் / கபம் / பித்தம் / ஆத்ம மற்றூம் பூத நாடிகளின்

கூட்டு கலவை தான் குரு நாடி. 


பிரனான் நாடி 

இது சாதாரணமாக யாருக்கும் பார்ப்பதில்லை. இது சில விபத்து அல்லது பேச்சு மூச்சு இல்லாமல் யாரவது இருப்பின் அவர்களின் பிராணம் செல்கிறதா என்று பார்ப்பது.


ஆங்கில மருத்தவம் – அல்லது  ஸ்டெத்தஸ்கோப் பல வருடங்களுக்கு முன் தான்

கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நாடியை நம் மூன்னோர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து வைத்தியம் செய்திருக்கின்றனர். வாதம் / கபம் / பித்தம் இந்த மூன்றை கன்ட்ரோல் பண்ணீனாலே போதும் – முக்கால்வாசி நோய்கள் மனிதனுக்கு வராது.


நாடி எப்படி உண்டாகிறது?நம் உடலின் ரத்த ஓட்டத்தின் ஆதாரம் இதயம். இதயம் எப்படி செய்லடுகிறதோ அதற்கு ஏற்றார்போல்தான் நம்உடல் முழுவதும் இரத்த ஓட்டம் இருக்கும். மிகை ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம் என்று சொல்வதெல்லாம் இதயத்தின் செயல்பாட்டைப் பொறுத்துத்தான்.அப்படி இதயம் சுருங்கி விரியும் தன்மைக்கு ஏற்ப உருவாவதுதான் நாடி. அதாவது இதயத் துடிப்பும் நாடியும் ஒன்றையொன்று ஒத்திருக்கும்


.நாடி பார்க்கும் முறை:

மணிக்கட்டுக்கு ஓர் அங்குலம் மேலே மூன்று விரல்களால் (நடு விரல், மோதிர விரல், ஆள்காட்டி விரல்)ஒரே நேரத்தில் மெதுவாக அழுத்தி நாடி பார்க்க வேண்டும்.

பிறகு, விரல்களை மாறி மாறி அழுத்தியும்,தளர்த்தியும் பார்த்தால் நாடியின்  தன்மையை  முழுமையாக அறிந்து கொள்ளலாம்.(30 வினாடிகள் துடிப்பு கவனித்து அதை 2 ல் பெருக்கி வருவது நமது துடிப்பு எண்ணிக்கை.)18 வயதுக்கு குறைவானவர்களுக்கு சராசரியாக 70-100/ நிமிடம் துடிப்புகள். மற்றவர்களுக்கு சராசரியாக 60-100/நிமிடம் துடிப்புகள் இருக்க வேண்டும்.


நாடி நிதானம் :

மேலே சொன்னபடி நாடி பார்க்கும் போது ஆள்காட்டி விரல் மூலம் கீழ்வாத நாடி, நடு விரல் மூலம் கீழ் பித்த நாடி, மோதிர விரல் மூலம் கீழ் சிலேத்தும நாடி ஆகியவற்றின் தன்மையை அறிந்து கொள்ளலாம். இவை தவிர பூத நாடி, குரு நாடி என இரு நாடிகள் உண்டு. பெருவிரல் மற்றும் சுண்டு விரல் மூலம் பூத நாடியையும், ஐந்து விரல்கள் மூலம் குரு நாடியையும் உணரலாம்.


எவ்வித உடல் நலக் குறைபாடும் இல்லாத ஒருவருக்கு நாடி பார்த்தால், அவருடைய வாத நாடி குயில் மாதிரியும் அன்னம் மாதிரியும் நடக்கும். பித்த நாடி ஆமை மாதிரியும், அட்டை மாதிரியும், சிலேத்தும நாடி பாம்பு மாதிரியும், தவளை மாதிரியும் நடக்கும்.

ஆண்-பெண் நாடி பார்க்கும் முறை:

ஆண்களுக்கு வலக் கையிலும் பெண்களுக்கு இடக் கையிலும் நாடி பார்ப்பதுதான் சிறந்தது.


பத்துவகை நாடிகள்:


1.இடகலை நாடி எனப்படும் (வளி) வாத நாடி.

2. பிங்கலை எனப்படும் (அனல்) பித்த நாடி.

3. சுழிமுனை எனப்படும் ஐய நாடி

4. சிங்குவை எனப்படும் உள்நோக்கு நாடி

5. புருடன் எனப்படும் வலக் கண் நாடி.

6. காந்தாரி எனப்படும் இடக்கண் நாடி

7. அத்தி எனப்படும் வலச் செவி நாடி

8. சங்கினி எனப்படும் ஆண், பெண் குறி நாடி.

9. அலம்புடை எனப்படும் இடச் செவி நாடி.

10.குருநாடி எனப்படும் எரு வாயில் நாடி.


நாடிகளின் தன்மை:வாத நாடி: 

வாதம் அதிகமானால் உடல் முழுவதும் குத்தல் வலி இருக்கும். கை, கால் மூட்டுகளில் வலி அதிகமாக இருக்கும். கை கால்கள் முடங்கிப் போகலாம். குனிந்து நிமிர முடியாத படி அடிக்கடி மூச்சுப் பிடிப்பு ஏற்படும். வயிற்றுப் பொருமல் அதிகமாக இருக்கும்.

வயிற்றில் மந்தம் ஏற்பட்டு: சரியாகப் பசி எடுக்காது. மலச்சிக்கலும், சிறுநீர்க்கட்டும்

ஏற்படும். வாய் புளிக்கும். அடிக்கடி பேதி ஆகும்.வாத நாடி அறிகுறிகள்: உடல்

குளிர்ச்சியாக இருக்கும். முகம், கண்விழி, பல், மலம் கறுமை நிறத்தில் இருக்கும். கண்ணில் நீர் வடியும். நாக்கு கறுத்து வறண்டு போகும். சிறுநீர் கறுத்தும், அளவி;ல்

கொஞ்சமாகவும் வெளியாகும்.


பித்த நாடி:

பித்தம் அதிகமானால் உடல் நடுக்கம் ஏற்படும். உடல் வறட்சி ஏற்பட்டு எரிச்சல் அதிகமாகும். மண்டைக்குடைச்சல், நாவறட்சி, வாய்க் கசப்பு, தாகம், விக்கல், வாந்தி, தலைக் கிறுகிறுப்பு,காது அடைப்பு, அயர்ச்சி, சோம்பல்,நெஞ்செரிச்சல், மந்தம்,

குளிர்க்காய்ச்சல், ரத்த சோகை, மஞ்சள் காமாலை, மயக்கம் உள்ளிட்ட வேறு பல

பாதிப்புகள் ஏற்படலாம். கண் பார்வை தெளிவில்லாமல் இருக்கும். கண்கள்

உள்வாங்கி அடிக்கடி பார்வை இருண்டு போகும். சிறுநீர் மஞ்சள் நிறமாகவும் சில

சமயத்தில் சிவப்பு நிறத்திலும் இருக்கும்.


பித்த நாடிஅறிகுறிகள்:

உடல் சூடாகவும், முகம் கண்விழி, நாக்கு, பல், மலம் ஆகியவை சிவப்பாகவும் இருக்கும். 

சிறுநீர் மஞ்களாகவும் சில சமயங்களில் சிவப்பாகவும் வெளியாகும்.சிலேத்தும

நாடி:சிலேத்துவம் அதிகரித்தால் உடல் கரையும், வற்றும், வெளுக்கும், குளிர்ந்து

நடுங்கும், உணவு சாப்பிடப் பிடிக்காது. விக்கல், வாந்தி, இருமல், மேல் மூச்சு,

வியர்வை போன்றவை இருக்கும். நெஞ்சுமற்றும் விலாப்பகுதியில்வலி

இருக்கும். உமிழ்நீர் அதிகமாக சுரக்கும். இருமினால் ரத்தம் வெளியாகலாம். சிறுநீர்

குறைவாகப் போகும்.சிலேத்தும நாடி அறிகுறிகள்: உடல் அடிக்கடி வியர்க்கும். 

முகம், கண்விழி, நாக்கு, பல், மலம், சிறுநீர் ஆகியவை வெளிர் நிறத்தில் இருக்கும்.

கண்களில் பீளை கட்டும். 


நாடி எப்படி உண்டாகிறது?

நம் உடலின் ரத்த ஓட்டத்தின் ஆதாரம் இதயம். இதயம் எப்படி செயல்படுகிறதோ அதற்கு ஏற்றார்போல்தான் நம் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் இருக்கும். மிகை ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம் என்று சொல்வதெல்லாம் இதயத்தின் செயல்பாட்டைப் பொறுத்துத்தான். அப்படி இதயம் சுருங்கி விரியும் தன்மைக்கு ஏற்ப உருவாவதுதான் நாடி. அதாவது இதயத் துடிப்பும் நாடியும் ஒன்றையொன்று ஒத்திருக்கும்.


உடல் அறிகுறிகள்:

உடல் அடிக்கடி வியர்க்கும். முகம், கண்விழி, நாக்கு, பல், மலம், சிறுநீர் ஆகியவை வெளிர் நிறத்தில் இருக்கும். கண்களில் பீளை கட்டும்.


மனித உடலில் உள்ள மொத்த நாடிகள்:

தலையில் - 15000

கண்களில் - 4000

செவியில் - 3300

மூக்கில் - 3380

பிடரியில் - 6000

கண்டத்தில் - 5000

கைகளில் - 3000

முண்டத்தில் - 2170

இடையின் கீழ் - 8000

விரல்களில் - 3000

லிங்கத்தில் - 7000

மூலத்தில் - 5000

சந்துகளில் - 2000

பாதத்தில் - 5150

மொத்தம் - 72000


நாடிகள் உள்ளன . நாடியைப் பற்றிய ஆழ்ந்த அறிவு படைத்தவர்கள் நமதுசித்தர்கள். அவர்கள் மேலும், வயது, பாலுக்கு ஏற்ப நாடித் துடிப்பு மாறுவதைக் கணக்கிட்டுச் சொல்லியுள்ளனர். 


ஒரு நிமிடத்தில் நாடித் துடிக்கும் அளவு பிறந்த குழந்தைக்கு 70, அதுவும் சாதாரணமாக 100, உட்கார்ந்து இருக்கும் போது 40, இளமைப் பருவத்தினருக்கு 75 முதல் 80, வாலிபப் பருவத்தினருக்கு 90, வயது முதிர்ந்த ஆணுக்கு 70 முதல் 75, அவர்கள் படுத்து இருக்கும் போது 67, வயது முதிர்ந்த பெண்களுக்கு 75 முதல் 80 என்று எண்ணிக்கை வேறுபாட்டை எவ்வளவு அழகாகக் கூறியுள்ளனர். இன்னும் எத்தனையோ இருக்கிறது நாடியைப் பற்றிக் கூறிக்கொண்டே போகலாம்.

அஷ்ட கர்மம்

 அஷ்ட கர்மம் என்றால் என்ன?

           காலத்தால் மறைக்கப்பட்ட ரகசியம் 

        

(ஆதாரம்: அகத்தியர் பரிபூரணம்:1200 நூல், முழுக்க முழுக்க இந்த நூலில் இருந்து எடுக்க பட்ட ரகசியங்கள் இவை... நீங்கள் செய்த தர்மம், புண்ணியத்தின் பலன் மாபெரும் சித்தராக, யோகியாக  உங்களை மாற்ற கூடிய அபூர்வ மந்திர யோக வித்தை இதோ.......)


"அஷ்ட கர்ம வித்தை" என்பது ஒரு அற்புதமான சித்தர்களின் கலை என் குருநாதர் அன்னை சித்தர் ராஜகுமார் சுவாமிகளுடன் பிரம்மரிஷி மலையில் வாழ்ந்த காலத்தில் அவர் கற்றுக்கொடுத்த அற்புத கலை இது. "அகத்தியர் பரிபூரணம்:1200" என்ற நூலில் அகத்தியர் பெருமான் இந்த ரகசியங்களை விரிவாக சொல்கிறார். உலக மக்கள் அனைவரும் அறிய பயன்பெற பல நூல்களில் இருந்து திரட்டிய மாபெரும் ரகசியங்களை இன்று சித்தர்களின் குரல்.  வாயிலாக முக்கிய விடயங்களை பகிர்கிறேன். மிக மிக விரைவில் விரிவாக பிரயோகங்கள், யோகமுறைகள், மந்திர சித்தி முறைகளை நமது திருமந்திர சிவயோக whatsaap வகுப்பில் பார்ப்போம்....


அஷ்ட கர்மம் என்பது யோக சித்திகளில் எட்டு அங்கங்களை குறிக்கும். இதில் முதல் 5உம் ஆக்கபூர்வமான வித்தையாகவும், மிகுதி 3உம் அழிவு பூர்வமான வித்தை என்பதால் சித்தர்கள் மறைவாக தகுதி உள்ள சீடர்களுக்கே உபதேசித்தார்கள்.


அவை,

(01) #வசியம்

              [குறிப்பிட்ட நபரயோ or பொருளையோ வசிகரிப்பது அல்லது ஈர்ப்பது]

(02) #மோகனம்

               [ஒட்டு மொத்த கூட்டத்தையே வசீகரிப்பது or மனமயக்கத்தை ஏற்படுத்துவது.]

(03) #தம்பனம்

                [ஒன்றன் இயற்கையான செயல்பாட்டை நிறுத்துவது or பிறரை நமக்கு எதிராக செயல்பட விடாமல் ஸ்தம்பிக்க  வைப்பது.]

(04) #உச்சாடனம்

                   [ஒரு பலனுக்காக நம் சக்தியை, மந்திரங்களை ப்ரயோகிப்பது, ஏவல், பில்லி, சூன்யம் போன்ற எதிர்மறை சக்திகளை உடைப்பது, அதிலிருந்து நம்மளை பாதுகாப்பது.]

(05) #ஆகர்ஷணம்

                                   [ஒரு பொருளைத் தன்னை நோக்கி வரச்செய்வது or மனிதனிற்கு அப்பாற்பட்டு பஞ்சபூதங்கள், தெய்வங்கள், தேவதைகள், பிற உயிர்கள், விலங்குகள் என அனைத்தையும்  ஆகர்ஷிப்பது or ஈர்ப்பது]

(06) #பேதனம்

                    [இருவரிடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்துவது or  ஒற்றுமையாக இருப்பவர்களை பிரிப்பது]

(07) #வித்துவேஷணம்

                    [ஒருவர் ஒன்றை வெறுக்கச் செய்வது or கூட்டமாக இருக்கும் இடத்தில் கலவரத்தை உண்டாக்குதல்.]

(08) #மாரணம்

                     [இறப்பை ஏற்படுத்துவது, வேண்டாதவரை அழித்தல்.]

               என்பனவாகும்......


இவற்றை முறைப்படி கற்று தேர்ந்தவர்க்கே இது சித்தியாகும். அப்படி முறையாக கற்றவரே உண்மையான யோக குருவாவார். அப்படி அஷ்ட கர்மங்களை முறையாக கற்றுத்தேர்வதற்குரிய  முறைகளை சித்தர் பெருமக்கள் நமக்காக அருளியுள்ளனர். அவ்வகையில் அகத்தியர் பெருமான் அருளிய அகத்தியர் பரிபூரணம்:1200 என்ற அற்புதமான நூலில் அஷ்ட கர்மங்களுக்குரிய நாள், திசை, உடுப்பு, 

உலோகம், எண்ணை, அதிதேவதை, மலர், ஆசனம் இவைகள் 

பற்றிய தகவல்களை தந்துள்ளார்.


அஷ்டகர்மத்திற்குரிய நாட்கள்:

-----------------------------------------------------------


ஞாயிறு  -   வசியம்

திங்கள் -    மோகனம்

செவ்வாய் - வித்துவேஷணம்

புதன்         - தம்பனம்

வியாழன் - உச்சாடனம்

வெள்ளி      - ஆகர்ஷணம்

சனி - மாரணம்

        இந்நாட்களில் அக்கர்மங்கள் செய்ய அது சித்தியாகும். இதில் குறிப்பாக வியாழக்கிழமையில் எந்த வேலைகளைச் செய்தாலும் அது பச்சை மரத்தில் ஆணிஏறுவது போல உடனுக்குடன் பலிக்கும் என்கிறார் அகத்தியர் பெருமான் ....


திசைகள்:-

-------------------


கிழக்கு - வசியம்

தெற்கு - மோகனம்,மாரணம்

மேற்கு - உச்சாடனம்

வட்க்கு - பேதனம்

தென்மேற்கு - வித்துவேஷ்ணம்

தென்கிழக்கு - தம்பனம்

வடமேற்கு - ஆகர்ஷணம்

வடகிழக்கு - சகல கர்மத்திற்கும் உகந்த திசையாகும்.....


