Wednesday 6 June 2018

40 is ஆண்டுக்கு ஒரு முறை. வெளி வரும் அத்தி வரதர்

💥15.07.2019 அன்று 🚶🏼‍♂வராரு 🚶🏼‍♂வராரு எங்கள் 🙏அத்தி வரதர் 🚶🏼‍♂வராரு...

💥40💥 ஆண்டு ஒரு முறை மட்டுமே  🙏சேவிக்க முடியும்....
👉 ஏனெனில் அவர் இருப்பதோ, 👉நம் 👀கண்ணனுக்கு புலபடாத தண்ணிருக்கு அடியில்.

💁‍♀கோவிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள இரண்டு 💥குளங்களில் தென்திசையில் உள்ள நீராழி மண்டபத்தின் 👉கீழே நீருக்கு அடியில் உள்ள ஒரு மண்டபத்தில் தன்னை மறைத்துக்கொண்டு இருக்கிறான் அத்தி வரத பெருமாள்.

💥இந்த குளத்தின் நீர் என்றும் வற்றுவ தில்லையாதலால் பெருமாள் யார் கண்ணுக்கும் புலப்பட மாட்டார்.
💁‍♀பெருமாளின் தாருமயமான திருமேனி 💥( மரத்தினால் செய்யப்பட்டது)💥

💁‍♀மிகப்பெரிய அத்தி மரத்தால் வடித்து , பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

💁‍♀பிரம்மனின் யாகத் தீயினின்று தோன்றியதால் சிறிது பின்னப்பட்டுவிட்டார். எனவே அசரீரி மூலம் தன்னை ஆனந்தத் தீர்த்தத்தில் விட்டுவிட்டு பழைய சீவரத்திலிருந்து சிலையை காஞ்சியில் பிரதிஷ்டை செய்யுமாறு கூறினார்.

🌹பெருமாள் பெரும் உஷ்ணத்தைத் தணிக்கவே தெப்பக் குளத்தில் வாசம் செய்கிறாராம்.

💁‍♀அப்படியே இவரை வெள்ளித் தகடு பதித்த பெட்டியில் சயனக் கோலத்தில் வைத்து ஆனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்து விட்டனர்.

💁‍♀பழைய சீவர பெருமாளை தேவராஜப் பெருமாள் என பிரதிஷ்டை செய்து விட்டனர்.

💥ஆனந்த தீர்த்தம் என்றும் வற்றாது. எனவே நீரை இறைத்து விட்டு ஆதி அத்தி வரதரை வெளியே கொண்டு வருவார்கள்.

🌹வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் சயன கோலமாக, அமிர்தசரஸ் என்னும் அந்த குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள், 💥40💥 வருடங்களுக்கு ஒரு முறை, மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலமாக எழுந்தருளி இருப்பார்.

💥வசந்த மண்டபத்தில் 48 நாட்கள் பக்தர்களுக்கு 🙏சேவை சாதிப்பார்...

💁‍♀நின்ற கோலத்திலும், 💁‍♀சயனக் கோலத்திலும் தரிசனம் தந்தபின் மீண்டும் அனந்தத் தீர்த்தத்தில் சயனித்து விடுவார்.

💁‍♀பக்தர்கள் மிகவும் தொன்மையான இந்த அத்தி வரதரை, உற்சவ விழா வழிபாட்டோடு 👀கண் குளிர 🙏தரிசிக்கலாம்.

💁‍♀பிறகு மீண்டும் வெள்ளி தகடுகள் பதித்த பெட்டியில் வைத்து குளத்தில் மூழ்கடிக்கப் பட்டுவிடுவார்.

💥1939 ஆண்டு சேவை சாதித்தார்..
💥1979 ஆண்டு சேவை சாதித்தார்..
அடுத்து
💥15.07.2019 ஆண்டு சேவை சாதிக்க உள்ளார்...

💁‍♀அனைத்து பக்தாலுக்கும் தெரிய படுத்துங்கோ...

 இன்னும் ஒருவருடம் என்று 🤔🤔🤔நினைக்க வேண்டாம்...

 💁‍♀அத்திவரதரை சேவிக்க 🤔நினைக்க நினைக்க 👉நாட்கள் சென்றுவிடும்....

🌷👉அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில் தரிசனம்....

மூலவர் : வரதராஜர் (தேவராஜர்)
 தாயார் :  பெருந்தேவி
தல விருட்சம் :  அரசமரம்
தீர்த்தம் : அனந்த சரஸ்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : அத்திகிரி, திருக்கச்சி
ஊர் : காஞ்சிபுரம்


🌷👉சிறப்புக்கள் சில...

* உற்சவருக்கு, "அழைத்து வாழ வைத்த பெருமாள்' என்ற வித்தியாசமான பெயர் இருக்கிறது.

* கீதையில் கிருஷ்ண பகவான், தனது வடிவமாகக் குறிப்பிட்ட அரச மரமே இத்தலத்தின் விருட்சம். மரத்தின் எதிரே கரியமாணிக்க வரதர் சன்னதி உள்ளது. புத்திரதோஷம் உள்ளவர்கள் அமாவாசையுடன், திங்கள்கிழமை சேர்ந்த நாளில் மரத்தையும், சன்னதியையும் சுற்றிவந்து வழிபடுகிறார்கள்.

* வைகாசி பிரம்மோற்ஸவம், ஆனி சுவாதி மற்றும் ஆடி கஜேந்திர மோட்ச நாட்களில் சுவாமி கருடசேவை காண்கிறார்.

* ராமானுஜருக்காக கண்களை இழந்த கூரத்தாழ்வார், பார்வை பெற்ற தலம் என்பதால், கண் நோய் நீங்க இங்கு வேண்டிக்கொள்கின்றனர்.

* காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களைக் குறிக்கும் விதமாக மூலஸ்தான படிகள், மதிலில் பதிக்கப்பட்ட கற்கள், தீர்த்தக்கரை படிகள் ஆகியவை 24 என்ற எண்ணிக்கையில் அமைந்துள்ளன.

முகவரி:
   
  அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்-631501 காஞ்சிபுரம் மாவட்டம் 
 
🌷சர்வம் நரசிம்மார்பனம்🌷

🔔அடியேன் என்றும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் சேவையில்🔔