உடைகள்:-

-------------------


சிவந்த வஸ்திரம் - வசியம்

மஞ்சள் வஸ்திரம் - மோகனம்

பச்சை வஸ்திரம் - தம்பனம்

வெள்ளை வஸ்திரம் - பேதனம்

பச்சைப்பட்டு - உச்சாடனம்

கருப்பு வஸ்திரம் - மாரணம்

செம்பட்டு - சகல கர்மத்திற்கும் உகந்த உடுப்புகளாகும்.....


உலோகங்கள்:-

---------------------------


காரீயம்              - வசியம்

வங்கம்               - மோகனம்

பொன்                - ஆகர்ஷணம்

செம்பு                 - தம்பனம்

வெள்ளீயம்       - உச்சாடனம்

குருத்தோலை - வித்துவேஷணம்

இரும்பு               -  பேதனம்

வெள்ளி              - மாரணத்திற்கும் உகந்த உலோகங்களாகும்.....


எண்ணைகள்:-

----------------------------


பசு நெய்                          -  வசியம்

நல்லெண்ணை           - மோகனம்

வேப்பெண்ணை          - மாரணம்

புங்கெண்ணை             - உச்சாடணம்

புன்னை எண்ணை      - பேதனம்

ஆதளை எண்ணை      - தம்பனம்

கழுதை, ஆடு, பன்றிகளின் நெய்

                                             - வித்வேஷணம்

வன்னி, ஆல், விளா, இவைகள் - சுபகர்மத்திற்கும்

கள்ளி, எருக்கு, எட்டி

அத்தி ,இச்சி, விடத்தலை

இவைகள் - அசுபகர்மத்திற்கும் உகந்த எண்ணை வகைகளாகும்.....


அதிதேவதைகள்:-

----------------------------------


ஈசன்                      -  வசியம்

அக்கினி               - மோகனம்

இந்திரன்             - தம்பனம்

நிருதி                    - உச்சாடனம்

வருணன்             - ஆகர்ஷணம்

வாயுதேவன்       - வித்துவேஷனம்

குபேரன்                - பேதனம்

எமன்                      - மாரணம்

முதலியன அஷ்டகர்மத்திற்குரிய 

அதிதேவதைகளாகும்.....


மலர்கள்:-

-------------------


மல்லிகை   -  வசியம்

முல்லை      -  மோகனம்

தாமரை       -  தம்பனம்

தும்பை        -  உச்சாடனம்

அரளி            -  ஆக்ரூஷணம்

காக்கண மலர் - வித்வேஷணம்

ஊமத்தம்     - பேதனம்

கடலை மலர் - மாரணம்

         முதலியன அஷ்டகர்மத்திற்குரிய 

மலர்களாகும்.....


ஆசனங்கள்:-

------------------------


வில்வப்பலகை          -    வசியம்

மாம்பலகை                 -   மோகனம்

பலாப்பலகை              -    தம்பனம்

நீலக்கம்பளம்              -    உச்சாடனம்

வெள்ளாட்டுத்தோல் -   ஆகர்சணம்

எட்டிப்பலகை               - வித்வேஷனம்

மரத்தோலாடை           - பேதனம்

அத்திப்பலகை            - மாரணம்

           முதலியன அஷ்டகர்மத்திற்குரிய 

ஆசனங்களாகும்......


அஷ்டகர்ம சித்தி:-

---------------------------------


மேலும் அகத்தியர் பெருமானின் சீடாரான தேரையர் தனது சிவபூசாவிதியில் அஷ்டகர்மம் சித்தியாக அதற்குரிய மந்திரங்களை அருளியுள்ளார்.


தன்மையுடன் நமசிவய தம்பனந்தான்

தானான வயநமசி வசியமாகும்

மின்னின்ற யநமசிவ உச்சாடந்தான்

முயங்கி நீ வசியநம அழைப்பதாகும்

ஒன்றான சிவயநம மோகனந்தான்

உருவுவய யவசிமந வித்துவேடமாமே

வேடமெனும் மநயவசி பேதனந்தான்

வினையமுடன் யநவசிம மாரணந்தான்

நாடவே அட்டகர்மம் ஆடுதற்கு

நலமாக இவ்வெழுத்தைத் தியானஞ்செய்யத்

தேடவே மூன்றெழுத்தைக்கூட்டி ஓதத்

திடமாக எட்டெட்டும் சித்தியாகும்

சூடவே கருமம் ஓன்றுக் கொருலட்சந்தான்

தீரமுடன் செய்திடவே சித்தியுண்டே.

தேரையர் சிவபூசாவிதி


பொருள்:-


-சி-வ-ய-ந-ம- (மோகனம்)


-வ-ய-ந-ம-சி- (வசீகரம்)


-ய-ந-ம-சி-வ- (உச்சாடனம்)


-ந-ம-சி-வ-ய- (ஸ்தம்பனம்)


-ம-சி-வ-ய-ந- (ஆகர்ஷணம்)


-ய-வ-சி-ந-ம- (வித்வேடணம்)


-ம-ந-ய-வ-சி- (பேதனம்)


-ய-ந-வ-சி-ம- (மாரணம்)


அஷ்ட கர்மங்கள் சித்தியாக

வேண்டுமென்றால் ஒவ்வொரு

கர்மத்திற்கும் கூறிய மந்திரத்தையும் "ஐயும் கிலியும் சவ்வும்"

       என்ற மந்திரத்தோடு சேர்த்து ஒரு கர்மத்திற்கு ஒரு லட்சம் உரு வீதம் தியானிக்க அக்கர்மங்கள் சித்தியாகும் என்கிறார்.


(01) வசியம்: அகத்தியர்

--------------------------------------------


அஷ்ட கர்மங்களில் முதலாவதாக கூறப்படும் "வசியம்" எனப்படும் கலையானது எட்டு உட்பிரிவுகளை கொண்டது. வசியத்தின் தேவதை ஈசன் ஆவார்.


அது,

(01) சர்வவசியம்

(02) இராஜ வசியம்

(03) புருஷவசியம்

(04) ஸ்த்ரீ வசியம்

(05) மிருகவசியம்

(06) சர்ப்ப வசியம்

(07) சத்துரு வசியம்

(08) லோகவசியம்

                என்பனவாகும்.....


இந்த எட்டுவகை வசியத்திற்குமான

மூலமந்திரத்தையும் அதனை செபிக்கும்

முறையினையும் அகத்தியர் தனது பரிபூரணம்1200 என்ற நூலில் கூறியுள்ளார்.


கேளடா வசியமென்ற யெட்டுக்குந்தான்

கிருபையுள்ள மந்திரமிது சொல்லக்கேளு

வாளடா ஓம் பிறீங் அங்அங் டங் ஸ்ரீயும்

கிலியும் சுவாகா வென்று

வளமையுடன் செபிக்கிறதோர் வரிசைகேளு

காலடா முக்கோணம் நடுவில்விந்து

கருவாக லங்கெனவே சந்திரபீஜம்

ஆளடா தானெழுதிப்பூசைபண்ணி

அன்புடன் மந்திரத்தை உருவேசெய்யே.


செய்யடா தினம்நூறு உருவேசெய்தால்

செம்மையுடன் வசியமெட்டுஞ் சித்தியாகும்

மெய்யடா வசியமது சித்தியானால்

மேன்மைபெற நினைத்ததெல்லாஞ்

சித்தியாகும்

அய்யனே புலத்தியனே

உனக்காய்ச்சொன்னேன்

கையடா அடக்கமது மெய்யாய்ச்சொன்ன

கருணைவளர் வசியமதை கனிவாய்ப்பாரே.

            - அகத்தியர் பரிபூரணம் 1200


பொருள்:-

          வசியம் எட்டுக்குமான மந்திரத்தைச் சொல்கிறேன் கேள்,

"ஓம் பிறீங் அங் அங் டங் ஸ்ரீயும் கிலியும்

சுவாகா"


என்ற மந்திரத்தை செபிக்கும் முறை எப்படியெனில் முதலில் ஒரு காரீயத்தகட்டில் முக்கோணம் போட்டு

அதன் நடுவில் ஒரு வட்டம் போட்டு அவ்வட்டத்தினுள் லங் என்று எழுதவும்.


பின்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில் உடல் சுத்தியுடன் சிவப்பு நிற ஆடை அணிந்து கிழக்கு முகமாய் அமர்ந்து கொண்டு முறையான பூசை வைத்து அதன் நடுவில் இந்த யந்திரத்தை வைத்து முன் கூறிய வசியமந்திரத்தை நாளொன்றுக்கு 108 உரு வீதம் 48 நாட்கள் செபித்தால் வசியம் எட்டும் சித்தியாகும். அப்படி சித்தியானால் நீ நினைப்பதெல்லாம் சித்தியாகும்.


மாணவனே உனக்காக இதை சொல்கிறேன், கை அடக்கமாக இருந்து இதன் பலனைப்பார் என்கிறார் அகத்தியர்.


(02) மோகனம்: அகத்தியர்

------------------------------------------------


அஷ்ட கர்மங்களில் இரண்டாவதாக கூறப்படும் "மோகனம்" என்னும் கலையானது எட்டு உட்பிரிவுகளை கொண்டது. மோகனத்தின் தேவதை அக்கினி பகவான் ஆவார்.


அது,

(01) சர்வ மோகனம்

(02) இராஜ மோகனம்

(03) புருஷ மோகனம்

(04) ஸ்திரி மோகனம்

(05) மிருக மோகனம்

(06) சொர்ண மோகனம்

(07) சத்துரு மோகனம்

(08) லோக மோகனம்

                      என்பனவாகும்.....


பாரப்பா வசியமென்ற யெட்டுஞ்சொன்னேன்

பத்திகொண்டு மோகனத்தைப் பகரக்கேளு

நேரப்பா மோகனந்தானெட்டும் நன்றாய்

நேர்மையுடன் நின்றாட மந்திரங்கேளு

காரப்பா ஓம்கிலி சங்அங் றீங்ஸ்ரீ சிவ

சுவாகாவென்று

கண்ணார செபிக்கிறதோர் வகையைக்கேளு

சாரப்பா நாற்கோணம் நடுவில்விந்து

தானெழுதி றீங்கென்று சாத்திட்டாயே.


சாத்தியதோர் சக்கரத்தை முன்னேவைத்து

தன்மையுடன் மானதமாய்ப் பூசைபண்ணி

போத்தியிந்த மந்திரத்தை தினம்நூறப்பா

புத்தியுடன் தான்செபித்து நின்றாயானால்

பார்த்திபனே மோகனந்தானெட்டும் நன்றாய்

பத்தியுடனுன் வசமாய்ப் பதிவதாகும்

கார்த்துநன்றாய்க் கருணைபெறச்சித்தி

பெற்றால்

கண்கண்ட தெல்லாமோகனமாம் பாரே.


பாரடா மோகனத்திற் பதிவாய்நின்று

பத்தியுடன் தான்செபித்து சுத்தமானால்

நேரடா சகலசெந்து மிருகமெல்லாம்

நேர்மையுடனுன் முகங்கண்டபோது

வீரடா தானொடுங்கி மோகமாகும்

வேதாந்த பூரணமே தான்தானானால்

ஆரடா உனக்கு நிகரொருவருண்டோ

அப்பனே மோகனத்தை யறிந்துதேரே.

           - அகத்தியர் பரிபூரணம் 1200


பொருள்:-

         வசியம் எட்டும் சொன்னேன், அதுக்கடுத்ததாக மோகனத்தை சொல்கிறேன் கேள், ஒரு திங்கட்கிழமை நாளில் ஒரு வங்கத்தகட்டில் நாற்கோணம் போட்டு அதன் நடுவில் ஒரு வட்டம் போடவும், அவ்வட்டத்தினுள் "றீங்" என்று எழுதவும்.


பின்னர் இச்சக்கரத்தை பூசையில் வைத்து முல்லை பூக்களை சக்கரத்தை சுற்றி வைத்து எதிரில் நல்லெண்ணை தீபமேற்றி உடல் மனசுத்தியுடன் மஞ்சள் நிற ஆடை உடுத்தி மாம்பலகையில் தெற்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு மனஓர் நிலையுடன்

"ஓம் கிலி சங்அங் றீங்ஸ்ரீ சிவ சுவாகா"

                        என்ற மந்திரத்தை நாளொன்றுக்கு நூறு உரு வீதம் 48 நாட்கள் செபித்தால் இம்மோகனம் எட்டும் சித்தியாகும்.


மோகனம் சித்தியானால் உன்னைகாணும் சகல ஜீவ ஜந்துகளும்,

மிருங்களும், மனிதர்களும் உன்னை

கண்டமாத்திரத்தில் தனது நிலைமறந்து ஒடுங்கி உன்மீது மோகம் கொள்ளுவர்.


மோகனத்தை சித்தி செய்தவர்களை சகலத்தையும் அவர்கள் வசமாக்கி விடுவார்கள். அவர்களுக்கு நிகர் யாரும் இல்லை எனலாம் என்கிறார் அகத்தியர்.


(03) தம்பனம்: அகத்தியர்:-

------------------------------------------------


அஷ்ட கர்மங்களில் மூன்றாவதாக

சொல்லப்படுவது "தம்பனம்" என்னும் கலையாகும். தம்பனம் என்பது எந்த ஒரு இயக்கத்தையும் அப்படியே தம்பிக்கச் செய்வதாகும், இது எட்டு உட்பிரிவுகளை கொண்டது. தம்பனத்தின் தேவதை இந்திரன் ஆவார்.


அவை,

(01) சர்வ தம்பனம்

(02) சுக்கில தம்பனம்

(03) ஆயுத தம்பனம்

(04) மிருக தம்பனம்

(05) ஜல தம்பனம்

(06) அக்கினி தம்பனம்

(07) தேவ தம்பனம்

(08) சர்ப்ப தம்பனம்

                    என்பவாகும்....


அறிந்துகொண்டு மோகனத்தை நன்றாய்ப் பார்த்து

அதன்பிறகு தம்பனத்தையருளக்கேளு

வருந்திமன துரிமையினால் வாசிகொண்டு

மகத்தான கேசரியில் மனக்கண்சாத்தி

தெரிந்துஓம் ஐயும்கிலியும்ஸ்ரீயும்

ரீயும்சுகசுகசுவாகாவென்று

திறமாக உருசெபிக்க செயலைக்கேளு

விரிந்துபஞ்ச கோணமதில் நடுவேவிந்து

விந்துநடு ஸ்ரீயும் நன்றாய்ச்சாத்தே.


நன்றாக கேசரியில் மனதைவைத்து

நன்மையுடன் மானதமாய்ப் பூசைபண்ணி

குன்றாமல் மந்திரத்தைத் தினம் நூறப்பா

குறையாமல் உருவேற்ற குணத்தைக்கேளு

விண்டதொரு எட்டுவகைத் தம்பனந்தான்

விபரமுடனின்று விளையாடும்பாரு

மண்டலத்திற் சென்றுவிளையாடுதற்கு

மகத்தான வித்தையடா மகிழ்ந்துபாரே.

பாரப்பா மனங்குவிந்து பதியில்நின்றால்

பத்தியுடன் சகலசித்து மாடலாகும்.

              - அகத்தியர் பரிபூரணம்1200


பொருள்:-

             மோகனத்திற்கு அடுத்தபடியாக தம்பனத்தை பற்றி சொல்கிறேன் கேள், ஒரு புதன் கிழமை நாளில் உடல் மன

சுத்தியுடன் பச்சை நிற வஸ்திரம் அணிந்து தென்கிழக்கு திசை நோக்கி பலா பலகையில் அமர்ந்து கொண்டு ஒரு செம்பு தகட்டில் ஐங்கோணம் (5 ஸ்டார்) போட்டு அதன் நடுவில் ஒரு வட்டம் போடவும்,

அவ்வட்டத்தினுள் ஸ்ரீயும் என்று எழுதவும். பின்னர் அந்த தம்பனச்சக்கரத்தினை உன் எதிரில் வைத்து அதற்கு தாமரை மலர் சாற்றி ஆதளை எண்ணை ஊற்றி விளக்கேற்றி வைத்து முறையான பூசை பொருட்களை வைத்துக்கொண்டு மனதை ஓர்நிலைப்படுத்தி புருவநடு மையத்தில் குவித்து 

"ஓம் ஐயும் கிலியும் ஸ்ரீயும் ரீயும் சுகசுக சுவாகா"

            என்ற மந்திரத்தை நாளொன்றுக்கு 108-உரு வீதம் 48-நாட்கள் செபித்தால் மந்திரம் சித்தியாகும். மந்திரத்தை

எண்ணிகை குறையாமல் 48 நாட்கள் செபித்தால் எட்டுவகை தம்பனமும்

சித்தியாகும். தம்பனம் ஒரு மகத்தான

வித்தையாகும். தம்பன சித்தியினால் சகலசித்தும் ஆடலாம் என்கிறார் அகத்தியர்.


(04) உச்சாடனம்: அகத்தியர்:-

-----------------------------------------------------


அஷ்ட கர்மங்களில் நான்காவதாக

கூறப்படுவது "உச்சாடனம்" என்னும் கலையாகும். உச்சாடனம் என்பது தீயசக்தி முதல் எந்தவொரு சத்தியினையும் அது இருக்கும் இடத்திலிருந்து விரட்டுவது

ஆகும். உச்சாடனத்தின் அதிதேவதை நிருதி ஆவார். உச்சாடனம் எட்டுவகை உட்பிரிவுகளை கொண்டத்தாகும். உச்சாடணத்தின் தேவதை நிருதி ஆவார்.


அது,

(01) சர்வ உச்சாடனம்

(02) மிருக உச்சாடனம்

(03) சத்ரு உச்சாடனம்

(04) தேவ உச்சாடனம்

(05) விஷ உச்சாடனம்

(06) ஸ்திரி உச்சாடனம்

(07) வியாதி உச்சாடனம்

                      என்பதுவாகும்.....


காணவே தம்பனத்தைச் சொன்னேன்மைந்தா

கண்காண உச்சாடத்தைக் கருதிக்கேளு

பூணவே உச்சாடனந்தா னெட்டுங்கேளு

பூரணமாய் ஓம் சங்வுங்கிலியும் தாக்கு

தாக்கு

தூக்கு தூக்கு டங் டங் சுவாகாவென்று

தோணவே செபிக்கிறதோர் வகையைக்கேளு

துருவமுள்ள அறுகோணம் நடுவேவிந்து

பேணவே விந்தெழுதி விந்துக்குள்ளே

பிலமாக டங்கென்று பிலமாய் நாட்டே.


நாட்டமுடன் சக்கரத்தை முன்னேவைத்து

நன்மையுடன் மானதமாய்ப் பூசைபண்ணி

தேட்டமுள்ள மந்திரத்தைத் தினம்நூறப்பா

சிந்தைமனங் கோணாமலுருவே செய்தால்

வாட்டமென்ன உச்சாடனந்தான் சித்தியாகும்

மகத்தான புருவமதில் மனதைநாட்டி

பூட்டறிந்து வாசியினாற் திறந்துமைந்தா

பொன்னுலகில் நின்று விளையாடுவாயே.

           - அகத்தியர் பரிபூரணம்:1200


பொருள்:-

           நீ அறிந்து கொள்வதற்காக தம்பனத்தைப்பற்றி சொன்னேன், அதற்கு அடுத்ததாக உச்சாடனத்தைப் பற்றி சொல்கிறேன் கேள். இப்போது உச்சாடனம் எட்டுக்குமான மந்திரத்தை

சொல்கிறேன் கேள்,

"ஓம் சங்வுங்கிலியும் தாக்கு தாக்கு தூக்கு தூக்கு டங் டங் சுவாகா"

            இம்மந்திரத்தை செபிக்கும் முறையை சொல்கிறேன் கேள், உச்சாடன மந்திரத்தை ஒரு வியாழக்கிழமை நாளில் உடல் மனசுத்தியுடன் பச்சைப்பட்டு உடுத்தி

நீலக்கம்பளம் விரித்து அதன்மேல் மேற்கு நோக்கி அமர்ந்து கொண்டு ஒரு வெள்ளீய தகட்டில் அறுகோணம் வரைந்து அதன் நடுவில் ஒரு வட்டம் போட்டு அவ்வட்டத்தினுள் "டங்" என்று எழுதவும்.

         பின்னர் நீ வரைந்த சக்கரத்தை உனக்கு முன்பாக வைத்து அதனை சுற்றி தும்பை பூவை வைத்து புங்க எண்ணெயால் விளக்கேற்றவும்.


பிறகு தேங்காய், பழம், பத்தி, சூடம், சந்தனம் உள்ளிட்ட பூசை பொருட்களை வைத்து மன ஓர்நிலையுடன் வேறு சிந்தைகள் இல்லாமல் மேற்சொல்லிய மந்திரத்தை நாளொன்றுக்கு 100 உரு வீதம் 48 நாட்கள் செபித்தால் உச்சாடனம் சித்தியாகும்.


உச்சாடனம் சித்தியான பின்னர் மனதை புருவ நடுமையத்தில் நிறுத்தி பேய், மிருகம், அகாத மனிதர் முதல் எந்தவொரு தீயசக்தியும் ஓரிடத்திலிருந்து விலக வேண்டுமென எண்ணினாலே அது அவ்விடத்தை விட்டு விலகி ஓடிவிடும்.


உச்சான சக்கரத்தை விட்டில் வைத்தால் அங்குள்ள தீய சக்திகள் ஓடி விடும். நோய் உள்ளவர்களுக்கு கட்டினால் அந்நோய் அடியோடு நீங்கி விடும். இது இருக்கும் இடத்தில் உள்ள சகல தீயசக்திகளும் விலகி விடும் என்கிறார் அகத்தியர்.


(05) ஆகர்ஷணம்: அகத்தியர்:-

-------------------------------------------------------

 

அஷ்டகர்மங்களில் ஐந்தாவதாக

சொல்லப்படுவது ஆகர்ஷணமாகும். ஆகர்ஷணம் என்றால் தன்னை நோக்கி

இழுத்துக்கொள்ளுதல் என்று பொருள். எந்த ஒரு பொருளையும் சக்தியையும்

ஆகர்க்ஷிக்கலாம். அதாவது மிருகம், மனிதர், தெய்வம் முதல் எதையும் நம்மை நோக்கி வரவழைப்பதே ஆகர்ஷணமாகும். ஆகர்ஷணம் எட்டு உட்பிரிவுகளைக் கொண்டது. ஆகர்ஷணத்தின் தேவதை வருணன் ஆவார்.


அவை,

(01) சர்வ ஆக்ருஷணம்

(02) பூத ஆக்ருஷணம்

(03) இராஜ ஆக்ருஷணம்

(04) புருஷ ஆக்ருஷணம்

(05) ஸ்திரி ஆக்ருஷணம்

(06) மிருக ஆக்ருஷணம்

(07) தெய்வ ஆக்ருஷணம்

(08) லோக ஆக்ருஷணம்

                          என்பனவாகும்.....


நோக்கமுடன் உச்சாடனத்தைச்

சொன்னேன்மைந்தா

நுண்மையுடன் ஆக்ருஷணத்தி னுண்மைகேளு

பார்க்கமனக் கண்ணாலே நோக்கமாகி

பதிவாக ஓம்கிலியும் சவ்வும் றீயும் ஐயும்

நமோபகவதிதேவி டங்டங் சுவாகாவென்று

தீர்க்கமுடனுருவேறக் கருவைக்கேளு

சிவசிவா நவகோணநடுவில்விந்து

மகத்தான விந்துநடு ஓமென்றூணே


உண்மையுடன் மானதமாய்ப் பூசைபண்ணி

பேணியந்த மந்திரத்தைத் தினம்நூறப்பா

பிரியமுடன் தினம் நூறுருவேசெய்தால்

காணுமந்த ஆக்கிருஷ்ணந்தான் சித்தியாகும்

கருணையுட னினைத்ததெல்லாங்

காணுங்காணும்

வேணுமிந்த ஆக்கிருஷ்ணந்தான்

உலகத்தோர்க்கு

வேண்டிமிகச் சொன்னதிந்த விவரம்பாரே.

         - அகத்தியர் பரிபூரணம்:1200


பொருள்:-

        நீ தெரிந்து கொள்வதற்க்காக உச்சாடத்தை பற்றி சொன்னேன், அதற்கடுத்ததாக ஆகர்ஷணத்தை சொல்கிறேன் கேள், ஒரு வெள்ளிக்கிழமை நாளில் ஒரு தங்க

தகட்டில் நவகோணம் போட்டு அதன் நடுவில் ஒரு வட்டம் போடவும்

பின்னர் அவ்வட்ட்த்தினுள் "ஓம்" என்று எழுதவும். எழுதிய அந்த யந்திரத்தை

பூசையில் வைத்து அதை சுற்றி அரளி

மலர்களால் அலங்கரிக்கவும்.


பின்னர் உடல் மனசுத்தியுடன் செம்பட்டு

ஆடை உடுத்தி வெள்ளாட்டு தோலை விரித்து அதன்மீது வடமேற்கு திசை

நோக்கி அமர்ந்து கொண்டு மன ஓர்நிலையுடன் " ஓம் கிலியும் சவ்வும் றீயும் ஐயும் நமோபகவதிதேவி டங்டங் சுவாகா"


என்ற மந்திரத்தை நாளொன்றுக்கு நூறு

உரு வீதம் 48 நாட்கள் செபித்தால் ஆகர்ஷணம் சித்தியாகும். ஆகர்ஷணம் சித்தினால் நாம் நினைத்த எதையும் நம்மை நோக்கி வரவழைக்கலாம். உலக மக்கள் தனக்கு வேண்டியதை அடைந்து கொள்வதற்க்காக இதைப்பற்றி விவரமாக சொன்னேன் என்கிறார் அகத்தியர்.


(06) வித்வேஷணம்: அகத்தியர்:-

------------------------------------------------------------


அஷ்ட கர்மங்களில் ஆறாவது கர்மமாக

சொல்லப்படும் கலையானது "வித்வேஷணம்" ஆகும். வித்வேஷணம்

என்பது ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கி பிரிப்பது இதனால் எப்படிப்பட்டவரையும் பிரித்து விடலாம். எது தனக்கு வேண்டாததோ அது தானாகத்தன்மேல் வெறுப்புற்று தன்னைவிட்டு ஓடிவிடும்படி செய்வதே

வித்வேஷணமாகும். வித்வேஷணம் எட்டு உட்பிரிவுகளைக்கொண்டதாகும். வித்வேஷணத்தின் தேவதை "வாயு" தேவன் ஆவார்.


அவை,

(01)சர்வ வித்துவேஷணம்

(02) இராஜ வித்துவேஷணம்

(03) புருச வித்துவேஷணம்

(04) ஸ்திரி வித்துவேஷணம்

(05) மிருக வித்துவேஷணம்

(06) தேவ வித்துவேஷணம்

(07) லோக வித்துவேஷணம்     

                     என்பனவாகும்.....


பாசமுடன் வித்துவேஷணத்தைக்கேளு

பதிவான மந்திரமிது சுத்தவித்தை

வாசமுள்ள வித்தையடா நேசமான மந்திரமிது

ஓம் ஸ்ரீயும் ரீயும் கிலியும்

சர்வயிந்திராணிபகவதே சுவாகாவென்னே

எண்ணமுடன் மந்திரத்தை செபிக்குமார்க்கம்

இன்பமுடன் விபூதியிலே முக்கோணமிட்டு

கண்ணிறைந்த முக்கோண நடுவே விந்து

கருணைவளர் விந்துநடு ஓங்காரஞ்சாத்தி

முன்னிறைந்த ஓங்கார நடுவிலேதான்

முத்தியுடன் சுத்தமதாய் சிங்கென்றிட்டு

சன்னதியை நோக்கிமனத் தன்மையாலே

சங்கையுடன் மானதமாய்ப் பூசைசெய்யே.


செய்யடா மானதமாய்ப் பூசைபண்ண

சிந்தைமன தொன்றாக சிவனைநோக்கி

மெய்யடா மந்திரமிது தினம்நூறப்பா

விரும்பிமன மொன்றாக உருவேசெய்தால்

அய்யனே வித்துவேஷணந்தானெட்டும்

அரகரா தன்வசமா யடங்கியாடும்

மய்யமென்ற சுழிமுனையிலே அடங்கியாட

வரிசையிடனினைத்தபடி வாய்க்குந்தானே.

         - அகத்தியர் பரிபூரணம்:1200


பொருள்:-

           ஒரு செய்வாய் கிழமை நாளில்

உடல்மனசுத்தியுடன் சாம்பல் நிற

பட்டாடை உடுத்தி எட்டிபலகையில்

வடமேற்கு திசை நோக்கி அமர்ந்துகொண்டு உன் எதிரில் ஒரு

எட்டிப்பலகையை வைத்து அதில்

விபூதியை பரப்பி அவ்விபூதியில்

முக்கோணம் போட்டு அம்முக்கோணத்தின் நடுவில் "ஓம்" என்று எழுதி அதனுள் "சிங்" என்று

எழுதவும். பின்னர் பன்றி நெய் ஊற்றி

விளக்கேற்றி வைத்து அதைச்சுற்றிலும் காக்கணம் மலர்களையும் ஏனைய

பூசைப்பொருட்களையும் வைத்துக்கொண்டு மனஓர்நிலைப்பாட்டோடு

"ஓம் ஸ்ரீயும் ரீயும் கிலியும் சர்வயிந்திராணிபகவதே சுவாகா"

           என்ற மந்திரத்தை நாளொன்றுக்கு 100 உரு வீதம் 48 நாட்கள் செபித்தால் வித்துஷணம் எட்டுக்கும் சித்தியாகும்.


பின்னர் இதை பயன்படுத்தவேண்டுமென்றால் உன் மூச்சை உள்நிறுத்தி இம்மந்திரத்தை 3

முறை செபித்தால் உன் வழியில் குறுகிடும் அதிகார பலமுள்ளவர்கள்,

எதிரிகள், மிருகங்கள், ஆண்கள்,

பெண்கள், பேய் பிசாசு, துஷ்ட தேவதைகள், ஜீவஜந்துக்கள் என அனைத்தும் உன்னை கண்ட மாத்திரத்தில் மிரண்டு ஓடிவிடும்.


அது மதம் பிடித்த யானையாக இருந்தாலும், முரட்டு காளையாக இருந்தாலும் ஓடுவிடும். பிறர்க்கு இது பயன்படுவதற்கு முன்சொன்ன

முறையில் மந்திரத்தை கையில் விபூதியை வைத்து செபித்து அவர்களுக்கு அவ்விபூதியை பூசிக்கொள்ளும்படி கொடுக்கலாம். அவர்கள் அதை வயல்வெளியில் போட்டால் அங்கு எலிகள் வாராது. பிணியாளர்க்கு பூசினால் பிணி

தீர்ந்துவிடும். இன்னும் பல பயன்கள் இதில் அடங்கியுள்ளன.


(07) பேதனம்: அகத்தியர்:-

-----------------------------------------------


அஷ்டகர்மங்களில் ஏழாவதாக

சொல்லப்படும் கலை "பேதனம்" ஆகும். பேதனம் என்பது ஒருவரை தான் என்னசெய்கிறோம் என்ற சிந்தனையே இல்லாமல் அவரின் புத்தியை பேதலிக்கச் செய்வதாகும். உதாரணமாக ஏழாம்அறிவு என்ற படத்தில் டாங்லி என்பவர் தனக்கு முன்னால் நிற்பவரின் புத்தியை பேதலிக்கச்செய்து விடுவார். இதனால் எதிரில் நிற்பவர் தன்னுடன் இருப்பவர்களையே கொன்று விடுவார். இதற்கு காரணம் நாம் அவரின் புத்தியை வேறு நிலைக்கு மாற்றியதுதான் இதுவும் நோக்குவர்மத்தைப்போல் ஒருவகை

தாக்குதல்தான். ஒருவரை பார்த்து இவண் பேதலிக்க வேண்டுமென எண்ணினால் அவன் பேதலித்துப்போய்

விடுவான்.  இப்பேதனம் எட்டு வகைப்படும். பேதனத்தின் அதிதேவதை "குபேரன்" ஆவார்.


அவை,

(01) சர்வ பேதனம்

(02) இராஜ பேதனம்

(03) புருஷ பேதனம்

(04) ஸ்திரி பேதனம்

(05) மிருக பேதனம்

(06) தேவ பேதனம்

(07) அக்கினி பேதனம்

(08) லோக பேதனம்

                 என்பனவாகும்....


 பாரப்பா வித்துவே ஷணத்தைச் சொன்னேன்

பத்தியுடன் பேதனத்தைப் பகரக்கேளு

மாரப்பா பேதனந்தானதீத வித்தை

மக்களே ஓம்றீயுஞ்சவ்வும் ஸ்ரீயும் கிலியு

அங்அங் நசி நசி சுவாகாவென்று

நிசமான யெண்கோணம் நன்றாய்க்கீறி

காரப்பா கோணம்நடு விந்துபோட்டு

கமலநடு டங்கெனவே கனிவாய்ப்போடே.


போட்டெடுத்துச் சக்கரத்தை முன்னேவைத்து

புத்தியுடன் மானதமாய்ப் பூசைபண்ணி

நாட்டமுடன் மந்திரத்தைத் தினம்நூறப்பா

நன்மையுடனுருச் செபித்து நயனங்கண்டு

வாட்டமில்லா வாசியிலே நின்றாயானால்

மகத்தான பேதனந்தான் மார்க்கமாக

காட்டும்முன்னே பேதலிக்குமந்திரசித்து

கைகண்டவித்தையடா கனிந்துபாரே.

        - அகத்தியர் பரிபூரணம்:1200


பொருள்:-

            பேதனத்தைப் பற்றி செல்கிறேன் கேள், வித்தைகளில் பேதனம்தான் அதிக வித்தைகளை உள்ளடக்கியது. பேதனத்தை சித்தி செய்யும் முறை யாதெனில் ஒரு இரும்புத்தகட்டில் தாமரை இதழைப்போல எண்கோணம் வரைந்துஅதன் நடுவில் ஒரு வட்டம் போட்டு அவ்வட்டத்தினுல் "டங்" என்று எழுதவும். பின்னர் இச்சக்கரத்தை பன்னீரால் கழுவி இதன் நான்கு மூலையிலும் சந்தனம் குங்குமம் தொட்டு வைக்கவும்.பின்னர் இதை பூசை அறையில் வைத்து ஒரு வியாழக்கிழமை நாளில் உடல்மன சுத்தியுடன் வெள்ளை நிற வஸ்திரம் அணிந்து வடக்கு நோக்கி மரத்தோலாடையில் அமர்ந்து கொண்டு ஊமத்தம் பூவால் இச்சக்கரத்தை அலங்கரித்து அதன் எதிரில் புன்னை எண்னெண்யை உற்றி விளக்கேற்றி வைத்து மன ஓர் நிலையோடு

"ஓம் றீயும் சவ்வும் ஸ்ரீயும் கிலியும்

அங்அங் நசிநசி சுவாகா" என்று நாளொன்றுக்கு நூறு உரு வீதம் 48 நாட்கள் செபிக்க பேதனம்

சித்தியாகும்.

          

பேதனம் சித்தியான பின்பு உனக்கு தேவைப்படும் சமயத்தில் இதை பிரயோகிக்க எண்ணினால் உன் மூச்சை நன்கு இழுத்தடக்கிக்கொண்டு இப்பேதன மந்திரத்தை 3 முறை மனதால் நினைத்தவாறு உன் எதிரில்

இருப்பவர்களைப் பார்க்க அவர்கள் உன்னை கண்ட மாத்திரத்தில் பேதலித்து மிரண்டு ஓடிவிடுவார்கள் அல்லது அவர்களை நம் எண்ணப்படி செயல்படச் செய்யலாம் என்கிறார்

அகத்தியர்.


(07) மாரணம்: அகத்தியர்:-

-----------------------------------------------


அஷ்ட கர்மங்களில் எட்டாவதாக

சொல்லப்படும் கலை "மாரணம்" ஆகும். இது தனக்கும் தன்னைச்சார்ந்தவர்க்கும்

வேண்டாத அல்லது கேடு விளைவிப்பவைகளை மாரணிக்க

(அழிக்க) செய்வதாகும். மாரணத்தின் அதிதேவதை எமன் ஆவார். மாரணம் எட்டுவகைப்படும். மாரணத்தின் அதிதேவதை "யமன்" ஆவார்.


அவை,

(01) சர்வ மாரணம்

(02) அரச மாரணம்

(03) சத்ரு மாரணம்

(04) சர்வபூத மாரணம்

(05) சர்வ ஜீவஜந்து மாரணம்

(06) சர்வவிஷ மாரணம்

(07) சர்வதேவ மாரணம்

(08) சர்வரிஷி மாரணம்

                             என்பதாகும்....


ஆமப்பா பேதனத்தை நன்றாய்ச் சொன்னேன்

அரகரா மாரணத்தினருமை கேளு

தாமப்பா சொல்கிறே மந்திரசித்து

தனதாக ஓம் ஆம்றீங்றீங் சிம்றீங் கிலிறீங்

பிறீங் பிறீங் பிறீங் சுவாகாவென்று

ஓமப்பா ஒருமனதாய்ச் செபிக்கக்கேளு

உறுதியுடன் சூலமிட்டு அடியிலேதான்

நாமப்பா சொல்லுகிறோங் கம்மென்றேதான்

நாட்டமுடன் தானெழுதி நயனம்பாரே.


பாரப்பா நயனமென்ற சூலந்தன்னை

பத்தியுடன் மானதமாய் பூசைபண்ணி

காரப்பா மந்திரத்தைத் தினம் நூறாக

கண்ணார உருச்செபித்து கருணையானால்

நேரப்பா மாரணந்தா னிமிஷத்துள்ளே

நினைத்தபடி நின்றுவிளையாடும் பாரே

தேரப்பா மனந்தேறி யறிவில்நின்று

சிவசிவா மாரணத்தைத் தீர்க்கம் பண்ணே.


தீர்க்கமுடன் மாரணந்தான் சித்தியானால்

தெளிந்துகொண்டு தன்னுயிர்போல்

செகத்தைப்பார்த்து

மார்க்கமுடன் சிவயோக வாழ்வில்நின்று

மைந்தனே பூரணத்தை தினமும்நோக்கி

ஏர்க்கையுடன் தானிருக்க வேண்டுமானால்

இடும்பாக மாரணத்தைச் செய்ய வேண்டாம்

ஆர்க்கும்வெகு கொடுமைகளைச் செய்தபேரை

அப்போதே மாரணிக்க அந்தந்தானே.

             - அகத்தியர் பரிபூரணம்:1200


பொருள்:-

          முன்பு பேதனத்தைப்பற்றி சொன்னேன், அதற்கடுத்ததாக

மாரணத்தைப் பற்றி சொல்கிறேன் கேள், ஒரு வெள்ளித்தகட்டில் சூலம் வரைத்து அச்சூலத்தின்

அடிமுனையில் "கம்" என்று எழுதவும்.

           பின்னர் ஒரு சனிக்கிழமை நாளில் உடல்மன சுத்தியுடன் தூய்மையான இடத்தில் கருமைநிற ஆடை

அணிந்து தெற்கு நோக்கி அத்திப்பலகையில் அமர்ந்து கொண்டு

உன் எதிரில் மேற்கூறிய மாரண எந்திரத்தை வைத்து அதனைச்சுற்றி

கடலை மலர்களை வைத்து அதன் எதிரில் வேப்பெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வைத்து இதர பூசை

பொருட்களையும் வைத்துக்கொண்டு மன ஓர்நிலையோடு

             "ஓம் ஆம்றீங்றீங் சிம்றீங் கிலிறீங் பிறீங் பிறீங் பிறீங் சுவாகா"

           வென்று நாளொன்றுக்கு 108 உரு வீதம் 48 நாட்கள் செபிக்க மாரணம் சித்தியாகும்.


மாரணம் சித்தியானால் தனக்கு வேண்டாத மனிதர், துன்பம் செய்யும் விலங்கு, தீராத நோய், தீங்கிலைக்கும் துஷ்ட தேவதைகள், அரச பதவியில் இருந்து கேடு செய்யும் பாவிகள் என யாவரையும் அழித்து விடலாம்.


மாரணத்தை சித்தி செய்து விட்டோம் என்பதற்க்காக நல்லவர்க்கு அதை தவறான வழியில் பயன்படுத்தினால் பெரும் பாவத்திற்கும் சாபத்திற்கும் ஆளாக வேண்டிவரும். ஆதலால்

இம்மாரணத்தை யாரிடம் பிரயோகிக்க வேண்டுமென்றால் யாவர்க்கும் அதிக கெடுதல் செய்யும் பாவிகளிடமும், கொடுர விலங்குகளிடமும் பயன்படுத்தி அவற்றை அழித்து உலக உயிர்களை தன்னுயிர் போல் எண்ணி அவர்களுக்கு நன்மை செய்வதற்க்காக இதை பயன்படுத்த வேண்டும்.


மேலும் இதை பயன்படுத்து முறைகளை

சொல்கிறேன் கேளுங்கள்,

          மாரண சித்தி செய்த பின்னர் இந்த யந்திரத்தை வரைந்து 108 உரு

கொடுத்து விலங்குகள், துஷ்டதேவதைகள் நடமாடும் வீடு,

தோட்டங்களில் ஸ்தாபித்து விட்டால் அவ்விடத்தை அவைகள் நெருங்காது. அப்படி நெருங்கினாலும் சுருண்டு விழுந்து விடும், தீராத நோய்வாய்ப்பட்டவர்க்கு மேற்க்கூறிய

யந்திரத்தை விபூதியில் வரைந்து 108 உருக்கொடுத்து அவ்விபூதியை அவர்கள் பூசியும் சிறிது உண்டும் வர சொல்லினால் அவர்களின் உடலில்

உள்ள நோய்கள் நீங்கி விடும்.

                  உடலில் உள்ள விஷத்தன்மைகள் நீங்கவும் இம்மந்திரம் ஓதிய விபூதியை கொடுக்க சரியாகி விடும். உலக உயிர்களுக்கு கேடு செய்யும் பாவிகளை அவர்கள் அழிந்து போக வேண்டுமென எண்ணி இம்மாரண யந்திரத்தில் அவர்களின்

பெயரை தலைமாற்றி எழுதி அதில் அவர்களின் காலடி மண் அல்லது முடி ஏதாவதொன்றை வைத்து சுருட்டி அவர்கள் நடமாடும் பகுதி அல்லது சுடுகாட்டிலோ அதை புதைக்க அவர்களுக்கு மூச்சடைக்கும் உடலெல்லாம் எரியும் நிமிடத்தில் உயிர் பிரிந்து போகும்.


மேலும் சித்தகள் ரிஷிகள் தாங்கள் மறைந்து வைத்துள்ள புதையல் போன்றவற்றிக்கு மந்திரக்கட்டு போட்டு இருப்பார்கள். அவர்களின் மந்திரக்கட்டை மாரணிக்க செய்து அவைகளை நாம் அடைந்து விடலாம் இது ரிஷி மாரணமாகும்.


தீமை செய்யும் யாவரையும் அழிக்க வேண்டுமென்றால் உன் மூச்சை

இழுத்தடக்கிக்கொண்டு இம்மந்திரத்தை

மனதால் 3 முறை செபித்தவாறு அவனை உற்று நோக்கினால் மதிமயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்து விடுவான் பின்னர் விழுந்தவன் எழவே மாட்டான்.


இவையெல்லாம் மாரணத்தின் ஆற்றலாகும் இதை நல்ல வழிக்கு

மட்டுமே பயன்படுத்த வேண்டும் இல்லாவிடில் கொடிய துன்பத்திற்க்கு ஆளாக நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்,


சொல்லிடுவேன் மாரணத்தின் சூட்சம்

தன்னைச்

சுருக்காகப் பூரணமாய் வாசிகூட்டி

நல்லதொரு உம் நம் மென்றிழுத்த டக்கி

நாட்டிலுன்னை எதிர்த்தோர்க்கு சாபம் ஈந்தால்

தொல்லைமிக வடைந்திடுவார் துலங்க

மாட்டார்

துரிதமுடன் வல்லரக்கர் எதிர்நில்லார்கள்

          - கோரக்கர் சந்திரரேகை:117


பொருள்:-

        மூச்சை இழுத்தடக்கி உம்-நம் என்று 16 உரு மனதினில் செபித்து நாட்டில் உன்னை எதிர்வர்களுக்கு சாபம் கொடுத்தால் அது பலித்துவிடும். மந்திரம் சித்தியடைய வேண்டுமானால் முதலில் "ஓம் உம் நம்" என்ற இம்மந்திரத்தை 1008 உரு

செபிக்க சித்தியாகும். பின்னர் பிரயோகம் செய்ய சித்தியாகும். இதனால் உன் எதிரிகள் பல தொல்லைகளுக்கு ஆளாவார்கள். அவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் விளங்காமல் போய்விடும். இதனால் எப்படிபட்ட கொடியவர்களும் உன் எதிரில் நிற்க அஞ்சுவார்கள் என்கிறார் கோரக்கர்.


சிந்தித்து செயல்படுங்கள்....

ஒரு ஆழமான புரிதலுக்காக மட்டுமே இந்த பதிவை விரிவாக எழுதினேன்.


(விரிவாக திருமூலர் பெருமானின் வழியில் இந்த யோகங்களை முறையாக எளிமையாக பயின்று யோகங்களில் தேர்ச்சி பெற சிவயோகி சித்தர்களின் குரல் சிவசங்கர் ஆச்சாரியர் அவர்கள் நேரடியாக whatsaap மூலம் கற்பிக்கும் திருமந்திர whatsaap சிவயோக வகுப்பில் கற்றுக்கொள்ளவும். உலகில் நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தில் இருந்த படியே முழுமையாக அனைத்து சிவயோகங்களையும் திருமூலர் பெருமானின் குருவருளால் கற்கும் வாய்ப்பு. மேலதிக விபரங்களுக்கு சித்தர்களின் குரல் ஆலோசகர் ராம்குமார் +918148285865 என்ற எண்ணுக்கு whatsaap மூலம் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை நிரப்பி, வகுப்பு கட்டணத்தை செலுத்தி வகுப்பில் இணைந்து முழுமையாக கற்று பயன்பெறவும்.)


         - சித்தர்களின் குரல். Shiva shangar

Tuesday, 10 June 2025

அகஸ்தியர் ஆலயம் யாசக கோரிக்கை

 நமது அகஸ்தியர் ஆலயத்தை சுற்றிலும் ஒரு அடிக்கு குழி எடுக்கப்பட்டு கான்கிரீட் போடப்பட்டு அதன் மேல் ஒரு வரி செங்கல் வைத்து பார்டர் கட்டப்பட்டுள்ளது


 இந்த இடைப்பகுதியில் பேவர் பிளாக் நடைபாதை கோயிலை சுற்றி வருவதற்காக அமைக்கப்படுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது


 இதற்கு ஏற்கனவே ஒரு அன்பர் அந்த பேவர் பிளாக் கற்கள் பதிக்க நிதி அளிப்பதாக உறுதி அளித்துள்ளார் 


இந்த நிலையில் ஏற்கனவே நாம் செய்த வேலைக்கு ஒரு அடி குழி எடுத்து அஸ்திவாரம் போட்டு கான்கிரீட் போட்டு செங்கல் ஒரு வரி வைத்து கூலி கொடுத்து வேலை செய்வதற்கு 19,000 குறைபாடு ஏற்பட்டுள்ளது அந்த கட்டுமான பொருட்களை கொடுக்கும் நபர உடனடியாக பணம் கேட்கிறார் 


வேலைகள் முடிவடைந்த நிலையில் சிறிது ஆலய செலவிற்காக பணம் தேவைப்படுகிறது 19 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது


 பக்தர்கள் உங்களால் முடிந்த உதவியை செய்யக்கோரி வேண்டி அரசியல் பீடத்தின் சார்பிலும் குருஜி சார்பிலும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் மிக்க நன்றி

Saturday, 24 May 2025

கருடபுராணம் - . இறந்தவர்களின் ஆத்மாவை அழைத்து செல்ல மூன்று யம கிங்கரர் வருவதாக வழக்காறு உண்டு

 கருடபுராணம் -

.

இறந்தவர்களின் ஆத்மாவை அழைத்து செல்ல 

 மூன்று யம கிங்கரர் வருவதாக வழக்காறு உண்டு 


யார் அந்த முன்று நபர்கள்?


அவர்கள் மரண தேவனான எமதர்மனின் தூதர்களான கிங்கரர்கள்


யார் இந்தக் கிங்கரர்கள்?


இவர்கள் எப்படி இருப்பார்கள்?


இவர்களின் வேலை என்ன?


கருட புராணம் இவர்கள் அஞ்சத்தக்க உருவத்தை உடையவர்கள் என்றும் நெருப்பையே சுட்டுவிடும் அளவிற்கு சினமுடையவர்கள் என்றும் 

பாசம் முசலம் போன்ற ஆயுதங்களைத் தரித்தவர்கள் என்றும் கார்மேகம் போன்ற இருண்ட நிற ஆடைகளை அணிந்தவர்கள் என்றும் வர்ணிக்கிறது.


அவர்கள் வாழ்நாள் முடிந்துபோன உயிர்களை மரண தேவனிடம் கொண்டு சேர்க்கவே படைக்கப்பட்டவர்கள் என்றும் ஆசா பாசங்களுக்கு இடம் கொடுக்காமல் கடமையைச்செய்வதே அவர்களின் பணி

ஆகும்.


இவர்களுக்குப் பூமியில் உயிர்களை அறுவடை செய்து யமதர்மனின் கிட்டங்கியில் சேர்ப்பதோடு வேலை முடிந்து விடுகிறது.


உயிர்கள் புரிந்த

நன்மை தீமைகளை விசாரிப்பதும் 

அதற்கான சன்மானம் அல்லது தண்டனையை வழங்குவது எமதர்மனின் வேலை என்றும் தண்டனைகளை நிறைவேற்றுவது வேறு மாதிரியான கிங்கரர்கள் என்றும் கூறுகின்றன


உடலில் இருந்து உயிர் பிரிக்கப்பட்ட பின்பு அந்தந்த உயிர்களுக்கு என்ன

நிகழ்கிறது என்பதை 

கருடபுராணம் விவரிப்பதைப் பார்ப்போம்.


செடியிலிருந்து மலரைக்கொய்தபின் இறைவனின் பாதத்தில் சமர்பிப்பது போல் உயிர்கள் கிங்கரர்களால் யமன் முன்னால் சமர்ப்பணம் செய்யப்படுகிறது.


தன் முன்னால் ஜீவன் கொண்டு வரப்பட்டவுடன் மீண்டும் அந்த ஜீவனை பறித்த

இடத்திலேயே விட்டு வரும் படியும் 

மீண்டும் 12 நாட்கள் சென்றபின் தன் முன்னால் கொண்டு வரும்படியும் கட்டளை பிறப்பிப்பான்.


உடனே யமகிங்கரர்கள் ஒரு நொடி நேரத்திற்குள் 80,000 காத தூரத்தில் உள்ள பூமியில் உயிரைப் பறித்த இடத்தில் அந்த ஜீவனைக்கொண்டு விட்டு விடுவார்கள்.


இப்படி யமலோகம் சென்ற ஜீவன் மீண்டும் தனது உடல் இருக்கின்ற இடத்திற்கே திரும்பி வருவதனால் இறந்தவனின் உடலை சில மணி நேரமாவது ஈமக்கிரியைகள் செய்யாமல் வைத்திருக்க வேண்டும்.


காரணம் ஆயுள் முடியும் முன்பே அந்த ஜீவன் உடலை விட்டுப் போயிருந்தால்

மீண்டும் உயிர் பெற்று எழ வாய்ப்புள்ளது.

செத்துப்பிழைத்தவர்கள் என்று கருதப்படும் நபர்கள் இத்தகையவர்களே ஆவார்கள்.


அப்படியில்லாது நிரந்தரமாக உடலை விட்டுச் சென்றவர்கள்

பூமிக்கு வந்ததும் உயிரற்ற தனது உடலைப் பார்த்து அந்த உடலிற்குள் புகுந்து கொள்ள முயற்சிப்பார்கள்.


அந்த முயற்சி தோல்வி அடைவதனால் தாங்க முடியாத துயர வசப்பட்டு ஆவி வடிவில் இருந்தாலும் அழுது துடிப்பார்கள்.


தங்களது உடல் மயானத்திற்கு எடுத்து வரும்போதும் கூடவே வருவார்கள்.

அவர்களோடு மற்ற ஆவிகளும் கலந்து கொண்டு பாடையில் இருக்கும். 

உடல் மீது விழுந்து அழுத்துவார்கள்.


இதனாலேயே பாடை அளவுக்கு அதிகமான பாரத்தைக் கொடுக்கும். இதை பாடை தூக்கிகளில் அனுபவசாலிகள் நிதர்சனமாகவே அறிவார்கள்.


உடல் மயானத்தைச்சென்றடைந்தவுடன் தனது உடல் எரியூட்டப்படும் சிதைக்கு மேலேயோ அல்லது புதை குழிக்கு 10 அடி உயரத்தில் ஆவி நின்று தனது உடல்

வெந்து சாம்பலாவதையோ மண்ணால் மூடப்படுவதையோ பார்த்து

பதைபதைத்து துடிக்குமாம்


இறந்த மனித உடலானது முற்றிலுமாக எரிந்து சாம்பலாகும் வரை அந்த

உடல் மீது உள்ள ஆசையும் உறவினர்கள் மீதும் நண்பர்கள் மீதும் கொண்ட அன்பும் வாழ்ந்த காலங்களில் உபயோகப்படுத்திய பொருட்களின் மீதுள்ள ஈடுபாடும் பிரிந்த உயிர்க்குக் கொஞ்சம் கூட குறைவது இல்லை.


உடல் எரிந்து சாம்பலான பின்பு உயிருக்குப் பிண்டங்களால் ஆன சரீரம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.


உயிர் பிரிந்து தகனம் முடியும் வரை உயிருக்கு உருவம் என்பது கிடையாது.


வைதீக சாஸ்திரங்கள் உயிர்கள் காற்று போன்ற வடிவில் இருப்பதாக கூறுகிறது.


முறைப்படியான இறுதிச் சடங்குகளும் திதி திவசம் போன்றவைகள் கொடுக்கப்படாமல் இருக்கும் ஆவிகள் தான் உருவமற்று புகைவடிவில் நடமாடும் என்றும்


சாஸ்திரப்படி இறுதிக் கிரியைகள் செய்யப்பட்ட ஆத்மாக்கள்

புகைவடிவில் இருந்தாலும் அந்தப்புகை வடிவம் கூட அவர்கள் பூமியில் வாழ்ந்த போது என்ன உருவத்தல் இருந்தார்களோ அதே உருவமாகத்தான் இருப்பார்கள் காட்சி தருவார்கள் என்கிறது.


சடங்குகள் முறைப்படி நடத்தப்பட்ட ஆவிகளுக்கு அழுத்தம் திருத்தமான பௌதிகத் தோற்றம் போலவே தெரியும்


மற்றவர்களுக்கு அழுத்தமான உருவங்கள் அமையாததால் வெறும் புகை வடிவாக மட்டுமே தோன்றுகிறது.


முறைப்படியான சடங்குகள் செய்யப்பட்ட ஆவிகளுக்குச் சொந்த வடிவம்

எப்படி வந்தமைகிறது என்பதை

கருட புராணம் அழகாகக் கூறுகிறது.


இறந்தவன் மகனால் முதல்நாள் வைக்கும் பிண்டத்தால் ஆவிக்குத் தலை உண்டாகிறது.


இரண்டாம் நாள் போடும் பிண்டத்தால் கழுத்தும் தோளும்


மூன்றாம் நாள் பிண்டத்தால் மார்பும்


நான்காம் நாளில் வயிறும்


ஐந்தாம் நாளில் உந்தியும்


ஆறாம் நாளில் பிருஷ்டமும்


ஏழாம் நாளில் குய்யமும்


எட்டாம் நாளில் தொடைகளும்


ஒன்பதாம் நாளில் கால்களும் உண்டாகி


பத்தாம் நாளில் புத்திரனால் பெறப்படும் பிண்டத்தால் சரீரம் முழுவதும் பூரணமாக உருவாகும்.


பிண்டங்களால் முழுமையான உருவத்தைப் பெற்ற ஆவி பதினோறாவது நாள் தான் சரீரத்தோடு வாழ்ந்த வீட்டிற்கு வந்து தான் உயிரோடு இருக்கின்ற பொழுது வீட்டில் நிகழ்ந்த அனைத்து சம்பவங்களையும் தன்னால் நிகழ்த்தப்பட்ட

எல்லாவிதமான காரியங்களையும் நினைத்துப்பார்த்து அழுது துடிக்குமாம்.


மீண்டும் நம்மால் இப்படி வாழ முடியாமல் போய்விட்டதே என்று எண்ணியெண்ணி அந்த ஆவி துடிப்பதை எரிமலை சீற்றத்திற்குள் அகப்பட்டு கொண்ட சிறு பறவைக் குஞ்சியின் துடிப்பிற்கு இணையாக ஒப்பிடப்படுகிறது.


கடந்தகால வாழ்க்கையை மீண்டும் வாழ ஆசைப்படுவதும் சரீரப்பிரவேசத்தில் மோகம் கொள்வதும் சாதாரணமான உலகியல் வாழ்க்கையில் வாழ்ந்து உழன்ற செத்துப்போன ஜீவன்கள் தான் என்பதையும்


பரமார்த்திக வாழ்வை மேற்கொண்ட ஜீவன்கள் சரீரப்பிரிவைப்பற்றியோ மரணமடைந்ததைப்

பற்றியோ துளி கூடக் கவலைப்படுவதில்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.


வாழ்ந்த வீட்டில் வீழ்ந்து கிடந்து அழும் ஆவியை பதின்மூன்றாவது நாள் எமகிங்கரர்கள் பாசக்கயிற்றால் கட்டி எமபுரிக்கு இழுத்துச்செல்வார்கள்.


அப்படி இழுத்துச்செல்லும் போது கூரிய பற்களுடைய ரம்பம் போன்ற இலை அமைப்புக்கொண்ட அமானுஷ்ய வனாந்திரம் ஒன்றின் வழியாக அந்த ஜீவன் பயணம் செய்யும் சூழ்நிலை ஏற்படும்.


அப்போது வாள் போன்ற மர இலைகள் அந்த ஜீவனின் பிண்ட உடலைக் குத்திக் காயப்படுத்தும்.


அதனால் ஏற்படும் வலியில் சுறுக்கு மாட்டப்பட்ட நாய் ஊளையிடுவதுபோல்

ஆவி கத்தித் துடிக்கும். வைவஸ்வத என்ற நரகம் வழியாகவும் ஜீவன் இழுத்துச்

செல்லப்படுமாம்.


அந்த நகரத்தில் உயரமான மாளிகைகள் மிக நெருக்கமாக அமைந்திருக்குமாம். அச்சத்தையும் அருவருப்பையும் ஏற்படுத்தும் கோர ரூபமுடைய பிராணிகள் பல ஜீவனைச் சூழ்ந்து கடித்துக் காயப்படுத்துமாம்.


மேலும் அந்நகரத்திற்குள் நுழைந்தவுடன் ஜீவனுக்குத் தாங்க முடியாத தாகம்

ஏற்படுமாம். தாகம் தணிக்க இரத்தமும் சீழும் கலந்த கொடுக்கப்படுமாம்.


அந்த

நகரத்து மேகங்களெல்லாம் இரத்தத்தையும் அழுகிய சதைத்துண்டகளையும் மழையாகப் பொழியுமாம்.


இத்தகைய அருவருக்கத்தக்க கஷ்டமான சூழலிலும் இறந்த ஜீவனுக்கு அதீதமான புத்திரபாசம் ஏற்படுமாம்.


பாவத்தின் தண்டனையும் பாசத்தின்

சோதனையும ஆவியைச்சட்டையில்லாமல் பனிப்பொழிவிற்குள் அகப்பட்டக்

கொண்டவனைப்போல் வருத்தி எடுக்குமாம்.


இப்படி வழி நெடுகலும் காற்று நிறைந்த வழியிலும் துஷ்ட ஜந்துக்கள் நிறைந்க வழியிலும் இழுத்துச் செல்லப்படும் ஜீவன் இருபத்தெட்டாவது நாளில

கொடுக்கப்படும் சிரார்த்த பிண்டத்தை உண்டு சற்று இளைபாறி முப்பதாவது நாள் யாமியம் என்ற நகரத்தை அடையும்.


அந்நகரில் வடவிருஷம் என்ற மரமும் பலவிதமான பிரேதக் கூட்டங்களும் நிறைந்திருக்கும்.


அங்கு இரண்டாவது மாசிக பிண்டத்தைப் பெற்ற பின்பு சற்று இளைப்பாறி மீண்டும் கிங்கரர்களால் இழுத்துச்செல்லப்பட்டு திரைப்பஷிக மாசிக பிண்டத்தை வேண்டி சங்கமன் என்ற எட்க்ஷன் தலைமையில் உள்ள சௌரி என்ற பகுதியல் சிறிதுகாலம் தங்கி மூன்றாவது மாசிக பிண்டத்தைப் பெறுவார்கள்.


ஐந்து மற்றும் ஆறாவது பிண்டத்தை உண்டு கடந்த சென்று வைதரணி என்ற

நதிக்கரையை அடைவார்கள்.


சாதாரணமான நதிகளைப்போல் இந்த நதியில் தண்ணீர் இருக்காது.


அதற்குப் பதிலாக ரத்தமும் சீழும் சிறுநீர் மலம் சளி இவைகள் ஒன்றாகக் கலந்து ஆறாக ஓடுமாம். இந்த நதியைப் பாவம் செய்த ஆத்மாக்கள் அவ்வளவு சீக்கிரம் கடக்க முடியாமல் கிங்கரர்கள் ஆழத்தில் தள்ளி அழுத்துவார்கள்.


புண்ணியம் செய்த ஆத்மாக்களை ஒரு நொடிப்பொழுதிற்குள் ஆற்றின் மறுகரையில் கொண்டு விட்டுவிடுவார்கள்.


இப்படி பல இடங்களிலும் பலவிதமான அவஸ்தைகளையும் அனுபவங்களையும் பெற்றாலும் இறந்து ஏழாவது மாதம் ஆனாலும் கூட எமலோகத்திற்குச் செல்லும் பாதி வழியை மட்டும் தான் ஜீவன்கள் இதுவரை கடந்து வந்திருக்குமாம்.


பக்குவப்பதம் என்ற இடத்தில் 

எட்டாம் மாதம் பிண்டத்தையும் 

துக்கதம் என்ற இடத்தில் ஒன்பதாவது பிண்டத்தையும்

நாதாக்தாதம் என்ற இடத்தில்

பத்தாவது பிண்டத்தையும் 

அதப்தம் என்ற இடத்தில் பதினோறாவது பிண்டத்தையும், 

சீதாப்ரம் என்ற இடத்தில் பன்னிரெண்டாவது அதாவது வருஷாப்திய பிண்டத்தையும் பெறுவார்கள்.


மரணமடைந்து ஒரு வருடத்திற்குப்பின்னரே எமபுரிக்குள் ஜீவன்களால் நுழைய முடியும்.


எமதர்மன் முன்னால் நியாய விசாரணைக்கு ஜீவன் நிறுத்தப்படும் முன்னால் 12 சிரவணர்கள் இறந்த ஆத்மா செய்த பாவ புண்ணியக் கணக்குகளைப்பார்ப்பார்கள்.


அதன் பின்னரே எமதர்மனால் விசாரிக்கப்பட்டு தண்டனை பெறுவார்கள்.


இங்கு நாம் எமலோகத்திற்குப்போகும் வழியில் ஆத்மாவிற்கு ஏற்படும் பலவிதமான கஷ்ட நஷ்டங்களைப்பார்த்தோம்.


தீமை மட்டுமே வாழும் காலத்தில் செய்த ஆத்மாக்கள் துன்பங்களை அனுபவிப்பது நியாயமானதுதான்.


நன்மையைச்செய்த ஆத்மாக்கள் கூட 

இதே வழியில்தான்

அழைத்து செல்லப்படுவார்களா? 

இதே துன்பங்களைதான் அனுபவிப்பார்களா என்று வினா எழும்புவது இயற்கையானதுதான்.


நமது சாஸ்திரங்களும் தர்மங்களும் சத்திய வழியில் வாழ்க்கை நடத்துபவர்களை மரணதேவனின் தூதுவர்கள் வந்து அழைக்க மாட்டார்கள்.


இறைதூதர்கள் தான் வந்து அழைத்துச் செல்வார்கள் என்று கூறுகிறது.


நாம் கிங்கரர்களால் அழைத்து செல்லப்படும் பெருவாரியான ஆத்மாக்களைப்

பற்றி மட்டும் பேசியதனால் அவர்கள் அனுபவிக்கும் துயரங்களை விவரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.


ஆனால் முக்த ஆத்மாக்களுக்கு இந்த 

கஷ்டங்கள் ஏதும் கிடையாது.


ஸ்ரீமன் நாராயணனின் சரணங்களில் 

சரணாகதி அடைந்தவர்களுக்கு 

வைகுண்டபதவியை கொடுக்கிறார்


நம் உயிர் பிரிந்தவுடன் விஷ்ணு தூதுவர்கள்

வருவார்கள் மிகுந்த தேஜஷ்வுடனும் மிக அழகானவர்களாகவும் இருப்பார்கள்

அவர்கள் அந்த ஆத்மாவை வைகுண்டம்

அழைத்து செல்வார்கள்.சிவா பக்தர்கட்கு சிவ தூதர்கள் சிவ லோகம் அழைத்து செல்வார்கள்

Sunday, 4 May 2025

ஸ்வீட்கள் மேலேயுள்ள ஜரிகைதாள் மாட்டின் குடலில் இருந்து தயாரிக்கப்படுது

 ஸ்வீட்கள் மேலேயுள்ள ஜரிகைதாள் மாட்டின் குடலில் இருந்து தயாரிக்கப்படுதுன்னு தெரியுமா?


பொதுவாக ஸ்வீட் கடைகள்ல வாங்கற ஸ்வீட்டுகள் மேல ஒரு சில்வர் பேப்பர் ஒட்டிவைத்திருப்பார்கள். அந்த சில்வர் பேப்பர் அழகிற்காகவும் ஒட்டப்பட்டிருக்கும். அது ஒட்டிய பின்னர் அந்த ஸ்வீட்லேந்து அதை எடுக்கிறது ரொம்ப கஷ்டம். அதனால பெரும்பாலானவங்க அந்த சில்வர் பேப்பரோடவே ஸ்வீட்டை சாப்பிடுவார்கள்.. ஸ்வீட் மேல ஒட்டியிருக்காங்கன்னா அது என்ன பண்ணிடப் போகுதுங்கிற நம்பிக்கை தான். இது சில்வர் ஃபாயில், சில்வர் ரேக் என சொல்லப்படுகின்றது. ஆனால் இதன் ஒரிஜினல் பெயர் வராக்.. இந்த வராக் எனப்படுவது எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றது என்று சொன்னால் அதிர்ச்சியின் எல்லைக்கே போக நேரிடும். இருந்தாலும் எல்லாரும் தெரிந்து கொண்டு இனி அந்த வராக் பயன்படுத்தப்பட்ட இனிப்புகளை வாங்கி உண்பதை விட்டுவிடலாமே என்ற எண்ணத்தில் தான் அதைப்பற்றியான செய்தி இங்கே தரப்படுகின்றது..


வராக்’ எனப்படும் இந்த ஜரிகைதாள் மாட்டின் குடல் கொண்டு தான் தயாரிக்கப்படுகிறது என்பது முதல் ஷாக்..


வராக் எப்படி தாயாரிக்கின்றார்கள்?


இறைச்சிக்காக மாட்டை கொன்றவுடன் அதன் குடல் பகுதியை மட்டும் தனியாக எடுத்து, அதிலுள்ள ரத்தம் மற்றும் மலம் போன்ற கழிவுகளை சுத்தம் செய்து, இந்த ‘வராக்’ தயாரிப்பாளர்களிடம் விற்பனை செய்வார்கள். மாடு இறந்த உடனேயே இந்த குடல் எடுக்கப்பட்டுவிடும். இல்லையென்றால் அது விறைத்து விடும். ஒரு மாட்டோட குடல் 540 இன்ச் நீளமும் 3 இன்ச் அகலமும் கொண்டது. இதை சுத்தம் செய்து நீளாக வெட்டினால் 540 இன்ச் 10இன்ச் என விரியும். ‘வராக்’ தயாரிப்பாளர்கள் 9க்கு 10இன்ச் என்ற வீதத்தில் 60 துண்டுகளாக வெட்டி ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைப்பார்கள். இது ஒரு நோட்புக் போல இருக்கும். அதன்பின்னர் மெலிசான வெள்ளி தகட்டை, வெட்டப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடலுக்கு இடையில் வைத்து மொத்தத்தையும் ஒரு தோல் பையில் வைத்து இறுக்கிக் கட்டுவார்கள். இந்த தோல் மூட்டையை 1 அல்லது 2 நாள் வரை விடாது அடிப்பார்கள். இப்படி அடித்து, அடித்து அந்த வெள்ளி தகட்டை மெல்லிய தாள்களாக மாற்றுவார்கள்.பிறகு அதை தோல் பையிலிருந்து எடுத்து, குடல்களை நீக்கி, வெள்ளி தாள்களை அடுக்கி வைப்பார்கள். இப்படி தொடர்ந்து அடிப்பதினால் அது மிக மெல்லிய வெள்ளி தாளாக மாறுகின்றது..


இப்படி தயாரிக்கப்பட்ட வெள்ளி சரிகை தாள்கள் மொத்தமாக ஸ்வீட் தயாரிப்பாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 160 வெள்ளி சரிகை தாள்கள் (10 கிராம் எடை) கொண்ட ஒரு ரோலின் விலை 200 ரூபாய். இந்த வெள்ளி சரிகை தாள்களைதான் ஸ்வீட்டுகளின் மேல் அழகுக்காக பரப்பிவிடுகிறார்கள். முட்டை கூட தொடாத சைவ பிரியர்கள் இந்த வெள்ளிதாள்கள் எதிலிருந்து செய்யப்படுகின்றது என்ற விவரம் தெரியாமலேயே இந்த ‘சரிகை தாள்’ கொண்ட இனிப்பை அந்த தாள்களை நீக்காமலேயே சாப்பிடுகிறார்கள்.


தோல் பெட்டியில் வைத்து அடிக்கப்படும் வெள்ளி தகடுகள், மெல்லிய தாள்களாக மாறும் போதும், குடலில் உள்ள திசுக்கள் சூடாக உள்ள இனிப்புகள் மீது இந்த தாள்கள் ஒட்டப்படும்போடு இந்த இனிப்பில் அந்த திசுக்கள் கலந்துவிடுகின்றது. அதனால் இனிப்பில் மாட்டின் குடலில் உள்ள திசுக்கள் கலந்துவிடுகின்றது. சைவ இனிப்பு அசைவ இனிப்பாக மாறுகிறது.


இதுல என்ன கொடுமைன்னா அந்த சில்வர் ரேக் சுற்றப்பட்ட ஸ்வீட்டை வாங்கிச் சாப்பிடும் போது நமக்கு தெரியாமலேயே, மாட்டு குடல்களில் உள்ள கிருமிகள் மற்றும் குடல் புழுக்களின் முட்டைகள் ஆகியவற்றை வயிற்றுக்குள் செல்ல நேரிடலாம். மாட்டுக்கறி உண்பர்கள் கூட மாட்டின் குடலை உணவில் பயன்படுத்துவதில்லை. காரணம் அந்த குடல்களில் உள்ள திசுக்கள், கிருமிகள், குடல்புழுக்கள் ஆபத்தானவை என்பதால்.


ஸ்வீட் தானே என்று இந்த தாள் சுற்றப்பட்ட இனிப்புகள் உண்பதால் பல கொடிய நோய்கள் நம்மையறியாம லேயே நமக்கு ஏற்படுகின்றது. இப்படி இந்த சில்வர் தாள்கள் எதிலிருந்து தயாரிக்கப் படுகின்றது என்பது இனிப்பு தயாரிப்பாளர்களுக்கு தெரிந்திருந்தும் தொடர்ந்து பயன்படுத்துவதின் நோக்கம் அந்த இனிப்புகள் இந்த காகிதத்தால் அலங்கரிக்கப் படுகின்றது, அதன் காரணமாக பார்ப்பவர்களுக்கு ஒரு கவர்ச்சியும், அந்த இனிப்பினை வாங்கவும் தூண்டுகின்றது என்பதினால் இதனை தொடர்ந்து பயன்படுத்துகின்றார்கள்.


ஒரு சில இனிப்பு தயாரிப்பு நிறுவனங்கள் இந்த விவரம் தெரிந்த பின்னர் அதனை வாங்கி தங்களது இனிப்பின் மேல் சுற்றுவதில்லை.. இவ்வளவு ஏன் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்த வெள்ளி தாளால் மூடப்பட்ட இனிப்புகளை பல காலமாக பறிமாறி வந்தனர். இந்த வெள்ளி தாள் எந்த வகையில் தயாரிக்கப்படுகின்றது என்ற செய்தி அறிந்ததும் இப்போது அந்த இனிப்புகள் வாங்குவதை நிறுத்திட்டாங்க.


ஒரு சர்வே என்ன சொல்லுதுன்னா ஒரு வருஷத்திற்கு நம் நாட்டில் தயாரிக்கப்படும் இனிப்பின் மேல் சுற்றுவதற்கு தயாரிக்கப்படும் அந்த தாளுக்கு 275 டன் வெள்ளி தேவைப்படுகின்றது. இந்த ப்ராசஸ் நடைபெற்று அதனை மெல்லிய வெள்ளித்தாளாக மாற்ற 5,16,000 மாடுகள் மற்றும் 17,200 கன்றுகளின் தோல்கள் தேவைப்படுகிறது.


இதைபற்றி பல செய்தித்தாள்களில் செய்திகள் வந்துள்ளன. ஆனால் அரசாங்கம் இதற்கு தடை ஏற்படுத்தவும் இல்லை. அரசாங்கமே தடை ஏற்படுத்தாமல் போனதால இன்னும் பல பிரபல இனிப்பு நிறுவனங்கள், இதனை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர் என்பதுதான் அதிர்ச்சியான வேதனை..


இனி இனிப்புகள் வாங்கும்போது இந்த வெள்ளித்தாள் சுற்றப்பட்ட இனிப்புகளை வாங்கறதை கட்டாயம் தவிர்த்திடுங்க…


(Jain Meditation International Center, New York இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ஆங்கிலத்தில் இருப்பதை இங்கே தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது..)

Thursday, 1 May 2025

15 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முஞ்சிகேசர் ஜீவசமாதி

 Copied post from face book, https://www.facebook.com/share/1BDBFZVTZA/


15 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முஞ்சிகேசர் ஜீவசமாதியில் இன்று தரிசனம் 


இன்று உழைப்பாளர் தினத்தில் திருவாலங்காட்டில் அமைந்திருக்கும் 15 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முஞ்சிகேசர் ஜீவசமாதியில் இன்று தரிசனம் கிடைத்தது 


முஞ்சிகேசர் இந்த பெயரை உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருக்கலாம். சென்னை காளிகாம்பாள் கோவில் அருகே இருக்கும் கச்சாலீஸ்வரர் எனும் பழமையான கோவிலில் முஞ்சிகேச முனிவருக்கு சந்நிதி இருக்கிறது. 


அதேபோல் தமிழ்நாட்டில் சுமார் 10க்கும் மேற்பட்ட பழமையான சிவன் கோவில்களில் முஞ்சிகேச முனிவருக்கு சந்நிதி உண்டு. 


பஞ்ச சபைகளில் மூத்த சபையாக விளங்கும் திருவாலங்காடு இரத்தின சபை சிவன் கோவில் அருகே இவரது ஜீவசமாதி தனி கோவிலாக இருக்கிறது.


முஞ்சிகேசமுனிவர்.


சிவனின் கழுத்தில் இருக்கும் கார்கோடகன் எனும் பாம்பு ஒருநாள் சிவனின் கையிலேயே விஷத்தை கக்கி விடுகிறான்.அதனால் சிவனின் சாபத்தை கார்கோடகன் பெற்றான். 


தனது தவறை பின்னர் உணர்ந்து வருந்தி, திருந்திய கார்கோடகன் ஈசனிடம் மன்னிப்பு கேட்க அந்த சாபத்திற்கு பிராயச்சித்தமாக பூமிக்கு சென்று பல சிவ தலங்களை வழிபட சொல்லி கார்கோடகனுக்கு சிவன் கட்டளை இட்டார். 


அவ்வாறு பல தலங்களை வழிபட்ட பின்னர் நிறைவாக திருவாலங்காட்டில் வழிபட்டபோது "என்னை நோக்கி தவமிருக்கும் சுனந்த முனிவர் எனும் மகா முனிவரை நீ பணிந்து வணங்க வேண்டும். அவரின் ஆசியும், கடைக்கண் பார்வையும் உன் மீது பட்ட அந்த நொடியில் உன் சாபம் நீங்கும் அந்த நொடியே நான் அங்கு தோன்றுவேன்" என்று சிவபெருமான் அருளினார் 


அதன் படி கார்கோடகன் வழிபட்ட இடம்  கோடன் பாக்கம் ஆகி அது பின்னர் கோடம்பாக்கமாக மாறியது. கோடம்பாக்கத்தின் ஒரு பகுதி பின்னர் வடபழனி ஆனது. கோடம்பாக்கத்தில் இருக்கும் வேங்கீஸ்வரம் கோவில் கார்கோடக முனிவர், பதஞ்சலி, வியாக்ரபாதர் முதலான பல முனிவர்களால் வழிபடப்பட்ட ரொம்ப பழமையான கோவில்.


நிறைவாக திருவாலங்காடு வந்த கார்கோடகனுக்கு சுனந்த முனிவரின் ஆசி கிடைத்து அதனால் கார்கோடகனின் சாபம் நீங்கியது. 


சுனந்த முனிவர் கடுந்தவம் செய்து அதனால் அவரின் தலைமீது முஞ்சிபுல் எனப்படும் ஒருவகை தர்ப்பைப் புல் படர்ந்து, வளர்ந்தது. 


இதன் காரணமாக தான் அவர் முஞ்சிகேசர் எனும் பெயர் பெற்றார். 


சிவனுக்கும், காளிக்கும் நடந்த நடன போட்டியை நேரடியாக இருந்து பார்த்தவர் முஞ்சிகேச முனிவர். விஷ்ணு வாமன அவதாரம் எடுத்த பொழுது அவருக்கு நடந்த உபநயன சடங்கில் முஞ்சிகேச முனிவர் கலந்து கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. 


கார்கோடகனுக்கு ஏற்பட்ட சாபத்தையே போக்கிய அந்த முஞ்சிகேச முனிவர் எத்தகைய ஒரு தவ ஆற்றல் மிக்கவராக இருக்க வேண்டும்.


திருவாலங்காட்டில் கோவிலின் வெளியே வடக்கு பக்கமுள்ள வீதியில் முஞ்சிகேச முனிவர் ஜீவசமாதியின் மீது கம்பீரமாக வீற்றிருக்கிறார்.


இராகு, கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முஞ்சிகேச முனிவரின் ஜீவசமாதிக்கு சுத்தமான மரச்செக்கு நல்லெண்ணெய்யை சிறிது காணிக்கையாக கொடுத்து அங்கே சில நிமிடங்கள் அமர்ந்து தியானம் செய்யுங்கள். நிச்சயமாக உங்களின் தோஷம் சரியாகும்.


இவரின் ஜீவசமாதி தோராயமாக 15 ஆயிரம் ஆண்டுகள் என்று அறியப்படுகிறது.


Thursday, 17 April 2025

சிதம்பர ரகசியம்

 சிதம்பர சக்கரம் என்றால் என்ன?

{மகா ரகசியம்; மகாரகசியம்}

{சித்த ரகசியம் இதுதான்}


"அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன் 

அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன் 

அஞ்செழுத் தால்இவ் அகலிடம் தாங்கினன் 

அஞ்செழுத் தாலே அமர்ந்து நின்றானே"


"ஐந்தின் பெருமையே அகலிடம் ஆவதும் 

ஐந்தின் பெருமையே ஆலயம் ஆவதும் 

ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும் 

ஐந்தின் வகைசெயப் பாலனும் ஆமே"


இந்த அண்ட பிண்டமென அனைத்தும் உருவாக "நமசிவய" என்ற ஐந்தெழுத்தாகிய பஞ்சபூதங்களே காரணமாகும். இந்த ஐந்தின் பெருமையை பற்றி என்குரு திருமூலர், சிவவாக்கியர், காகபுஜண்டர், வள்ளலார் என அனைவருமே எழுதியுள்ளனர். ஆனால் அவர்கள் அவற்றை உணர்ந்த வண்ணம் என்பது அவரவர்கள் சுவாசத்தை கொண்டுதானாகும். அண்டத்தில் உள்ளதெள்ளாம் பிண்டத்தில் என்றும், அண்டமாகிய இப்பிரபஞ்சத்தை விட பிண்டமாகிய இவ்வுடலே விசாலமானது என்றனர் நம் முன்னோர்கள். இப்படிப்பட்ட உடலை ஆராய்ச்சி கூடமாகவும் சுவாசத்தை கருவியாக கொண்டே அனைத்தையும் அறிந்தனர்.


"ஆச்சப்பா இந்தமுறை பதினெண் பேரும் 

அயன்மாலும் அரனோடுத் தேவரெல்லாம் 

மூச்சப்பா தெய்வமென்ற யறியச் சொன்னார் 

முனியோர்கள் இருடியரிப்படியே சொன்னார்கள் 

பேச்சப்பா பேசாமல் நூலைப் பார்த்து 

பேரான பூரணத்தைத் நினைவாய்க் காரு 

வாச்சப்பா பூரணத்தைக் காக்கும் பேர்கள் 

வாசிநடு மையத்துள் வாழ்வார் தானே"


அதாவது சுவாசத்தை பற்றிய சித்தர்கள் பாடல்கள் கணக்கில்லாமல் இருந்தாலும், சித்தர்களுக்கு முதன்மையானவரான அகத்தியர் சுவாசத்தை தெய்வம் என்று கொண்டே பதினெண் சித்தர்கள் முதல் அயன், மால், ஈசன், தேவர்கள் என அனைவரும் பயன்பெற்றனர் என தனது ஞானத்தில் கூறியுள்ளார். நூலாகிய சுவாசத்தை பிடித்தால் சேலையாகிய இறைவனை பிடிக்கலாம். தன்னையறிய தலைவனையறியும் முறையாகும்.


மேலும் இந்த உடலை யந்திரம் எனவும், சுவாசத்தை மந்திரம் எனவும், இவற்றை இயக்கும் விதம் தந்திரம் எனவும் கூறலாம். காரணம் மகா மேரு பீடம் என்று கூறப்படும் ஸ்ரீ சக்கரத்தின் அடுக்கு யந்திரம் என்பது நம் முதுகுத்தண்டையே குறிக்கும். அதேபோல் எண்ணற்ற யந்திரங்கள் நம் உடலின் ஒரு குறிப்பிட்ட பாகங்களையோ அல்லது முக்கிய இடங்களையோ அல்லது தலை மற்றும் மூளையின் சிறு பகுதியோ அல்லது முழுவதுமான வடிவத்தை கொண்டே வடிவமைக்கப்பட்டது. இதில் மந்திரங்களான பீஜங்களை சில குறிப்பிட்ட தந்திரமுறைகளை கொண்டு உட்சரிக்கும் போது சுவாமாகிய காற்று வெட்டப்பட்டு துள்ளியமான ஒலி ஒளி அதிர்வுகள் உள்ளும் வெளியிலும் பரவி யந்திரம் சக்தி பெருகின்றது. எப்பொழுது எல்லாம் ஒருவன் அந்த யந்திரத்திற்கு பக்கத்தில் செல்கிறானோ, அப்போதெல்லாம் அவன் உடலில் உள்ள அந்த யந்திர வடிவ பகுதி சக்திபெறும். 


சரி இதில் சுவாசத்திற்கும் பஞ்சபூதத்திற்கும் என்ன சம்பந்தம்?? 

             நாம் சுவாசிக்கும் காற்று பஞ்சபூத தன்மையை கொண்டே செயல்படுகின்றது. அதாவது நம் உடலிலும் மனதிலும் ஏற்படும் மாற்றத்திற்கு இப்பஞ்சபூத சரமே காரணம். பூதசரத்தில் எந்த பூதத்தின் சரம் ஓடுகின்றது என கண்டுபிடிப்பதில் பல வழிகள் உண்டு. அவைகளில் சுவையை கொண்டு அறிவது. கண்ணாடியில் சுவாசத்தை ஊதி, அதில் தெரியும் வடிவத்தை கொண்டு அறிவது, நிறத்தை கொண்டு அறிவது என பலவழிகள் உண்டு.


"பாராப்பா பிருதிவியிற் கவிழ்ந்தேயோடும் 

பரிவான அப்புதனில் வலத்தே யோடும் 

சேரப்பா தேய்வுதனில் இடத்தே யோடும் 

திறமான வாயுதனில் நேரா யோடும் 

ஒரப்பா அந்தரத்தில் மேலே யோடும் 

ஒன்றேனும் குறைவுப்படாது உற்றுநோக்கி 

ஆரப்பா இந்நூலைப் பார்பார் கேட்பார் 

அறிவான மூமின்கட்கருள் செய்தோமே"


இதில் மிக சுலபமாக சரத்தை கண்டுபிடிக்க மேற்கண்ட பாடலே சிறந்தது. அதாவது மூச்சானது கீழ்நோக்கி (பூமியை நோக்கி) கவிழ்ந்து ஓடினால் அச்சரமானது பிருதிவி (நிலம்) சரமாகும். அதுபோல் மூச்சானது இடகலையில் அல்லது பிங்கலையில் என எப்படி நடந்தாலும், மூச்சானது சாய்ந்து இடது பக்கமாக ஓடினால் அப்பு (நீர்) சரமாகும். அதே போல் வலது பக்கமாக சாய்ந்து ஓடினால் தேயு (தீ) சரமாகும். மூச்சானது ஒடிந்து நமக்கு முன்னால் நேராக ஓடினால் வாயு (காற்று) சரமாகும். வெளிவரும் மூச்சானது நாசி வழி வடிந்து நமக்கு முன்பாக மேல்நோக்கி சென்றாலும், உள்ளுக்குள்ளேயே ஓடினாலும் ஆகாய சரமாகும். இப்படி நம் மூச்சானது எந்த பூதத்தை சார்ந்து ஓடுகின்றது என்பதை சுலபமாக கண்டுபிடிக்கலாம்.


நாம் அசையா வேளையில் பிருதிவியும், அசையும் வேளையில் அப்புவும், கஷ்ட வேளையில் தீயும், நம்மில் ஏதேனும் சலிப்பு ஏற்பட்டு அதனால் ஏற்படும் துறவு வேளையில் காற்று சரமோடும். அதிக நேர தியானம், வாசி மற்றும் பூசை வேளையில் ஆகாய சரமோடும்.


மேலும் பூர்வபட்ச வியாழனில் பூமி சரமும், அமரபட்ச வியாழனில் நெருப்பும், வெள்ளி நீரும், புதன் காற்றும், சனிக்கிழமை ஆகாய சரமும் மேற்கண்ட நாட்களில் முதலில் ஓட அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் ஞாயிறு நீர் சரமும், திங்கள், செவ்வாய், வியாழன் போன்ற நாட்களில் தீ சரமும், புதன் பூமியும், வெள்ளி காற்றும், சனி ஆகாய சார்ந்த சரம் நடப்பது மிக்க நல்லது.


பொதுவாக ஒருவருக்கு மண் மற்றும் நீருக்குண்டான சரம் நடந்தால், அவர் சத்துவ குணமுடையவராவார். மேலும் ஒருவருக்கு கோபம், அகங்காரம், ஆணவம், காமம் போன்ற எண்ணங்கள் தீ சரம் நடக்கும்போது உண்டாகும். எனவே அதை கவனித்து பக்தியில் மனதை செலுத்தினால் நல்லது. காற்று சரம் நடந்தால் அவன் ஞானியை நெருங்கியவன். ஆகாய சரம் நடந்தால் அவன் கடவுளை நெருங்கியவன். தீ சரம் பக்தியில் தீவிரமாயிருப்பவனுக்கும், நீர் சரம் தான தர்ம செய்பவனுக்கும், மண் சரம் ஓடினால் அவன் உபதேசம் செய்பவனாகவும் இருப்பான்.


மேலும் காலையில் படுக்கையிலிருந்து எழும்போது கொட்டாவி விடாமல் மூச்சை உள்ளிழுத்து கொண்டு எழுந்திருந்தல் மிக்க நலமாய் அமையும். சூரியகலையில் மண்சரமோ, நீர்சரமோ ஓடும்போது அந்நிலையில் எக்காரியம் ஆகவேண்டியிருப்பினும் அக்காரியத்தினை செயலில் நோக்க விரைவில் அது எளிதாக முடியும். மண்ணும் நீரும் கலந்தேயிருப்பது போல உடலில் மாமிசமும் உதிரமும் கலந்தேயுள்ளன. ஆகாயமும் காற்றும் கலந்தேயிருப்பது போல சரமாகிய மூச்சு காற்று ஆகாய பந்தத்தில் கலந்தேயுள்ளது. அக்கினி மட்டும் பூமியிலும், பிரபஞ்சத்திலும், உடலிலும் அனைத்திலும் பொது நிலையாய் மத்தியில் உள்ளது.


இதுவரை சர சாஸ்திரம் ஓரளவு நிறைவடைகின்றது. இதில் இன்னும் பழகப் பழகப் இப்பூத சரமானது எப்பூத சரத்தில் போய் முடிகின்றது என்பதை கண்டு இந்த பஞ்சபூத சரத்தையும் இடகலையில் 25 ஆகவும், பிங்கலையில் 25 ஆகவும் பிரிக்கலாம். அதாவது நமது மூச்சு பிருதவியினை பூமிசரமூச்சில் தொடங்கி எப்பூத சரத்தில் முடிகின்றது என காண வேண்டும். காண முடியும். இந்த அளவு துள்ளியமாக பார்க்கும் முறையில் நம்மற்றில் உலகின் ஆதிஅந்த செயலின் முக்காலங்களையும் நன்கு அறிந்துணர முடியும். மேலும் இடது 25யும், வலது 25யும் மற்றும் சுழுமுனையாகிய 1யும் சேர்ந்த கூட்டுதொகையே 51 அட்சரமாகிய சிதம்பர சக்கரமாகும். இதை விளக்க விளங்கி கொள்ள தெரிந்தவன் பரத்தை தெரிந்தவன் ஆவான்.


சிதம்பர சக்கரத்தை தெரிந்து கொள்வதற்குமுன், 


நமசிவய மந்திரத்தில் 

ந- நிலமாகவும், 

ம- நீராகவும், 

சி- நெருப்பாகவும், 

வ- காற்றாகவும், 

ய- ஆகாயமாகவும் உள்ளன. 


இவற்றின் நிறம், சுவை, வடிவம், தூரம் ஆகியன;

ந-நிலம்-பொன்-சதுரம்-தித்திப்பு-12 அங்குலம்,

ம-நீர்-வெண்மை-பிறை வடிவம்-துவர்ப்பு-16 அங்குலம்,

சி-தீ-சிகப்பு-முக்கோணம்-உவர்ப்பு-8 அங்குலம்,

வ-காற்று-கருப்பு-அறுகோணம்-புளிப்பு-4 அங்குலம்,

ஆகாயம்-பச்சை-வட்டம்-கார்ப்பு-1 அங்குலமாகும்.


இவற்றில் நிலத் தத்துவத்தில் நிலத்தில் நிலம், நிலத்தில் நீர், நிலத்தில் தீ, நிலத்தில் காற்று, நிலத்தில் ஆகாயம் என ஐந்து பிரிவுகளாக உள்ளும் வெளியும் இயங்கும். இதேபோல் நீர், தீ, காற்று மற்றும் ஆகாயம் என மொத்தம் 25 பிரிவுகளாக இயங்கும் விதத்தை 25 கட்டத்திற்குள் வைத்து ஒட்டு மொத்த பிரபஞ்ச இயக்கத்தை குறிப்பிடுவதே சிதம்பர சக்கரமாகும்.


"சிதம்பர சக்கரம் தான் அறிவார்- இந்த 

சீமையில் உள்ள பெரியோர்கள் சிதம்பர 

சக்கரம் தானும் என்றால்- அதற்குள் 

தெய்வத்தை யல்லோ அறியவேணும்"


சிதம்பர சக்கரத்தின் விளக்கத்தை சமீபத்தில் வந்த வள்ளலார்  தனது அகவலில் தெளிவாக எழுதியுள்ளார். அனைவரும் அகவலை ஒருமுறையாவது படித்து பார்க்கவும். ஆன்மீகத்தின் ரகசியமான முறைகள் மற்றும் சூட்சமங்கள் உங்களுக்குள் கேள்வியாய் உதித்து அதை நோக்கி பயணிக்க வைக்கும். விடை என்பது எப்படி வேண்டுமானாலும் கிடைக்கலாம். சிதம்பர சக்கரத்தை ஸ்தூலம், சூட்சமம், காரணம் என பல பிரிவுகளில் விளக்கிக் கொண்டு செல்லலாம். இப்பதிவில் சுவாசத்தால் ஏற்படும் மாற்றத்தையும் அதில் இப்பூதங்களில் செயல்பாடுகளையும் மட்டும் இங்கு சொல்கிறேன். விரிவாக கற்க திருமந்திர whatsaap வகுப்பில் கற்கவும்.


சரமானது மண்ணை சார்ந்து நடக்கும்போது;

மண்ணில் மண் நடந்தால்- எதிலும் நிறைவு உண்டாகும்.

மண்ணில் நீர்- அடிசேரலாம்.

மண்ணில் காற்று- அலைந்து அலைந்து அவனடி சேர்வர்.

மண்ணில் நெருப்பு- உடல் உஷ்ணம் அதிகமாகும்.

மண்ணின் ஆகாயம்- பிடி கிடைக்காமல் சுற்றிக்கொண்டே இருப்பர். 


சரமானது நீரை சார்ந்து நடக்கும்போது;

நீரில் நிலம்- மூச்சு நீருக்குரிய சரத்திலாரம்பித்து மண்ணிற்குரிய பிருதிவி சரத்தில் முடிந்தால் கலத்தல் எனும் ஐக்கிய பாதையான சமாதி நிலையை அடையலாம்.

நீரில் நீர்- எல்லாவற்றிலும் வளர்ச்சி.

நீரில் நெருப்பு- உடல் குளிர்ச்சியாகும்.

நீரில் காற்று- அமிர்தம் சுரக்கும்.

நீரில் ஆகாயம்- அப்படியே அதிர்ந்து போய் ஒரு சில நிமிடங்கள் இருக்கும் நிலையில் இம்மூச்சு ஓடும். 


சரமானது தீயை சார்ந்து நடக்கும்போது;

தீயில் மண்- ஆயுள் நீட்டிப்பு.

தீயில் நீர்- ஆயுள் குறைவு.

தீயில் தீ- இருநிலை மாற்றம்.

தீயில் காற்று- மயக்கத் தோற்றத்தை உருவாக்கும்.

தீயில் ஆகாயம்- புவிஈர்ப்பு விசையை மீற முடியும்.


சரமானது காற்றை சார்ந்து நடக்கும்போது;

காற்றில் மண்- நோய் அறிகுறி.

காற்றில் நீர்- விந்து மேலேறும்.

காற்றில் தீ- உடம்பில் தீயின் சுழற்சியை காணலாம்.

காற்றில் காற்று- காந்தவியல் அழுத்தம் மேற்பட்டு தலை கணக்கும், நாதம் கேட்கும்.

காற்றில் ஆகாயம்- பாவபுண்ணியம் கலைந்து எரிந்துவிடும் நிலை. 


சரமானது ஆகாயத்தை சார்ந்து நடந்தால்;

ஆகாயத்தில் மண்- உச்சி திறக்கும், தியானத்திற்கு உகந்தது.

ஆகாயத்தில் நீர்- நம் சக்தியானது இடம்விட்டு இடம் நகரும்.

ஆகாயத்தில் காற்று- விசுத்தியில் நிற்கும் 

ஆகாயத்தில் தீ- நந்தியாகிய பரமாத்மாவை தெளிவாக காண முடியும்.

ஆகாயத்தில் ஆகாயம்- இருள் நிலை, மாயை, முழு ஞானம் உற்பத்தியாகும்.


மேலும் சந்திரகலை குளிர்ச்சியாக இருப்பதால் அது உஷ்ணத்தை நாடி செல்லும். இதில்தான் அறிவு உதிக்கின்றது. இதேபோல் சூரியகலை உஷ்ணமானதால் குளிர்ச்சியை நோக்கி செல்லும். இதில் மாயை அல்லது பிரமை உண்டாகின்றது. பிரமை என்பது பிரம்மதோடு இணைந்திருப்பது என்ற பொருளாகும். இந்த வேறுபாடுகளை கொண்டு நீங்களே உங்கள் உள்நிலையும் உங்கள் வெளி உலக நிலையையும் துல்லியமாக ஒப்பிட்டு பார்த்து கொள்ளலாம். 


அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் என்பதற்கு ஏற்றாற் போல் இந்த பிண்டத்தில்(உடலில்) பஞ்சபூத சரத்தால் என்னென்ன மாற்றம் ஏற்படுகின்றதோ அதேபோல் அண்டமாகிய பிரபஞ்சத்திலும் மாற்றம் நிகழும். உங்கள் மனதில் மேலும் தெளிவாக பதிய வேண்டுமெனில் கீழேயுள்ள சாதாரணமாக நடைமுறையில்(Practical changes around us in the nature) ஏற்படும் இயற்கை மாற்றத்தை புரிந்துகொண்டால் போதுமானது. இதுவே நம் உடலுக்கு உள்ளும் வெளியும் நிகழ்பவை. 


பிருதவியில் ஏற்படும் மாற்றம்:

மண்ணை மண்ணில் போட்டால்; நிறையும்.

மண்ணை நீரில் போட்டால்; அடி செல்லும்.

மண்ணை காற்றில்; அலைந்து வேறிடம் பின்பு கீழ் அடிவிழும்.

மண்ணை தீயில்; உஷ்ணமாகும். மண்ணை ஆகாயத்தில்; சுழலும். 


அப்புவில் ஏற்படும் மாற்றம்: 

நீரை மண்ணில் கலந்தால்; பரவும்.

நீரை நீரில்;- பெருகும்.

நீரை தீயில்;- குளிர்ச்சி.

நீரை காற்றில்;- ஆவியாகி மேகமாகி மழை வரும்.

நீரை ஆகாயத்தில்;- உறை நிலை. 


தேயுவால் ஏற்படும் மாற்றம்:

தீயை மண்ணில் போட்டால்; அழியாநிலை(உஷ்ணம்).

தீயை நீரில் போட்டால்; அழிவுநிலை. தீயை தீயில்; இருநிலை மாற்றம்.

தீயை காற்றில்; அனல், கானல்நீர், வெக்கை, உருக்கம்.

தீயை ஆகாயத்தில்; குமிழாகி பறக்கும்.


வாயுவால் ஏற்படும் மாற்றம்:

காற்றை மண்ணில்; விரிசல்.

காற்றை நீரில்; நீர் சுழற்சி.

காற்றை தீயில்; தீ சுழற்சி.

காற்றை காற்றில்; காந்தவியல். அழுத்தம், காற்றை ஆகாயத்தில்; மேகம் கலையும்.


ஆகாயத்தால் ஏற்படும் மாற்றம்: ஆகாயத்தை மண்ணில்; பிரளயம், தியானம்.

ஆகாயத்தை நீரில்; புவி நகரும், இடமாறும்.

ஆகாயத்தை தீயில்;-

 ஒளி பெருகும். 

ஆகாயத்தை காற்றில்;- கடல்நீர் உள்வாங்கும்.

ஆகாயத்தை ஆகாயத்தில்; இருநிலை, மாயை, பிரமை. 


நம் ஸ்தூல சூட்சும சரீரங்களில் ஸ்தூலமாக மற்றும் சூட்சுமமாக நடைபெறும் காரண காரியங்களுக்கு பஞ்சபூதங்களின் பயன்பாடு பற்றி அடுத்து சொல்கிறேன்....


ஸ்தூலத்தில்;

--------------------------

மண்ணில் மண் சேர்ந்தால் உடலில் சக்தி குறைந்து அசதி ஏற்படும்.

மண்ணில் நீர்- உடலில் மாமிசம் உருவாகின்றது,

மண்ணில் தீ- சருமமாகிய தோல் உருவாகின்றது,

மண்ணில் வாயு- நரம்புகளும்,

மண்ணில் ஆகாயம்- ரோமமும்,


நீரில் நீர்- சிறுநீரும்,

நீரில் மண்- உமிழ்நீரும்,

நீரில் வாயு- உதிரமும்,

நீிரில் தீ- வியர்வையும்,

நீரில் ஆகாயம்- சுக்கிலமும்,


தீயில் தீ- நேத்திர கண்ணும்,

தீயில் ஆகாயம்- செவியும்,

தீயில் வாயு- சரீரமும்,

தீயில் நீர்- வாயும் நாக்கும்,

தீயில் மண்- நாசியும்,


காற்றில் மண்- இருதயமும் பிராணக் காற்றும்,

காற்றில் நீர்- குதமும் அபான வாயுவும்,

காற்றில் காற்று- சர்வ நாதங்களும் வியானனும்,

காற்றில் தீ- கழுத்தும் உதானனும்,

காற்றில் ஆகாயம்- தொப்புளும், சமானனும்,


ஆகாயத்தில் மண்- இருதயமும்,

ஆகாயத்தில் நீர்-நாசியில் பித்தமும்,

ஆகாயத்தில் தீ- மார்பும்,

ஆகாயத்தில் காற்று- கண்டமும்,

ஆகாயத்தில் ஆகாயம்- சிவமும் உருவாகின்றன.


சூட்சுமத்தில்;

-------------------------

மண்ணில் மண் கலந்து குதமும், 

மண்ணில் நீர்- குய்யமும், 

மண்ணில் தீ- கைகளும், 

மண்ணில் காற்று- பாதங்களும், 

மண்ணில் ஆகாயம்- வாக்கும், 


நீரில் ஆகாயம்- சத்தமும், 

நீரில் காற்று- தொடு உணர்வும், 

நீரில் தீ- பார்வையும், 

நீரில் நீர்- சுவையும், 

நீரில் மண்- வாசனையும், 


தீயில் தீ- பசியாகிய தீபாக்கினியும், 

தீயில் மண்- தாகமும், 

தீயில் நீர்- தூக்கமும், 

தீயில் காற்று- கொட்டாவியும், 

தீயில் ஆகாயம்- சங்கமமாகிய கலத்தலும், 


வாயுவில் வாயு- ஓட்டமும், 

வாயுவில் நீர்- இருத்தலும், 

வாயுவில் தீ- தத்தித்தத்தலும், 

வாயுவில் மண்- நடத்தலும், 

வாயுவில் ஆகாயம்- படுத்தலும்,

 

ஆகாயத்தில் மண்- ஆசையும் அகங்காரமும், 

ஆகாயத்தில் நீர்- துவேசமும், 

ஆகாயத்தில் தீ- பயமும், 

ஆகாயத்தில் காற்று- வெட்கமும், ஆகாயத்தில் ஆகாயம்- மேகமும் உருவாகின்றன.


ஆக இதன் மூலம் ஒரு பூதமானது மற்றைய பூதங்களில் கலந்து உடலிலும், வெளியிலும், ஸ்தூலமாகவும், சூட்சமமாகவும் ஏற்படும் மாற்றங்களையும், பஞ்சபூதங்களே பிறக்கும் முன் தாயின் கருவிலும், பிறந்தபின் வெளியிலும் உடல் உறுப்புகள் உருவாவதற்கு காரணமாகும். மேலும் நமக்கு ஏற்படும் ஆணவம், கோபம், ஆசை போன்றவற்றிற்கும் இப்பூதங்களே காரண காரியமாகும். இவை அனைத்தையும் அனுபவத்தில் உணர வாழ்த்துக்கள். மேலும் கற்க திருமந்திர சிவயோக வகுப்பில் கற்கவும்...

Monday, 3 February 2025

அகத்தியர் கும்பாபிஷேகம்

 வணக்கம் அகத்திய அடியவர்களே 


நமது பொகலூர் அகஸ்தியர் ஜீவ அருள் நாடி பீடம் , பெரும் ஆலயமாகி நிற்கிறது .  அகத்தியர் எம்பெருமான் ஒரு விளக்கு ஒளி மூலம் அங்கே கும்ப அபிஷேகத்திற்கு முன்னால் 21 நாட்கள் ஒரு விளக்கு ஒளி மூலம் இப்போது உள்ள பீடத்தில் எழுந்தருளி , பிறகு அவ்விளக்கை புதிய ஆலயத்தில் ஏற்றி வழிபட்ட உடன் இங்கே இருந்து குடி பெயர்ந்து புதிய நிலைக்கு அரூபமாக சென்று விடுவார் . 21 நாட்களும் அணையா தீபமாக , இப்போது இருக்கும் குடிலில் தொடர்ந்து ஒளிர வேண்டும் என்பது அகத்தியர் எங்களுக்கு ஜீவ நாடியில் உறைத்துள்ள வாக்கு . 


ஒன்று அறியாத சிறு குழந்தைகள் போல் உள்ள எங்களுக்கு ஆசானாய் குருவாய் உள்ள அகத்தியரின் நேரடி உத்தரவை மட்டுமே நாம் அடிபணிந்து செயலாற்றி கொண்டு உள்ளோம் . எங்களுக்கு பெரிதாக ஆலய விதிகள் எதுவும் தெரியாது . நாங்கள் எப்போதும் அகத்தியர் ஆட்டுவிக்கும் பொம்மையாக உள்ளோம் , ஆட்டுவிப்பவர் அவரே. 


எனவே , இதனை உணர்ந்து , பக்தர்கள் அனைவரும் , தம் தமது வாழ்வில் அகத்தியரின் வழி காட்டுதல் எப்போதும் இருக்க வேண்டும் என்றால் , அதற்கு அவர் தொடர்ந்து மிகவும் ஆழமாக நிலை நிற்க வேண்டும் . அதற்கு தான் இந்த ஆலயம் .நமது சுயநலத்திற்காக , நமது பக்தர்கள் வாழ்வில் சிறப்புகள் பெற்று தடைகள் அகன்று உயர வேண்டும் என்பதற்காக ஒரு உண்மையான வழிகாட்டி அரூபமாக இருந்து ஜீவ நாடி மூலம் நேரிடையாக உரையாடி அருள , அவருக்கு மிகவும் தகுந்த இடமாக இந்த ஆலயம் இருக்கும் .


*எனவே , ஏற்கனவே நமது அகத்தியர் அருள் மூலம் பயன் பெற்ற அடியவர்கள் , ஏதோ ஒரு வகையில் தங்களால் இயன்ற பொருளதவியை செய்து இந்த ஆலயம் எழும்ப தோள் கொடுக்குமாறு தாழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்*


நமது தேவை 50 நபர்கள் , தலா  10000 வீதம் அளித்தால் , நன்கொடை சேகரிப்பு விரைவில் முடிவடையும் 


*ஆலயம் எழும்பினால் நமக்கு தான் நல்லது , நமது வாழ்வு மேலும் சிறக்கும் , ஆலயம் கோபுரம் உயர உயிர் பெற , அதற்கு உறுதுணையாக இருந்த பக்தர்கள் வாழ்வும் படிப்படியாக உயரும் என்பது அகத்தியர் ஜீவ நாடியில் உரைத்த வாக்கு*


நமக்கு இன்னும் சுமார் 35 நாட்கள் மட்டுமே உள்ளன - கும்பாபிஷேகம் மார்ச்சு மாதம் 8 ஆம் தேதி துவங்கி 10 ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் கும்பத்திற்கு அபிஷேகம் நடைபெறும் 


*இதற்கு கும்பாபிஷேகம் செய்து வைக்கும் வேத விற்பன்னர்கள் குழுவிற்கும் , பூஜை பொருட்களுக்கும் மொத்தமாக 2 லட்சம் கொடுப்பதாக பேசி இருக்கிறோம் . வசதி படைத்தவர்கள் மனது வைத்தால் , இந்த 2 லட்சம் ரூபாயை யாரேனும் கொடுக்க முன்வரலாம் , பணத்தை கூட நேரிடையாக வந்து இருந்து கும்பாபிஷேகம் செய்து வைக்கும் உயர்திரு கல்கி கண்ணன் ஸ்வாமிஜி  சாஸ்திரிகள் அவரிடமே நேரிடையாக கொடுக்கலாம்* விருப்பம் இருப்பவர்கள் , வசதி உள்ளவர்கள் யாரேனும் இருந்தால் , இந்த கைங்கர்யமான் 2 லட்சம் ரூபாயை ஏற்று கொள்ளவும் . ராஜ பட்டாபிஷேகத்தில் , கிரீடம் எவ்வளவு முக்கியமானதோ , அதை போன்று , கும்பாபிஷேகத்தில் , புரோகிதமும் வேத மந்திரங்களும் , பூஜை திரவியங்களும் தான் பிரதானம் . அதே போல, ஒரு கல்யாணத்தில் , தாலி கயிறு திருமாங்கல்யம் எவ்வளவு முங்கியமோ , அதை போல தான் இந்த வேத கைங்கர்யம் . இந்த கைங்கரிய செலவை ஏற்று கொள்பவர்களுக்கு பிரதானமான கும்பிஷேக புண்ணிய பலன் சென்று சேரும்.


எந்த கட்டாயமும் இல்லை . மேலே உள்ள பதிவு வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் . அவர்கள் மட்டும் மனம் வைத்தால் இது நடக்கும். எல்லாம் இறை செயல் ,; நாங்கள் வெறும் கருவிகளே  !!!


இறை இயக்கம் வெற்றி பெறட்டும் !!!! ஓம் அகத்தீஸ்வராய நமஹ ஓம் லோபாமுத்ராய நமஹ 


இங்கனம் 

தி. இரா. சந்தானம் 

03- 02-2025

GPAY 9176012104

Thursday, 30 January 2025

நமது அகத்தியர் ஆலய கும்பாபிஷேகம் 10.03.2025


 🙏🏻வணக்கம்🙏🏻

🙏🏻நமசிவாயம்🙏🏻



ஏப்ரல் 2016, முதல், 8 வருடங்களாக பொகளூர் கிராமத்தில், சிறிய குடிலில் குடிகொண்டு அருள் பாலித்து  அரும்  நமது தந்தை அருள்மிகு அகத்தீஸ்வரர் எம்பெருமான் அவரகளுக்கு பக்தர்களின் பெரும் பொருளுதவியுடன் பிரமாண்டமான ஆலயம் எழுப்பட்டு இன்று கம்பீரமாக நிற்கிறது.


 நமது குருநாதர் அகத்தியர், தம்பதி சமேதராக ஸ்ரீமதி உலோபமுத்திரை தாயாருடன் அருள் பாலிக்க உள்ளார்.


 அத்துடன் இலிங்க  வடிவில் ஈசனும், மற்றும் தம்பதி சமேதராக நீலா சரஸ்வதி சமேத உஜ்ஜிஷ்ட மகா கணபதி பெருமானும் தனி சந்நிதி கொண்டு எழுந்தருள உள்ளார்கள்.


மேலும் திரு அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன்சமேதராக சித்திர வடிவுடன் சித்திர கூடமாக ,  வாசி யோக மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது.


அன்னதான .மண்டபம் தனியே எழுப்பப்பட்டுள்ளது. 


 நவீன் தொழில் நுட்பத்துடன் கூடிய சமையல் கூடம் கட்டப்பட்டுள்ளது.


கோசாலை அமைக்கப்பட்டுள்ளது.


27 நட்சத்திர மரங்கள் கொண்ட நந்தவனம் அமைய பெரும். மரங்கள் நடப்பட தயார் நிலையில் உள்ளன.


பக்தர்கள் வசதிக்காக ஆண், பெண், தனித்தனியே உபயோகிக்கும்  வகையில் கழிப்பிடம் மற்றும் குளியல் அறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.


மஹா கும்பாபிஷேகத்திற்கு நாள் குறிக்க, நம்மிடம் ஜீவ நாடி மூலம் பேசி உரையாடும் மூலவரான கும்பமுனி அகத்தியரே நாள் குறித்து உள்ளார்.


 மற்ற ஆலயங்கள் போல் அல்லாமல், மூலவரே பேசி, தன்னை எப்படி பிரதிட்டை செய்ய வேண்டும், விழா எப்படி நடத்த வேண்டும், எவ்வளவு கலசம் கொண்டு அபிஷேகம் செய்ய  வேண்டும் என்று ஜீவ நாடி மூலம் உரைத்து நடத்தும் கும்பாபிஷேகம்,மனித சக்திக்கு அப்பாற்பட்டு நடக்கும் விழா ஆகும்.


கும்ப அபிஷேக விழாவில்,  அகத்தியர் மனித உருவம் கொண்டு அங்கு வந்திருந்து மக்களை ஆசி புரிவார்.


கும்ப அபிஷேகத்திற்கு யாக சாலை, பூஜை பொருட்கள், பந்தல், அன்னதானம், கலசங்கள், புரோகித செலவு, ஆகியவைக்கு, சுமார்,  5 லட்சம் தேவை படுகிறது. 


50 பேர் சேர்ந்து ஆளுக்கு 10,000 வீதம் பொருள் ஈட்டலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி அகத்தியர் ஆலய கும்ப அபிஷேக பணியை ஏற்று கொண்டு அந்த 50 பாக்கியவான்களில் ஒருவராக ஆகும்படி பீடத்தின் சார்பில் கேட்டு கொள்கிறோம்.


ஒரு பீடம், இன்று ஆலயமாக மாற போகிறது. ஆசிரமமாக மாற போகிறது.


50 பேரில் ஒருவராக விருப்பம் உள்ளவர்கள் பெயர் கொடுக்கவும். 10,000 நன்கொடை மார்ச்சு மாத துவக்கத்திற்குள் கொடுக்கலாம்.


மிக்க நன்றி.


தி. இரா. சந்தானம்

அகத்தியர் பீடம்

Gpay 9176012104